எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 அக்டோபர், 2018

காரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.

காரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.

1081. குருவ அரிசி – குறுவை அரிசி , சிவப்பரிசி, (பாயாசம், பணியாரம், கொழுக்கட்டை செய்யப் பயன்படுவது).

1082. அள்ளுபிடி முள்ளுபிடி – ஒரு பாத்திரத்தில் அரிசி பருப்பு வகையறாக்களை சமையலுக்கு அளந்து போடும் முன்பு முதலில் ஒரு கைப்பிடி அள்ளிப் போட்டுவிட்டு ( வெறும் பாத்திரத்தில் அளக்கக் கூடாதாம் அதனால் )  அதன் பின் தேவையானதை உழக்கில் அளந்து போடுவார்கள். இது அள்ளு பிடி. அளந்து போட்டு முடித்ததும் கடைசியாக ஓரிரு கைப்பிடி போடுவது உண்டு. அல்லது குறைந்த அளவில் மிச்சமிருக்கும் தானியங்களை அதிலேயே போட்டுவிடுவார்கள். அதற்கு முள்ளுபிடி என்று பெயர்.

சிலர் அளக்கும்போதே உழக்கு அல்லது படியில் கோபுரமாக நன்கு அமுக்கி அதன் பின்னும் அதிகமாக அந்த கோபுரத்தில் தானியத்தை அமுக்கிப் பிடித்து அளந்து போடுவார்கள் . இதற்கு முள்ளுபிடி என்றும் பெயர்.

1083. பெரும்போட்டுப் புள்ள – உடலில் எலும்பு பெரிதாக அமைந்து பார்க்க (ஜைஜாண்டிக்காக ) ஈடு தாடாக இருப்பவர்களை பெரும்போட்டுப் பிள்ளை என்பார்கள். இவர்கள் எவ்வளவு மெலிந்தாலும் மெலிந்தது போல் தெரியாது. சதை குறைவாகவும் உடலில் எலும்பின் அடர்த்தி அதிகமாக அமைந்தும் உள்ளவர்கள்தான் பெரும்போட்டுப் பிள்ளைகள். இவர்கள் அளவில் பெரிதாக இருப்பதால் உண்பதும் அதிகமாக இருக்கும். அதே சமயம் அடுத்தவர்க்குக் கொடுப்பதும் ( ஈதல் )  நன்கு கொடுப்பார்கள். எனவே அவர்களைப் பெரும்போடு என்று சொல்வதுண்டு.

1084. சவலப்புள்ள – ஒரு பிள்ளை கையில் இருக்கும்போதே அடுத்து ஒரு பிள்ளை பிறந்தால் மூத்த பிள்ளை சவலைப் பிள்ளையாகிவிடும். ஏனெனில் இதற்குக் கிடைக்கவேண்டிய கவனிப்புப் பூரா சின்னப் பிள்ளைக்குக் கிடைப்பதால் இது எப்போதும் தாயின் அண்மைக்கும் பாசத்துக்கும் கவனிப்புக்கும் ஏங்கிக் கொண்டே இருக்கும். அதனால் சவலை தட்டி மெலிந்து போய் என்ன கொடுத்தாலும் தேறாமல் இருக்கும்.  


1085. நறுங்கிப் போனது – வளர்த்தி குன்றியது. பிள்ளைகள் சில பருவங்களில் உடல் பருமன் ஏறவே ஏறாமல் குட்டையாகவோ அநியாயத்துக்கு ஒல்லியாகவோ இருப்பார்கள். அவர்களை நறுங்கிப் போனது என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவார்கள். இதுவும் தாய் தந்தை பராமரிப்பில் இருந்தாலும் பல பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் - மற்ற பிள்ளைகளோடு ஏதோ ஒரு விதத்தில் கவனிப்பற்றதாய்க் கருதிக் கொண்டு தேறாமல் இருக்கும். அல்லது அதன் உடல் குறைபாடு அதனை வளர விடுவதில்லை. ஆனால் இக்குழந்தைகள் பதின் பருவங்களின் முடிவில் கிடுகிடுவென வளர்ந்து ஆச்சர்யப்படுத்துவார்கள்.

1086. சூதுவென – சூது வினை – சூது செய்பவர்களைக் குறிப்பிடுவது. ஏதாவது ஒரு விஷயத்தை வினையாய்ச் செய்து மற்றவர்களைச் சிரமத்துக்குள்ளாக்குவது.  

1087. மருக்கோளிப்பய, மறுக்கோளி – மக்குப் பயல்/பெண். புத்திசாலித்தனம் இல்லாது செயல்படுபவர்களைக் குறிப்பது. சில சமயம் புத்தி மாறாட்டத்தோடு செயல் செய்பவர்களையும் குறிக்கும்.

1088. நாலாந்தாரம், (மொதத்தாரம், மறுதாரம், மூணாந்தாரம், ) – ஒருவரின் நான்காவது மனைவியை நாலாந்தாரம் எனக் குறிப்பிடுவார்கள்.  மொதத்தாரம் என்றால் முதல் மனைவி, மறு தாரம் என்றால் இரண்டாவது மனைவி, மூணாந்தாரம் என்றால் மூன்றாவது மனைவி,

1089. அப்பச்சி வண்டி – தாயை இழந்த குழந்தையின் தந்தைக்கு இன்னொரு மணம் செய்து வைக்கப்பட்டால் அந்த மனைவியை பேச்சு வழக்கில் ஆத்தா என்றோ சின்னத்தா என்றோ ஆச்சி என்றோ அழைத்தாலும் எங்காவது குறிப்பிடும்போது ( அந்தத் தாயுடன் அவ்வளவு ஒற்றுமை இல்லாவிட்டால் ) அப்பச்சி வண்டி என்று குறிப்பிடுவது வழக்கம். 

1090. தொருதொருத்தபழம் – எந்த விஷயத்திற்கும் தொரு தொருவென அனத்திக் கொண்டிருக்கும் வயதில் படு முதிர்ச்சி அடைந்த முதியவர்களைக் குறிப்பது. இவர்கள் நினைத்தபடி எந்த வேலையும் நடக்க வேண்டும் என விரும்புவதால் தங்களால் செய்ய முடியாவிட்டாலும் அனைவரிடமும் அதைக் கூறி அதன் படி செயல்படுத்த முனைவார்கள். சில சமயம் தன் உடல்நலக் குறைவுக்காகவும் தொருதொருத்தபடி இருப்பார்கள்.  

1091. தெங்கணாவெட்டி, தெங்கணக் கருப்பன் – வேலை வெட்டி அற்றவன், வெட்டிப் பயல், ஒரு வேலையும் செய்யாமல் சுற்றிக் கொண்டிருக்கும் தண்டச்சோறு, தெங்கணக் கருப்பன் என்றால் நாம் ஒன்று சொல்ல அவன் ஒன்று செய்து வைப்பான். அதே வேலையை நாம் திரும்ப முதலிலிருந்து திருத்தி திரும்பச் செய்ய வேண்டி வரும்.

1092. பச்சை நத்தம் – சின்னஞ்சிறு பிள்ளை. பால் மணம் மாறாக் குழந்தை, சமையுமுன் திருமணம் செய்துவைக்கப்படும் குழந்தைகளையும் குறிப்பிடுவார்கள். வாழ்க்கை பற்றிய விவரம் தெரியாத வயதில் இருக்கும் சிறுவர் சிறுமியர்.  

1093. கூதறத்தனம் – பொறுப்பற்ற தனம், ஏறுக்கு மாறாகக் காரியம் செய்தல்.

1094. உள்ளதையும் – இருப்பதையும், ஏற்கனவே இருக்கும் சொத்து, இடம், பொருள் ஆகியன.,  

1095. அலக்குடுக்க – சொல்லக் கேட்கா குழந்தைகளுடன் சிரமப்படுதல், ( மற்ற வழக்கில் ) இதோட மாரடிக்கிறேன் என்று சொல்வார்கள். சொல் பேச்சு கேட்காமல் கத்திக் கொண்டு திரியும் வாண்டு சிண்டுகளுடன் கஷ்டப்படுதல். தான் நினைத்தை சாதிக்கப் பிடிவாதம் பிடிக்கும் குழந்தையைப் பார்த்து இத்தோட அலக்குடுக்க முடியல. ஆத்தா பொல்லாதது இது என்பார்கள்.

1096. நாறப்பேச்சு – அவமானப்படுத்தும் பேச்சு. /சண்டை/ கெட்ட வார்த்தைகள் சொல்லி சத்தமாகத் திட்டுதல், நாறடிக்கும் பேச்சு.. தரம் தாழ்ந்த பேச்சு., வாக்குத் தவறிய பேச்சு. 

1097. மோளப் பஞ்சாயத்து – தன் வீட்டில் பஞ்சாயத்துப் பண்ண ஆயிரம் குறைகளை வைத்துக் கொண்டு அடுத்தவர் வீட்டில் பஞ்சாயத்து செய்யப் போகுதல். அடுத்தவர் பிரச்சனை என்றால் அல்வா தின்றது போல் அதை விலாவாரியாக விசாரித்து உணக்கையாக உட்கார்ந்து பேசி நீதி வழங்குவது போல் தனக்கு பிடித்த பக்கமே சரி என மொட்டையாக மொண்ணையாக தீர்ப்பு வழங்குதல். /அடுத்தவரின்  விஷயமற்ற விஷயத்தைப் பெரிதாக்கி அதைப் பஞ்சாயத்து செய்வது போல சொரிந்து விட்டுச் சுகம் காணுதல்.  மொட்டைப் பஞ்சாயத்து.

1098. ஆளாப் பேரா வந்து – பெரிய ஆளா வரணும் பேர் சொல்லும் ஆளா வரணும் என்று ஆசி கூறுவது. ஆளாப் பேரா வாப்பா என்பார்கள். அல்லது அவுக மகன்/ள் , பேரன்/த்தி ஆளாப் பேரா வந்து குடும்பப்பேரைக் காப்பாத்திட்டாக என்பார்கள்.

1099. பவர்ண – சித்திரா பௌர்ணமி, பொதுவாக பௌர்ணமி விரதம் இருப்பவர்கள் இப்படிச் சொல்வார்கள். அல்லது பேச்சு வழக்கில் இப்படிக் குறிப்பிடுவார்கள். பவர்ணைக்கு இத்தனை நாள் இருக்கு என்று.


1100. பிள்ளையாம்பி. - பிள்ளையார் நோம்பி – செட்டிநாட்டின் முக்கிய பண்டிகை இது . பிள்ளையார் நோன்பு. இது கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகையிலிருந்து 21 ஆம் நாள் சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் ( அநேகமாக மார்கழியில் ) வரும். இவ்விழா கொண்டாடுவதற்கு மூன்று நான்கு செவிவழிக் கதைகள் உண்டு. அதில் ஒன்று கொண்டு விக்கச் சென்ற தனவணிகர் குழுவின் கப்பல் உடைந்து அவர்கள் ஒரு தீவில் அகப்பட்டு விட அன்றிலிருந்து 21 ஆம் நாளில் அவர்கள் இன்னொரு கப்பல் மூலம் காப்பாற்றப்பட்டு வீடு திரும்பியதால் கொண்டாடப்படுகிறது. அந்த 21 நாளும் வனாந்திரத் தீவில் இருந்ததால் வேட்டித் துணியில் இருந்து ஒவ்வொரு நாளும் இழை எடுத்து வைத்து அதில் தீபம் ஏற்றி விநாயகரை வணங்கினார்களாம். அதனால் இவ்விழாவில் இழை எடுத்தல் சிறப்பானது. திரட்டுப்பால், அல்லது கருப்பட்டிப் பணியார மாவில் நெய் தொட்டு புதுவேஷ்டியில் இருந்து எடுத்த இழையில் ( ஏழு எடுத்து மூன்றாக மடிப்பர் – இப்போதெல்லாம் கடையிலேயே விற்கிறது ) நெய் தொட்டு பிள்ளையார் போல் கூம்பாகப் பிடித்து இந்த இழைத் திரியில் விளக்கேற்றி விநாயகரை வணங்கி உண்பார்கள். அன்று கருப்பட்டிப் பணியாரம் , வெள்ளைப்பணியாரம், வடை, இட்லி, சாம்பார், வரமிளகாய்த்துவையல், சட்னி, திரட்டுப்பால் செய்வார்கள். சிலர் 16 பலகாரம் செய்வார்கள். இத்துடன் விநாயகருக்கு 5 வகைப் பொரியும் படைப்பார்கள். தேங்காய், வாழைப்பழம் வெற்றிலை பாக்குடன் கிடைக்கும் பழங்களையும் படைப்பதுண்டு. விநாயகருக்குப் பூமாலை சாற்றி கன்னுப்பிள்ளை & ஆவாரம்பூவில் செய்த வட்டச் செண்டைப் பக்கம் வைப்பார்கள்.  


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம். 

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும். 

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். 

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

 

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

 

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

 

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

 

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 


85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

 

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும். 

 

87. இந்த சீர் போதுமா ?! 

 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 

 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம். 

 

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 

 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

 

92. இனியெல்லாம் பிஸினஸே

 

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

 

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

 

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.  

 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.







104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.

105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.

106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.







டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள். 

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

2 கருத்துகள்:

  1. நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...