இது ஒரு 1984 அக்டோபர் மாத
கல்லூரி டைரிக்குறிப்பு.....
இலைகளுக்கு இறைவன்
கொடுத்த குடைகள்...
பச்சை உடை அணிந்து
உடலை மறைத்து
செடி காட்டும் முகங்கள்...
நடக்கத்தெரியாத வெகுளி
மனிதர்கள் பிரசவித்த
சிரிப்புக் குழந்தைகள்...
காற்றுடன் சினேகம்
செய்து கொள்ளச்
செடிகள் பூத்த புன்முறுவல்கள்...
பிறக்கும் போதே
அழத்தெரியாமலே
சிரிக்கக் கற்றுக்கொண்ட
பச்சை மண்கள்...
கரும்பச்சையில்
பூத்து நின்ற
ஜிகினா நட்சத்திரங்கள்...
வெய்யிலின் தொடுதலில்
மரித்துப்போகும்
மின்மினிப் பூச்சிகள்...
செடியின் முகத்தில்
இறைவன் குத்திய
வர்ண மச்சங்கள்...
செடியைத் தினமும்
பருவம் வந்த பெண்ணாய்
நாணித் தலை குனிய வைக்கும்
வசந்த நிகழ்வுகள்...
மரங்கள் மனிதனைக்காண
ஆசைப்பட்டுத் தினமும்
திறக்கும் கண்கள்...
வயல்வெளி வரப்பின்
கால்வாய் நீரைத் தொட்டுப்
பார்க்கச் செடிகள் படைத்துக்
கொண்ட கரங்கள் ...
நீலப்பச்சையில்
பூத்து நின்ற
வெண்மேகங்கள்...
மரங்களின் செடிகளின்
நிழல்கள் நிதமும் அணியும்
பாத அணிகள்....
செடித்தாய் பத்திரமாய்ப் பாதுகாக்கும்
பருவம் வரக் காத்திருக்கும்
மொட்டுப்பெண்கள்....
விடிகாலைப் பனிவேளையில்
செடி கரம் நெறித்துச்சோம்பல் முறித்ததனால்
போதவிழும் மொட்டுக்கள்...
கவிஞர்களைப் பரவசப்படுத்தும்
செடிகள் எழுதிய
ஆச்சர்யக் கவிதைகள் ....
கல்லூரி டைரிக்குறிப்பு.....
இலைகளுக்கு இறைவன்
கொடுத்த குடைகள்...
பச்சை உடை அணிந்து
உடலை மறைத்து
செடி காட்டும் முகங்கள்...
நடக்கத்தெரியாத வெகுளி
மனிதர்கள் பிரசவித்த
சிரிப்புக் குழந்தைகள்...
காற்றுடன் சினேகம்
செய்து கொள்ளச்
செடிகள் பூத்த புன்முறுவல்கள்...
பிறக்கும் போதே
அழத்தெரியாமலே
சிரிக்கக் கற்றுக்கொண்ட
பச்சை மண்கள்...
கரும்பச்சையில்
பூத்து நின்ற
ஜிகினா நட்சத்திரங்கள்...
வெய்யிலின் தொடுதலில்
மரித்துப்போகும்
மின்மினிப் பூச்சிகள்...
செடியின் முகத்தில்
இறைவன் குத்திய
வர்ண மச்சங்கள்...
செடியைத் தினமும்
பருவம் வந்த பெண்ணாய்
நாணித் தலை குனிய வைக்கும்
வசந்த நிகழ்வுகள்...
மரங்கள் மனிதனைக்காண
ஆசைப்பட்டுத் தினமும்
திறக்கும் கண்கள்...
வயல்வெளி வரப்பின்
கால்வாய் நீரைத் தொட்டுப்
பார்க்கச் செடிகள் படைத்துக்
கொண்ட கரங்கள் ...
நீலப்பச்சையில்
பூத்து நின்ற
வெண்மேகங்கள்...
மரங்களின் செடிகளின்
நிழல்கள் நிதமும் அணியும்
பாத அணிகள்....
செடித்தாய் பத்திரமாய்ப் பாதுகாக்கும்
பருவம் வரக் காத்திருக்கும்
மொட்டுப்பெண்கள்....
விடிகாலைப் பனிவேளையில்
செடி கரம் நெறித்துச்சோம்பல் முறித்ததனால்
போதவிழும் மொட்டுக்கள்...
கவிஞர்களைப் பரவசப்படுத்தும்
செடிகள் எழுதிய
ஆச்சர்யக் கவிதைகள் ....