எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 7 நவம்பர், 2017

காரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளும்.

871. ஒக்கிடுதல். - சீர் செய்தல். உடைந்த ஒரு பொருளை ரிப்பேர் செய்து வைத்துக் கொள்ளுதல். வீட்டை ஒக்கிட்டு வைத்துக் கொள்வது .

872.மரவுதட்டி/மறைவுதட்டி. :- மறைப்புக்காகப் பயன்படுவது. மரச்சட்டங்களால் ஆனது. முழுவதும் மரத்தால் ஆன மரவுதட்டியும்  உண்டு. சிலவற்றில்  ஸ்கிரீன் போடப்பட்டிருக்கும்.  ஒரே சதுரமாகவோ அல்லது இரட்டைச் சதுரங்களாகவோ மரச்சட்டங்களால் செய்யப்பட்டிருக்கும். கீழே கால் வைக்கப்பட்டிருக்கும். இச்சட்டங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் உருட்டு ஆணிகளில் ஸ்க்ரீனை மாட்டி உபயோகிக்கலாம். பொதுவாக ஆல்வீட்டில் அல்லது வளவில் அல்லது அடுப்படியில் ஒருவர் பங்கிலிருந்து மற்றவர் பங்கை மறைக்கப் பயன்படுத்துவது.

873. உள்ளதைப் போல :-சுமாராக. பெண் எப்படி இருப்பாள் என்று கேட்டால்  அது ரொம்ப உள்ளதைப் போல இருக்கும்.  என்பார்கள்.  திருத்தம் பத்தாது, அழகு போதாது என்பது அவர்கள் கணிப்பு.

874.புரியாதவளும் பொல்லாதவளும்.. :- ”பொல்லாதவளோட கூட இருந்துறலாம். அடி இந்தப் புரியாதவளோட இருக்க முடியாது” என்பது சொலவடை.

875.கசம் பிடிச்சவ :- மகா, மெகா சிக்கனக்காரி. எச்சில் கையால் காக்காய்கூட ஓட்ட மாட்டாள் என்று அர்த்தம்.


876.காதோலை. :- காதில் அணியப்படும் ஒரு அணி. இதைப் பொதுவாக காது வளர்த்த அக்காள்கள் போட்டுக்கொண்டிருப்பதுண்டு. தோடையும் இப்படிக் குறிப்பிடுவார்கள்.

877.ஓவியமா வளர்த்தாக/ஓவியமா வைச்சிருந்தாக/ஓவியமா இருந்துச்சு. :- மிகச் சிறப்பாக  இருப்பதை  இப்படிக் கூறுவதுண்டு.

878. அப்பச்சிவண்டி :- தந்தையின் மூத்த தாரம்/மனைவி. அல்லது தாய்க்குப் பின் வந்த இளையதாரத்தைக் குறிப்பிடுவது.

879. பின்னடைய வேண்டாம்.:- ஒரு செயல் செய்யும்போது தடங்கல் ஏற்பட்டால் அதற்காகப் பின்னடைய வேண்டாம் என்று தைரியம் கூறுவது.

880.மேவேலை. :- வீட்டில் செய்யக்கூடிய வேலைகள்.  வீடு கூட்டுதல், மெழுகுதல், பாத்திரம் துலக்குதல், துணி துவைத்தல் முதலியன. சமையல் தவிர உள்ள இதர வேலைகள்.

881. ஒண்ணுமத்தவுக. :- சிலரைப் பற்றி விசாரிக்கும்போது இப்படிச் சொல்வார்கள். அவர்கள் எதையும் செய்யமாட்டார்கள், கொடுக்கமாட்டார்கள்  என்பதற்காக அவுக ஒண்ணுமத்தவுக என்பார்கள்.

882. ஒரம் விழுதல் :- கைக்குழந்தையைத் தூக்கும்போது கழுத்து நிற்காத குழந்தையின் கழுத்தையும் உடலையும் சேர்த்து சரிவரத் தூக்காவிட்டால் குழந்தைக்கு ஒரம் விழுந்துவிடும். அதாவது கழுத்தில் சுளுக்கு போன்ற ஒன்று விழுந்துவிடும். உடனே குழந்தை அழத்துவங்கும். இதற்காக தொட்டில் சீலையில் குழந்தையைப் போட்டு உருட்டுவார்கள். இதற்கு ஒரம் எடுத்தல் என்று பெயர். இதையும் ஜாக்கிரதையாகச் செய்யவேண்டும்.

883.குளுதாடி:- நீர் வைக்கும் ஜாடி, இது ஒரு வகை களிமண்ணால் செய்யப்பட்டிருக்கும். நல்ல இரும்பு போல உறுதியாக இருக்கும்.

884.குத்தாலந்துண்டு/உடுத்திக் குளிக்கும் துண்டு. :- எண்ணெய்க் குளியல் ஆடும்போது  குற்றாலந்துண்டு என்ற துண்டை உடுத்திக்கொண்டு குளிப்பார்கள் பெண்கள். இதில் கட்டம் போட்ட குத்தாலந்துண்டு , ப்ளெயின் குத்தாலந்துண்டு என்ற இருவகை உண்டு. இரண்டிலும் கெட்டி ப்ளெயின் பார்டர் இருக்கும். ஒரு முழு ஆளையும் மறைக்கக்கூடிய உயரம் இருக்கும். இவற்றை ஓரம் மூட்டி  அமயம் சமயத்தில் குழந்தைகளுக்கான ஸ்பிரிங் தொட்டிலில் மாட்டி தொட்டிச்சீலையாகவும் உபயோகிப்பதுண்டு.

885. வரையோடு :-மர  உரலில் நெல் அரிசி போன்றவற்றைக் குந்தாணியால்  (உலக்கையால் ) இடிக்கும்போது அவை அதிக அளவில் இருந்தால் வெளியே துள்ளித் துள்ளிக் கொட்டும்.  (இதில் கோதுமை போன்றவற்றையும் குத்தித் தோல் எடுப்பார்கள்).  இதைத் தவிர்க்க உரலின் மேல் போடப்படும் பெரிய துளை உள்ள வட்டமான/வளையமான தட்டுக்குப் பெயர் வரையோடு.

886.பங்காளிகள் :- ஒரே குடும்பத்தின், ஒரே வீட்டின்  சகோதரர்கள் &  ஒரே கோயில் ஆட்கள்.

887.பெரும்பங்காளிகள் :- ஒரு குடும்பம் கிளைவிட்ட பின்பு அதன் மூத்த குடியில் உள்ள பெரியவர்களும் அவர்கள்கிளையில் பிறந்த மக்களும் பெரும்பங்காளிகள்.

888.கூடிக்கிற பங்காளிகள் :- சிலர் ஒரே கோயிலாக இருப்பார்கள். ஆனால் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து கூடிக் கொள்வார்கள். இவர்களுக்குக் கூடிக்கிற பங்காளிகள் என்று பெயர். இதில் ஆண்கள் மட்டுமே கூடிக் ( விசேஷம் என்றால் வந்து  கலந்து) கொள்வார்கள்.

889. ஐயாக்கள் வீடு :- ஒரே கொள்ளுப் பாட்டையாவுக்குப் பிறந்த பிள்ளைகள் பலர் இருப்பார்கள். அதன் பின் அவர்களின் வாரிசுகள் கொள்ளுப்பேரன்கள் எள்ளுப் பேரன்கள் என்று ஆனபின்னும் , (  பல்வேறு கிளைகளாக பிள்ளை குட்டிகள் என்று ஆனபின்பும் )  ஐயாக்கள் வீட்டோடு கூடிக் கொள்வார்கள்.

890.தாயபிள்ளைகள்.:- அண்ணன் தம்பி, ஆச்சி தங்கச்சி,  அம்மான், சித்தப்பா, பெரியப்பச்சி, பெரியத்தா,சின்னத்தா, அம்மாமிண்டி, ஆயா, ஐயா, அப்பத்தா, ஐயா, அண்ணமிண்டி, தம்பிவண்டி,  ஆகிய உறவுகளே தாயபிள்ளைகள். ஆயாவீட்டு உறவுகளும் அப்பத்தா வீட்டு உறவுகளும் தனதுவீட்டு உறவுகளும் சேர்ந்ததே தாயபிள்ளைகள். ( இதில் சம்பந்தப்புரத்தை சேர்க்கமுடியாது )

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம். 

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும். 

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். 

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

 

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

 

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

 

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

 

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 

85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

 

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும். 

 

87. இந்த சீர் போதுமா ?! 

 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 

 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம். 

 

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 

 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

 

92. இனியெல்லாம் பிஸினஸே

 

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

 

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

 

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.  

 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.




டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள். 

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

4 கருத்துகள்:

  1. பல வார்த்தைகளுக்குப் பொருள் தெரிகிறதுசில வார்த்தைகளிடம்பார்த்துப் பொருள் கொள்ளலாம் தகவல்கள் நிறைந்த பதிவு

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...