எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 21 நவம்பர், 2009

பிடித்த பத்தும் பிடிக்காத பத்தும்

நெஞ்சில் நிறைந்தவர்களும் நெஞ்சை எரிப்பவர்களும்

அன்பு சகோதரர் விஜய்யின்
(விஜய் கவிதைகள் )ஆணைக்கு
கட்டுப்பட்டு ......
(மிகத் தாமதமாக எழுதுவதற்கு
மன்னிக்கவும் விஜய்)

1. அரசியல்வாதிகள்

பிடித்தவர் :- இந்திரா காந்தி , ஜெயலலிதா
(மிசா. பொடா, தடா தாண்டியும் பிடிக்கிறது)
தன்னம்பிக்கையின் உருவங்கள் ...
என் இந்தியத் தாய்கள்.. அன்னை ..!அம்மா..!!!

பிடிக்காதவர் :- சுவாமி., தாக்கரேக்கள்..

2, நடிகர்கள்

பிடித்தவர் :- விக்ரம் , சூர்யா. மாதவன் ,
அர்விந்தசாமி., பசுபதி....

பிடிக்காதவர் :- யாரையும் புண்படுத்த
மனமில்லை

3. கவிஞர்கள்

பிடித்தவர் :- பாரதி, கண்ணதாசன். .
தாமரை (வசீகரா ஒன்று போதும்)
வலைத்தளத்தில் நேசன், ஹேமா, விஜய் ..
நேசன் நவீன பாரதி

பிடிக்காதவர்:- மேடை ஜால்ராக்கள் எல்லோரும்

4. நடிகைகள்

பிடித்தவர்:- பானுமதி, சரிதா, ராதிகா,
குஷ்பூ சிம்ரன்.

பிடிக்காதவர் :- அப்படி யாருமில்லை

5. இயக்குனர்கள்

பிடித்தவர்:- பாலசந்தர், சேரன் ,
சசிகுமார், சுகாசினி.

பிடிக்காதவர் :- வினியோகஸ்தர்கள்,
தயாரிப்பாளர்கள் ,பைனான்சியர்கள்
எல்லோருடனும் சமரசம் செய்து
நன்றாக எடுக்கும் சிலரும்
சொதப்புவதுதான் பிடிக்கவில்லை....

6. இசை அமைப்பாளர்கள்

பிடித்தவர் :- எம்.எஸ். விஸ்வனாதன் (வேலை
வேண்டும்) ஹாரிஸ் ஜெயராஜ் (நெஞ்சுக்குள்
பெய்திடும் மாமழை)

பிடிக்காதவர் :- காப்பி அடிப்பவர்கள் எல்லோரும்
மற்றும் ரீமிக்ஸ் செய்பவர்கள்...

7. விளையாட்டு வீரர்கள்

பிடித்தவர் :- காரம் இளவழகி,
ஸ்குவாஷ் ஜோஸ்னா சின்னப்பா....

பிடிக்காதவர் :- பெட்டிங்குக்கு ஆடுபவர்கள்...

8. ஊர்கள்

பிடித்தது :- மதுரை., காரைக்குடி, செட்டிநாடு
(காரைக்குடியைப் பற்றியும் செட்டிநாடு பற்றியும்
விரிவாக எழுத வேண்டும் ..
மிக மிக அழகான ஊர்கள்...
சமையல் புடவைகள் கட்டிடக்கலை
கோயில்கள் எல்லாமே சிறப்பு )

பிடிக்காதது :- செம்புலப் பெயல் நீர் போல
ரெண்டு நாளிலேயே கலந்துவிடும்.
எனவே பிடிக்காத ஊரில்லை ...

9. பாடகர்கள்

பிடித்தவர்கள் :- பி.பி. சீனிவாஸ் (சந்திப்போமா)
டி.எம்.எஸ். (எல்லாமே) சங்கர் மகாதேவன்
(தனியே தன்னந்தனியே ...----..ரிதம்)
உன்னிகிருஷ்ணன்(என்னவளே) ., கார்த்திக்., கிரீஷ்..

பிடிக்காதவர்:-ரீமிக்ஸ் பாடுறவங்கதான்

10. பாடகிகள்

பிடித்தவர் :- உஷாஉதுப்., ஜானகி, ஜிக்கி ,,
ஜென்சி, சுசித்ரா

பிடிக்காதவர் :- யாருமில்லை ..
எல்லோரையுமே பிடிக்கும்...

நான் மாட்டி விடப் போகும் நண்பர்கள் ஐவர்
சந்ரு
தியாவின் பேனா
Mrs.Menagasathia
எம்.எம்.அப்துல்லா
சந்தான சங்கர்
யாராவது ரெண்டு பேரை மட்டும்
சொன்னா அவங்க எஸ்ஸாயிடறாங்க...
எனவே இவங்க ஐவரும் ...
அப்பாடா நல்லா மாட்டி விட்டாச்சு ...
நன்றி மக்களுக்கு...!!!
(இவ்வளவு பெருசா எல்லாம்
இம்போஸிஷன் குடுக்காதீங்கப்பா ...
எதோ பத்து பதினைஞ்சு வரியில கவிதை
எழுதிக்கிட்டு தேமேன்னு இருந்தேன் ...
ஆனாலும் யாம் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம் என்ற பரந்த
மனப்பான்மை தான் காரணம்...

நன்றி நன்றி நன்றி

33 கருத்துகள்:

  1. யாரையும் காயபடுத்தத வகையில் உள்ளது..

    //சங்கர் மகாதேவன்
    (தனியே தன்னந்தனியே ...----..ரிதம்)//

    எனக்கும் மிகவும் பிடித்த பாடல்..அதை விட ரிதம் படம் ரொம்ப பிடிக்கும்..

    பதிலளிநீக்கு
  2. நேத்து ஒரு கம்மென்ட் போட்டேன்(பரங்கிபூ)..ஆனா இல்லையே..எதோ பிரச்னை இருக்குனு நினைக்குறேன் எனோட இணையத்தில்..
    இனிமேல் போஸ்ட் ஆகிடசுன்னு சரியா பார்க்கணும்..

    பதிலளிநீக்கு
  3. நல்ல தெரிவுகள் வாழ்த்துகள்

    அழைத்ததுக்கு மிக்க நன்றி நான் முன்னரே எனது விருப்பத் தேர்வுகளை சொல்லிவிட்டேன்

    http://theyaa.blogspot.com/2009/11/blog-post_04.html

    இருந்தாலும் அழைப்புக்கு நன்றி

    November 21, 2009 8:52 PM

    பதிலளிநீக்கு
  4. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு அக்கா.

    உங்கள் அழைப்பிற்க்கு நன்றி+சந்தோஷம் அக்கா.ஏற்கனவே நான் இந்த தொடரை ஏற்று பதிவு போட்டுள்ளேன் அக்கா.

    பதிலளிநீக்கு
  5. வெரி நைஸ் ரிப்ளைஸ்... ஓ சாரி.. இங்கு ஒன்லி டமில்ல மட்டும் சொல்லணும் இல்ல்..

    அருமையா பதில்கள் சொல்லியிருக்கின்றீர்கள்.

    என்ன இருந்தாலும் என் அளவுக்கு பொத்தம் பொதுவா சொல்ல வரவில்லை..

    பதிலளிநீக்கு
  6. // (இவ்வளவு பெருசா எல்லாம்
    இம்போஸிஷன் குடுக்காதீங்கப்பா ...//

    இது பெரிசா...

    இருப்பதிலேயே மிக மிகச் சிறிய சங்கிலித் தொடர் இடுகை இதுதானுங்க..

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப நன்றி எனது அன்பு ஆணைக்கு கட்டுப்பட்டு எழுதியமைக்கு சகோதரி

    ஆஹா பிடித்த கவிஞர்களில் நானுமா

    ரொம்ப பெரிய உள்ளம் உங்களுக்கு

    யாரையும் காயப்படுத்தாமல்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  8. நன்றி வினோத்
    உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும்
    தொடர்ந்து படித்து என்னை ஊக்குவிப்பதற்கு நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  9. உங்க கமெண்ட் வெளியாகி இருக்கே வினோத்

    உங்க இணயமும் போஸ்டும் சரியாத்தான் வேலை செய்யுது

    பதிலளிநீக்கு
  10. உங்க பதிலை படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சேன் மேனகா
    நீங்க இவ்வளவு சந்தோஷப்படுவீங்கன்னு தெரிஞ்சு இருந்தா பரங்கிப்பூவில் மாவடுக் கண்ணழகிக்குப் பதிலா குலோப் ஜாமூன் கண்ணழகின்னு எழுதி இருப்பேன்

    பதிலளிநீக்கு
  11. நன்றி தியா
    உங்கள் நிலையைத் தெளிவு படுத்திப் பின்னூட்டமிட்டதற்கு

    பதிலளிநீக்கு
  12. நீங்க பின்னூட்டத்திலயும் கிங் ஆச்சே ராகவன்

    கழுவுற மீனில் நழுவும் மீன்

    உங்க மாதிரி இடுகையை சுவாரசியமா எழுதவும் வராது

    உங்களுக்கு வர்ற மாதிரி நூற்றுக் கணக்கில் எனக்கு க்மெண்ட்ஸூம் வருமா என்ன

    ஓஓஓ இங்க டமில்ல தான் எழுதணும்

    :-))))))))))))))

    பதிலளிநீக்கு
  13. //இராகவன் நைஜிரியா சொன்னது…
    // (இவ்வளவு பெருசா எல்லாம்
    இம்போஸிஷன் குடுக்காதீங்கப்பா ...//

    இது பெரிசா...//

    ஆமாங்க எனக்கு இது பெருசுதான்

    எழுதி முடிகிறதுக்குள்ள மூச்சு வாங்கிடுச்சு

    பதிலளிநீக்கு
  14. நன்றி விஜய்

    எழுதி முடிக்கும் போது கரண்ட் மற்றும் நெட் போய் விட்டது

    அடடா இவ்வளவு சிரமப்பட்டது வீணாகி விடுமோவென்று நினைத்தேன்

    நல்ல வேளை முக்கால் மணி நேரத்தில் பவர் வந்து விட்டது

    எழுதுவது கஷ்டமாக இருந்தாலும் எழுதிய பின் நிறைவாக இருக்கு விஜய்

    நன்றி உங்களுக்கு

    பதிலளிநீக்கு
  15. பிடித்த பத்தும்
    பிடிக்காத பத்தும்
    படித்து பார்த்தேன்
    பிடித்திருந்தது,
    படித்த என்னையும்
    பிடித்து போட்டுட்டீங்க வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  16. //நேசன் நவீன பாரதி//

    அதீதமான அன்பின் வெளிப்பாடாக இதைக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  17. ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க.

    நண்பர்கள் தொடர இணைப்பு தரலாமே

    பதிலளிநீக்கு
  18. The best one was "Pidikkaatha Oor" - Very nice. Oorananha, petra perananha - Yaathum uuray and we are finally not going to stay in any of them. In fact it is a blessing to not like something.

    Loving brother

    பதிலளிநீக்கு
  19. //Oorananha, petra perananha //

    Sorry for the typo. Please read it as Ooranatham, petra peranantham

    //In fact it is a blessing to not like something.//

    Again sorry, it should have been "a blessing to not dislike something".

    Thanks

    பதிலளிநீக்கு
  20. புதிய பதிவு பார்த்தீர்களா?

    விஜய்

    பதிலளிநீக்கு
  21. அருமையா பதில்கள் சொல்லியிருக்கின்றீர்கள்!!!!

    பதிலளிநீக்கு
  22. http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html pls see this link

    பதிலளிநீக்கு
  23. சந்தான சங்கர்

    யதார்த்தத்தைஅறைகிறது உங்கள் கவிதை

    எழுத ஒப்புக் கொண்டதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  24. ஒரு சிறு கவிதையில் எல்லோர் மனதையும் சிறையெடுத்து விட்டீர்கள் நவாஸுதீன்

    பதிலளிநீக்கு
  25. வெண்பா வேந்தராகி விட்டீர்களே விஜய் அருமை

    விஞ்ஞானம் மெய்ஞானம் எல்லாமே அற்புதமாய் வருகிறது விஜய் உங்களுக்கு கை கொடுங்க

    பதிலளிநீக்கு
  26. நன்றி சுவையான சுவை உங்க நல்ல மனசுக்கு என்னை நெகிழவைத்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  27. நன்றி மேனகா
    நீங்களும் எனக்கு அவார்டு குடுத்து அசத்திட்டீங்க

    பதிலளிநீக்கு
  28. அன்பின் தேனம்மை

    இயல்பான ப்தில்கள்

    நல்வாழ்த்துகள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  29. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...