எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

ஈரோடு புத்தகத் திருவிழாவில் பெண் பூக்கள் வெளியீடு.

ஈரோடு சங்கமத்தின்போதே எனது நூல்களை ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியிட வேண்டுமென்ற என்னுடைய கோரிக்கையையை வலைப்பதிவர் சந்திப்பில்  அவையில் திரு. தாமோதர் சந்துரு அண்ணன் & திரு. ஸ்டாலின் குணசேகரன் முன்னிலையில் தெரிவித்திருந்தேன்.  அந்த எண்ணம் இன்று ஈடேறியது.  தாமோதர் சந்துரு அண்ணன் முன்னிலையில் பாரதி புத்தகாலயத்தில் என்னுடைய நூல் பெண் பூக்கள் வாசகர்களால் வெளியிடப்பட்டது. பெண்பூக்களை அன்பின் ஆராதனாவும் சக்தி ஷாலினியும் பெற்றுக்கொண்டது வெகு சிறப்பு.  நன்றி அண்ணன். :)

 மனம் நெகிழும் இந்தத் தருணத்தில் வார்த்தைகள் வசப்படவில்லை. இந்தச் சிறப்பை எனக்கு அளித்தமைக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அண்ணன்.


மிக்க நன்றி தாமோதர் அண்ணன், ஈரோடு புத்தகத் திருவிழா, பாரதி புத்தகாலயம் ,& என் அன்பிற்குரிய ஷாலினி & ஆராதனா. :)



////தேனம்மைலெஷ்மணனின் பெண் பூக்கள் கவிதைத் தொகுப்பு இன்று பாரதி புத்தகாலயத்தில் வாசகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது..வீட்டில் ஆராதனாவும் அவளின் அம்மாவும் பெற்றுக் கொண்டார்கள்..///

 பெண்பூக்களைப் பெற்று சிறப்பு செய்த என் அன்பு ஆராதனாவுக்கும் சக்தி ஷாலினிக்கும் நன்றியும் அன்பும் முத்தங்களும். :) வாழ்க வளமுடன். :)


என்னுடைய கவிதைத் தொகுதியான பெண் பூக்கள்

Discovery Book Palace
New Book Land
Aashiq book centre, vadapalani
Maran book centre, kodambakkam

சென்னை கே கே நகரில் இருக்கும் டிஸ்கவரி புத்தக நிலையம்,

ந்யூ புக் லேண்ட்,

ஆஷிக் புக் செண்டர், வடபழனி

மாறன் புக் செண்டர், கோடம்பாக்கம்

ஆகிய இடங்களில் கிடைக்கும். 


--- என்றும்  உங்கள் பேராதரவை வேண்டுகிறேன் மக்காஸ்  :) 

 அன்பும் நன்றியும். தேனம்மைலெக்ஷ்மணன்.



7 கருத்துகள்:

  1. உஷ்... அப்பாடா... இனி உங்கள் பதிவுகளைப் படிக்கலாம் என்று நம்புகிறேன் மாற்றிய வடிவமைப்புக்கு வாழ்த்துக்கள். மேலே வலைச் சர அறிமுகச் செய்தியில் உங்களை ஆண்பால் ஆக்கிவிட்டாரே.

    பதிலளிநீக்கு
  2. இதே பதிவு இப்பொழுது மறுபடியும் பழையபடியே பிஎஅச்சனையுடன்

    பதிலளிநீக்கு
  3. நன்றி பாரதிதாசன் சகோ

    நன்றி டிடி சகோ

    நன்றி பாலா சார். ஆம் என்ன செய்வது ? :)

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி குமார் சகோ

    என்ன செய்வதென்று தெரியலையே பாலா சார் ஹ்ம்ம்ம் :(

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...