எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 20 நவம்பர், 2009

பரங்கிப்பூ

இரட்டைக் குவிக்கண்ணாடியும்
நடைப்பயிற்சி மின்சாதனமும்
இரத்த அழுத்தமும் இன்னா நாற்பதை
இடித்துரைக்க ...

பரம்பரையோ
உன் கைப்பக்குவமோ
அதிகம் உண்டு கொழுப்புமேற்றி ...

நெற்களஞ்சியத்திலிருந்து
நியூதில்லியின் கரோல்பாக்
கணப்பு வீட்டில்....

மார்கழியின் திருவையாறும்
திருப்பாவையும் திருவெம்பாவையும்
ஒலி ஒளி நாடாக்களில் கண்டு....

பகல் பத்தும் ராப்பத்தும்
வைகுண்ட ஏகாதசியும்
ஆனித்திருமஞ்சனமும் ஏக்கமெழ வைக்க..

பத்துவிரல் கோலத்தில் பூத்த
என் பரங்கிப்பூவே...
பப்ளிமாஸே....

என் சகுந்தலையே வைஷாலி
யசோதரா மேனகையே...
மாவடுக் கண்ணழகி ...
மலர்ந்த சிரிப்பழகி....

துஷ்யந்தன் ரிஷ்யசிங்கன்
சித்தார்த்தன் விஸ்வாமித்திரனல்ல
நான் உன்னைக் கைகழுவ.....

ஆண்காமம் மட்டும் கண்டு
அழிந்துபட்ட நீ என்னுள்
ஆண்காதல் பார்.....

என் பூபாளமே மோகனமே
ஆனந்தபைரவியே ராகமும் தாளமும்
போல் நீயும் நானும்....

என் பாத தரிசனத்தை
பாதுகா ரட்சையை தாலியாய் சுமந்து
என் காலடியில் நீ....

மஞ்சள் குங்குமம் மெட்டி
பூக்களணிந்து சனாதன தர்மத்தின்
அநாகத வெளிப்பாடே....

அட்டாங்க யோகங்களும்
பதஞ்சலியும் வியாக்கிர பாதரும்
இறுகப்பற்றின இறைவனைப்போல்...

வானப்பிரஸ்தம் ஏகாமல்
இம்மையில் நானும்
உன்னை இறுகப்பற்றி
க்ருஹ்ஸ்தாஸ்ரமத்தில்.....

19 கருத்துகள்:

  1. ஆன்மிக கதாகாலஷேபம் கேட்ட மாதிரி இருக்கு

    தனியா ஆன்மீகத்திற்கு என்று ஒரு வலைபதிவு ஆரம்பிக்கலாமே

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. நல்லா இருக்குங்க ஒரு முழுமை இருக்கு கவிதைல

    ரொம்ப இயல்பா ஜெனிடிக்ஸ் சொல்லி இருக்கும்விதம் அருமை

    பதிலளிநீக்கு
  3. நல்ல வரிகள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. சில வரிகள் என் சிற்றறிவுக்கு அப்பர்ப்பட்டாக இருக்கின்றன..:)

    பதிலளிநீக்கு
  5. தேனு எல்லாத்தையும் படிச்சுக் கலக்கிக் கொட்டுறீங்க.அள்ளிகிட்டே இருக்கோம்.

    பதிலளிநீக்கு
  6. எனக்கு சில புரியவில்லை என்றாலும் புரிந்த வரை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  7. //என் சகுந்தலையே வைஷாலி
    யசோதரா மேனகையே...
    மாவடுக் கண்ணழகி ...
    மலர்ந்த சிரிப்பழகி....// ஹைய் என் பெயரையும் எழுதி கவிதை எழுதிட்டாங்க எழுதிட்டாங்க.

    அழகா வர்ணித்து எழுதிருக்கிங்க.

    அடுத்த கவிதைப் பூ எப்போ?

    பதிலளிநீக்கு
  8. நன்றி விஜய் மலட்டு மரபணு கலக்கலா இருக்கு

    பதிலளிநீக்கு
  9. நன்றி தியாவின் பேனா


    உங்க வாழ்த்துக்கும் வரவுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  10. நன்றி நேசன்

    நளினமான பிசாசுகள் என்னைக் கவர்ந்தன

    எங்கிருந்து வந்தாலென்ன ?
    கல்லறையில் இருந்தோ கனவில் இருந்தோ

    பதிலளிநீக்கு
  11. நன்றி சந்ரு

    உங்க வட்டிக் கொடுமை பற்றிய இடுகை ஒரு நல்ல விழிப்புணர்வு கொடுத்தது

    உங்க வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. நன்றி வினோத் உங்க பாராட்டுக்கு

    உங்க கதையும் காட்சிகளும் அருமை

    பதிலளிநீக்கு
  13. நன்றி ஹேமா உங்க பாராட்டுக்கு

    என்னைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும்
    நல்ல உள்ளம் உங்களுடையது

    பதிலளிநீக்கு
  14. "மெல்ல தமிழினி சாகும்"

    உண்மையிலே பாரதி இதைச் சொல்லவில்லயா

    புலவரே நல்ல ஆராய்ச்சி

    பின் சொன்னது யார்

    உங்க பாராட்டுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  15. நன்றி மேனகா

    உங்க சந்தோஷமான பாராட்டுக்கு

    பிடிச்சு இருக்கா

    அப்ப குலோப் ஜாமூன் கண்ணழகின்னு எழுதி இருப்பேனே

    பதிலளிநீக்கு
  16. அன்பின் தேனம்மை

    காதலன் காதலியைப் பார்த்து பரவசப்படும் காதல் கவிதை

    நாற்பது வயது - இரத்த அழுத்தம் - கொழுப்பு - அத்தனையும் இருந்தும் காதல் - கைவிடாத காதல் - காமமில்லாத காதல் - தாலி கட்டி வாழ்க்கை நடத்தும் காதலன் -

    நல்ல சிந்தனை - இயல்பான நிகழ்வுகளை வைத்து ஒரு கவிதை - சில கேள்விகள் தொக்கி நிற்கின்றன -

    நல்வாழ்த்துகள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  17. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...