எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பெண்பூக்கள் வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்பூக்கள் வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஜூலை, 2016

சிவப்புப் பட்டுக்கயிறு & பெண்பூக்கள் நூல் வெளியீடு & மதிப்புரை பாருவின் பார்வையில். :)

Paaru Kumar

எப்படியாவது இந்த உலகத்த விட்டு போறதுக்குள்ள....கால் பங்காவது இலக்கியவாதி ஆகனுங்கற முயற்சியல்.....

யாரு புத்தகம் வெளியிடறாங்க...இல்ல அதைப்பற்றி பேசுறாங்கன்னாலும்....கலந்துக்கறேன்.

இளமதி பத்மா ...அழைப்பின் பேரில் கலந்துகொண்டேன்...
தேனம்மை லஷ்மணின்.....
சிவப்பு பட்டுக்கயிறு மற்றும் பெண் பூக்கள் புத்தக வெளியீடு மற்றும் மதிப்புரை.

வெள்ளி, 22 ஜூலை, 2016

சிவப்புப் பட்டுக் கயிறு & பெண் பூக்கள் நூல் வெளியீடு & மதிப்புரை.

ஜூலை 23 சனிக்கிழமை அன்று மாலை ஆறு மணிக்கு சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் சிவப்புப் பட்டுக் கயிறு & பெண்பூக்கள் நூல் விமர்சனம்.

பெண்பூக்கள் நூல் வெளியீடு - சாஸ்த்ரி பவன் யூனியன் லீடர் திருமதி மணிமேகலை அவர்கள்.

 
 பெற்றுக் கொள்பவர் - திருமதி சுபா தேசிகன் அவர்கள்.

பெண் பூக்கள் & சிவப்புப் பட்டுக்கயிறு  நூல் மதிப்புரை .

இடம் :- டிஸ்கவரி புத்தக நிலையம், முனுசாமி சாலை, கே. கே. நகர், சென்னை.

நேரம். 23 . 7. 2016 சனிக்கிழமை. மாலை 6 மணி.

வரவேற்புரை - டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் திரு வேடியப்பன் அவர்கள்.

சிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய மதிப்புரை :-

1. முன்னாள் வனத்துறை அதிகாரி & கோகுலம் எடிட்டர் திரு. லதானந்த். அவர்கள்
 
 

2. மென்திறன் பயிற்சியாளர்.திருமதி கயல்விழி மோகன் அவர்கள்

பெண்பூக்கள் பற்றிய மதிப்புரை :-

1. பொறியாளர் திரு. கே டி இளங்கோ அவர்கள்
 
 

2. லயனஸ் திருமதி. வசுமதி வாசன் அவர்கள்


ஏற்புரை. திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன்.

அனைவரும் வருக.
 

சனி, 25 ஜூன், 2016

இளமதி பத்மாவின் பார்வையில் பெண்பூக்கள்.

ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் இளமதி பத்மா ! அன்பும் அணைப்பும். <3 span="">

////"பெண் பூக்கள்"

பூக்களைத் தொகுத்து கவிதைகள்
ஒவ்வொன்றும் முத்துகள்...

அற்புதமான வார்த்தைகள் கோர்ப்பு

காதல் பாசம் அன்பு நேசம் அத்தனைப்
பரிமாணங்களையும் அழகாய் சொல்ல ஒரு திறமை வேண்டும்...

அது மட்டும் போதுமா என்றால் போதாது...

படிப்பவர்கள் தொய்வில்லாமல் ரசித்து படிக்க வேண்டும்...!

ஆகா என்றோ சபாஷ் என்றோ மனதிற்குள் ஒரு குரல் ஒலிக்க வேண்டும்
எனக்கு ஒலித்தது...!

நான் கவிதைகளின் காதலி ஒரு நல்ல கவிதையை இனம் காணும் போது மனதிற்குள் ஒரு மலர்ச்சி பொங்கும்!

தும்பை பூவைக் கூட விடாமல் கவிதையாக்கிய தேனம்மையை எண்ணி அதிசயிக்கிறேன்...

இவரின் கட்டுரைகளோ கதைகளோ பரிச்சயமில்லை ஆனால் எல்லாவற்றையும் படித்து விடவேண்டும்
என்றொரு வேட்கை வருகிறது !

வாழ்த்துகள் Thenammai Lakshmanan////
 நன்றி இளமதி பத்மா, புவனா, செல்வகுமார். :)

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

ஈரோடு புத்தகத் திருவிழாவில் பெண் பூக்கள் வெளியீடு.

ஈரோடு சங்கமத்தின்போதே எனது நூல்களை ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியிட வேண்டுமென்ற என்னுடைய கோரிக்கையையை வலைப்பதிவர் சந்திப்பில்  அவையில் திரு. தாமோதர் சந்துரு அண்ணன் & திரு. ஸ்டாலின் குணசேகரன் முன்னிலையில் தெரிவித்திருந்தேன்.  அந்த எண்ணம் இன்று ஈடேறியது.  தாமோதர் சந்துரு அண்ணன் முன்னிலையில் பாரதி புத்தகாலயத்தில் என்னுடைய நூல் பெண் பூக்கள் வாசகர்களால் வெளியிடப்பட்டது. பெண்பூக்களை அன்பின் ஆராதனாவும் சக்தி ஷாலினியும் பெற்றுக்கொண்டது வெகு சிறப்பு.  நன்றி அண்ணன். :)

Related Posts Plugin for WordPress, Blogger...