எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஜூலை, 2019

டைட்டானிக்கும் ஒபிலிக்ஸும்.

இதெல்லாம் ஒண்ணு சேர எங்க பார்த்தீங்கன்னு கேக்குறீங்களா. தியேட்டர்லயோ ஷாப்பிங் மால்லயோ  எல்லாம் இல்லை. கோவைப் பொருட்காட்சியிலதான்.

குழந்தைகளைக் கவர கோடை விடுமுறையில் பல்வேறு விதமான விளையாட்டுகள் கோவை மத்திய சிறையை ஒட்டிய திடல்ல பொருட்காட்சி, கண்காட்சியா நடந்துக்கிட்டு இருந்தது. அதில் நம்ம வீட்டு வாண்டுகளுடன் போனோம்.

இந்த டோரா டோரா மாதிரி சுத்துறதுல எல்லாம் பிள்ளைகளை தயதுசெய்து ஏத்த வேண்டாம். ஏத்திட்டு அது தாறு மாறா சுத்துறதப் பார்த்து டென்ஷனா ப்ரேயர் பண்ணியபடி இருந்தோம் எல்லாரும். உள்ளபடியே பிள்ளைகள் பயந்திருந்தாலும் அதை எல்லாம் வெளிக்காட்டிக்கலை.


வெள்ளி, 11 மே, 2012

”ஷில்ப விகாஸா..”. HUES OF HEART STUDIO.





HUES OF HEART ஸ்டூடியோவில் ஏப்ரல் 28, 2012  அன்று  அங்கு பயின்ற 12 குழந்தைகளின் ஆர்ட் ஷோ நடக்க விருப்பதாக என் தோழி மீனாக்ஷி மதன் அழைப்பு விடுத்திருந்தார்.

சனி, 10 மார்ச், 2012

தானே துயர் துடைக்க நீண்ட விகடனின் ஓவியக் கரங்கள்..

லலித் கலா அகாடமியில் விகடன் குழுமம் வழங்கிய ஓவியக் கண்காட்சி. பிரபல ஓவியர்களின் ஓவியங்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்து அந்த தொகையை தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி அது. முக நூலில் விகடன் ஆசிரியர் கண்ணன் அழைத்திருந்தார் அனைவரையும்.

நம்ம யாருமே மறக்க முடியாத முதல் பத்ரிக்கை ஹீரோ.. அன்னைக்கும் இன்னிக்கும் என்னிக்கும் இந்த விகடன் தாத்தா அப்படியே இருக்கார்.. பருவ மாற்றம் , உருவ மாற்றம் எல்லாம் நமக்குத்தான். இன்னும் பல நூற்றாண்டுகள் இவர் நம்ம தலைமுறைகளுக்கும் சேவை செய்யணும்.

வீர சந்தானம் சாரை முதல்ல அங்கே பார்த்தேன். இந்த விநாயகர் ஓவியம் அவரோடது.

சனி, 13 ஆகஸ்ட், 2011

சமுதாய நண்பனும் சில நிகழ்வுகளும்..


இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


நம்ம ஜீவா சாரோட திரைச்சீலையின் விமர்சனக்கூட்டம்தான் இது. வழக்கம்போல் டிஸ்கவரியில்தான். ராஜன் அவர்கள் சில எதிர் கூறுகளை எடுத்து வைத்தார்.. அதற்கு நம்ம நண்பர் இது எழுதப்பட்ட சூழலை அழகா சொன்னார்.. ஜீவா யதார்த்தமா எழுதியதே தேசிய அவார்டு வாங்கினா இன்னும் சிரத்தையோட எழுதி இருந்தா இண்டர்நேஷனல் அவார்டு வாங்கி இருப்பீங்க.. வாழ்த்துக்கள் ஜீவா..


டிஸ்கவரியி நடந்த அடுத்த முப்பெரும் விழா இது சாக்பீஸ் சாம்பலில் புத்தகத்துக்கு ( நான் விமர்சனம் எழுதிய நூல் ) நாணற்காடனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து விருது கிடைச்சிருக்கு . அதை கௌரவிக்கும் கூட்டம் இது. அடுத்து பூமித்தொட்டில் என்ற ஆவணப்படம் நம்ம தோழர் தகிதா மணிவண்ணன் எடுத்ததை எங்களுக்காக ஸ்பெஷலாக வெளியிட்டுத் திரையிட்டார். மூன்றாவது அவரது மாணவர் குழந்தை வேலப்பன் ( ஆண்மை தவறேல் இயக்குனர்) கவுரவிக்கப்பட்டார். இந்தப் படம் நன்கு இருப்பதாக அனைவரும் சொன்னார்கள்..


பூமித்தொட்டிலில் மணிவண்ணன் ( அவர் எது எழுதினாலும் கவித்துவமாகவே சொல்வார்) ., பூமி என்னும் உண்டியலில் உள்ள சத்துக்களை எல்லாம் நாம் எடுத்துக்கொண்டே இருக்கிறோம் ..சேமிக்கவே இல்லை .. என்றார். க்ளோபல் வார்மிங். பற்றிய வார்னிங் படம் இது.. வாழ்த்துக்கள் மணி ., வேலப்பன்., சரவணன். ( நாணற்காடன் சரா). !

சென்ற மாதம் அம்பாசிடர் பல்லவாவில் நடந்த வண்ணமும் வாசமும் ஓவியக் கண்காட்சி. தோழி மீனாக்ஷி மதன். தன்னுடைய படங்களில் பூக்களையே தேர்வு செய்கிறார். அவர் நிற்பது அவருக்குப் பிடித்த அனிச்ச மலரின் பக்கத்தில். கிட்டத்தட்ட 25 நாளில் 33 படங்களை வரைந்திருந்தார். HUES OF HEART STUDIO நடத்திவரும் அவரின் இன்னொரு படம் IHI .. பேல் விவாஹ் எனப்படும் இந்தப்படமும் ஸ்பெஷலான ஒன்று. நேபாளில் மேவார் வம்சத்தில் பெண்களுக்கு முதலில் வில்வமரத்துடன் பால்யத் திருமணம் நடைபெறும். அதன் பின்தான் திருமணம் நடைபெறும் என்று கூறினார்.


பழனியப்பன் வைரம்ஸ் என்பவரின் ப்லாக் பார்த்து பல பூக்களின் விவரம் சேர்த்து இவற்றை வரைந்ததாகக் கூறினார். மிக அருமையான படங்கள் மீனாக்ஷி .பூக்களை வரையும் பூவையே ! வாழ்த்துக்கள்.!

என் இன்னொரு தோழி அனுராதா நிகேத். மாடலிங். படங்கள் வரைதல் ., பெண் தொழிலதிபர் என கலக்குபவர். அவர் வரைந்த ஓவியங்கள் அப்ஸ்ட்ராக்ட் வகை. மிக வித்யாசமான ஃப்ரேம்களில்., க்ளேசியர்., கடல்., நதி முகத்துவாரம்., என அற்புதமாக வரைந்திருந்தார். இரண்டு ஆடுகள் குறித்த ஒரு படம் எனக்குப் பிடித்திருந்தது.


அம்பாசிடர் பல்லவா ஹோட்டல் இந்த மாதிரி ஓவியக் கண்காட்சிக்குன்னு இலவசமா காலரி தர்றாங்க.. வாழ்த்துக்கள் கலைகளை வளர்க்கும் அம்பாசிடர் பல்லவாவுக்கு. !


சித்ரகலா அகாடமியின் தலைவர் ஜீவாதான் தொடங்கி வைத்தார். அவர் ஒரு ஓவியம் வரைய அதை நாங்கள் எல்லாரும் கலந்து கட்டி வரைந்து எங்கள் கைத்திறமையையும் காண்பித்திருக்கிறோம்.. ( பள்ளிக்கூடத்துல வரைஞ்சது மறக்கலன்னு சந்தோஷமா இருந்துச்சு..) .. வீடியோ ஆரம்பிச்சு 9.50 க்கு மேலதான் நான் வரைஞ்சேன்.. ஆக்டர் சிவாஜி சந்தானம் சார் ., “ தேனம்மைலெக்ஷ்மணன்.. ஒரு கவிதை வரைகிறது.. ” என்று கமெண்ட் அடிப்பார்.. பின்னல் வரைந்தேன்.. பார்த்துட்டுச் சொல்லுங்க..
என் அன்புத்தோழி வசுமதிவாசன் கூச்சுப்பிடியில் கலக்கிய நிகழ்ச்சி இது.. போன வாரம் கோடம்பாக்கம் டி ஏ வி ஸ்கூலில் அரங்கு நிறைந்த நிகழ்ச்சியா நடந்துச்சு இது.. சின்ன வேம்படி சத்யம் அவர்களை குருவாகக் கொண்டு அவர்களின் சிஷ்யையின் சிஷ்யை மாதுரியை ஆசிரியையாக அமைய வசு 3 மாதங்களில் கற்றுக் கொண்டு ஆடிய நிகழ்ச்சி இது. ஏற்கனவே பரத நாட்டிய டான்சரா இருந்ததாக கொஞ்சம் ஈஸியா கத்துக்கிட்டதா சொன்னாங்க வசு.. இதில் ஆடிய அனைவரும் மற்றும் கற்றுக் கொடுத்த ஆசிரியையும் தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் கொண்டு விடும்போது சந்தித்து இந்த மதுரா டான்ஸ் கிரியேஷனை உருவாக்கி இருக்காங்க..!


நாட்யாஞ்சலி., பிரம்மாஞ்சலி., ஜாவளி என்ற மூன்று நடனங்கள். முதன் முதல் சலங்கை பூஜை என்பதால் கொஞ்சம் டென்ஷனோடு இருந்த வசு நடனமாட ஆரம்பித்த பின் அபிநயனங்களிலும் பாவங்களிலும் கலக்கி விட்டார்.. செமையா என்ஞாய் செய்த நிகழ்ச்சி இதுதான். செல்வகுமார்., சுகன்யா., விஜயானந்த்., ஷீலா தாமஸ் ரத்னம் ., என் கணவர்., என் அக்கா பெண்ணும் ஆடியதால் அவர்கள் குடும்பம் என கலந்து கட்டி சந்தோஷமாக இருந்தது.


அடுத்தும் லயனஸ் வசு அவங்க ப்ரோக்ராமில் கலக்கப் போவதால் அட்வான்ஸ்டு வாழ்த்துக்கள் வசு.. !

Related Posts Plugin for WordPress, Blogger...