எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 ஜூன், 2011

ஃபாத்திமாபாபு பேட்டி..கான்வெண்டில் படிக்கும் பெண்களுக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வருவதில்லை..

சந்தனக் குரல் கேள்விப்பட்டிருப்பீர்கள் .. சந்தனம்., ஜவ்வாது ., பன்னீர் எல்லாம் கலந்து மணக்கும் உன்னதமான குரலுக்குச் சொந்தக்காரர் கிட்டத்தட்ட 24 வருடங்களாக தொலைக்காட்சி செய்திகள்., நாடகங்கள்., தொகுப்புகள்., திரைப்படங்கள் என எல்லாவற்றிலும் முத்திரையைப் பதிக்கும் மல்கோவா மாமி ..பிரபல செய்தி வாசிப்பாளர் . ஃபாத்திமா பாபுவை நம் பத்ரிக்கைக்காக தொடர்பு கொண்டோம்..



1.தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளராக மற்றும் நடிகையாக உங்களைப்பற்றி எங்களுக்கு தெரியும் ...மேலும் உங்களைப் பற்றி ., உங்கள்குடும்பம் பற்றி எங்கள் வாசகர்களுக்கு சொல்லுங்களேன்..

நான் பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தேன் .,தற்போது போரூரில் வசிக்கிறேன். என் கணவர் பெயர் பாபு. எனக்கு இரண்டு பையன்கள். மூத்தவன் ஆஷிக்., ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் செகண்ட் இயர் படிக்கிறான்.. சின்னவன் ஷாரூக்.. ஏழாவதில் இருந்து எட்டாவது போகிறான்.

2. நீங்கள் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக வந்தது எப்படி?

..சின்ன வயதில் இருந்தே ஸ்டேஜ் பர்ஃபாமர்., லைம் லைட்டில் இருப்பது பிடிக்கும். 1980 இல் ஆல் இண்டியா ரேடியோவில் நாடகத்துறையில் இருந்து இருக்கேன்.. செய்தித்துறையில் வேகன்ஸி இருந்தது. AIR - NEWS PONDICHERRY - இல் அதில் சேர்ந்தேன்..

பிறகு சென்னைக்கு எம் ஏ., ஷோசியல் ஒர்க்ஸ் படிக்க வந்தேன். முதல் வருடத்தோடு நிறுத்தியாச்சு. இந்தியன் ஆயிலில் வேலை கிடைத்தது. மெட்ராஸ் தூர்தர்ஷனிலும் செய்தி வாசிப்பாளர் பணிக்காக ஆடிஷன்க்கு அப்ளை செய்தேன் குரல் நன்றாக இருந்ததால் கிடைத்தது. குரலுக்காக சிறப்பு பயிற்சி ஏதும் எடுக்கவில்லை. 96 வரை இந்தியன் ஆயிலில் பணி புரிந்தேன். ஒர் நேரத்தில் ஒன்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தால் சிறப்பாக செய்யலாம் என வேலையை விட்டுவிட்டு முழு நேர செய்தி வாசிப்பாளராக ஆனேன்.

3. தொலைக்காட்சி சீரியல்கள்., திரைப்படம் இவற்றில் கலக்குகிறீர்களே.. இது தவிர வேறு ஏதும் செய்கிறீர்களா..

1.மேடையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறேன் .. ஆல் இண்டியா ரேடியோ., டி வி எல்லாவற்றிலும் நிகழ்ச்சிகளைத்தொகுத்து வழங்குகிறேன்.

2.ஷார்ட் ஃபிலிம் எடுப்பது பற்றி படித்து வருகிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில். சிறந்த குறும்படங்கள எடுத்து வழங்கும் ஆசை உண்டு..

3. கதை., கவிதை., கட்டுரை எழுதி வருகிறேன்.. தமிழ் ஸ்டூடியோ.காமில் நெட்டில் வெளியிடும் ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கிறது.

4. இண்டர்வியூக்கள் செய்திருக்கிறேன் ராஜ் டிவியில். கூட்டாஞ்சோறு என்னும் ப்ரேக்ஃபாஸ்ட் ஷோ.

4. நீங்கள் இண்டர்வியூ செய்த பிரபலங்களைப் பற்றிக் கூறுங்கள்..

ராஜ் டி வி ப்ரேக்ஃபாஸ்ட் ஷோவுக்காக எஸ்.வி. சேகர்., தலைவாசல் விஜய்., சுஜாதா., கவிஞர் பா விஜய்., விவேக்., வெங்கட் பிரபு., ஸ்ரீகாந்த். எஸ்.பி.பி சரண்., யுகேந்திரன்., சின்மயி ஆகியோரை இண்டர்வியூ செய்திருக்கிறேன்.

மேடை நிகழ்ச்சியில் ஜேசுதாஸின் எக்ஸ்க்ளூசிவ் கச்சேரி ., UK முரளி., லக்ஷ்மண் ஷ்ருதி ஆகியோர் நிகழ்ச்சிகளை காம்பியரிங் செய்திருக்கிறேன்.

5. பல படங்களில் நடிக்கிறீர்களே நீங்கள் அறிந்த மொழிகள் எத்தனை..
தமிழ் ., தெலுங்கு., மலையாளம்., கன்னடம்., ஆங்கிலம்.

6. எப்ப பார்த்தாலும் ஸ்லிமா ஃப்ரெஷா ஸ்வீட் ட்வண்டி மாதிரி இருக்கீங்களே உங்க இளமையின் ரகஸ்யம் என்ன..?

எல்லாம் இயற்கை உணவுதான். நார்மலா காலையில் நான் தக்காளி ஜூஸ் அல்லது ஒரு கொய்யா எடுத்துக் கொள்வேன்.

பீன்ஸ்., முள்ளங்கி தவிர மற்ற எல்லாம் பச்சையா சாப்பிடுவேன். சௌ சௌ., கோஸ்., காரட்., குடைமிளகாய்., வெள்ளரிக்காய்., பூசணிக்காய்., ப்ராக்கோலி எனப்படும் பச்சை நிற காய்கறி ( காலிஃப்ளவர் போல்) . லேசா உப்பு மிளகு போட்டு சாப்பிடுவேன் லஞ்சுக்கு .

இரவு உணவு பெரும்பாலும் சோயா மாவில் செய்த சப்பாத்தி.

எல்லாருமே இயற்கை உணவுக்கு மாறணும். சமைத்த உணவு சத்து இழக்குது. எண்ணெயில் போடுவது., வெந்நீரில் போடுவது என்பது காய்கறிகளை எண்ணெய்க் கொப்பரையிலும் கொதிநீரிலும் நரகத்தில் போடுவது போல.

முடிந்தவரை இயற்கை உணவு எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் 10 % இயற்கை உணவு. 90 % சமைத்த உணவு எடுத்துக்குங்க. பின்பு 50 % இயற்கை உணவு., 50 % சமைத்த உணவு., பின் 75 % இயற்கை உணவு., 25 % சமைத்த உணவு. இப்படி மாறினால் தோலுக்கும் உடலுக்கும் உரிய சத்து அழியாமல் கிடைக்கும் . 7. இதுவரை எத்தனை படங்களில் நடித்திருப்பீர்கள்? அதில் மிகப் பிடித்தது எது. ?

70 திரைப்படங்களில் நடித்திருப்பேன். கல்கி., பார்த்தேன் ரசித்தேன் ., சொர்ணமுகி., தேவதையைக் கண்டேன்., விஐபி. மலையாளத்தில் ட்ராஃபிக். ரொம்ப பிடித்து செய்த படம் இது எல்லாமேதான். மலையாளத்தில் ட்ராஃபிக் ரொம்ப பிடித்து செய்த படம். அதில் ரோஹிணி., லக்‌ஷ்மி ராதாகிருஷ்ணன் எல்லாம் நடித்திருக்கிறார்கள்.

8. ஷோபனா ரவி., ஃபாத்திமா பாபு என்பது போல இப்போது ந்யூஸ் வாசிக்கும் யாரும் பெரிதாக பேசப்படவோ கவனிக்கப்படவோ இல்லையே ஏன்.. ? உங்கள் உடையையும் ஹேர்ஸ்டைலையும் தினம் தினம் பார்க்கவே டிவி பார்க்கும் கூட்டம் ஒன்றும் இருந்தது. உங்கள் உச்சரிப்பு சுத்தம்., அழகு எல்லாம் ரசிக்கக்கூடியது .. அந்த அளவு யாரும் இப்போ சொல்ல முடியலையே ஏன்.

அப்போ தமிழ் நன்கு பேசக்கூடிய கான்வெண்ட் படிக்கும் பெண் போன்ற முகத்தோடு நான் ., ஷோபனா ரவி., சந்தியா போன்றோர் இருந்தோம். தமிழ் நன்கு பேசக்கூடிய பெண்களுக்கு சொஃபிஸ்டிகேடட் லுக் இல்லை. கான்வெண்டில் படித்த பெண்களுக்கு தமிழ் நன்கு உச்சரிக்க வரவில்லை. எனவே இது இரண்டும் இணைந்திருந்த நாங்கள் மூவரும் பேசப்பட்டோம். அது தவிர., செய்தி வாசிக்கும் போது வார்த்தைகளையோ., வாக்கியங்களையோ அவ்வப்போது நிறுத்தாமல்., நீட்டி முழக்காமல்., சரியான இடத்தில் நிறுத்தி சரியான வேகத்தோடு உச்சரித்து செய்தி கேட்பதை விரும்பும்படி., கதை சொல்வது போல சுவாரசியமாக சொல்ல முடிந்தது ஒரு காரணம். ஒரு ப்பேஸ் விட்டு சொல்லணும் . அந்தக் கலை எங்களுக்கு கை வந்தது.

9. உங்கள் உடை., ஹேர் ஸ்டைல் மாற்றம்., எல்லாம் டிவியில் நீங்கள் நியூஸ் வாசிக்கும் போது ஒரு வாசகர் ஃபோட்டோவாக தினம் எடுத்து அனுப்பியது பார்த்திருக்கிற ஒரு பத்ரிக்கையில் .. அப்படிப்பட்ட ரசிகர்கள் கூட இருந்திருக்கிறார்கள் உங்களுக்கு. அவர் பெயர் என்ன.

ஆமாம் தாராபுரம் விஜய குமார்..என்பது அந்த ரசிகரின் பெயர். ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. தினம் நான் செய்தி வாசிக்கும் போது எடுத்திருக்கிறார். நீண்ட தலைமுடியுடன் நான் செய்தி வாசிப்பதிலிருந்து குட்டையாக வெட்டிக் கொண்டது வரை அதில்தினம் நான் செய்தி வாசித்த போது டி வி யில் எடுக்கப்பட்டு தொகுத்து ஆல்பமாக அனுப்பி இருந்தார்.

10. பிரபலமானவர் நீங்கள். உங்கள் வாழ்க்கையில் நிறைய சோதனைகள் வெற்றிகள் வந்திருக்கும். அந்த அனுபவங்கள கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

எல்லாவற்றையும் புறந்தள்ளணும். மகிழ்வோ., துக்கமோ., கடந்து போகணும் அசைபோட்டுக் கொண்டே இருப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

அப் இருக்கும் போது சந்தோசமும் டவுன் இருக்கும் போது துக்கமும் கொள்வது கிடையாது. இவ்வாறு எல்லா மாற்றமும் கடந்து போகும். மாற்றம் ஒன்றே மாறாததுன்னு இருக்கும் போது என்னைக் கடந்து என்னைப் பார்க்க முடிந்தது.

வாழ்க்கையை அதன் போக்கிலேயே எடுத்துக் கொள்கிறேன்.. AS IT GOES. பெரிதாக எதுவும் பாதித்தது இல்லை. என்னை சேன்ச் பண்ணல.

சந்தோஷம் மெட்டீரியலில் மட்டும் இல்லை. அது உள்ளே இருக்கிறது..

11. இவ்வளவு பணிகளில் ஈடுபடுகிறீர்களே .. சிலர் நேரமில்லை எதற்கும் என்பார்கள். உங்களால் எப்படி முடிகிறது ?

காலையில் இருந்து மாலை வர திட்டமிடல் முக்கியம் எனக்கு. இன்னிக்கு ஷூட்டிங் இருந்தா அதுதான் முக்கியம். அல்லது ந்யூஸ் ரீடிங். அல்லது சமையல் அப்படி ஆர்கனைஸ் செய்து கொள்வேன். சுஜாதாம்மா இறந்த அன்னைக்கு அவங்களுக்கு அஞ்சலி செலுத்த அவங்க வீட்டுக்கு செல்வதுதான் எனக்கு முக்கியமா நினைச்சேன். எனவே ந்யூஸ் ரீடிங்கை கட் செய்துட்டு அங்கே போனேன். எதுக்கு ப்ரையாரிட்டி கொடுக்கணுமோ அதுக்கு கொடுப்பேன். எனக்கு க்வாலிட்டி ஆஃப் டைம் முக்கியம்.

டிஸ்கி:- ஃபாத்திமாபாபு அவர்களின் இந்த பேட்டி மே மாத இவள் புதியவளில் வெளிவந்துள்ளது.

11 கருத்துகள்:

  1. இவள் புதியவள் இதழிலேயே வாசித்தேன். நல்ல பேட்டி.

    பதிலளிநீக்கு
  2. தமிழின் இக் கால நிலையினை உணர்த்தும் ஒரு உன்னதமான பேட்டியினை வழங்கியிருக்கிறார் பாத்திமாபாபு. பகிர்விற்கு நன்றிகள் சகோ.

    பதிலளிநீக்கு
  3. சந்தனக் குரல் கேள்விப்பட்டிருப்பீர்கள் .. சந்தனம்., ஜவ்வாது ., பன்னீர் எல்லாம் கலந்து மணக்கும் உன்னதமான குரலுக்குச் சொந்தக்காரர் ......

    ஆஹா இத்துடன் தேன் கலந்தது போல் அல்லவா உள்ளது, தேனம்மையாகிய உங்களின் பேட்டியும், பதிவும்.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நல்லதொரு பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பாத்திமா பாபுவை எனக்கு பிடிக்கும்..பகிர்வுக்கு நன்றிக்கா...

    பதிலளிநீக்கு
  5. எனக்கும் பிடித்த நல்ல தமிழ் வானொலி அறிவிப்பாளர்களில் ஒருவர் !

    பதிலளிநீக்கு
  6. நல்ல நேர் காணல்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி ரமேஷ்

    நன்றி சரோ

    நன்றி நிரூபன்

    நன்றி கோபால் சார்

    நன்றி மேனகா

    நன்றி ஹேமா

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி செந்தில்..

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  9. அப்போவெல்லாம், இவங்களைப் பாக்கிறதுக்குக்காகவே செய்திகள் பார்ப்போம். நேர்த்தியான உடை போலவே உச்சரிப்பும்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...