தமிழ்த் திரையிசைப் பாடகர்கள் – ஒரு ஜூகல்பந்தி
மதியம் இரண்டு
மணிக்கு ரேடியோவில் முகம்மட் ரஃபி கிஷோர் குமார் பாடிய ஹிந்தி பாடல்கள், மாலையில் சிலோன்
ரேடியோவில் பி ஹெச் அப்துல் ஹமீதும், ஏ எஸ் ராஜாவும் விளம்பர இடைவேளைகளுக்கு நடுவில்
தொகுத்தளிக்கும் தமிழ்த் திரையிசைப் பாடல்கள் எனக் கேட்டு வளர்ந்த சமூகத்தில் பிறந்தவள்
நான். ஒருநாளில் ஒரு அரைமணிநேரம் ஆறேழு பாடல்கள் கேட்போம். தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை
ஒலியும் ஒளியும் பார்ப்போம். இன்றோ நினைத்த இசையை நினைத்த போது கேட்டிடும் வசதி படைத்துள்ளோம்.
இசை என்னும் போதை மீது எல்லாப் பருவத்தினருக்கும் ஈர்ப்பு உண்டு. நம் குழந்தை பருவத்தில் ஆடியோ ரிலீசாகி அந்தப் படம் திரைக்கு வரும் முன்பே நாம் அந்தப் பாடல்களுடன் பரிச்சயமாகி இருப்போம். சங்கீதம் பாடக் கேள்வி ஞானம் அது போதும் என ஸ்ம்யூல் ட்ராக் இசை அமைத்துத் தர அனைவருமே பாடகர்கள் பாடகிகளாகும் காலம் இது.