திங்கள், 31 மே, 2010

வலைச்சரத்தில் நானும் நீங்களும்

வலைச்சரத்தில் இரண்டு வாரமாக எழுதி வந்தேன்..
அதை எல்லாம் தொகுத்து இங்கு என்னுடய ப்லாக்கில் வெளியிடுகிறேன் மக்களே.. அனேகமா நீங்க எல்லாரும் இருக்கீங்க. எந்த இடுகையில் யார்னும் எழுதி இருக்கேன் ... கிளிக் பண்ணி படிச்சு என்ஜாய் பண்ணுங்க..



அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.. இது அறிமுகம்..



எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் ... இதில் என் அன்பு ஆசிரியை திரு .எம். ஏ. சுசீலா அவர்கள்., வலைத்தள ஆசிரியர் சீனா சார்.,ராகவன் நைஜீரியா., முனியப்பன் சார்., கபீரன்பன்.,அபுல் கலாம் ஆசாத்.,
முனைவர் குணசீலன்.,வெற்றி வேல் சார்., டாக்டர் ருத்ரன்., பாலா சார்.,
ஜோதிஜி இவர்கள் பற்றி குறிப்பிட்டு இருக்கேன்..

செல்லக் கிளிகளாம் பள்ளியிலே.. இதில் என் அன்புத் தம்பி விஜய்., நண்பர் நேசன்., அடுத்த தம்பிகள் ஸ்டார்ஜன்.,அக்பர்., நண்பர் ரமேஷ்.,தோழி ஹேமா., தம்பி பிரபு., தங்கை மேனகா.,சகோ சசி., மற்றும் சரவணா இருக்காங்க..

பெண்களுக்கு நூறு சதம் இங்கே லேடீஸ் ஸ்பெஷல்.. இதில் என் அன்புத் தங்கைகள் சித்ரா., மைதிலி ., ஆனந்தி., பத்மா., ஹுஸைனம்மா., முத்துலெட்சுமி., ரோஹிணி சிவா., சந்தன முல்லை., அமைதிச்சாரல்., அம்பிகா., ராமலெக்ஷ்மி, சாந்தி லெட்சுமணன்.,பாத்திமா ஜொஹ்ரா., கண்மணி., ஜலீலா ., கண்ணகி ., திவ்யா ஹரி., வித்யா.., மலிக்கா., புதுகைத் தென்றல்.
இருக்காங்க..

ஓ நண்பனே நண்பனே... இதில் கதிர் ., ஷஃபி., சைவக் கொத்து பரோட்டா., அஷோக்.,பாரா., ஜீவானந்தம்.,குசும்பன்., சுந்தர்ஜி., அஹமத் இர்ஷாத்., செந்தில்.,
மயில் ராவணன்., பட்டியன்.,பலா பட்டறை சங்கர்., வேலு., கேபிள் சங்கர் இவங்க இருக்காங்க..

எலக்கனம் படிக்கவில்லை தலைக்கனமும் எனக்கு இல்லை.. இதில் திரும்ப என் தம்பி சரவணா., (அன்பின் மிகுதி மக்கா .. ரீபீட் ஆகிருச்சு). நண்பர் செல்வா.,பட்டர்ஃப்ளை சூர்யா., ரிஷபன்., கிளியனூர் இஸ்மத்.,அகநாழிகை தேவன்., பாலாசி., டி வி ராதாகிருஷ்ணன்., LK., எங்கள் ப்லாக்.,ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி., ராஜ்., சே. குமார்., ரிஷான் செரீஃப்.,கருணாகரசு.,அன்புடன் மணிகண்டன்., செந்தில்நாதன்.,எம்.எம். அப்துல்லா., சங்கவி., சீமான்கனி., சிவாஜி சங்கர்., கமலேஷ் இருக்காங்க..

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்
இதில் அண்ணாமலையான். , சூர்ய கண்ணன்., பாலா., ஜில் தண்ணி., தியாவின் பேனா., நசரேயன்.. சுரேஷ் பழனியிலிருந்து., கவிதன்., முனுசாமி பாலசுப்ரமணியன்.,கோபி லாரன்ஸ்., வினோத் கௌதம்., ஷர்புதீன்., விடிவெள்ளி.,நெற்குப்பைத்தும்பி., சிங்கை அ. ஞானசேகரன்.,அறீவு ஜீவீ இருக்காங்க..

நமக்கு நாமே உந்துசக்தியும் உற்சாகமும்.. இதில் தினேஷ் பாபு., அள்ளி விட்டான்., ரவி ப்ரகாஷ்., சேட்டைக்காரன்., கட்டபொம்மன்., ஜெகனாதன்.,
கும்மாச்சி., கோவை சதீஷ்.,புலவன் புலிகேசி., பித்தனின் வாக்கு.,நவாஸ்., ஜெயராஜ்., சாத்தூர் மாக்கான்., மதுரை சரவணன்.,வேல்கண்ணன்., பிரியமுடன் வசந்த்.,வேலன். இருக்காங்க..

லேடீஸ் ஸ்பெஷல் பார்ட் 2... இதில் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜா ராகவன்., செல்வி சங்கர்., உமா ருத்ரன்., மஞ்சுபாஷிணி., தமிழ்நதி ராஜேந்திரன்., இயற்கை ராஜி.,தீபா நேஹா., ஜெஸ்வந்தி.,சுஸ்ரி., அமித்து அம்மா.,அன்புடன் கிருத்திகா., ப்ரேமா மகள்.,ஸாதிகா., சோலைச்சி ஆச்சி இருக்காங்க..

நமக்குத் தெரிஞ்ச அரசியல் அறிவியல். இதில் பனித்துளி சங்கர்., ஜெரி ஈசானந்தா., தேவா., ப்ரகாஷ்., ஜெய்லானி., நிஜாமுத்தீன்.,வீடு திரும்பல் மோகன்., கோபிநாத் முத்துசாமி.,வா மு கோமு., மனவிழி சத்ரியன்.,
சுரேகா., சௌந்தர்.,ஜெட்லீ., அகல்விளக்கு., ஜமால்., தேவன் மாயம்., வசந்த்.,
ஆர்.வி சரவணன்., அன்புடன் அருணா., மாதேவி.,டாக்டர் எம். கே. முருகானந்தம்.,தோழி., ப்ரசன்னா இருக்காங்க ..

கவிதை முகமும் ., முக நூலும்., புதிய “ழ”வும்.. இதில் செந்தில்., உமாசக்தி., ராஜி., அமுதா., சந்திரா., மாயோ மனோ.,பிரியா., தமயந்தி., கோகுல் சல்வாடி.,
மண்குதிரை., பா சரவணன்., மோகனா., பால கணேசன்.,., ஸ்நேகிதன்., சுந்தரா.,வேடியப்பன்., அறிவழகன் கைவல்யம்., மணிவண்ணன்.. இருக்காங்க..

நன்றி நன்றி நன்றி வலைச்சரத்துக்கு ., ப்லாகருக்கு., கூகுளாண்டவருக்கு.. இதில் இந்திரா., துளசி ராஜகோபால்., கோமதி அரசு., உண்மைத்தமிழன்., ஓசை செல்லா., பாக்தாத்திலிருந்து பூங்குன்றன்.,சுஜ்மலா., முகிலன்., ரோஸ்விக்.,
கலகலப் ப்ரியா., ஜெசீலா., மின்மினி., ராஜா சந்திரசேகர்., அரும்பாவூர் இருக்காங்க..

முடிந்த வரை அனைவரையும் நினைவில் வைத்து எழுதி இருக்கேன்பா.. விட்டுப் போய் இருந்தால் ஞாபகப் பிசகு..

டிஸ்கி:- இது முகப் புத்தகத்தில் இருந்து மணிவண்ணன் பக்கத்தில் இருந்து உங்களுக்காக.. மக்களே.. பங்கெடுத்துக்குங்க.
புதிய ”ழ” நடத்தும் இரண்டு கவிதைப் போட்டிகள்:-
செம்மொழி மாநாட்டை முன்னிட்டு புதிய ”ழ” நடத்தும் ”தமிழாய் தமிழுக்காய்” என்ற கவிதைப் போட்டியிலும்., புதிய ”ழ”-வும் நீலகிரி மாவட்ட ரோட்டரி சங்கமும் நடத்தும் “மலையரசியின் எழில் அழகு”(சூழலியல் சார்ந்தது) என்ற கவிதைப் போட்டியிலும் பங்கு கொள்ள இருக்கும் கவிதைப் படைப்பாளிகளின் கவனத்திற்கு உங்கலளில் பலரது வேண்டுகோளுக்கு இணங்க கவிதை வந்து சேர்வதற்கான இறுதி நாள் நீட்டிக்கப் பட்டுள்ளது. 05.06.2010.

சனி, 29 மே, 2010

என்னைக் குழந்தையாக்கியவள்

நேற்று அவள் இல்லாமல்
என் உலகம் ஸ்தம்பித்திருந்தது..
அவள் சூலுறாத கர்ப்பம் நான்..
ஆனால் என்னைப் புதிதாய்ப் பிரசவித்தவள்,,

இருக்கிறேனா எனக்கூடத்
தெரியவில்லை..
சுவாசம் போல அவளையும்
அடிக்கொருதரம் எதிர்பார்த்து..

பற்றற்ற சருகு போல
மனம் அலைய..
ஒவ்வொரு வாசலிலும் சென்று...
தேடித் தேடி..

அவள் அழைப்புமணி
அழுத்திய படமும்.,
அள்ளிக் கொட்டியிருந்த
அன்பு வார்த்தைகளும்
ரசித்து வந்தேன்..

நிசப்தம் பூட்டிய காலம்
என் காதுகளில்
அறைந்து கொண்டிருந்தது..

அவளின் மணிச்சத்தம் இல்லாமல்.,
மாலை வணக்கம் இல்லாமல்.,
அணைப்பு இல்லாமல்
அணைந்து கிடந்தேன்..

சாமக் கோழிகளின் சத்தத்தில்
அவள் இருந்ததற்கான
அடையாளம் துழாவி., மூழ்கி ., அமிழ்ந்து.,

கூர்மையான காதுகள்
ஒலிக்காய் ஏங்கி ...
இல்லாத கனவோடு தூங்கி..,

உதயமாகி விட்டது..
உயிர்ப்பிக்க வருவாள் ..
செல்ல அதட்டலுடன்...
என்னைக் குழந்தையாக்கியவள்..ம்ம்ம்

வியாழன், 27 மே, 2010

கதவுகளும் ஜன்னல்களும்

வீட்டின் உள்செல்லவும்.,
வெளியேறவும்.,
இரண்டு கதவுகளும்,
ஏழெட்டு ஜன்னல்களும்....

எனக்கான சமையலறையில்
குருவியும்., காக்கையும்.,
கிளியும்., பட்டாம்பூச்சியும்.,
முருங்கை மரமும்.,
தென்னை கீறிய நிலாவும்..

உனக்கு வாசல் மட்டும்தான்
அதில் உன் அலுவலகப் படிக்கட்டு
தொடங்கி விடுகிறது..
தொடர் வண்டித்தடம் போல்..

எப்போதவது நீ திறக்கும்
ஜன்னல்கள் என்னை
ஆச்சர்யத்தில் ஆழ்த்தி..

குழந்தைகளுக்கு படிப்பறையில்
ஜன்னல்கள் அதிகம்
விரும்பப் படாமல்..
அவசரத் திறந்து மூடலில்..

படுக்கையறையில் கணினியில்
நிறைய ஜன்னல்கள்..
எங்குபோய் எங்கு வருகிறார்கள்
என்பது அறிய முடியாமல்..

இருந்த இடத்திலிருந்து
நான் அறியாமல்
உலகெல்லாம் பறந்து
நல்லதோ கெட்டதோ
விழுந்து எழுந்து...

எனக்குப் பிடித்ததைச்
செய்வதாய் ஒருபோதும்
நடிக்க முற்பட்டதில்லை நீ...

நான் உனக்கு பிடிப்பதை மட்டும்
செய்ய முயற்சித்து வேஷம் போட்டு
சிலசமயம் வேஷம் கலைந்து
விகாரமாய்..

நமக்கிடையே ஏகப்பட்ட
கண்ணுக்குத் தெரியாத
கதவுகளும் ஜன்னல்களும்..
திறக்கப்படாமல்...

இந்தக் கவிதை இளமை விகடனில் வந்துள்ளது ..

செவ்வாய், 25 மே, 2010

நீரெழுத்து

புன்னகை புரிந்த
கண்களுக்கு புதைந்திருக்கும்
கத்திகள் புரிவதில்லை
கண்ணி வெடிகளாய்..

வாழ்த்த வருவதாய்
நினைக்க வீழ்த்தவா..?
கேடயம் சுமந்ததில்லை
எப்போதும்..எதற்கும்..

வந்ததெல்லாம் வரவேற்க
படிந்து படிந்து பாசம்..
வழிந்து வழிந்து
வீடெல்லாம் வழுக்கலாய்..

எப்போது வந்தது ரத்தம்..
பாசத்தில் வழுக்கி
பற்றிக்கொள்வதற்காய்
பற்றினேனே அப்போதா..?

சுற்றிக் கொண்ட இருகரத்தில்
மயக்கமாய் வந்ததே இதுதானா..?
முறுவலித்துக் கொண்டே
இருந்தாயே எப்போது குத்தினாய்

முடிவில்லாத சந்தோஷத்தோடு
சாய்கிறேன்...சுயமிழந்து...
சிரிக்கிறாயே..அழகாய்...!!
உன் சிரிப்பைப் பற்றியபடி...!!

திங்கள், 24 மே, 2010

சவலைப் பலா..

அரும்பிக் கொண்டே
இருக்கிறது ஆசை..
பூத்துக் கொண்டே
இருக்கிறது மனசு...

துளிர்விட்டுக் கொண்டே
இருக்கிறது ஏக்கம்..
விருட்சமாகிக் கொண்டே
இருக்கிறது எல்லாம்...
அடைய முடியாமல்..

குறுக்கிக் குறுக்கி
போன்ஸாயாய் வளர்க்கப்பட்ட
மனசில் வெடித்துக்கிளம்பி.,

சீண்டுவாரற்று விளைந்து
கிடக்கும் சவலைப் பலா..
முட்களைந்து உண்ணத்
தெரியா உலகில்...

முந்தானையோ.,
பேனாவோ.,
மடிக்கணனியோ கண்டு..
என்னை எடுத்துக்கொள் என
முகம் புதைத்துக்கொண்டு........

டிஸ்கி:- முந்தானைக்கு பதில் துப்பட்டான்னு
கூட வைத்துக்கொள்ளலாம் ஹுசைனம்மா:))

சனி, 22 மே, 2010

விபத்தும்.,விழித்தும்., தனித்தும்,,,,,,

விழித்திருக்கிறேன்.. தவித்திருக்கிறேன்.
தனித்திருக்கிறேன்.. பசித்திருக்கிறேன்..
அன்பிற்குரியவர்களின் நேரத்துக்காய்..
ரிச்சி ரிச்சைப் போல என்னைப்
பல்லக்கில் சுமக்கிறது பணம்...
ஒற்றையனாய்..
மிக மூத்த அக்கா கடல் கடந்து..
சடை பிடித்து விளையாட ஒரு தங்கை..
காக்காய்க்கடி கடித்துண்ண ஒரு தம்பி..
பள்ளிப் பாதுகாவலனாய் ஒரு அண்ணன்...
எதுவுமில்லை..
இருப்பது எல்லாம் எனக்கே..
எதுவும் பிடிக்காமல் திகட்டி..
நிலாச்சோறும்., நிலாக்கதைகளும் அற்று..
கட்டிடங்களுக்குள்..
மனைவி அன்புத்திருமகள்..,
மகள் அழகுத்திருமகள்...
யாரும் எதையும் முழுமையாக
விட்டுவர இயலாமல்....
தாயும் தந்தையும் இல்லா பாலை..
வாகனமே என் அவசரத்தால்
என்னை வாகனமாக்கி..
நேரம் என்னை நையப் புடைக்கிறது..
மருந்தெழுதும் நானே மருந்துண்டு..
படுக்கைகளைப் பார்வையிட்ட
நானே படுக்கைவாசியாய் ...
மாதக் கணக்கான தழும்புகளில்
வீட்டில் நானே தழும்பாகி..
என் கண்ணில் உப்புத்திரவம்
துடைக்க வா அம்மா..
எனக்காக உன்
நேரத்தையும் மடியையும் எடுத்து..

டிஸ்கி:- இன்று காலை விமான விபத்து செய்தி
வருத்தம் தர.,, நான்கு மாதங்களுக்கு முன் ஒரு
நண்பருக்காக எழுதியதை அளிக்கிறேன்..
பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்..
முன்னெச்சரிக்கையுடனும்...முன்னேற்பாட்டுடனும்..

டிஸ்கி:- இந்த வாரமும் அடுத்த வாரமும்
வலைச்சரத்தில் எழுதுகிறேன் மக்கா...
படித்துப் பாருங்கள் ..நீங்க எல்லாருமே
இருக்கீங்க..:))

வியாழன், 20 மே, 2010

பற்று வரவு (பத்துவரவு)

பட்டுப்பூச்சி இறக்கையாய்
படபடக்கும் இமையில்
ஒரு நூறு முத்தம்..
நான் நூறு கொடுத்தால்
அது ஒன்று....!!!

ஈரமும் கருணையும்
விகசித்துக் கிடக்கும்
உன் இள இமைகளில்
இதுபோல் ஒரு நூறு..

ஒரு கண்ணில் வெண்ணெய்..
ஒரு கண்ணில் சுண்ணாம்பா..?
இரண்டுக்கும் சேர்த்து
இன்னும் சில நூறு..

கணக்கில் நான் கடைநிலை..
விடுபட்டுப் போய்விட்ட
மிச்சம் சிலநூறு..
கணக்கில் ( பத்துவரவு) வைத்துக் கொள்..
கடனாளியாகவே நான் திரிய..

செவ்வாய், 18 மே, 2010

புனர் ஜென்மம்

உன் அழகான புன்னகையுடன்
ஆரம்பமாகின்றன என் காலைகள்..
புன்னகையா மனதின் மென்னகையா..?
மனம் மயங்கும் போதோ.,
கண்கள் சோர்வுறும் போதோ.,
கைகள் களைப்புறும் போதோ.,
தள்ள்ள்ள்ளி அமர்ந்து.,
உன் மென்னகையும் தேனீரையும்
துளித்துளியாய்ப் பருகுகிறேன்..
என் இதழிலும் மனதிலும்
கதகதப்பை உருவாக்கி.,
மீட்டெடுத்துக் கொடுக்கிறது..,
இழந்த அனைத்தையும்..
எந்நேரமும் புன்னகையைத்தவிர
வேறொன்றையும் பரிசளிப்பதில்லை நீ..
அதுவே புனர்ஜென்மம்
எடுக்கப் போதுமானதாய்...

ஞாயிறு, 16 மே, 2010

ஸ்க்ரீன் ஸேவர்

ரீசார்ஜ் செய்தாயிற்று.,
அடுத்த ஜெனரேஷன் வரை பேச..
சிக்னல் கிடைக்கிறது..
டவர் கூட அருகில்..,
வேவ்லெந்தும் ஃப்ரிக்வென்ஸியும் கூட..

குரல்தான் கேட்கவில்லை...
வரும் வரும் என ஸ்க்ரீனைத்
தட்டித் தட்டிப்பார்த்து...
இன்பாக்ஸையும்., மெசேஜையும்.,
மிஸ்டு கால்ஸையும்...
அடிக்கடித் தடவி..

ஸ்க்ரீன் ஸேவரை தரிசித்து.,
ரசித்து .,ரசித்து., ரசித்து...
தூக்கிக் கடாசிவிட்டு
வேறு வேலை பார்க்கலாம்...
பேசாமல் படுத்துக் கொண்டு..
பல்லியையும்., பரணையும்..
மோட்டுவளையையும் கூட...

சனி, 15 மே, 2010

கைப்பிடிக்குள் பசு

ஜென்ம ஜென்மமாய் என்னுடன் நீ வருகிறாய்
ராதையும் குழலூதும் கிருஷ்ணனுமாய்..

உன் வீணாகானத்தில் வேறு ஒலிகள்
கேட்பதில்லை இந்தக் காதுகளில்..

காதல் தோய்ந்த கோபிகையாய்
நீயின்றி வேறில்லை கண்களில்

உன் மெய்பட்ட என் மெய் உருகி
உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..

வந்தாய்,..பார்த்தாய் .பார்த்தாய்,,வென்றாய்.
பரம்பொருளே என்னுடன் சேர்ந்தாய்..

ஜென்மஜென்ம ஏக்கமெல்லாம்
தீர்த்ததையா உன் வரவு...

இன்னும் வாழ ஆசைதான்..
திரும்பவுமே ஒரு வாழ்வு,,!!!

டிஸ்கி :- உலக குடும்ப தினத்துக்காக
எழுதப்பட்ட கவிதை...

வியாழன், 13 மே, 2010

சித்ராயணம்

டாப் ...--20 டிக்‌ஷ்...

பெயர் -- சித்ரா சாலமன்..

பிறந்தது -- மதுரையா., சிதம்பரமா., என்றால்
பாளையங்கோட்டை எனலாம்.. கணவரின்
சப்போர்ட் அதிகம்.

வாழிடம் -- டல்லாஸ் கொண்ட தமிழச்சி

குழந்தைகள் -- செல்வமும், செல்லமும்..இந்த
செல்லத்துக்கு ரெண்டே ரெண்டு கண்கள்..
(கவருமெண்டு சொன்னபடிப்பா)

அப்பா கொடுத்தது -- பேச்சு

தானாய்ப் பேசுவது -- கொஞ்சம் வெட்டிப்பேச்சு

நண்பர்கள் -- சமையல் தெரியாமல் சொதப்புபவர்கள்.,
ஃபேஸ் புக்கில் வெட்டி அரட்டை அடிப்பவர் சங்கம்.,
பின்னூட்டக் கும்மி அடிப்பவர்கள்.கவுஜ எழுதுறேன்னு
ஹோம் பேஜை நிரப்பும் ஒரு அக்கா..ஹிஹி நாந்தான்

பயந்து கொண்டு இருப்பவர்கள் -- பணத்தை
மாலையாக அணிந்து கொள்பவர்கள்., பட்டுப்
புடவை டிஸைன் செய்பவர்கள்.,சுண்ணாம்பு
தயாரிப்பாளர்கள்..

பயம் வர செய்வது -- தூணிலும் இருப்பாள்..
துரும்பிலும் இருப்பாள்.. எல்லா ப்ளாக்கிலும்
பின்னூட்டமாயும்.. தூங்குகிறாளா தெரியாது..

நீண்ட நாள் சாதனை -- பிறந்த நாள் கேக்காக இருந்தது

இடைப்பட்ட சாதனை -- ஏப்ரல் ஒன்னில் செமையா
ஏமாத்தியது

இன்றைய சாதனை -- கெண்டகியும் டல்லாசும் பட்டாசு
வெடிக்க பிறந்த நாள் கொண்டாடுவது..

முன்பு பிடித்த இடம்.-- பள்ளிக்கூட பெஞ்சுகளில்
மேலேறி நிற்பது..

இப்போது பிடித்த இடம் -- ப்ளாக்கர்களின் மனசு

நேற்றைய மகுடம் -- தமிழ்மணம் கொடுத்தது

இனிமேல் வரப்போகும் மகுடம்.. -- யூத்ஃபுல்
விகடன் ஈறாய பத்ரிக்கைகள் கொடுக்கப் போவது.

பட்டப் பெயர்கள் -- தம்பட்டம் தாயம்மா., தன்னலமற்ற
பின்னூட்டி புல்ங்கம்

இன்று நான் ஸ்பெஷலாகக் கொடுப்பது.-- பின்னூட்டப்
புயல்..நகைச்சுவை ராணி..ப்ளாக்கர்களின் சந்தோஷம்..

டிஸ்கி:- என்ன டாப் 20 வரலையேன்னு பார்க்குறீங்களா
மக்களே.. அது ட்ராவல் அண்ட் லிவிங் பார்த்த பாதிப்பு
டாப்லேருந்து டிஸ்கிவரை எண்ணிப் பாருங்க 20 வரும்..
கண்டிப்பா.. சித்துவைப் பத்தி எழுதும் போது இந்த
கிண்டல் கூட இல்லாட்ட எப்பூஊஊஊஊடீஈஈஈஈ

புதன், 12 மே, 2010

கோபிநாத்தின் புத்தகம் ..ஒரு விமர்சனம்

இந்தப் புத்தகத்தை வாங்குங்க என்று சொல்லும் உலகில் ஒரு புத்தகத்தின் பெயர் ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க... வியப்பா இருக்கில்ல.. நீயா., நானா எனக் கேட்டால் உங்களுக்குப் புரிந்துவிடும்.. அதன் பதில் நாம் என்பதும்,, நம்ம கோபிநாத்தின் புத்தகம்தான் அது என்பதும் ,,. சிக்ஸ்த் சென்ஸ் வெளியிட்டுள்ள இதன் விலை அறுபது ரூபாய்.. பர்சனாலிடி டெவலப்மெண்ட்... பவர் ஆஃப் பாசிடிவ் திங்கிங் என்பதன் விளக்கம் இது ..

அவருக்குக் கிடைத்த வாய்ப்பில் அறிந்து கொண்டவற்றை அவர் நம்மில் ஒருவராகப் பகிர்ந்து கொள்கிறார்.. நாம் ஓடிக்கொண்டிருக்கும் திசையின் இலக்கு என்ன என்று யோசிக்க வைக்க இந்தப் புத்தகம் பயன்படலாம். கணக்குகளின் எண்ணிக்கை அதிகம் ஆகும்போது கால்குலேட்டர் உபயோகிப்பதுபோல் இந்தப் புத்தகம் பயன்படும் என்கிறார் தன் முன்னுரையில்..

தன்னம்பிக்கைக்கு் தன்னடக்கத்திற்கும் முழுமையான உதாரணம் கோபிநாத்,..ஏறக்குறைய 14 விதமானவர்களுக்கு நன்றி கூறி தன் தன்னம்பிக்கையை தன்னைவிட அதிகமாய் நம்பும் தன் அப்பாவுக்கு இந்தப் புத்தகத்தை சமர்ப்பித்திருக்கிறார்...

15 கட்டுரைகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது இது..

நம் சந்தோஷத்துக்கு நாமே முழுமையான காரணம்.. எல்லா உணர்வையும் வெளிப்படுத்தும் நாம் அன்பை மட்டும் வெளிப்படுத்தத் தயங்குகிறோம்.. எதைச் செய்தாலும் ரசனையோடு செய்யுங்கள்.. தினம் செய்தவற்றையே சிறிது புதிதாய் மாற்றி செய்து பாருங்கள்..

வாழ்வின் எல்லா கணங்களிலும் வெற்றி தோல்வி இருக்கிறது.. அடுத்தவர் கணிப்புக்காக அல்ல.. நமக்காகவே நாம் வாழ்கிறோம்.. பிரச்சனைகளின் ஆணிவேரைக் கண்டுபிடித்து பகுதி பகுதியாகக் களையுங்கள்..

நம்மை நாமே ரசிக்க ஆரம்பிப்பதுதான் நம் செயல்களின் வெற்றியின் முதல் படி.. தேவையான இடங்களில் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாய் இருப்பது ஒரு மனோவியாதி..
நாம் செலுத்தும் அன்பு அடுத்தவரை துன்புறுத்தாமல் இருந்தால்., நம் அன்பு உண்மையானதாக இருந்தால் நிச்சயம் நாம் செலுத்தும் அளவு திரும்பக் கிடைக்கும்.. அன்பு செலுத்துவதிலும் ., பெற்றுக் கொள்வதிலும் கஞ்சமாகவோ., இரும்பாகவோ இராதீர்கள் ..

எண்ணம் போல் வாழ்வு என்ற சொல்போல என்னவாக விரும்புகிறீர்களோ அந்த நிலைக்கு மனம் உங்களை எடுத்துச் செல்லும். நம்மையும் சுற்றி இருப்போரையும் முழுமையாக நம்ப வேண்டும்.. நம் திறமைகளை எடுத்துக்கூறி நம்மை முன்னேற்றுவதில் நம் நலம் விரும்பிகளும் அன்பானவர்களும் பெரும்பங்கு வகிக்கிறார்கள்..

எனவே நம்மை மிக நல்ல உயரங்களுக்கு இட்டுச் செல்கின்றது இந்தப் புத்தகம்.. வெற்றியாளராக, சாதனையாளராக, மக்கள் அனைவராலும் விரும்பப் படுபவராக இருக்கும் கோபிநாத்தின் இந்தப் புத்தகம் எல்லா சமயங்களிலும் உபயோகமான ஒன்று,.. படித்துப் பாருங்கள்.. உணர்வீர்கள்...!!!

டிஸ்கி:- இந்த புத்தக விமர்சனத்தை என் அன்புத்தங்கை சித்ராவின் பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன்.. மிக குறுகிய காலத்தில் வளர்ந்து அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட அவளைப் போல் பாசிடிவ் திங்கர் யாரும் இருக்க முடியாது.. கிறிஸ்துவின் அன்பிலும் விசுவாசத்திலும் நீடூழி வாழ்க கண்மணி.. !!!

ஞாயிறு, 9 மே, 2010

என் அம்மா

ஒவ்வொரு முறையும்
அகண்ட பிரபஞ்சத்தை
அவள் கண்களில் பார்க்கிறேன்...

விடுதியிலோ.,
மணமுடித்தோ,
வெளிநாட்டில் வேலையிலோ..

எங்கிருந்தாலும்
வருகிறாள் முடிந்துகொண்டு
குசேலனின் அவலாய் அன்பை...

வாசனை வீசும் சொற்களுக்குச்
சொந்தக்காரியல்ல...
அநேகமாகக் காரம்தான்...
வைய வைய வைரக்கல்...

சிறுவயதில் கோழியைப்போல்
அவ்வப்போது முடிபற்றி மிதிப்பாள்..
இப்போது வார்த்தைகளால்...

சிலசமயம் புரிந்து கொள்ளாமல்...
சில சமயம் கொடுந்தவறுக்காய்...

அவள் புன்னைகைத்தால்
காலடியில் முயலகனாய்...
என்றென்றும் மயங்கி...

அவளுக்குப் பிடிக்குமென
பலதும் செய்து அவளை
அவதியுற வைத்திருக்கிறேன்...
சமையலாகட்டும்...
செயல்களாகட்டும்...

உதிரத்தில் உருவாக்கி.,
உருவாய் செதுக்கியவளே.,
உன்னோடு கிடந்தே
உழன்று கிடப்பேன் என்று
அவ்வப்போது ஒதுக்கி வைத்து
ஒளிந்து கொள்கிறாயா...?

என் தேவையறிந்து
பசியறிந்து.,
ருசியறிந்து.,
வயசறிந்து.,
நிறைவேற்றியவளே...

செல்லமாக வேண்டாம்...
கோபமாக வேணும் உன் குரலை
சிந்திச்செல் அவ்வப்போது...

டிஸ்கி:- இந்த இடுகை அன்னையர் தினத்துக்காக
இளமை விகடனில் மே 8 அன்று வெளி வந்தது...

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem080510.asp

வெள்ளி, 7 மே, 2010

முகச்சிடுக்கு

ஒரு புகைப்படமோ பேரோ
தெரிந்தது போல் இருக்கிறது
நூல் பிடித்து வர...

கொட்டிக்கிடக்கும்
அடையாள அட்டைகளில்
புன்னகை புதிதாய்...

தனிப்பட்ட தகவல்களும்
நெருக்கம் தருவதாய்...

வயது மறைந்தபின்
குடும்பம் குழந்தை குட்டி
உத்யோகம் வியாபாரம்
பொழுதுபோக்கு இன்னபிற...

எழுத்தின் சேட்டைகளும்
தேடுதல்களும் இன்னும் நெருக்கி...

சுவாசிக்க மறக்கலாம்
கணினி கைவசமாகும் நேரமெல்லாம்
தட்டச்ச மறப்பதில்லை
உன் பெயரையும் என் பெயரையும்
குறுக்கெழுத்தில்...

அதனுள்ளே வாழ்கிறோமோ என
பீதியைக் கிளப்புமளவு...

விருப்பங்களும் ஆசைகளும் பகிரப்பகிர
வேறொரு உலகில் அடியெடுத்து
எப்போதும் எல்லாமும் கூட
இருக்கவேண்டும் என்ற வேட்கையில்...

காலை மாலை நண்பகல் நள்ளிரவு
எல்லா வாழ்த்தும் சொல்லி

நூலிழையில் ஏதோ ஒரு பேச்சிடுக்கால்
தையல்கள் நின்றுவிட
புத்தகங்கள் மூடப்பட
வாசிப்பனுபவம் அறுந்து
முகங்கள் வருத்தத்தில்...

தேடுதலின் சமரசத்தில்
பின்னும் தொடர்கிறது
தையல்கள் என்றாலும்
எப்போதும் சிடுக்காகலாம் என்ற
முதல் முடிச்சின் குழப்பத்தோடு...
முகச்சிடுக்கு ...
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem030510.asp
http://youthful.vikatan.com
இந்தக் கவிதை யூத்ஃபுல்லில் வந்துள்ளது.

புதன், 5 மே, 2010

அன்பின் வண்ணமே

பூதம் புதயலைக் காப்பதுபோல்
உன்னை உள்ளே பூட்டி வைத்து
ஏக்கமாய் தூக்கமில்லாமல்
ஏங்கி ஏங்கிச் சாகிறது மனசு..

கிடைத்தது விட்டாய்
கிட்டிவிட்டது எல்லாம்
முன்னைவிட அதிகம் துடிக்கிறது
இதயம்..

எதனுள்ளே தாங்குவேன்
எப்படித் தாங்குவேன்
தாங்க இயலா அன்பின் வலியை..

அன்பானவளாக எனை மாற்றிய நீ
அப்படியே வாழ
கூட இரு அன்பின் வண்ணமே...
***************************************************

காதல் கொண்டவள்
கண்களால் வரைகிறாள்
காதல் ஓவியத்தை..

வானவில்லைப்
போலஉருப்பெறுகிறாய்
நீவண்ணங்களின் அழகே...

ஆசையும் பாசமும்
கொண்டஅவள் இதய வண்ணங்களில்
எந்த வண்ணம் நீ...

திங்கள், 3 மே, 2010

நான் என்ற எல்லாம்

பருவம் தப்பிப் பெய்த மழை போல
என் மேல் நீ விழுந்தாய் ..

உன்னை தேக்கி வைத்திருக்கிறேன்...
அணையை மீறும் வெள்ளம் போல்
அலையடிக்கிறது மனசு ...

தளும்புவதெல்லாம் கவிதையாய்
உன்மேல் மனச்சூல் கழட்டித்
தேன் போல் வழிந்து..

என்ன செய்யப்போகிறாய்...
இன்னும் என்னவாகப் போகிறேன் ..

என்பது ஏதும் அறியாமல்...
உன் பின்னே...

பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
நான் என்ற எல்லாமும்...

சனி, 1 மே, 2010

கம்பன் விழாவில் கவிக்கோ

காரைக்குடியில் சென்ற மாதம் கம்பர் விழா
நடந்தது..அதில் திருநாள் மங்கலத்தை கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் தொடங்கி வைத்துப் பேசினார்..
இந்த முறை 72 ஆண்டுகால கம்பன் விழாவில் புதுமையாக”யாதும் ஊரே “ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகள் தலைப்பும் பொருளுமாக வைக்கப்பட்டுத் தலைவர் உரை அதன்பாற் பொருட்டு அமைந்தது மிக அருமையாய்..
விகடனில் கவிக்கோ அவர்களின் கவிதைகளை படித்து மகிழ்ந்திருக்கிறேன் ..அன்று கவிதையே கவிதை படிக்கக் கேட்டு இன்புற்றேன்..
தலைவர் உரையில் அனவரையும் வாழ்த்தி கம்பனடிப் பொடியினை வணங்கித் தனதுரையை ஆரம்பித்தார் ..ரஷ்யாவின் ” லுகும்பா பல்கலைக்கழக வரவேற்பு வளைவில் பொறிக்கப்பட்ட வாசகம் ..எல்லா மொழியிலும் அலசி ஆராய்ந்து ..தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த வாசகம் ...--ஒப்பற்ற வாசகம்..”யாதும் ஊரே” என்ற கணீயன் பூங்குன்றனாரின் வாசகமாம் ... அவர் ஒரு வானியல் அறிஞரென்று புறநானூறு சொல்கிறது.. என்றார்..

மேலே உயர உயரப் பற்றுகள் அறுந்து போகின்றன..கீழே வரவரப் பற்றுக்கள் அதிகம்,..”யாவரும் கேளிர் “ என்பதற்கு பெரிய மனம் வேண்டும்...மனித நேயம் வேண்டும்..
பிரச்சனையில்லாத உலகம் வேண்டுமா ..? ஊர்ப்பற்று நாட்டுப் பற்று ஒழியுங்கள்.. மனிதர்களைத்தான் இறைவன் படைத்தான்..ஜாதி., மதம்., ஊர் ., நாடு., எல்லாம் மனிதன் படைத்தான் ..சில மதங்களில் இருப்பது போல் போன ஜென்மம் அடுத்த ஜென்மம் அனைத்திலும் எங்கே பிறந்திருப்போமோ ?? எங்கே பிறக்கப் போகிறோமோ??

“இன்னும் எத்தனை எத்தனை சண்டையோ” பட்டினத்தாரின் வரிகள் இவை ..அது சமயம் யார் உறவினர்...? யார் பகைவர்..? வயிற்றுப்
பிழைப்புக்காக., வியாபாரத்துக்காக ., கடல் கடந்து செல்லும் ஊரில் எல்லாம் உறவினர்கள் யார்...?..அண்டை அயலார்கள் தாம் நம் உறவினர்கள்.. அறிஞர்களுக்கு ., கலைஞர்களுக்கு சொந்த ஊர் இல்லை.. உலகம் சார்ந்தவர்கள் அவர்கள் .

கிழக்கு ஆப்ரிக்காவில் முதல் தாய். தந்தை ஆதாம் ஏவாள்..எனவே விஞ்ஞான ஆராய்ச்சிப்படியும் அனைவரும் கேளிர் தான்.. ஒன்றுமில்லாமலே இருந்தது ...அதற்கு இல்லையென்ற ஒன்றுதான் பிறந்தது ..கடைசியில் ஒன்றுமில்லாமல்தான் முடிந்தது... இன்மையில் தான் அனைத்தும் பிறந்தது,.. இன்மையில் தான் அனைத்தும் முடிந்தது..
முப்பாலுக்கப் பாலாய் முடிவில்லா சூனியமாய்...
அப்பாலும் பாழாய் “ இந்த வரிகளை கவிக்கோவின் சொற்கோவில் கேட்டு அசந்து போனேன் எல்லா தேடல்களுக்கும் விடை கிடைத்தது போல் இருந்தது ..

”யுகயுகமாய் எங்கே இருந்தாய் நீ..?”
ராமன் ஒவ்வொரு தேசமாகச் சென்று பின் அனைத்து இந்தியாவுக்கும் சக்கரவர்த்தியாக முடி சூட்டிக் கொள்கிறான் ..இலங்கை உட்பட..
குகன் என்ற படகோட்டி மீது பாசம்.. சுக்ரீவன் என்ற விலங்கு மீது பாசம்.,விபீஷணன் என்ற அரக்கர் மீதும் பாசம்..... எதையும் கருதி அன்பு பாராட்டாதே....உயிருக்கு ஜாதியில்லை., மதமில்லை...பேதமில்லை...எல்லா உயிரையும் அடைகின்றதுதான் பரம்பொருள்...

வானில் பறக்கும் புள்ளெலாம் நான் மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான் ....................... மரமெல்லாம் நான் ........... மனிதர்கள்எல்லாம் நான்..

எவன் எல்லாவற்றையும் ஒன்றாகக் காண்கிறானோ அதுவே ஞானம் ., காட்சி தரிசனம்..அவனுக்கு வீடு பேறு ., மோட்சம் கிடையாது எல்லாம் ஒன்றுதான்..
நீரிடை உறங்கும் சங்கு., நிலமிடை உறங்கும் மேனி.,தாரிடை உறங்கும் வண்டு...தாமரை உறையும் திருமகள் ...இதுபோல் அது அது உறையும் இடத்தின் பாற்பட்டு விளங்குகிறது ...
யாரையும் சின்னவன் என்று நினைக்காதே என்று சுக்ரீவனுக்குச் சொல்கிறான்..எந்த உயிருக்கும் இடையூறு செய்யாதவன் எவனோ அவனே சிறந்த பண்பாளன்..
அனைவரும் சகோதரர்கள் என்றால் ஏன் இட ஒதுக்கீடு..?வெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் மரபு இது ......சமம் அனைத்தும் ..யாதும் ஊரே..யாவரும் கேளீர்..

ராமாயணத்தில் எல்லோருக்கும் சம பங்கு உண்டு விலங்கினத்துக்கு ரெப்ரசண்டேஷன் உண்டு.,. , எல்லோருக்கும்சமமாக உயர்ந்த அந்தஸ்து தருவதுதான் ராமாயணம்.. எனவே ராமன் ஆட்சியே உயர்ந்த ஆட்சி. இவ்வாறு
கவிக்கோ தன்னுரையில் விஞ்ஞானம்., மெய்ஞானம் ., அறிவியல் ., பூகோளம்., சரித்திரம்., ஆன்மீகம் ., இலக்கியம்., கலந்து தஞ்சாவூர் தலைவாழையிலையில் கணியனின் ”யாதும் ஊரே” என்ற இராமாயண இலக்கிய விருந்துபடைத்தார்கள்...வயிறு புடைக்கப்புசித்தவர்கள் அந்த விருந்தின் பெருமை பகர்வதில்லையா அதுபோலத்தான் என்னுடைய இந்தக் கட்டுரையும்..உங்களிடம் யாம் பெற்ற இன்பம் பெறுகவென்று பகர்கிறேன்..

டிஸ்கி:- செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு உரிய பெருமை கிடைக்கச் செய்ய கவிக்கோ முதல்வரிடம் கூறி ஆவன செய்வார் என கம்பனடி சூடி சொன்னார்கள்..