எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

வெண்கலம் பெற்றுத்தந்த ககன் நரங்..

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுப்பது என்பதே மிகக் கடினமான விஷயம். எல்லாப் போட்டிகளையும் உற்று நோக்கினால் ஒரு சில விநாடிகள் அல்லது ஒரு சில மில்லிமீட்டர்கள்தான் வித்யாசம்தான் இருக்கும் தங்கக் கோப்பைக்கும் வெள்ளிக் கோப்பைக்கும் வெண்கலக் கோப்பைக்கும். அந்த வகையில் லண்டனில் நடைபெற்ற 2012 க்கான ஒலிம்பிக்ஸில் நமது நாட்டுக்காக விளையாடி துப்பாக்கி சுடும் போட்டியில் (AIR RIFLE COMPETITION) முதல் பதக்கத்தை வாங்கித்தந்த ககன் நரங்குக்கு வாழ்த்துக்கள். மிகக் கடுமையாக விளையாடி அவர் பெற்றுத்தந்த வெண்கலமும் தங்கம்தான்.


சின்னப் பிள்ளையில் விளையாட்டாய் துப்பாக்கி சுடப் பழகியவர் இவர். ( நாம கூட மெரினா போனால் வேட்டையாடப் போகும் ரேஞ்சில் துப்பாக்கியைத் தோளில் மாட்டி பலூன்களை டொப் டொப் என்று சுட்டு சந்தோசப்படுவது வழக்கம். ஆனா அதோட முடிஞ்சு போச்சு நம்ம ஆசையெல்லாம். ) ஆனா இவங்க அம்மா அப்பா மகனுடைய திறமையை ஊக்குவிச்சு தங்கள் நிலத்தை விற்று பயிற்சி கொடுத்துருக்காங்க.

இவர் ஜெயிச்ச பின்னாடி ஹரியானா அரசு ஒரு கோடி ரூபாய் பரிசும், மத்திய அரசு ஐ. ஏ. எஸ்சுக்கு சமமான வேலையும் தருவதாக சொல்லி இருக்குதாம். 2006 முதல் விளையாடி வரும் இவர் பல பதக்கங்களையும் விருதுகளையும் ( கேல் ரத்னா, அர்ஜுனா, பத்மபூஷன்) பெற்றிருக்கிறார்.

ஆரம்ப நாளன்று ஸ்லம்டாக் மில்லியனரில் நடித்த டேனியல் ஃபாயல் சம்பந்தமில்லாமல் விளையாட்டு வீரர்களுடன் நடந்து வந்தது ஒரே சர்ச்சையாக இருந்தது. கஷ்டப்பட்டு இவர்கள் ஆடிக் குவிக்கும் புகழை அம்மணி ஒரே ஒரு கேட் வாக்கில் நிகழ்த்தி விட்டார்.

பொதுவா டென்னிஸ் மற்றும் பில்லியர்ட்ஸ் போட்டிகள் பார்க்கப் பிடிக்கும்னாலும் ஒலிம்பிக்ஸில் மிகவும் ரசித்துப் பார்ப்பது ஜிம்னாஸ்டிக்ஸ், ( ரஷ்யவையும் அமெரிக்காவையும் விட்டா ஆளே கிடையாது) நீச்சல் போட்டிகள், மற்றும் போல்ட் வால்ட். என்னா உடம்பு அவர்களுக்கு. அது உடம்பா ரப்பர் பந்தா. ஃப்ளெக்ஸிபிள் தன்மைதான் காரணம். மற்றும் சரிவிகித உணவுகள், பயிற்சிகள், மற்றும் சிறப்பான பயிற்சிக் கூடங்கள்தான் காரணம் நம்ம நாட்டிலயும் சிறப்பா விளையாடக் கூடிய பல பேர் இருக்காங்க. அவங்கள ஹார்மோனல் டெஸ்ட் வைச்சு மூன்றாம் பாலா பிரிச்சு வெற்றிக் கோப்பையைத் தர மறுக்கிறோம். ஜெ ஜெ கல்லூரியில் படிச்ச சாந்தி ஒரு உதாரணம். மிக அருமையான விளையாட்டு வீராங்கனை அவங்க.

சத்துள்ள உணவுகளும். முறையான பயிற்சிகளும், வெளிநாடு சென்று வரும் செலவை எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிறுவனங்களும் இருந்தா நம்ம மக்களும் இன்னும் ஜொலிப்பாங்க.( அதிர்ஷ்டத்தால கோடீஸ்வரகளை உருவாக்கும் டிவி சேனல்களும், அந்த நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களும் கிரிக்கெட்டையும் ஃபுட்பாலையும் மட்டுமே விளையாட்டா கருதாம இந்த மாதிரி தனித் திறமை உள்ள விளையாட்டு வீரர்களைக் கல்லூரிகளிலேயே கண்டுபிடித்துப் பயிற்சியும் வேலையும் அளித்து ஊக்குவிக்கலாம்) மாநில அரசாங்கங்களும் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவை அதிகப்படுத்தி வேலைவாய்ப்புகள் தந்து ஊக்குவிக்கலாம்.

சின்னப் பிள்ளையில் பள்ளியில் ஓட்டப் போட்டி வைப்பாங்க. நாமதான் ஃபர்ஸ்ட்ல வரப்போறோம்னு நாக்கு தொங்கத் தொங்க ஓடி முடிச்சிருப்போம் நமக்கு முன்னால 4, 5 பேர் எல்லையைத் தொட்டிருப்பாங்க. நமக்கு ஆறுதல் பரிசு கூட கிடைக்காது. செஸ்ஸை தவிர எல்லாத்துலயும் இப்படித்தான். ( அது இண்டோர் கேம்.. உக்கார்ந்து விளையாடுறதுன்னு சொல்றீங்களா.. ஹிஹி ஆமாம். )

அதுனால நம்ம இந்தியர்களோட உடல்நிலையில் ஒரு விளையாட்டில் வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றுவது என்பது கைப்பற்றுவது கஷ்டமான விஷயம்னு நல்லா தெரிஞ்சதால ககன் நீங்க நம்ம நாட்டுக்குப் பெற்றுத் தந்த வெண்கலமும் தங்கமே..

CONGRATS GAGAN NARANG.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...