எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 17 அக்டோபர், 2024

புவனா

புவனா

”அடி ஒனக்கும் ரெண்டு பொண்ணு ஒம் மகளுக்கும் ரெண்டும் பொண்ணா” தம்பி கல்யாணத்துக்கு வந்திருந்த உறவினரில் ஒருவள் விருந்தைத் தின்றுவிட்டுச் சும்மா ஏன் இருப்பானேன் என்று பிருந்தா சித்தியிடம் கேட்டு வைத்தாள்.

ஏற்கனவே மனக்குறையில் இருந்த பிருந்தாவுக்கு வயிறெரிந்தது. அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்தவள் கண்ணில் விளையாடிக் கொண்டிருந்த ஆச்சியின் பேரன்கள் பட்டார்கள். கோபத்தோடு சாபமிட்டாள். “இவனுகள்ளாம் பெரிசானதும் பொண்ணு கொடு, பொண்ணு கொடுன்னு பொண்ணு கெடைக்காமக் கெஞ்சிக் கதறப் போறாய்ங்க” ரெண்டு மகனைப் பெற்ற பெருமிதத்தில் இருந்த புவனாவுக்கு பிருந்தா சித்தியைப் பார்க்கவே பயமாயிருந்தது. ”உங்களுக்குக் கோபம் வந்தா என் புள்ளைக்களுக்கு ஏன் சாபம் கொடுக்குறீங்க சித்தி” என்று கேட்க நினைத்து மௌனித்தாள் புவனா.

சித்தியின் வாய் முகூர்த்தமோ என்னவோ அவளின் மூத்த மகன் மீனாக்ஷி சுந்தரனுக்குத் திருமண வயது வந்தும் வரன்கள் தட்டிக் கொண்டே சென்றன. அவனோ எந்த மேட்ரிமோனியைப் பார்த்தாலும் நல்லா ஃபேஷனாக உடை உடுத்தி முடியை விரித்துப் போட்டுக் கொண்டிருந்த மணப் பெண்களை செலக்ட் செய்ய அவனது அப்பத்தாளோ,”அப்பச்சி முடிய விரிச்சுப் போட்டுக்கிட்டு இருந்தா லெச்சுமி தங்காது வீட்டுல. நல்ல பதவிசான பொண்ணாத்தான் பார்க்கணும்.”என்று எதவான பெண்களாகப் பார்க்க அவன் கண்ணில் அனைவரும் சப்பை ஃபிகராகத் தெரிந்தார்கள்.

யூ ட்யூபில் 3421 - 3430 வீடியோக்கள். நூல் பார்வைகள்.

3421.கருப்பை நம் உயிர்ப்பை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HdQRmS3h6i8


#கருப்பைநம்உயிர்ப்பை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARUPPAINAMUYIRPAI, #THENAMMAILAKSHMANAN,



3422.பல்சுவைக் கதைகள் l கீதா ப்ரஸ் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=npXi0f7S5k0


#பல்சுவைக்கதைகள், #கீதாப்ரஸ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PALSUVAIKATHAIGAL, #GEETAPRESS, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 15 அக்டோபர், 2024

கன்னி நீராடுதலும் மாப்பிள்ளை அறிதலும்

 179.


2051.கோவிலில் பாக்கு வைத்தல் – திருமணம் பேசிக்கொண்டதும் இரு வீட்டாரும் அவரவர் நகரக் கோயில்களில் திருமணத்துக்கு மூன்று நாட்கள் முன்னதாகப் போய் பாக்கு வைக்க வேண்டும். காலை முதல் மாலைக்குள் செல்ல வேண்டும். திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு மணமகன், மணமகள் ஆகிய இருவரின் கோவில், பிரிவு, வகை, மணமக்கள் பெயர், அவர்களின் பெற்றோரின் பெயர்கள், ஊர்கள், விலாசங்கள், கல்யாண நாள், நேரம், இடம் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு பங்காளிகள் யாரேனும் ஒருவர் போய் பாக்கு வைத்துப் பதிவு செய்து அதற்குரிய காணிக்கை செலுத்தி வர வேண்டும். திருமண அழைப்பிதழ், விவரங்கள் குறித்த சிட்டை, வெற்றிலை பாக்கு ஆகியன கொண்டு செல்ல வேண்டும்.

திருமணத்தன்று முதல்நாள் இரு கோவில்களிலும் இருந்து இரு கோவில் மாலைகள் வரும். அதைப் பெண்கள் சங்கு ஊதி வாங்கி நடுவீட்டில்வைக்க வேண்டும். கொண்டு வரும் `அர்ச்சகருக்கு முறை கொடுக்க வேண்டும்.  மாப்பிள்ளை வீட்டில் அதில் ஒன்றை மாப்பிள்ளை அணிந்து கொண்டு திருப்பூட்டச் செல்ல வேண்டும். திருப்பூட்டும் போது முதன் முதலில் அந்தக் கோவில் மாலையைத்தான் மாப்பிள்ளை பெண்ணுக்கு அணிவிக்க வேண்டும்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 10.

17.

புள்ள கூட்டுதல் - குழந்தை இல்லாதவர்கள் அதிகக் குழந்தை உள்ள அதே கோவிலைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பிள்ளையை சுவீகாரம் செய்து கொள்வார்கள்.

ஆம்பிள்ளையான் பேர் சொல்ல - கணவனின் பேர் சொல்ல வாரிசி வேண்டும்.

வீடு விளங்கோணும் - வீடு விளங்கப் பிள்ளைகூட்ட வேண்டும்.

புள்ள விடுற ஜாதகம் - பிள்ளை விடுற ஜாதகம் என்றால் அந்தப் பையனுக்கும் ஜாதகத்தில் இன்னொரு தாய் தகப்பனுக்கு மகனாகப் போகவேண்டும் என்ற அமைப்பு இருத்தல்.

நாளப் பின்ன - பிற்காலத்தில், தன் காலத்துக்குப் பிறகு.

யூ ட்யூபில் 3411 - 3420 வீடியோக்கள்.

3411.இனிக்கும் திருப்புகழ் - 75 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=QX7rUZvUPR0


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



3412.வேலங்குடிக் கருப்பர் கவசம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=BKeHXXX5z1Q


#வேலங்குடிக்கருப்பர்கவசம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VELANGUDI, #KARUPPARKAVASAM, #THENAMMAILAKSHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...