சிவப்பு பட்டுக்கயிறு :- பொதுவாக யாரும் கையில் எடுக்காத நல்ல களம். சிறுகதையில் நிகழ்வுகள் present tenseல் அவசியம். இக்கதையில் பெரும்பாலும் past சம்பவங்கள். எழுத்தாளரின் எழுத்து வன்மை வெளிப்படுகிறதே தவிர, கதாபாத்திரத்தின் மனசு வாசகனுக்கு நேரடியாக கொண்டுச் செல்லப்படவில்லை என்பது இக்கதையின் பலவீனம்.
இரண்டு கோப்பை காபி :- முந்தைய கதையின் பலவீனம் இக்கதையில் இல்லை. பிரச்சினை என்னவென்றால் இக்கதையில் கதையென்று எதுவுமே இல்லை.
கருணையாய் ஒரு வாழ்வு :- அருமையான வடிவ முயற்சி. யுவன் சந்திரசேகர் இம்மாதிரி கேள்வி நடையில் ஒரு நாவலே தற்போது எழுதியிருக்கிறார். ஆனால் இந்த கேள்வி-பதிலில் புத்திசாலித்தனம் மிளிர்கிறதே தவிர, இது சிறுகதையாக முழுமை பெறவில்லை.
கத்தி கப்பல் : - மிக நல்ல தீம். இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம். கதாபாத்திரங்கள் பேசுவதை காட்டிலும், கதையாசிரியர் நிரம்பப் பேசுகிறார். இது தவறல்ல. ஆனாலும் வெகுஜன ரசனையில் கதைமாந்தர்கள் ஊடாக கதாசிரியர் பேசும் கதைகளே அதிகம் பெயர் பெறும்.