எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 13 அக்டோபர், 2009

பவள மல்லி

ரேஸ்கோர்ஸின்
கவர்மெண்ட் காலேஜ்
வாசலில்...

நண்பர்களுடன்
கடலைகளைக்
கிண்டல் செய்து
கொண்டிருந்தேன்....

தூரத்து நிலவு
மிதந்து வருவது போல்
வெள்ளை டீஷர்ட் த்ரீபோர்த்தில் ...

சிவப்பு கான்வாஸில்
நச்சென்று நீ....
பவள மல்லியாய் ....

என்னவாக ஆகிறேன்
என்பது தெரியாமல் ஏதேதோ
ஆகிக் கொண்டிருந்தேன்...

பிட்னெஸ் ஒன்னுக்கு
ஜாகைமாறி
முளைப் பயிறும்
முட்டை வெண்கருவும்...

பழங்களும் காய்களும்
மட்டும் உண்டு ...
வீட்டில் வினோதப் பிராணியாய்...

ரஹேஜாவின் வாசலில்
நண்பர்கள் திடுக்கிட ...
நானே கடலையாய்....

நம் ஜாகிங்குத் துணையாய்
ஹெட் போனில் ஷகிராவும்
எமினெமும் பிப்டி சென்டும் ...

உன் பின்னே
ஒடி ஒடி என்னைச்
செதுக்கிக் கொண்டே...

காபி டேயில் காத்திருந்தபோது
நூற்றெட்டுப் பிள்ளையாருக்கும்
உன் தோட்டத்தில் பூத்த...

பவளமல்லி கோத்த
சின்ன ஆரங்கள்
சூட்டிக் கொண்டிருந்தாய்...

ராத் கி ராணி
உன் கை பட்டு
மகாராணியாய் ....

24 கருத்துகள்:

  1. // பவளமல்லி கோத்த
    சின்ன ஆரங்கள்
    சூட்டிக் கொண்டிருந்தாய்...//

    இது.. அருமையான வரிகள்.

    அழகான பூ. வெள்ளைப்பூக்களுக்கு, சிவப்பு (அ) ஆரஞ்சு கலர் காம்புகள். இரவில் பூத்து, காலையில் மரத்தினடியில் உதிர்ந்து இருக்கும். பூக்கும் போது உள்ள வாசனை.. மிக மிக அற்புதம்.

    பதிலளிநீக்கு
  2. நல்லா இருக்குங்க. ஏங்க சுத்த தமிழிலேயே சூப்பரா எழுதுனீங்க, திடீர்னு ஏங்க ஆங்கில கலப்பு. தயவு செய்து முன்பு எழுதின மாறியே எழுதுங்க. தவறு என்றால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  3. :)

    ஏதோ ஒன்ு குறைவது போலத் தோன்றுகிறது என்னவென்றுத்தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  4. நன்றி ராகவன்

    பவள மல்லி போல் பெண் உடையையும் சித்தரித்திருக்கிறேன்

    மிக நீளமாகி விட்டதால் இப்போதும் அதன் வாசம் குறிப்பிட விட்டுப் போய் விட்டது

    பதிலளிநீக்கு
  5. நன்றி விஜய்

    இளையவர்களின் ஈர்ப்புகளை எழுதும்போது ஆங்கிலம் தவிர்க்க இயலாததாகி விடுகிறது

    உங்கள் அறிவுரைகளைக் கருத்தில் கொள்கின்றேன் விஜய்

    பதிலளிநீக்கு
  6. பார்த்து மட்டுமே உணர்ந்தவைகளையும்..,
    கன்றுக் குட்டிக் காதல்களையும்..,
    இளவயதின் இனக்கவர்ச்சிகளையும் ..,
    முழுமையாக சித்தரிக்கமுடிவதில்லை

    எனக்கே முழுமையற்றதாகத்தான் தோன்றியது

    கண்டுபிடித்துவிட்டீர்களே நேசமித்திரன்

    பதிலளிநீக்கு
  7. தேனு,வர வர நேசன் காத்து வீசுது உங்க பக்கமும்.சிலநேரம் புரில.
    சொல்லிட்டேன் சரியா எழுதுங்க !
    (நேசனை மிரட்டமுடியாது.)

    பதிலளிநீக்கு
  8. பவள மல்லி வாசம் பிரமாதம்... இங்க‌ வ‌ரைக்கும் (துபாய்) வ‌ர்ற‌து...

    எழுத்தில் ஒரு நளினம் இருக்கு...

    //நூற்றெட்டுப் பிள்ளையாருக்கும்
    உன் தோட்டத்தில் பூத்த...

    பவளமல்லி கோத்த
    சின்ன ஆரங்கள்
    சூட்டிக் கொண்டிருந்தாய்...

    ராத் கி ராணி
    உன் கை பட்டு
    மகாராணியாய் .... //

    ராத் கி ராணி அல்லி இல்லையோ?

    எனிவே... சூப்பரா எழுதி இருக்கீங்க...

    இங்க வந்து என் தீபாவளி வாழ்த்து பாருங்கோ... அப்படியே உங்களுக்கான ஸ்பெஷல் கிஃப்டும் அங்க இருந்து எடுத்துக்கலாம்...

    ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

    பதிலளிநீக்கு
  9. ஹேமா
    கோவை ரேஸ்கோர்ஸில் இருந்தபோது தினம் வாக்கிங் போவேன்...
    அது குறித்து எழுதினேன் ...
    தற்போது புரியும் என நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  10. கோபி
    நன்றி உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும்...
    உங்கள் தீபாவளி சீர் வரிசை பெற்றுக் கொண்டேன்..
    என் கவிதையை விட நளினமாகவும் ஆச்சர்யப்பட வைப்பதாகவும் இருந்தது அது...

    நன்றி சகோதரா...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  11. யதார்த்த கவிதைகளுக்கு ஆதரவில்லாததால் புரியாத கவிதை எழுதியிருக்கிறேன்.

    வந்து திட்டி விட்டு போங்கள்.

    விஜய்

    பதிலளிநீக்கு
  12. KalakkaL kavithai,see Kalaingar Tv on 18 th at 10 Pm in programme Ithu Rose Neram & post your opinion.

    பதிலளிநீக்கு
  13. Muniappan Sir
    Im in Sharjah now
    Here we cant get kalaignar TV
    so I missed to see u sir

    Thanks for ur comments sir

    பதிலளிநீக்கு
  14. தேனு,மனம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. நல்லா இருக்கு அக்கா உங்க கவிதை.

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  16. இந்த கவிதையின் நாயகன் யாருங்க ? எனக்கு கவிதை புரிஞ்சா அது கவிதை இல்லையோன்னு ஒரு சந்தேகம் வந்துடுது !

    பதிலளிநீக்கு
  17. Thanks Manikandan for ur comments

    HAPPY DEEPAVALI TO U AND UR FAMILY

    ESPECIALLY TO KUTTIPPAYYAN

    ABHIYAN @ HAYAK!!!!!

    பதிலளிநீக்கு
  18. kavithai purinja niinagalagak kuuda irukkalaam MANIKANDAN

    thayavu seithu antha pavalamalli yarunnu sollidunga

    பதிலளிநீக்கு
  19. Anni, enakku piditha pookaLaiL mudhal idam - pavaLa mallikkuthaan - eppozhudhum, aanaal ippozhuthu ungaLudaiya "pavaLa malli" kavithaiyai paditha piRagu, innum athaRku madhippu koodi vittathu.

    Coimbatore enum oorai ninaithale pavala malli(jaathi malli) ngabhagam varaamal irukkumaa?

    VaazhthukkaL.

    Anbudan,
    VV.

    பதிலளிநீக்கு
  20. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...