எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 அக்டோபர், 2018

காரைக்குடிச் சொல்வழக்கு :- மாப்பிள்ளை அறிதலும் பொண்ணெடுக்கிக் காட்டுதலும்.

1101.  அதமப்பொருத்தம் - ஜாதகம் பார்க்கும்போது மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் 3 பொருத்தங்களுக்கு மேல் இல்லாவிட்டால் அது அதமப் பொருத்தம். மாப்பிள்ளையை விட பெண்ணுக்கு வயசு அதிகமாய் இருந்தாலும் அது அதமப் பொருத்தம்.. ரஜ்ஜை தட்டினாலும், பெண் ராட்சச கணமாகவும் ஆண் தேவ அல்லது மனித கணமாக இருந்தாலும் அது அதமப் பொருத்தம். பெண்ணின் ராசி அல்லது நட்சத்திரத்திற்கும் பிறகு ஆணின் ராசி அல்லது நட்சத்திரம் வந்தாலும் அது அதமப் பொருத்தம். இப்படிச் செய்துவைக்கப்படும் மணங்கள் அதிக நாள் நீடிக்காது என்பது நம்பிக்கை.

1102. மாப்பிள்ளை அறிதல் - சொந்தத்தில் இல்லாமல் அந்நியத்தில் செய்யும்போது மாப்பிள்ளை விபரம் கிடைத்தவுடன் அவர்கள் ஊரைச் சார்ந்த பெரியவர்கள் அல்லது உறவினர்களின் மாப்பிள்ளை பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுதல். மாப்பிள்ளை வேலை செய்யும் இடத்துக்கோ அல்லது அவர் நண்பர்களுடன் உரையாடியோ மாப்பிள்ளை பற்றி அறிந்து கொள்வார்கள். எங்கள் உறவினர் ஒருவருக்குப் பெண் கொடுக்குமுன் பெண்ணின் உறவினர்கள் எங்கள் உறவினரில் எதிர் வீட்டில் ( வாசலில் இருந்து வீடு முழுதும் தெரியும் ) ஜன்னலோரம் அமர்ந்து காத்திருந்து மாப்பிள்ளை வரும்போது பார்த்தார்களாம். !



1103. பொண்ணெடுக்கிக் காட்டுதல் - அந்தக் காலத் திருமணங்களில் பெண் பத்துப் பன்னிரெண்டு வயதுக் குழந்தையாக இருப்பாள். மேலும் வயதுக்கு வராத பேதைப் பருவம். திருமணத்தன்று  மாப்பிள்ளை அழைத்ததும் நடை வாசலில் பெரிய பெண்மணிகள் அலங்காரம் செய்த பெண்ணை இடுப்பில் எடுக்கிச் சென்று முகத்தை நிமிர்த்திக் காண்பிப்பார்கள். அப்போதுதான் மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள்.

1104. டர்பன் - (வைர கலிக்கேத்ரா பதிந்தது ) - மாப்பிள்ளை தலையில் அணியும் தலைப்பாகை டர்பன் எனப்படும். இது ஏற்கனவே டர்பனாகக் கட்டப்பட்டு இருக்கும். பின்புறம் சிறிது துணி தொங்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். இந்த டர்பனின் முகப்பில் மன்னர்களின் க்ரீடத்தில் இருப்பது போல் மாங்காய் வடிவத்தில் வைரக் கலிக்கேத்திரா என்னும் சிட்டி பதிந்திருப்பார்கள். இதிலிருந்து இரட்டை வரிசை முத்துக்கள் தொங்குமாறு தைக்கப்பட்டிருக்கும். இந்தக் கலிக்கேத்திராவிலிருந்து உயர்ந்த ஜாதி பறவை இறகுகள் நீளமாக செருகிப் பிணைக்கப்பட்டிருக்கும்.

1105. வெத்தலைத் தட்டு- தாம்பூலத்தட்டு. விசேஷங்களை கெட்டி செய்து கொள்ள வெத்தலைத் தட்டைப் பரிமாறிக் கொள்வதுண்டு. தட்டில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, மஞ்சள், பணம் அல்லது பொன் வைத்து முறைச்சிட்டை நோட்டையும் வைத்து சம்பந்திகள் பரிமாறிக் கொள்வார்கள்.

1106. பஞ்சாங்கக்கார ஐயா - திருமணச் சடங்குகளை நடத்தி வைப்பவர். ஆனால் திருப்பூட்டும் போது மணவறையில் இவர் இருக்க மாட்டார்.  நெருங்கிய பங்காளி ஐயாக்கள் வீட்டில் மூத்தவர் தாலி எடுத்துக் கொடுக்க திருப்பூட்டப்படும்.

1107. வர்ண குலபூசை- திருமணத்தின்போது நிகழ்த்தப்படுவது, குல தெய்வங்களை வேண்டி நிகழ்த்தப்படுவது.

1108.  கொண்டைமாலை -  பெண்ணுக்கு அலங்காரம் செய்யும்போது கொண்டை மாலை என்ற ஒன்றைக் கட்டி ராக்கோடியில்  சுற்றுவார்கள்.

1109. வீட்டுக்குச் சொல்லுதல் - விசேஷத்தின் போது முதலில் தங்கள் சாமி வீட்டில் கோலமிட்டு விளக்கேற்றித் தடுக்கில் அமர்ந்து தாய்தந்தையரிடம் சொல்வது. இன்ன தேதியின் எங்கள் மகன்/ மகளுக்குத் திருமணம் , குடிபுகுதல், மகள் சமைதல் பற்றிச் சொல்லி வடிப்பதற்கோ அனுவலுக்கோ திருமணத்திற்கோ வரும்படிச் சொல்லுதல். வந்திருந்து விசேசத்தை நல்லபடி நடத்தித் தர வேண்டுதல்.

1110. ராட்டி விடுதல் - மரம் போன்றவற்றின் கிளைகளை வெட்டுதல். அதிகப்படியாய் வளர்ந்து காம்பவுண்ட் சுவர் அல்லது பக்கத்துவீடு கரண்டுக் கம்பம் ஆகியவற்றில் பட்டால் மரங்களின் கிளைகளை வெட்டி விடுவார்கள். இதற்கு ராட்டி விடுதல் என்று பெயர்.

1111. வெட்டி விடுதல் - விவாகரத்து செய்தல். திருமணம் முடிந்தபின் தம்பதிகளுக்குள் ஒத்து வராவிட்டால் வெட்டி விட்டுருங்க என்பார்கள். அவுக வெட்டிக்கின்னுட்டாக என்பார்கள். பங்காளி வீட்டைக் கூட்டி வெட்டி விடுவார்கள். இன்று கோர்ட் மூலமாக  விவாகரத்து தாக்கல் செய்கிறார்கள்.

1112. தும்பிலி ஊதல், ( ப்பூபூபூ ) - குழந்தைகளின் வயிற்றில் வாயை வைத்து ப்பூஊஊ என்று ஊதி விளையாட்டுக் காட்டுதல்.

1113. எடுக்குதல் - குழந்தைகளை எடுக்கி வைத்துக் கொள்ளுதல்.

1114. உண்டன - அதிகம். அளவுக்கதிகமாய் இருப்பதை உண்டன இருக்கு என்பார்கள். ஒரு பொருள் இல்லாவிட்டாலும் இல்லை என்று சொல்லாமல் உண்டன இருக்கு என்பார்கள்.

1115. போக்கடாப் பய - எதற்கும் உருப்புடாத பயல். போக்கு அற்றவன். எதையும் செய்யத் துப்பற்றவன். லாயக்கிலாதவன்.

1116. புரியாத மட்டை - ஒருவர் சொல்லும் விஷயத்தைச் சரிவரப் புரிந்து கொள்ளாவள். மேலும் எதை யாரிடம் சொல்லக் கூடாதோ அதை அவரிடம் போய் சொல்பவள். விஷயம் புரியாமல் அல்லது நிலவரம் புரியாமல் நடந்து கொள்பவள்.

1117. லண்டி மட்ட - அடம் செய்பவளைக் குறிப்பது. ஒரு விஷயத்தைச்  அதிரடியாகச் செய்பவள், பொல்லாதவள், சண்டைக்காரி,

1118. குந்தாணி மட்ட - செல்லமாகத் திட்டுதல், ஒரு வயதுப் பெண் வீட்டில் வேலை செய்யாமல் உட்கார்ந்தே பொழுதைக் கழித்தால் அவளைக் குந்தாணி மட்டை என்று திட்டுவார்கள் தாய்மார்கள். குந்தாணி போல் இடுப்பைத் தவிர்த்து மேலுடம்பும் கீழுடம்பும் பெருத்தவர்களையும் கிண்டலாகக் குறிப்பிடுவதுண்டு. ”அது ஒரு சரியான குந்தாணி” என்பார்கள்.

1119. கொண்டி மட்ட - சொல் பேச்சுக் கேட்காதவள். தன்னிஷ்டப்படி எதையும் செய்பவள், ஊர் சுற்றுபவள், பெரியோரை மதிக்காதவள்.

1120. வல்லாளகண்டன் - அதி திறமைசாலி. எப்பேர்ப்பட்ட விஷயத்திலும் வெற்றி காண்பவன், விடாக்கண்டன் கொடாக்கண்டன் மாதிரிக் காரியத்தை முடிப்பவன்.


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம். 

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும். 

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். 

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

 

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

 

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

 

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

 

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 


85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

 

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும். 

 

87. இந்த சீர் போதுமா ?! 

 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 

 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம். 

 

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 

 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

 

92. இனியெல்லாம் பிஸினஸே

 

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

 

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

 

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.  

 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.







104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.

105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.

106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.








டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள். 

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

4 கருத்துகள்:

  1. ரொம்ப நாளைக்கப்புறம் வலைப் பக்கம் வந்தாச்சு தேனு. துளசி அனுப்பியிருந்த தங்கிலிஷ் கமெண்டையும் போட முடியலை. இனி தேடி எடுத்துப்போடப் பார்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஸ்வாரஸ்யமான வழக்கு மொழிச் சொற்கள்.
    குந்தாணி என்று எங்கள் பக்கத்திலும் சொல்வதுண்டு..

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  3. திருமணங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

    பதிலளிநீக்கு
  4. ராயல் வெல்கம் துளசி & கீத்ஸ். வருக வருக உங்க வருகை இல்லாம ப்லாகில் வெளிச்சம் இல்லை . இப்ப ப்ரகாசமாயிருச்சு :)

    ஆம் பாலா சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...