எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 ஜூன், 2015

கல்கியிலிருந்து முதல் செக்.

கல்கியில் வெளியான கிராமத்துத் திருவிழா என்ற கவிதைக்காக எனக்கு அனுப்பப்பட்ட செக் இது. கல்லூரிப் பருவத்தில் முதல் சம்பளம்.

(  EARN WHILE YOU LEARN - என்று லைப்ரரிக்கெல்லாம் சில பிள்ளைகள் சென்று புக் அடுக்கிக் கொடுத்து பாக்கெட் மணி சம்பாதித்துக் கொண்டிருந்த காலம். ! )

புதன், 3 ஜூன், 2015

அமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)


நண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :)

/////http://tamilonline.com/thendral/authnew.aspx?aid=10009

     தெரியுமா?: வலைப்பதிவர் தேனம்மை லெக்ஷ்மணன்
April 2015

செவ்வாய், 2 ஜூன், 2015

எரு முட்டை. ( புதிய தரிசனம் )


ரு முட்டை :-

ணலில் ஒளிர்ந்து கொண்டிருந்தன எரு முட்டைகள். மெல்ல மெல்ல கங்குகளைப் போலாகி ஒளிரும் நெருப்பின் முன் சாம்பல் நிற இருளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் குமரன். கண்ணீர்க் கோடுகள் தீயாய் நீண்டு மண்ணில் சொட்டுச் சொட்டாக விழுந்து லேசாக மண் வாசத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தன.

மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

இன்னிக்கு தெலுங்கானாவுக்கு பர்த்டே. ஜெய் தெலுங்கானான்னு இங்கே சொல்லிட்டா எந்த ப்ராப்ளமும் இல்லை.. :) :) :) 

301. இன்னிக்குக் காலையிலதாங்க உங்களுக்கு ஃபோன் பண்ணனும்னு நினைச்சேன்.
.
ஒரு மூணு நாலு பேர் ரெண்டு நாளா நான் ஃபோன் பண்ணும்போது இப்பிடியே டயலாக் விடுறாங்க.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நான் சாயங்காலம் ஃபோன் பண்றவரைக்கும் என்னதான் பண்ணாங்களோ.

302. சிலருக்கு அம்மாகிட்ட இருந்து ஃபோன் வந்திருக்கு. உங்களுக்கு வந்திச்சா..எனக்கும்தான் வந்திச்சு..
!
!எங்க அம்மாகிட்டயிருந்துங்க.

திங்கள், 1 ஜூன், 2015

ரேட்டிங்கும் ரா(ங்)கிங்கும் :-

ரேட்டிங்கும் ரா(ங்)கிங்கும் :-

சமீபகாலமா எதை எடுத்தாலும் ரேட்டிங்க்தான். ஒரு பொருளை வாங்கப் போனாலும் சரி ஒரு அலுவலகத்தில் வருடாந்திர முடிவிலும் சரி, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சரி. ரேட்டிங் போட்டு அவர்களைத் தரம்தாழச் செய்வதில்தான் முனைப்பாக இருக்கிறது உலகம்.

முன்பு எல்லாம் பொருட்களுக்கு ரேட்டிங்க் வைத்து விற்பதில்லை. தரமான பொருட்களையே நாம் வாங்கினோம் என்பதல்ல. அவ்வளவு சுகாதாரக் கேடும் நோயும் ப்ளாஸ்டிக் உபயோகமும் , மரபணு மாற்றப் பயிர்களும் உரங்களும் தாக்காத காலகட்டத்தில் இருந்தோம். சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இன்றைப் போல பெருவாரியாக விதம் விதமான காய்ச்சல்களும் தொற்று நோய்களும் இல்லை. கொஞ்சம் ஆரோக்கியமாகவே இருந்தோம் என்று சொல்லலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...