பங்குனி உத்திரத்திற்கு அடுத்த நாள் விடுமுறை என்பதால் பழனிக்குச் சென்றிருந்தோம். அங்கே கடல் அலைபோல் கூட்டம். அசந்தே போனோம். நடக்கக்கூட இடமில்லை. மலை முழுவதும் பால் காவடி, பன்னீர்க்காவடி, சர்க்கரைக் காவடிகளும் இன்னும் பல காவடிகளும் அணிவகுத்தன.
இதோ பறவைக்காவடியாக கிரேனில் நால்வர் வரும் காட்சி. பார்த்ததும் புல்லரித்தது. இறையருளால் அன்றி இது சாத்யமே இல்லை. இன்னுமொருவர் டிவிஎஸ் 50 இல் கழுத்தில் சூலம் குத்தி முதுகில் ஆறு வாள்கள் ( இடப்பக்கம் மூன்று வலப்பக்கம் மூன்று ) செருகியபடி ஓட்டி வந்தார். இவர்கள் அனைவரும் யானையடிப்பாதையில் மலை ஏறினார்கள்.
தங்கியிருந்த இடத்தில் இருந்து கேபிள் காருக்கு ஆட்டோவில் வந்தோம். ஒரே வெய்யில் வேறு வின்ஞ்சிலும் டிக்கட் விலை வாரியாக க்யூ. அதிலும் அதிக விலை டிக்கெட்டுக்கு அதிக க்யூ. வெய்யில் கொளுத்துகிறது. மணியோ பதினொன்று. விஞ்சுக்குச் சென்றாலும் அதே கதிதான். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்துத்தான் விஞ்சோ, கேபிள் காரோ ஏற முடியும் அவ்வளவு க்யூ.
அதன் பின் ஒரு குதிரை வண்டி பிடித்து யானையடிப் பாதை வழியாகப் போகலாம் என்று போனால் குதிரை வண்டியை விட்டு இறங்கும்போது வலது பாதம் சுரீரென சுளுக்கோ ரத்தக் கட்டோ பிடித்தால்போல வலித்தது. முருகா இது என்ன சோதனை என்று அங்கேயே அமர்ந்தால் ரங்க்ஸ் நீ இங்கேயே இரு என்றார். அங்கே உக்காரவா இவ்வளவு தூரம் வந்தது.
இதோ பறவைக்காவடியாக கிரேனில் நால்வர் வரும் காட்சி. பார்த்ததும் புல்லரித்தது. இறையருளால் அன்றி இது சாத்யமே இல்லை. இன்னுமொருவர் டிவிஎஸ் 50 இல் கழுத்தில் சூலம் குத்தி முதுகில் ஆறு வாள்கள் ( இடப்பக்கம் மூன்று வலப்பக்கம் மூன்று ) செருகியபடி ஓட்டி வந்தார். இவர்கள் அனைவரும் யானையடிப்பாதையில் மலை ஏறினார்கள்.
தங்கியிருந்த இடத்தில் இருந்து கேபிள் காருக்கு ஆட்டோவில் வந்தோம். ஒரே வெய்யில் வேறு வின்ஞ்சிலும் டிக்கட் விலை வாரியாக க்யூ. அதிலும் அதிக விலை டிக்கெட்டுக்கு அதிக க்யூ. வெய்யில் கொளுத்துகிறது. மணியோ பதினொன்று. விஞ்சுக்குச் சென்றாலும் அதே கதிதான். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்துத்தான் விஞ்சோ, கேபிள் காரோ ஏற முடியும் அவ்வளவு க்யூ.
அதன் பின் ஒரு குதிரை வண்டி பிடித்து யானையடிப் பாதை வழியாகப் போகலாம் என்று போனால் குதிரை வண்டியை விட்டு இறங்கும்போது வலது பாதம் சுரீரென சுளுக்கோ ரத்தக் கட்டோ பிடித்தால்போல வலித்தது. முருகா இது என்ன சோதனை என்று அங்கேயே அமர்ந்தால் ரங்க்ஸ் நீ இங்கேயே இரு என்றார். அங்கே உக்காரவா இவ்வளவு தூரம் வந்தது.