மன்னார்குடி மதில் அழகு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த ராஜ மன்னார்குடியில் இராஜ கோபாலனையும் செங்கமலத் தாயாரையும் தரிசிக்கும் வாய்ப்பு சென்ற ஆண்டு கிட்டியது.
நான் மன்னார்குடி செல்லக் காரணமே என் தோழி ப்ரேமலதாதான். அவளுடைய அன்புதான் என்னை அங்கே கட்டி இழுத்துச் சென்றது என்று சொல்லலாம். அவள் மூலம் வசந்தி, வஹிதா, அமுதா ஆகியோரையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.( தஞ்சையில் தேன்மொழி & சாந்தியின் பெண் நந்தினி )