எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

திசையறிவிக்கும் மரம்.

மரம்
முற்றிவிட்டது
துளிர்விட்டுக்கொண்டும்..

******************************
மொட்டை மரங்களும்
அழகிய நிர்வாணத்தோடு
திசையறிவித்தபடி.

******************************


வீழ்த்தப்பட்டபின்னும்
மரக்கிளைகள் வேர்பிடித்து
வேறொருவம்ச ஆணிவேராய்..


**********************************

மரக்குளத்தில்
அலையெழுப்புகின்றன
பறவைக் குரல்கள்..

*********************************
 
நீர் கிடைத்த கிளைகள்
விரிகின்றன பசுந்தோகையாய்..
கிடைக்காதவை கிண்ணிக் கோழியாய்.

டிஸ்கி :- இந்தக் கவிதைகள் மே 4, 2014 திண்ணையில் வெளிவந்தவை. 

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...