எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

பாரதத்தின் பெருமை.. பங்கஜ் அத்வானி. PROUD OF INDIA - PANKAJ ADVANI..!!!

பங்கஜ் அத்வானி.. பெருமையுடன் உச்சரிக்க நினைக்கும் பெயர்.. 16 வது ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் (ஏஷியன் கேம்ஸ் கோல்ட் மெடலிஸ்ட்) ஆண்களுக்கான இங்கிலீஷ் பில்லியர்ட்ஸில்( MEN'S ENGLISH BILLIARDS CHAMPIONSHIP) தங்கம் வென்றவர். பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கரில் 7 வேர்ல்டு டைட்டில்களை வென்றவர். 4 நாள் முன்பு இவர் விளையாடியதை ஸ்போர்ட்ஸ் சானலில் பார்த்தேன். மியான்மரின்  OO Nay Thway வை மிக அருமையாக ஆடி வென்றார்.


ஜூலை 24, 1985 இல் பிறந்த இவர் பூனேயை சேர்ந்தவர். முதலில் குவைத்தில் இருந்த இவர் குடும்பம் பெங்களூருவுக்கு வந்ததும் அங்கே ஃப்ராங்க் ஆண்டனி பப்ளிக் பள்ளியில் படித்தார். மகாவீர் ஜெயின் கல்லூரியில் பி. காம் படித்தார். இவருக்கு பயிற்சி அளித்தவர் முன்னாள் தேசிய சாம்பியனான அரவிந்த் சௌர் ஆவார். 12 வயதில் இருந்து மாநில , மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று வென்றிருக்கிறார். 2003 இல் இருந்து விளையாடி வருகிறார். ஆகஸ்ட் 73இல் அதிகபட்ச ராங்கிங்கும், ( 73), அதிகபட்ச ப்ரேக்கும் ( 143- ஸ்நூக்கர், 876 -- பில்லியர்ட்ஸ்) கொடுத்தவர் .

இவர் நம் தேசத்துக்காக பங்கேற்று வெற்றிபெற்று பெருமை சேர்த்தவர் என்பதால் இவருக்கு 2009 இல் பத்மஸ்ரீ வழங்கப்பட்டிருக்கிறது. ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது 2006 இலும், அர்ஜுனா விருது 2004 இல் வழங்கப்பட்டிருக்கிறது.

 IBSF டைட்டில்களை 6 முறையும், grand double போட்டிகளிலும், ஒரே சீசனில் 5 பில்லியர்ட்ஸ் போட்டிகளிலும் வென்றிருக்கிறார். ஜூனியர், சீனியர் தேசிய சாம்பியன்ஷிப், ஏசியன் பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் வேர்ல்டு பில்லியன் சாம்பியன் ஷிப் ( time format and point format) , WORLD PROFESSIONAL BILLIARDS TITLE -- WPBSA என எல்லாவற்றிலும் வென்றிருக்கிறார். 7 வேர்ல்டு, 5 ஏஷியன்ஸ், 2 ஏஷியன் கேம்ஸ் கோல்டு, 1 ஆஸ்த்ரேலியன் ஓபன் மற்றும் 1 ஏஷியன் டீம் ஆகிய டைட்டில்களை வென்றிருக்கிறார்.

{பொதுவாக ஸ்நூக்கர், பில்லியர்ட்ஸ், விளையாட்டுக்களை தொலைக்காட்சியில் கண்டு களிப்பதுண்டு. ஒரு முறை முணாறு ஸ்டெர்லிங் ரெசார்ட்டில் தங்கி இருந்தபோது விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. காரம்போர்டு போலவோ, கம்ப்யூட்டரில் நெட்லாகில் விளையாடும் பூல் கேம் ( POOL GAME ) போலவோ இல்லை அது. மிகுந்த முயற்சியும் பயிற்சியும் தேவை. நாம் ஒன்றை எய்ம் செய்ய அது வெறொன்றில் பட்டு அதிர்ஷ்டவசமான ஏதோ ஒரு பாக்கெட்டை சென்றடையும்.!

9 பால் டூர், ஸ்நூக்கர் ரெட் வைக்கப்படும் 15 பால் கொண்ட பில்லியர்ட்ஸ் விளையாட்டை பொதுவாக ரசித்திருக்கிறேன். தாய்லாந்து, பாங்காங்க் போன்ற நாடுகளின் வீரர்கள்தான் ஜெயித்து பார்த்திருக்கிறேன். இந்த முறை ஒரு இந்தியர் விளையாடி ஜெயித்ததைப் பார்த்ததும் மிகுந்த பெருமித உணர்வு ஏற்பட்டது.

 9 பால் டூரில் ( 9 BALL TOUR) மஞ்சள், நீலம், சிகப்பு, வயலெட், ஆரஞ்ச், பச்சை, மெரூன், கறுப்பு, பசும் மஞ்சள் என்ற நிறப்படியும், ( ஒன்றிலிருந்து ஒன்பது வரை எண் இடப்பட்டு இருக்கும்) பாக்கெட்டில் விழச் செய்ய வேண்டும். இதே சிகப்பு பால் 15 கொண்ட பில்லியர்ஸில் 15 ஐயும் எப்படி வேண்டுமானாலும் பாக்கெட்டில் விழுமாறு அடிக்கலாம்.

இங்கிலீஷ் பில்லியர்ட்ஸில் 3 பந்துகள் மட்டுமே. இது முதலில்யுனைட்டட் கிங்டத்தில் அறிமுகமானது. இது ஒரு பச்சை நிற டேபிளில் விளையாடப்படும். இதை விளையாட ஒரு ராக், ஒரு ட்ரைஆங்கிள், சாக், வுட்டன் ( WOODEN STICK) ஸ்டிக், பில்லியர்ட்ஸ் க்யூ தேவைப்படும். இதிலும் 6 பாக்கெட், 3 பந்துகள் - 1 சிகப்பு, 2 வெள்ளை. அதில் ஒன்று க்யூ பால் எனப்படும். பில்லியர்ட்ஸ் க்யூவை வைத்து க்யூ பாலால் மற்ற இரண்டு பால்களையும் ஹிட் செய்யவேண்டும் அல்லது பாக்கெட்டில் விழும்படி செய்யவேண்டும். தேவைப்பட்டால் வுட்டன் ஸ்டிக்கை உபயோகித்து அடிக்கலாம். இதற்கு 3, 2 எனப் பாயிண்டுகள் உண்டு. ஒவ்வொரு ப்ரேக்கிலும் எடுக்கும் மதிப்பெண் யாருக்கு முதலில் 100 ஐ அடைகிறதோ அவருக்கு வெற்றிதான். }

ஒவ்வொரு முறையும் மியான்மரின் OO Nay Thway சிறப்பாக ஆடினார். ஆனால் பங்கஜ் அத்வானியின் ஆற்றலும் அதிர்ஷ்டமும் அன்று அருமையாக இருந்தது. ஒவ்வொரு முறை அவர் தவறவிடும்போதும் அடடா என வருத்தமளிக்கும். அடுத்த ஹிட்டை மியான்மரின் OO Nay Thway அடிக்கமுடியாமல் லேசாக ஹிட் செய்து விட்டுப் போகும்போதுதான் தெரியும் அது எவ்வளவு கஷ்டமான ஷாட் என்று.

மிக அருமையாக விளையாடிய பங்கஜ் அத்வானிக்கு விருது அணிவிக்கப்பட்டு, பூங்கொத்து வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டபோது நம் இந்தியக் கொடி உயரத்தில் ஏற்றப்பட்டது பார்த்ததும் அவரின் கண்கள் லேசாக கலங்கியது. கண்டம் ஒரு முறை உயர்ந்து எழுந்தது. அந்தப் பரவசமெல்லாம் நமக்கும் ஏற்பட்டது..

ஜன கண மண ஒலிக்க அவர் வெற்றி மேடையில் நின்றபோது அட்டென்ஷனில் வீட்டிலேயே நின்ற எனக்கும் நானே வென்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. உண்மைதான். நிறத்தால், மொழியால் மாநிலங்களால் நாம் பிரிவுபட்டிருந்தாலும் நம் தேசியக் கொடியை உயரச் செய்து, நம் தேசிய கீதத்தை ஒலிக்க வைத்து நாம் ஒரு தாயின் பிள்ளைகள் , நாம் இந்தியர் என்ற பெருமித உணர்வை எழச்செய்த பங்கஜ் அத்வானிக்கு .. தங்கம் பெற்ற தங்கத்துக்கு.. பெருமித வாழ்த்துக்கள். !!!

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...