எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

வாசகர் கடிதங்கள்...!!! - பாகம் 1

மெல்லினம் ஆஸ்த்ரேலியாவிலிருந்து வரும் தமிழ் மாத இதழ். சித்திரை, வைகாசி என்று தமிழ் மாதத் தொடக்கத்திலேயே இந்த இதழ் வெளியிடப்படுகிறது. இரண்டாண்டுகளாக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் மெல்லினம் இதழில் என்னுடைய பெண்மொழிக் கட்டுரைகளுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதாக சகோ . திரு மணிமாறன் கூறினார். அதில் என் கட்டுரை பற்றி வெளிவந்த ஒரு வாசகியின் கடிதம் இங்கே. மிக்க நன்றி ஜெயலெட்சுமி, சிட்னி.

 லேடீஸ் ஸ்பெஷலில் இருமுறை கவர் போட்டோக்களில் என்னுடைய சாதனைப் பெண்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஆட்டோ சாந்தியும், இருளர் இன விளக்கு வசந்தியும். என்னுடைய கட்டுரைகளைப் படித்துவிட்டு தன்னுடைய தோழி ஊக்கம் பெற்றதாக ஒரு வலைப்பதிவ நண்பர் கூறினார். அஹமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர்  இந்தப் புத்தகம் பெண்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் ப்ரேயர் முடிந்தவுடன் தமிழ் பள்ளியில் சில பக்கங்கள் வாசிக்கப்படுவதாகவும் கூறினார்.  அவர்கள் இருவருக்கும் நன்றிகள்.


என்னுடைய அம்மா பல் சீரமைப்புக்காக ஒரு  பெண் பல் டாக்டரிடம் சென்று வந்தார். அவரிடம் அம்மா என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தைக் கொடுக்க அவர் அதைப் படித்துவிட்டு ஃபோன் செய்து  ஒரே மூச்சில் அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டதாகவும், அது தனக்கு மிகுந்த ஊக்கமளித்ததாகவும் கூறினார். அந்த டாக்டருக்கும் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜாம்மாவுக்கும் நன்றி.

ப்ளாகர் உலகம் என்ற பக்கங்களில் லேடீஸ் ஸ்பெஷலில் கிட்டத்தட்ட 20 ப்ளாகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அதற்குக் கூட அங்கீகாரமாய் ஒரு வாசகியின் கடிதம் இங்கே. வாஞ்சி சரோஜாவுக்கும், சேலம் காவ்யாவுக்கும், லெட்சுமி பாலாவுக்கும், சிதம்பரம் சுகந்தினிக்கும், பெசண்ட் நகர் ஷீலாவுக்கும் நன்றிகள்.

சூரியக்கதிரில் பங்குச் சந்தையில் ஈடுபடும் என் அம்மா “வயது ஒரு தடையல்ல” என்று கூறியதை ஒரு பேட்டியாக எடுத்து அனுப்பி இருந்தேன். அதை வெளியிட்ட ஆசிரியர் பாரதி ராஜாவுக்கு நன்றி. முகநூலில் டைரக்டர் மனோ பாலா தன்னுடைய பக்கத்தில் இதைப் பகிர்ந்திருந்தார். அதற்கான வாசகர் கடிதம் இங்கே. கிருஷ்ணன் கோயில் நாகராஜனுக்கு நன்றி.

இவள் புதியவளில் ”விஐபியும் நானும்” என்ற பகுதிக்கு நடிகரும் நண்பருமான இயக்குநர் சேரனைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன். அதற்கு ஒரு புடவை பரிசு கிடைத்தது. வாசகி தஞ்சாவூர் மங்களாவுக்கு நன்றி.

விஆர் எஸ்ஸில் வந்து நச்சரிக்கும் கணவர்களைப் பற்றிய கட்டுரைக்கு ஆதரவு தெரிவித்த பழனி விமலாவுக்கு நன்றி.

வடிவுக்கரசியின் பேட்டிக்கு வாழ்த்துத் தெரிவித்த சென்னை ஜே.சி. ஜெரினாகாந்த்துக்கு நன்றி.

என்னுடைய பத்துவகைப் பொங்கலுக்கும் ஜே.சி. ஜெரினாகாந்த வாழ்த்தி இருந்தார். அவருக்கு நன்றி.

ஹுசைனியின் சமையல் பேட்டிக்கு பாராட்டிய  நாமக்கல் சங்கீதாவுக்கு நன்றி.

ஒரே இதழில் 6 உணவுக் கட்டுரைகள் எழுதி இருந்தேன். ஹனி, கோதை, ஆண்டாள், தேனம்மைலெட்சுமணன் என்ற பெயர்களில். உணவுச் சிறப்பிதழைப் பாராட்டிய ஈரோடு ரேகாவுக்கு நன்றி.

என்னுடைய பொங்கல் டிப்ஸைப் பாராட்டிய பெரம்பூர் பி. சாந்திபாபுவுக்கு நன்றி.

விதம் விதமான பொங்கல், தலைப் பொங்கல், மண்வாசனைப் பொங்கல் கட்டுரைகளைப் பாராட்டிய பாலவாக்கம் ராஜேஷுக்கு நன்றி.

பொங்கலோ பொங்கல் பிட்ஸுக்காக வாழ்த்திய சாலிக்கிராமம் ஜெயஸ்ரீக்கும் நன்றிகள்..!



ஜனவரி  15 - 31 , 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்த பூஜையறைக் கோலங்களைப் பாராட்டிய எஸ்.பிரபாவதி, மெய்யூர் அவர்களுக்கு நன்றி.!

குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்த பொங்கல் கோலங்களைப் பாராட்டிய கடலூர், வெ. லெக்ஷ்மிநாராயணனுக்கு நன்றிகள்.. !!

ஏப்ரல் 15 - 30 குமுதம் பக்தி ஸ்பெஷலிலும் முருகன் சிறப்புக் கோலங்களுக்காகப் பாராட்டிய திசையன்விளை ஆர். ஜி. காயத்ரிக்கு  நன்றி. !!


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...