எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 15 ஆகஸ்ட், 2012

வானம் தொட்டுவிடும் தூரம்தான்.. ஸ்ரீலேகா..

ஸ்ரீலேகா.. இவர் சமூக சேவகி., சுதந்திரப் போராட்டத் தியாகி., விஷ்ராந்தி என்ற முதியோர் இல்லத்தின் நிறுவனர் சாவித்ரி வைத்தியின் தங்கை மகள். அம்மா., பெரியம்மா வழியில் இவரும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். ரொம்ப கூச்ச சுபாவமுள்ள குழந்தையாய் இருந்த இவர் இப்போது தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாய் இருக்கிறார். இந்த மாஜிக் நிகழ்ந்தது எப்படி.. எல்லாம் வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடம்தான்.


சென்னையைச் சேர்ந்த இவருக்கு ஒரு தம்பி.தம்பி பிறந்த 20 நாளில் தாய் மறைந்து விட்டார். அப்போது இவருக்கு வயது 5. தந்தை ராமனாதன் எல் ஐ சி யில் இருந்து ஓய்வு பெற்றவர். பெரியம்மாதான் இவரை வளர்த்திருக்கிறார். ரோசரி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்ததால் மிக அருமையாக நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுகிறார். பி யூ சி எத்திராஜ்., பி ஏ. ஹிஸ்டரியில் கோல்ட் மெடலிஸ்ட். மெரிட் சர்டிஃபிகேட்., மற்றும் ப்ரொஃபிஷியன்ஸி சர்டிஃபிகேட் பெற்றவர்.

எம் ஏ ஹிஸ்டரி ப்ரசிடென்ஸி கல்லுரியில் படித்தவர். இரண்டாம் வருடம் படிக்கும் போதே திருமணம். அதற்குப் பின்னும் தொடர்ந்து படித்து யூனிவர்சிட்டி ராங்க் மற்றும் அவுட் ஸ்டாண்டிங் க்ரேட் ( for the first rank in the university) வாங்கியுள்ளார். பி ஹெச்டிக்காக civilisation of history of a country பற்றி லைப்ரரியில் நோட்ஸ் எடுத்துப் படித்தாராம்.

ஐஏஎஸ் அல்லது ஐஎஃப் எஸ் படிக்கத்தான் ஆசை அல்லது ஆர்க்கியாலஜியில் ரிசர்ச் செய்யணும்னு ஆசை எனச் சொல்லும் இவர் சிவிலைசேஷன்., கல்வெட்டு பற்றிப் பிடித்ததால் ஹிஸ்டரியைப் படித்ததாக சொல்கிறார். சயின்ஸ் ., மாத்சில் இண்டரஸ்ட் இல்லை. லிட்ரேச்சர் படிக்க ஆசையாக இருந்தாலும் வித்யாசமான ஒன்றைப் படிக்கவேண்டும் என்பதற்காகவே ஹிஸ்டரியை எடுத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

ஒரு பையன் ஒரு பெண் பிறந்தத பின் கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து 19 வருடங்கள் ஆகிவிட்டதாம். அதன் பின் மதர் தெரசா யூனிவர்சிட்டியில் எம் பில் படித்து டிஸ்டிங்க்‌ஷனில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். படிப்பறிவு தனக்கு தன்னம்பிக்கை அதிகரித்ததாகக் கூறுகிறார்.

ஹிஸ்டரியோடு சம்பந்தப்பட்டது விமன் ஸ்டடீஸ்.-- ஃபெமினிஸம். விமன் ஓரியண்டட் பத்தி -- அம்புஜம்மாள் என்ற ரினௌண்ஸ்ட் காங்கிரஸ் சேவகி பத்தி ஒரு வருட தீசிஸ் செய்து சமர்ப்பித்திருக்கிறார். அவரும் இவரின் கொள்ளு அத்தைப் பாட்டியாம். ஸ்ரீனிவாச காந்தி நிலையம் என்பது ஆதரவற்ற பெண்களுக்கு உதவுவது. தன்னைத் தானே பெண்கள் பார்த்துக் கொள்ள உதவுவது. இது அம்புஜம்மாளால் உருவாக்கப்பட்டது.

டைரக்டர் பாலசந்தரின் பெண் புஷ்பா கந்தசாமி இவரின் தோழி என்பதால் அவருடைய கம்பெனியில் ஒரு வருடம் பணிபுரிந்திருக்கிறார். அப்புறம் ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்டில் 6 வருடம். கஸ்டமர் சர்வீஸில் பணி. எல்லாமே செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் நல்ல விதமாகக் கொண்டுவந்ததாகக் கூறி்னார். இது நன்கு ஷேப் ஆகும் வரை அதில் இருந்திருக்கிறார்.

இவரது பெரியம்மா சாவித்ரி வைத்தி மற்றும் தம்பி கிருஷ்ணன் இவர்களே தன் தன்னம்பிக்கையின் தூண்டுகோல்கள் என்கிறார். இவரின் தம்பி கிருஷ்ணன் யூ எஸ்., நேபாள், மும்பை ஆகிய இடங்களில் சுற்றுச் சூழல் சம்பந்தமாக GREEN VENTURES என்ற கம்பெனியை நடத்தி வருகிறார். இது பயோ காஸ்., சோலார் எனர்ஜி., விண்ட் எனர்ஜி யை எப்படி உபயோகப்படுத்துவது என கற்பிக்கிறது. இது சம்பந்தமாக ஃபண்ட் உதவி செய்யும் வெளிநாட்டுக் கம்பெனிகளில் இருந்து இந்த கம்பெனிகளுக்கு உதவியை வாங்கி சேவை செய்கிறது. அதை இவர் ட்ரெயினிங் செய்கிறார். கம்பெனி ட்ரெயினராக.

இது எப்படி எல்லாம் கைவந்தது எனக் கேட்டால் கம்யூனிகேஷன் ஸ்கில்., மேனேஜ்மெண்ட் ஸ்கில்ஸ் எல்லாம் கல்லூரியில் 15 வருடங்களாகப் படித்தது மற்றும் லயன்ஸ் க்ளப்., லயனஸ் க்ளப்பில் 25 வருடம் இருந்ததால் ஆங்கிலம் பேச., தொடர்பு கொள்ள உதவியாக இருந்தது என்கிறார். (ரோஸரி மெட்ரிக்கில் படித்ததாலும் மிக அருமையான ஆங்கிலம் இவருடைய பேச்சில் இனிமையாய் இருக்கிறது.). லயனஸ் க்ளப்பில் 3 நாட்கள் ட்ரெயினிங் கொடுத்திருக்கிறார்கள்.

ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட் மற்றும் அகாடமி நடத்தும் அளவு இது தன்னம்பிக்கை கொடுத்துள்ளது. தற்போது அஷோக் குமார் மேத்தா ஜெயின்ஸ் க்ரூப் ஆஃப் கம்பெனிகளின் METHA INSTITUTE OF CARRIER TRAINING -- MICT -- EXECUTIVE DIRECTOR ஆக இருப்பதாகக் கூறினார்.மிஸஸ் ராஜலெக்ஷ்மி-- இவர் இதில் ( இவர் ஒரு ஸ்கூல் பிரின்சிபால்) மேனேஜிங் டைரக்டராக இருக்கிறார்.

திருநெல்வேலி., திருச்சி., திருப்பதி., விசாகப்பட்டினம் இங்கே இவர்கள் ஹோப் இண்டர்னேஷல் கல்லூரி நடத்தி வருகிறார்கள்.

இவருடைய தம்பி காத்மாண்டுவில் அழகப்பா யூனிவர்சிட்டியின் தொலைதூரக் கல்வி ஆரம்பித்து 7 வருடங்களாகிறது. அதில் இப்போது நர்சிங் கோர்சஸும் எடுக்கிறார்கள். 400 மாணவர்கள் படிக்கிறார்கள். பி ஏ., எம் ஏ வும் படிக்கிறாங்க. தம்பி மனைவி நிர்ஜலா ஒரு நேபாளியாக இருப்பதால் அதை கவனித்துக் கொள்கிறார். அதில் இவருடைய ஆலோசனைகளும் உண்டு. இவர் டீனாக போர்டில் இருக்கிறார். மிக நல்ல பேரோடு நல்ல முறையில் நர்சிங் காலேஜ் மற்றும் மருத்துவமனை நடக்கிறது.

விமானத்துறை., சுற்றுலாத்துறை., விருந்தோம்பல் ஆகியவற்றுக்கு MICT யில் பயிற்சி அளிக்கப்படுவதாகக் கூறினார். லீடர்ஷிப் ஒர்க்‌ஷாப்புகளும் நடத்துவதாகக் கூறினார். இவர் ONE OF THE TRUSTEESIN VISHRANTHI .. டொனேஷன்கள் வாங்கித் தருவதாகவும் கூறினார்.

ரொம்பப் பயந்த சுபாவம் கொண்டவர் இவர். ஷை டைப்., 5 வயதில் அம்மா இறந்து விட்டதால் 2 பாட்டியும்தான் வளர்த்திருக்கிறார்கள். எனவே இவரும் தம்பியும் எப்போது படிப்பு படிப்பு என படித்திருக்கிறார்கள். செலவுக்கு அப்பாவிடம் தொந்தரவு செய்வதில்லை. பள்ளிப் பருவத்தில் பஸ்ஸில்தான் செல்வார்கள்.

ஒரு பெண் தனித்து வாழும்போது சுற்றி இருப்பவர்கள் பலதும் பேசுவார்கள். அதுகெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் பயப்படாமல் தன் வேலைகளைச் செய்து கொண்டே போக வேண்டும். கான்ஃபிடண்ட்., வீரம் வேண்டும். என்கிறார். அன்றைய ஸ்ரீலேகாவையும் இன்றைய ஸ்ரீலேகாவையும் நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது ., நம்ம இண்டிபெண்டன்ஸை ., டிட்டர்மினேஷனை நாம காண்பிக்க வேண்டும் என்கிறார். எல்லாவற்றிலும் இருந்து ஓவர்கம் செய்ய வேண்டும் என்கிறார். முற்போக்குத்தன்மையோடு வாழ ஓவ்வொரு பெண்ணும் முயல வேண்டும் என்பதே இவர் தரும் தன்னம்பிக்கைக் செய்தி.

DEDICATED SEVICE WITH VISION -- DSV WITH YOU ALWAYS. என்ற சாய் ஸ்லோகனைச் சொல்லித் தனது பேட்டியை முடித்தார். முடிந்தவரை அனைவரும் சேவையில் ஈடுபடுங்கள்.

 டிஸ்கி:- போராடி ஜெயித்த பெண் ( 14) ஸ்ரீலேகா பற்றிய இந்தக் கட்டுரை அக்டோபர்  2011 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்தது.

5 கருத்துகள்:

  1. நல்லதொரு பகிர்வு.

    இனிய சுதந்திர தின வாழ்த்துகள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  2. அருமையான தன்னம்பிக்கை பதிவு...

    ஸ்ரீலேகா அவர்களுக்கும், பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  3. அருமையான கட்டுரை...
    தெரிந்து கொள்ளா வேண்டியவரைப் பற்றியதொரு அழகான பகிர்வு அக்கா.

    பதிலளிநீக்கு
  4. நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி தனபால்

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...