எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

காரைக்குடிச் சொல்வழக்கு :- குடி ஊதுதலும் கொட்டிக் கொடுத்தலும்.


1021. மேப்பாத்தல் - வீட்டில் நடக்கும் தினசரி விஷயங்களையும் சரி அனுவல் அல்லது அலுவலகத்தில் மற்றவர்கள் செய்யும் செயல்கள் ஒழுங்காக நேரப்படி நடக்கின்றனவா என்று ஒழுங்குபடுத்துதல்/ கண்காணித்தல் மேப்பாத்தல் எனப்படும். 

மிக அதிகமாக கவனம் எடுத்து மேப்பாத்து அனைவரையும் படுத்துபவர்களையும் சரி, ஒரு விஷயத்தை அதீதமாக ஊதிப் பெருக்கிப் பேசுபவர்களையும் சரி மேப்போனவன் என்பார்கள். 

1022. பூடகமாய்ப் பேசுதல் - ஒரு விஷயத்தை உடைத்துப் பேசாமல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுதல். மனதில் ஒன்றை நினைத்துக் கொண்டு அடுத்தவரைத் தவறாக நினைத்து அவர் மேல் பழி போடுதல். 

1023. படிச்சுக் கொடுத்தல் - கணக்கு வழக்குப் பார்த்தல் போன்றவற்றை அல்லது புதிதான ஒரு விஷயத்தை அடுத்தவருக்குக் கற்றுக் கொடுப்பது. 

1024. சொணங்குதல் - தாமதித்தல். ஒரு விஷயத்தைச் சொல்ல அல்லது செய்ய சுணங்குவது. மனதால் அல்லது உடல் நோவால் சுருங்கிப் போவதும் சொணங்குதல்தான். 

1025. மொனங்குதல் - ஒரு விஷயத்தை உரக்கக் கூற முடியாமல் முனகுதல். எதிர்ப்பைக் காட்ட முடியாமல் அல்லது அதிருப்தியைப் பதிவு செய்ய முணுமுணுப்பது மொனங்குதல் ஆகும். 


1026. கொணங்குதல் - குரல் நடுக்கம், தழுதழுப்பு, உணர்ச்சி வசப்பட்டோ அல்லது சளி பிடித்தது போன்ற காரணத்தினாலோ பேசும் போது குரல் நடுங்குவதைக் கொணங்குதல் என்பார்கள். ’கொண கொணன்னு அறுத்துறுவான்’ என்று தான் நினைக்கும் விஷயத்தைச் செய்யப் பிடிவாதம் செய்பவர்களைக் குறிப்பதும் உண்டு. 

1027. கனைத்தல் - செறுமுதல், ( உறுமுதல் அல்ல :) தொண்டையைக் கனைப்பது. ஒரு விசயத்தைச் சொல்ல ஆரம்பிக்கும் முன் முன்னோட்டமாக கனைத்து தான் ஏதோ சொல்லப்போவதாக அறிவிப்பது/ எச்சரிக்கை செய்வது/ முக்கியமான தாக்கலைச் சொல்லுமுன் தன்னையறியாமல் செய்யும் செயல். சளி போன்றவற்றாலும் தொண்டையைச் செறுமுவதும் கனைத்தல் எனப்படும்.  அடிக்கடி செறுமுபவர்களை அவன் சும்மா கனைச்சிக்கிட்டே இருப்பான் என்பார்கள்.  

1028. காசுவெட்டிப் போடுதல் - கோட்டையூரில் சொக்கட்டான் கோயில் என்று ஒன்று உண்டு .சொற்கேட்டான் பிள்ளையார் கோவில் என்பது. அங்கே மனதில் குறை உள்ளவர்கள் எதிராளியை இறைவன் கேட்க வேண்டும் என்பதற்காக காசு வெட்டிப் போடும் பழக்கம் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தனக்குப் பிடிக்காதவர்களை அல்லது தன் எதிரியை அல்லது தனக்கு எதிராக செயல்பட்டவர்களை அல்லது தன்னைவிட வலிமை வாய்ந்து தன்னைப் பாடாய்ப் படுத்துபவர்களை இறைவன் தன் சார்பாகச் சென்று தட்டிக் கேட்டு நியாயத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று காசை வெட்டிப் போட்டு வேண்டுவார்களாம். இதில் எது நியாயம் என்பது அவரவர் பக்கம் சார்ந்தது. 

1029. பூரம்கழித்தல் - கல்யாணப் பெண்ணுக்குச் செய்யப்படும் சடங்கு. கல்யாணத்தன்று அதிகாலை அத்தை அல்லது அம்மான் பெண்டிர் ஒருவர் அதுவரை பெண்ணுக்குக் காவலாய் இருந்த பூரம் என்னும் தேவதையிடம் இப்பெண்ணைக் காக்கக் கணவன் இன்று வரப்போகிறார் அதனால் இதுவரை இப்பெண்ணை நீ காவல் காத்ததற்கு நன்றி. இன்றிலிருந்து நீ விலகிக் கொள் என்று கழிப்பது பூரம் கழித்தல். இதில் தலைக்குக் குளித்து நிற்கும் பெண்ணைக் கோலமிட்ட இடத்தில் தடுக்கில் கிழக்குப் பார்த்து நிற்க வைத்துத் தலை இரு தோள்பட்டை, இரு முழங்கைகள், இரு பாதங்கள் ஆகிய இடங்களில் நொச்சி இலை வைத்து அதன் மேல் கேப்பையில் சுட்ட ரொட்டியை வைத்து அத்தை அல்லது அம்மான் பெண்டிர் வேப்பங்குச்சியால் அந்த ரொட்டியைத் தட்டுவார்கள். பெண் உடலைக் குலுக்க அவை கீழே விழும். இதுபோல் மூன்று முறை செய்வார்கள். (இதற்கு பெண் சலவைத் தொழிலாளிக்கு குடிவண்ணார் முறைகள் கொடுப்பார்கள். - பெரிய சில்வர் மைசூர் சட்டியில் சாதம் அவித்த முட்டைகள், பருப்பு மசித்து அப்பளத்துடன் புதிதாய் வைத்த கத்திரிக்காய் வாழைக்காய் குழம்பு,) கொடுப்பார்கள். பணம் 101 ரூபாயிலிருந்து தோதைப் பொறுத்து எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பார்கள். அப்பெண் அணிந்த ஆடைகளையும் கொடுப்பதுண்டு. திருமணத்துக்கென்று அவர்களுக்குப் புதுத்துணிமணிகளும் , மாத்துக் கட்ட முறைகளும் கொடுப்பார்கள்.  

1030. சடங்கு கழித்தல் - புஷ்பவதியாகி இருக்கும் பெண்ணுக்குச் செய்யப்படும் சடங்கு. சமைந்த ஐந்தாம் நாள், எட்டாம் நாள், பதினாறாம் நாள் ஆகிய ஒரு நாளில் பெண்ணின் அத்தை அல்லது அம்மான் பெண்டிர் சடங்கு கழிப்பார்கள். இதில் பூரம் கழிப்பது போலத்தான் நடைமுறை எல்லாம். ஆனால் தீட்டுக் கழித்தல் என்பார்கள். 

1031. பர்மா தேக்கு சுழிபார்த்தல் - பர்மாவிலிருந்து வீட்டின் உத்தரம், தூண் போன்றவை அமைக்க தேக்கு மரத்தில் சுழி பார்த்து வாங்குவார்களாம். அவற்றை பச்சையாய் இருக்கும்போதே சுத்தியல் இன்ஷியல் பதித்த மர அச்சு போன்றவை கொண்டு முத்திரை இட்டு ( LOGS ) கட்டி கடலில் அனுப்பி வைப்பார்களாம். இவை கப்பலுடன் பக்கவாட்டில் கட்டி வருமா அல்லது தானே மிதந்து நாகைக் கடலோரம் வருமா என்பது தெரியவில்லை. 

1032. குடி ஊதுதல் - திருமணம் ஆன பெண்ணை முதன் முதலில் மாமியார் வீட்டில் பெண்ணழைப்பதும் குடி ஊதுதல் ஆகும் அது போல் ஒரே வீட்டில் வேறு இருந்து சமைத்தல் &  தனிக்குடித்தனம் போய் சமைப்பதையும் குறிப்பிடலாம். வேறு வீடு பார்த்து அல்லது வீடு கட்டிக் குடி போகுதலும் குடி ஊதுதல்தான். 

1033. வேறு வைத்தல் - ஒரே வீட்டிலேயே மாமியாரும் மருமகளும் ஒரே அடுப்படியில் வெவ்வேறு பக்கங்களில் சமைத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். முதன்முதலில் திருமணமான பெண்ணுக்கு வீட்டின் அடுப்படியில் ( நாற்புறமும் பத்தி, கீழ் வாசல், பத்தியின் பக்கவாட்டுகளில் சமையல் அறைகள் இருக்கும், சில வீடுகளில் அப்பத்திகளிலேயே ஆளுக்கு ஒரு பத்தியில் மாமியாரும் மருமகள்களும் தனித்தனியாக அடுப்பு வைத்துச் சமைத்துக் கொண்டிருப்பார்கள். ) இடம் ஒதுக்கி சமைக்கவும் அவர்கள் புழக்கத்து அறைகள் ( சாமான் அறை, சாமி அறை, சாமான் போடும் அறை, படுக்கை அறை ஆகியன பிரித்துக் ) கொடுப்பதும் வேறு வைத்தல் ஆகும். 

1034. கொட்டிக் கொடுத்தல் - இந்த வேறு வைத்தலுக்காக மாமியார் மருமகளுக்கு பல்வேறு சமையல் பொருட்களையும் சம்புடங்கள் மகிர மகிரக் கொட்டிக் கொடுப்பார்கள். உப்பு, புளி, பருப்பு, அரிசி வகையறாக்கள், வத்தல் வரளிகள், ஊறுகாய்கள் பொடிகள், மாவுகள் இன்னபிறவற்றைக் கொட்டிக் கொடுப்பார்கள்.  

1035. புள்ளை கூட்டுதல் - பிள்ளை இல்லாதவர்கள் அவர்கள் சார்ந்த கோயிலில் உள்ள பிள்ளைகளை. பங்காளிகளின் பிள்ளைகளைத் தங்கள் பிள்ளைகளாகப் பிள்ளை கூட்டிக் கொள்வார்கள். இப்படி சுவீகாரம் போனவர்களைப் பிள்ளை வளரச் சென்றிருக்கிறார்கள் என்று குறிப்பிடுவதும் உண்டு. பிள்ளை வளரக் கூட்டிய அவர்களின் வாரிசுகள் பல்கிப் பெருகி அக்குடும்பத்தை வளப்படுத்துவார்கள். 

1036. பெண்ணைச் செய்தல் - பெண்ணை சொந்தத்தில் திருமணம் செய்வதை முக்கியமாகக் குறிப்பது. அவுக சொந்தத்துக்குள்ள பெண்ணைச் செய்திருக்காக என்றோ அங்கே அவுக வீட்டில் பெண்ணைச் செய்திருக்காக என்றோ சொல்வார்கள். பெண்ணைச் செய்தல் என்றால் பொதுவாக மகளைத் திருமணம் செய்தல் என்று அர்த்தம். 

1037. அடுப்பு போட்டு தீபம் பார்த்தல் - கல்யாணம், விளையாட்டுப் பொட்டி வேவு, சமைதல் , படைப்பு, தண்டாயுதபாணி பூசை, பொங்கல் போன்றவற்றுக்கு அடுப்பு வெட்டிச் சமைக்கும்போது தீபம் பார்ப்பார்கள். இப்போது பிரம்மாண்ட கேஸ் அடுப்புகள் வந்துவிட்டாலும் தீபம் பார்த்துப் பால் காய்ச்சிப் பருப்பு மசித்துக் கத்திரிக்காய் வாழைக்காய் அவித்துச் சமையல் செய்வார்கள். 

1038. இராமாயணம் படித்தல் - கார்த்திகை மாதம் முருகன் ஸ்பெஷல் பூசை என்றால் புரட்டாசி மாதம் பெருமாள் ஸ்பெஷல். திருமாலுக்கு உகந்த அந்த மாதத்தில் மாதம் முழுவதும் ஒரு சந்தி பிடித்து வாழையிலையில் உண்டு மாலை நேரத்தில் இராமாயணம் படித்துத் தீபம் பார்ப்பார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் வெகு விசேஷம். பதினோரு நாள் இருபத்தி ஓரு நாள் கணக்கு வைத்துப் படித்து அதன் பின் இராமர் பட்டாபிஷேகம் ஊருடன் விருந்து வைத்து ஏகக் கோலாகலமாக நடைபெறும். 

1039. ஏடு படித்தல் - இராமாயணம் அந்தக்காலத்தில் ஏடுகளில் இருக்கும். அவற்றைப் படித்தலே ஏடு படித்தல். இந்த ஏட்டைச் சுற்றும் கயிறுதான் வீட்டில் நல்லனவற்றின்போது தும்பு பிடிக்கப் பயன்படுகிறது.  

1040. பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்தல் - வாழ்வில் பதினாறு பேறும் ( கல்வி , நிறைசெல்வம், நீள் ஆயுள் போன்றவை )  பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று திருமணத்தம்பதியினரை வாழ்த்துவார்கள். 


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம். 

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும். 

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். 

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

 

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

 

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

 

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

 

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 


85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

 

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும். 

 

87. இந்த சீர் போதுமா ?! 

 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 

 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம். 

 

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 

 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

 

92. இனியெல்லாம் பிஸினஸே

 

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

 

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

 

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.  

 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.







104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.

105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.

106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.





110. 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள். 

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

3 கருத்துகள்:

  1. பல புதிய சொல் வழக்குகளை முதன்முதலாக அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜம்பு சார்

    நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...