எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 டிசம்பர், 2017

கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடி வீடுகள்.

வீடுகள் கட்டுமானத்தில் செட்டிநாட்டுக் கட்டுமானத்தை மிஞ்ச முடியாது. இங்கே செட்டிநாடு என்றால் கானாடுகாத்தான் மட்டுமல்ல. அதைச் சுற்றியுள்ள 72 ஊர்களும்தான்.கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வீடுகளும் சில இருக்கலாம். எல்லாம் 901* தேக்குமரம் வைத்து இழைத்துக் கட்டப்பட்டவை. 


அவரவர் ஐயாக்கள் கொண்டுவித்துக் கொண்டு வந்த பர்மா தேக்கினால் கடையப்பட்டவை. ரோட்டில் இருந்து கிட்டத்தட்ட பத்தடி உயரம் வரை 902* செம்புறாங்கற்களால் அடித்தளம் அமைக்கப்பட்டு அதன் மேல் வீடு எழுப்பப்பட்டிருக்கும்.


அந்தக் காலத்திலேயே இரண்டு மாடி உள்ளவை. மேல் மாடிகளை சாமான் போடும் அறையாக உபயோகப்படுத்துவார்கள்.  கல்யாணத்துக்குச் சாமான் பரப்பும் கூடமும் கூட அந்த மேல்மாடி ஹாலாகத்தான் இருக்கும். 


சில வீடுகளில் புது மணத் தம்பதிகளின் முதலிரவுக்கும், அவர்களின் தினசரிப் பயன்பாட்டுக்கான படுக்கை அறை, சாமான் அறைகளும் அமைக்கப்பட்டிருக்கும். 


இது ராஜா வீடு. கானாடுகாத்தான் சிதம்பர விநாயகர் கோவிலிலிருந்து புகைப்படம் எடுத்தேன். எத்தனை கோணத்தில் பார்த்தாலும் யானை, மழை, வானவில், கடல் , குழந்தை போல பரவசமூட்டக்கூடியது இந்த வீடு.

அதன் பக்கவாட்டு வீடுகளும் இடம்பெற்றுள்ளன. எங்கூராக்கும். 

இது கடியாபட்டி.

சிதம்பரவிலாஸுக்குப் போகும் வழியில் உள்ள வீடுகள்.
வீடுகள் அமோகம்தான். ரோடுகள்தான் படு மோசம்.
சிதம்பரவிலாசின் எதிரில் உள்ள வீட்டின் ஜன்னல் அமைப்புகள் அழகு.
903* அதே ரோட்டில்  மடிந்துவரும் மாட மாளிகை, கூட கோபுரம், உப்பரிகை.
தெக்கூரில் உள்ள ஒரு வீடு. இதன் மாடிப்படிகளும் மேல்மாடியும்.
904* நல்ல வெள்ளைக் கருங்கல்லால் இழைக்கப்பட்ட மாடிப்படிகள். பல தலைமுறைகளாக உபயோகத்தில் இருக்கும் வீடு.
அதன் கீழ்க் கட்டின் கூடத்துக்குப் பின்னால் உள்ள இன்னொரு கட்டும் அறைகளும். 
குழிபிறை, நச்சாந்துபட்டி, தெக்கூர் ஆகிய ஊர்களில் உள்ள வீடுகளில் காரைக்குடி வீடுகள் போல்  நடுவில் முற்றமில்லாமல் 905* கூடம் போல் அமைக்கப்பட்டிருக்கும்.

அந்தக் காலத்தில் களவாணி ( திருடர் ) பயத்துக்காக இப்படி மூடிக் கட்டப்பட்டிருக்கலாம். விசேஷ காலங்களில் பெட்டகங்களில் நகைகளைப் பூட்டி வைத்திருப்பார்கள். வளவுக்குள் இருக்கும் வாசல் வழியாக திருடர்கள் கன்னம் வைத்து இறங்கிக் கொள்ளையடித்து விடுவார்கள் என்பதால் இவ்வீடுகள் கூடம் அமைப்பில் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் இருபுறமும் அறைகள் இருக்கும். சாமி அறையும் திருப்பூட்டும் அறையும் சாமான் அறைகளும் இருக்கும். பந்திக்கட்டும் இரண்டாம் கட்டும் பக்கவாட்டில் இருக்கும். 


இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி அம்மன் கோவில் சத்திரம்.

ஒரு உறவினரின் இல்ல விழா ஒன்றில் கீழ் வாசலில் 906* கொட்டகை போட்டு 907 * அனுவல்/விசேஷம் நடந்தது. இந்த வீடு பெரிய வீடு மற்றும் இதன் ஓவியங்கள் & தூண்கள் மிக அழகானவை.

கானாடுகாத்தான் பிள்ளையார்  கோயிலிலிருந்து திரும்பும் வழியில் உள்ள வீடுகள். 

பழமையும் புதுமையும். பழசு எல்லாம் புதுவீடாகிக் கொண்டிருக்கிறது.

காரைக்குடியின் ஒரு அதிசயம். அன்றைய 908*  மர்ஃபி ரேடியோ விளம்பரம் பாருங்கள். ப்ரியா மெஸ்ஸின் பின்புறம் உள்ள ஒரு வீட்டின் மேல்புறம் பார்த்தேன் . க்ளிக்கினேன். இது சேட்டு வீட்டுக்கு எதிர்ப்புறம் உள்ளது. இங்கே என் உறவினர் ( சினிமா நடிகர் ) சிதம்பர ஐயாவின் வீடு இருந்தது. அது சிதிலமடைந்ததும் அதை விற்று விட்டார்கள். 

கோட்டையூர் சொக்கட்டான் கோயில் வீதி முழுக்கவே மார்டர்ன் வீடுகள். 

உப்பரிகைக்கும் & கோபுரத்துக்கும் கூட குறைவில்லை :)

கானாடுகாத்தான் 909* தகரக் கொட்டகை வீதி முனையில் உள்ள வீடுகள். என்னதான் சிதிலமடைந்தாலும் என்னவொரு அழகு. 

இன்றைக்கு எல்லாம் கட்ட முடியுமா இப்படிப்பட்ட வீடுகளை. ஹ்ம்ம். 

910* கீழே சாரட், அல்லது வில் வண்டி நிறுத்துமிடம். சில இடங்களில் குதிரை லாயம். & ஜட்கா.  பின்னர் கார் வைக்கும் ஷெட்டாகவும் பயன்பட்டிருக்கிறது சில இல்லங்களில். 
இது காரைக்குடியில் உள்ள ஒரு இல்லம்.

ரோட்டுத் தூசி வீட்டுக்குள் வந்துவிடுகிறது மேலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஷாப்பிங் மாலில் உள்ளது போல நடு வாசலை மூடி இருக்கிறார்கள். வெளிச்சம் மட்டும் வருகிறது. மழை நீர் சேகரிப்பும் கொடுத்துள்ளார்கள்.

இவ்வீட்டின் நிலைகள் அழகு. ஒவ்வொரு நிலையிலும் அற்புத சிலைகள். 

சூர்யப்பலகையின்  நடுவில் கஜலெக்ஷ்மி. ஒரு புறம் குழலூதும் கிருஷ்ணன் & கோபியர்கள். இன்னொரு புறம் மதங்க நர்த்தனன். & தேவாதி தேவர்கள்,. வீணையுடன் வாணியும் இருக்கிறாள். 

மரத்தண்டில் யாழியும் பூக்கள் வேலைபாடும். 
உள் நிலையில் கஜலெக்ஷ்மியும் அஷ்ட லெக்ஷ்மிக்களும். அதன் வெளிப்புற மேங்கோப்பின் அமைப்பைப் பாருங்கள். லாண்டர்ன் எனப்படும் எலக்ட்ரிக் லாந்தரும் பொருத்தப்பட்டுள்ளது.

இது காரைக்குடி சி மெ வீதியில் சந்தைக்குப்போகும் வழியில் உள்ள ஒரு வீடு.
இதன் அமைப்பு அச்சு அசல் கோட்டை கொத்தளங்களை ஞாபகப்படுத்துகிறது. 

மிக மிக அழகான உப்பரிகைகள். 

என்னவோ பழைய ராஜா ராணி கதைகளில் எல்லாம் என்னைக் கவர்ந்த விஷயம் இந்த உப்பரிகை. இதைப் பார்த்தாலே நீளத் தலைமுடியை உலர்த்தியபடி ஒரு அழகான ராணி என் மனக்கண்ணில் தோன்றுவாள்.

I LOVE CHETTINAD HOUSES :) <3 div="">

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம். 

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும். 

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். 

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

 

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

 

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

 

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

 

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 


85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

 

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும். 

 

87. இந்த சீர் போதுமா ?! 

 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 

 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம். 

 

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 

 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

 

92. இனியெல்லாம் பிஸினஸே

 

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

 

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

 

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.  

 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.





டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள். 

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

8 கருத்துகள்:

  1. மிக அழகு! கொஞ்ச நாட்களுக்கு முன் தான் சிதம்பர விலாஸில் தங்கியிருந்ததைப்பற்றிஎழுதியிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ரொம்பவே மெனக்கெட்டு தெளிவாக படங்கள் எடுத்து பதிவிட்டமைக்கு பாராட்டுகள். செட்டிநாடு பக்கம் பஸ்சில் போகும்போது பார்த்த ஞாபகம்.

    பதிலளிநீக்கு
  3. நம்ம பக்கத்தில் வீடுகள்தானக்கா அழகே....
    இப்போது அவை அழிந்து வருவது வேதனை...
    தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் பல வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டன.

    பதிலளிநீக்கு
  4. மலைக்க வைக்கின்ற வீடுகள். உரிய செய்திகளுடன் தொகுத்து பதிவிட்ட விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  5. அழகோ அழகு!!! "சும்மா" அள்ளுது மனசை கொள்ளை கொள்ளுது இந்த அழகான வீடுகள்...மாடர்ன் வீடுகளில் கூட உப்பரிகை/கோபுரக் கூடம் இருப்பது போல் தெரிகிறதே!!!...உட்புறமும் என்ன அழகு! ஆனால் அழிந்து வருவது ரொம்ப மனதிற்கு வேதனையாக இருக்கு...ரசித்தோம்

    பதிலளிநீக்கு
  6. மனோ அக்கா கூட சிதம்பர விலாஸில் தங்கியிருந்ததைப் பற்றி எழுதியிருந்தாங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நன்றி மனோ மேம்

    நன்றி தமிழ் இளங்கோ சார்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    ஆம் குமார் சகோ :(

    நன்றி ஜம்பு சார்

    நன்றி கீதா :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...