உணர்ந்து பார்க்க
ஒற்றைக் கோப்பையைத்
தேர்ந்தெடுக்கிறேன்.
புதைக்கப்பட்ட பீப்பாயில்
கசிந்து வழிந்ததை
மண்ணோடு ஊற்றிச்
செல்கிறான் ஒருவன்.
கிட்டத்தட்ட
நான் கல்லூரிக்கு வந்த முதல் வருடத்தில் இருந்து ஈழப்பிரச்சனைகளை உணர ஆரம்பித்திருக்கிறேன். தஞ்சாவூரில் எங்கள் அத்தை வீட்டில் ஒரு ஈழப்பெண் வேலை செய்து வந்தார். ஒரு கலியம் பெட்டி நிறைய ஈழத்தில் உபயோகப்படுத்திய சாமான்களைக் கொண்டு வந்திருந்தார். அவர்கள் தமிழ் பேசுவதைக் கேட்க இனிமையாய் இருக்கும். அதிகம் படிக்காததால் தன் குடும்பத்தேவைகளுக்காக வீட்டு வேலை செய்து வந்தார். நன்கு படிக்க வைக்கப்பட்டிருந்தால் அவர் ஏதாவது அலுவலகங்களில் வேலை பார்த்து வந்திருக்கக்கூடும். திரும்ப த் தன் நாட்டுக்குச் செல்லும் ஆவலோடு இருந்தார் அவர். இருட்டில் படகில் அதிகமாகப் பணம் கொடுத்து இந்தியா வந்து சேர்ந்ததாகச் சொன்னார்.
மனித ஆயுதம்.. ”உலோகம்”
ஜெயமோகன் அவர்களின் ”உலோகம்” த்ரில்லர் நாவல் என்ற பெயரில் டிஸ்கவரி புத்தக நிலையத்தில்பார்த்ததும் வாங்கி வந்தேன். மூன்று மாதமிருக்கும்.
இன்றைக்குத்தான் படிக்க அமர்ந்தேன். 4 மணி நேரங்களில் கீழே வைக்க முடியாமல் படித்த ஒரு மனித ஆயுதம் பற்றின கதை அது.இது இலக்கிய நயம் வாய்ந்த சாகசப் புதினம்.
ஈழ மொழியில் புனைவுத்தியில் சொல்லப்பட்டிருக்கும் கதை அது. எப்போதும் கிடைக்கும் சுஜாதா., ராஜேந்திர குமார்., ராஜேஷ் குமார் நாவல்கள் போலில்லாமல் வேறோரு மனம் சார்ந்த மொழியிலான த்ரில்லர்.
நிறைய அமுதம் . ஒரு துளி விஷம் . வைரசின் நூல்
தகிதா பதிப்பகம் இந்த வருடம் வெளியிட்ட பத்து நூல்களில் ஒன்று கவிஞர் வைரஸின் நிறைய அமுதம். ஒரு துளி விஷம். கல்லூரி மாணவனான வைரஸின் கவிதைகளில் இளமை மிளிர்கிறது..பதிப்பாளர் மணிவண்ணன் கூறியபடி படிக்கும் காலத்திலேயே படைக்கும் ஆற்றல் பாராட்டுதலுக்குரியதுதான். தன் தந்தை., தாய்., சகோதரன்., சகோதரிக்கு இந்த நூலை அர்ப்பணம் செய்திருக்கிறார் கவிஞர். நூலின் விலை ரூபாய் 50/-