திருவண்ணாமலை வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கும் எங்கள் அம்மாவின் ’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ். கோவை மக்கள் அனைவரும் வருகை புரிந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்
என்
இனிய நட்புகளே .,திருப்பூர் அரிமா சங்கத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான
பெண் எழுத்தாளர்களுக்கான " சக்தி விருது "( அன்ன பட்சி கவிதைத் தொகுதிக்காகக் )
கிடைத்துள்ளது.
நன்றி அகநாழிகை பதிப்பகம் & அகநாழிகை பொன் வாசுதேவன்.
இது குறித்து மத்திய அரிமா சங்கத்தின் மேலாளர் அனுப்பிய கடிதம்.
///அன்புடையீர்...வணக்கம். நலம் குறித்த
விருப்பம். வாழ்த்துக்கள்
மத்திய அரிமா சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும்
வழங்கப்படும்
“ அரிமா விருதுகள் ”
டிசம்பர் 25 மாலை 5 மணி
அளவில் தலைவர் அரிமா பிரதீப்குமார் தலைமையில் நம் அரிமா சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. ( மாலை 5 மணி முதல் 8 மணி
வரை) 5 மணி முதல் படைப்பாளிகளின் படைப்பு அனுபவ உரைகள் இருக்கும்.
தாங்கள் கலந்து
கொண்டு தங்களுக்கான கீழே குறிப்பிட்ட பரிசைப் பெற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறேன். அரிமா
குறும்பட விருது / சக்தி விருது.