எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

மன்மதன் அம்பு .. எனது பார்வையில்..

HONESTY BECOMES LUXURY.. ஆம் பொய்யர்கள் நிறைந்த உலகில் உண்மை விலை உயர்ந்ததாகிவிட்டது.. இதுதான் மெசேஜ்.. இரண்டு உண்மையாளர்கள்., (ஒத்த குணமுடையவர்கள்.,) மட்டுமே ஒத்துப் போக முடியும்.. பொய்யோடு பொய்யும்., மெய்யோடு மெய்யும்.



புலம் பெயரும் பறவைகள் செல்லும் போதெல்லாம் ஒரு நிம்மதியின்மை பரவுகிறது.. இருக்கும் இடம் சுகமில்லை என்பதால்தானே.. அப்போது த்ரிஷாவும்., இன்னொரு இடத்தில் கமல்ஜியும் பார்க்கும் சோகப் பார்வை க்ளாஸ்..

பாப்ரே.. கதை., திரைக்கதை ., வசனம்.. பாடல்கள் கமல்ஜி.. WHO IS DA HERO.. பாடலும் நீல வானம் பாடலும் அருமை.. க்ரூஸில் சுற்றுவது., வெனிஸ் ., ரோம் என்ற சாமானியன் சுற்ற விழையும் கனவு தேசங்களை வஞ்சனையில்லாமல் வாரி வழங்கி இருக்கிறது மனுஷ்நந்தனின் காமிரா.

தேவிஸ்ரீ ப்ரசாத்தின் இசை என்றால் ஒரு துள்ளல் இருக்கும்.. இதில் ம்ம் இருக்கு.. ரமேஷ் அரவிந்தானா அது.. ஊர்வசி அழவே பிறந்தவர் போல .. நல்ல வேளை க்ளைமாக்ஸில் சிரிக்கிறார்.. (முடிக்கணுமே.. படத்தை) .

ஆமா ஹெச் ஐ வி க்கு மருந்து கண்டு பிடிச்சிட்டாங்கன்னு படிச்சேன்.. இதுல கான்சரை குணப்படுத்திடலாம் .. ஹெச் ஐ வியை குணப்படுத்த முடியாதுன்னு சொல்றாங்க.. கொஞ்சம் விசாரிச்சு சரியான தகவலை சேர்த்து இருக்கலாம்.

ரவிகுமார் அவர் படத்துல ஒரு சில சீன்லயாவது வருவார்.. ரவிக்குமார் சார் உங்க படம் அருமை.. ஆனா இன்னும் கொஞ்சம் பாக்ட் ஆ இருக்கும் உங்க படம்.. பாண்ட் சட்டை போட்ட பேய் பிசாசு மாதிரி ராத்திரி பகல்னு பார்க்காம வேலை பார்ப்பார்னு உங்களைப் பற்றி நண்பர் சேரன் தன்னுடைய கட்டுரையில் புகழ்ந்து இருப்பார்..

மாதவன் சந்தேகப்படுறதும்.. ஏதாவது நெகட்டிவ் மோட்டிவ் தேடி அலையிறதும்.. கொஞ்சம் வித்யாசமான ரோல்.. அலை பாயுதே., ரன்., மின்னலே., பார்த்தாலே பரவசம் இதைப் போல மாதவன் இதிலும் தன் ரோலை கச்சிதமா செய்து இருக்கார்.. மேடி.. மேடி.. :))

கொலோசியத்தில் கமல்ஜியால் அடக்கப்படும் காளையா வரும்போது முகபாவனை நடிப்பு செம சூப்பர் மதன்.. (மாதவன்)..

த்ரிஷா., தமிழை உற்றுக் கவனிக்காட்டா என்ன பேசுறாங்கன்னு புரியலை.. குரல் நல்லா இருக்கு.. லைவ் டப்பிங்ன்னு சொல்றாங்க .. அது காரணமா..? த்ரிஷாவும் நல்ல ஸ்லிம் நிஷா,,.. அவர் தன் விடுமுறையை கழிக்க தோழியுடன் சிட்னி போவதாக குமுதமோ., விகடனிலோ படித்ததால் அதே ஞாபகம் வருகிறது.. எத்தனை வருடமாக இப்படியே ஸ்லிம்மாக இருக்கிறார்.. நல்ல உயரம்.. இதே இவர் கம்பீரத்துக்கு காரணம்..

சங்கீதா சொல்லவே வேணாம்.. இந்தப் படத்துல என்னைக் கவர்ந்தவங்க இவங்க.. பிதாமகன்ல வெற்றிலை போட்டுகிட்டு., தன் ஃபோட்டோவை விக்ரம் கிட்ட காட்டும் போது லேசா வெக்கப் படுவாங்க.. இதுல எல்லாம் அதிரடி.. சரவெடி.. நல்ல கிளாமரா இருக்காங்க.. ரொம்ப காஷுவலா நடிக்கிறாங்க .. பேசுறாங்க.. அப்பிடியா அப்ப இந்த காமிராவை பிடிச்சுக்குங்கன்னு தூக்கி தண்ணியில போட்டுட்டு ஐயையோ விட்டுட்டீங்களே என சொல்லும் போது செம குறும்பு..

அட நம்ம உஷா உதுப்.. மல்லிகைப் பூ பாடல் பாடினவங்க.. கச்சிதமான அம்மா.. மஞ்சு பிள்ளையும் நல்லா தன் காரெக்டரை நல்லா செய்து இருக்காங்க.. டிடெக்டிவ் மாதிரி செயல்படும் குட்டிப் பையனும் பொண்ணும்., அந்த சிலோன் ஜோடியும் அழகு.

ரெட் ஜெயண்ட் மூவீஸ்., உதயநிதி ஸ்டாலின் என்பதால்.. வஞ்சனையில்லாமல் நிறைந்த முதலீடோடு நல்ல படம்..

கடைசியா நம்ம பாஸ் கமல்ஜி.. கமல் ஜி.. பாடல்களில் ரிவர்ஸ் சீன்ஸ் எடுத்தவிதம் அருமை.. உங்க பாட்டு முடிவில் எங்க கண்களில் நீர்த்துளி.. கண்ணோடு கண் கலந்த பாடல் இல்லை.. அதனால் ஏதோ மிஸ்ஸிங்.. என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா என்ற பாடலில் ஒரு ரொமான்ஸ் இருக்கும். என்ன ஆச்சு.. கவனம் பல துறைகள்லயும் செலுத்த வேண்டியதாலா..

நைரோபியில் இருந்து வந்த எங்க தோழி காஞ்சனா மோகன் என்னிடமும் விகடன் பொன்.காசிராஜனிடமும் சொன்னாங்க.. எவ்வளவு காண்ட்ரவர்ஸி வந்தாலும் நானும் என் கணவரும் ஒத்துப் போவது கமல் படம் பார்க்கும் போதுதான்.. அப்பிடின்னு.. நானும் அதையே வழிமொழிகிறேன்.. உங்க நடிப்பு., வசனம்., பாடி லாங்குவேஜ்., எல்லாம் அருமை.. உங்களைத் தவிர வேறு யாராலும் நடிப்பை இவ்வளவு அசால்டா தர முடியாது.. ஆனா இதில் நாங்க உங்களை ஏதோ கொஞ்சம் மிஸ் பண்றோம்..

இனி எனக்கு பிடித்த உங்க வசனங்கள்..

திறமை இருக்கவன் கிட்ட திமிர் இருக்கும்.. ஏன்னா அதுதான் அவன் வேலி..

இந்த உலகத்தை யாரும் யார் காலடியிலும் வைக்க முடியாது.. ஏன்னா ஒரு பிச்சைக்காரன் காலடியில் கூட அவன் உலகம் இருக்கு..

ஐ லவ் யூ பட் ஐ லவ் மை வொர்க் டூ.. எனக்கு அதுவும் முக்கியம்.. ( இதுக்காக உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஹேட்ஸ் ஆஃப் பாஸ்.. ஆமாம் ஒவ்வொரு பெண்ணுக்கும் குடும்பம்., குழந்தை., கணவன் போல அவள் காரியர் முக்கியம்.. )

MATRIMONY MAY NOT BE GOOD BUT ALIMONY IS GOOD..

அறம் பேசாதே.. அறம் செய்..

வீரனோட அழகு மன்னிப்பு.. வீரத்தோட உச்சம் அகிம்சை..

ஒரு முரட்டுக் காளையை வளைத்துப் பிடித்திருக்கிறீர்கள்.. கொஞ்சம்போக்குக் காட்டி.. அடுத்து எங்களுக்காகவே பஞ்ச தந்திரம்., தெனாலி., காதலா காதலா மாதிரி இன்னொரு படம் சீக்கிரம் கொடுங்க கமல்ஜி..

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 

26 கருத்துகள்:

  1. உங்கள் வலைப்பூவில் இன்று தான் திரைவிமர்சனம் படிக்கிறேன்.எனக்குத் தெரிந்து HIV க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பல கேன்சரை (அதன் நிலை மற்றும் வகையைப் பொறுத்து) குணப்படுத்த முடியும்.

    பதிலளிநீக்கு
  2. விமர்சனம் உங்கள் பார்வையில் நல்லாருக்கும்மா...

    அருமையான ரசனை

    தொடருங்கள்..........

    பதிலளிநீக்கு
  3. //ரவிகுமார் அவர் படத்துல ஒரு சில சீன்லயாவது வருவார்.. இந்த படத்துல காணோம்.. யாராவது பார்த்தீங்களா.. ரவிக்குமார் சார் உங்க படம் அருமை.. //

    படத்துல உய்ய உய்ய உய்யாலே என்ற பாட்டுக்கு சூர்யா டான்ஸ் ஆடுவாருல்ல அந்த பாட்டுக்கு ரவிகுமார் சார் சூட்டிங் நடத்தற இயக்குனராகவே வருவார். நீங்க சரியா கவணிக்கலையாம்மா.......

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் மாணவன்.. ஞாபகம் வந்தது.. இடுகையிலும் திருத்தி விட்டேன்.. நன்றி..:))

    பதிலளிநீக்கு
  5. மன்மதன் அம்பு படத்தை ரொம்பவும் ஆழமாக ஆராய்ந்திருக்கிறீர்கள் என்பது பதிவை படிக்கும்போது பல இடங்களில் புரிகிறது...

    பதிலளிநீக்கு
  6. \\புலம் பெயரும் பறவைகள் செல்லும் போதெல்லாம் ஒரு நிம்மதியின்மை பரவுகிறது.. \\

    \\அவர் தன் விடுமுறையை கழிக்க தோழியுடன் சிட்னி போவதாக குமுதமோ., விகடனிலோ படித்ததால் அதே ஞாபகம் வருகிறது.. \\

    நான் இவற்றை என் பதிவில் சொல்ல நினைத்து விட்டுவிட்ட விஷயம். நீங்க ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க!

    மத்தபடி, என்ன ஒரே கமல் புராணமாவே இருக்கு? படத்துல குறையே இல்லையா என்ன?:)))

    http://ramamoorthygopi.blogspot.com/2010/12/blog-post_24.html

    பதிலளிநீக்கு
  7. ////அதனால் ஏதோ மிஸ்ஸிங்.. என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா என்ற பாடலில் ஒரு ரொமான்ஸ் இருக்கும்//// கமலிடம் காணப்படும் அந்த ரொமான்ஸ் இல்லை என்பதே ஒரு சோகம்.. வயசாயிருச்சா? நகைசூவை கலந்த ரொமான்ஸ்யாஹ இருக்கலாம் என்று எதிர்பார்த்தென்.. நகைச்சுவை ரொமனான்ஸ் ரெண்டுமே கொஞ்சம் குறைவாக உள்ளது போலத் தெர்கிறது..எனபதே படத்திற்கு மைனஸ் என்று நினைகிறேன். விமர்சனம் நேர்மையாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  8. உங்கள் பார்வையில் விமர்சனம்
    அருமை.

    பதிலளிநீக்கு
  9. //திறமை இருக்கவன் கிட்ட திமிர் இருக்கும்.. ஏன்னா அதுதான் அவன் வேலி..//

    தேனக்கா,

    இந்த வசனம் எனக்கும் (இங்க படிக்கும் போதே) பிடிச்சிருக்கு.

    படம் பாத்துடனும்.

    பதிலளிநீக்கு
  10. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்ககளுக்கு வணக்கம்.விமர்சனம் உங்கள் பார்வையில் அருமை,நடிகர் கமல்ஹாஸனை பல காட்சிகளில் ஓவர்டேக் செய்கிறார் திரைக்கதை எழுதிய கமல்ஹாஸன். முதல் பாதியில் கமல்ஹாஸனின் அக்மார்க் அறிவுஜீவித்தனம் எட்டிப் பார்க்கிறது.ஆங்காங்கே சில குறைகள் தெரிந்தாலும், அவை எதுவும் துருத்திக் கொண்டு தெரியாத அளவு கையாண்டிருப்பதில், கூட்டாக வெற்றி பெற்றிருக்கிறார்கள், கமலும் கே எஸ் ரவிக்குமாரும்.

    பதிலளிநீக்கு
  11. படம் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு பிடிச்சு இருக்கு

    பதிலளிநீக்கு
  12. படத்தை பற்றி ஒரு ஐடியா கிடைத்துவிட்டது.நல்ல விளக்கமான விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  13. Fair and balanced review. Whatever it may be, I always have a great appreciation for all of Kamal's movies. This one is no exception as always. People who write negative reviews have to watch this movie after 10 years, may be!!! They will get it, hopefully as they get matured :))

    பதிலளிநீக்கு
  14. உங்கள் பார்வையில் நல்லாருக்கு தொடருங்கள்


    இதையும் படிச்சி பாருங்களேன்

    குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்

    பதிலளிநீக்கு
  15. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி விமர்ச்சிக்கிறார்கள். படம் பார்த்தால்தான் தெரியும் போல.

    உங்கள் விமர்சன பாணி பிடித்திருக்கிறது அக்கா.

    பதிலளிநீக்கு
  16. //இந்திரா பிக்சர்ஸின் படம்., வித்யா சாகர் இசை ., ராம்நாத் ரெட்டியின் காமிரா., அறிவுமதி., யுகபாரதியின் பாடல்கள் அருமை..


    பாவங்க நீங்க, விமர்சணம் எழுதினா கண்டிப்பா இதெல்லாம் இருக்கனும்னு நினைச்சு சேர்த்திருக்கீங்க.//

    இது மந்திரப் புன்னகைக்கு எழுதினது

    என்ன மேடம் விமர்சனத்துக்கு டெம்ப்ளேட் வச்சு இருக்கீங்களா ? அதுவே இங்கேயும்.

    மனுஷ்நந்தகோபன், ரெட்ஜெயிண்ட், இன்ன பிற இத்யாதிகள். இது உங்கள் பதிவு உங்கள் விமர்சனம். வாழ்க!! வளர்க !! தமிழுக்கு வளம் நிறை சேர்க.

    பதிலளிநீக்கு
  17. சத்ரியன் கூறியது...
    //திறமை இருக்கவன் கிட்ட திமிர் இருக்கும்.. ஏன்னா அதுதான் அவன் வேலி..//

    தேனக்கா,

    இந்த வசனம் எனக்கும் (இங்க படிக்கும் போதே) பிடிச்சிருக்கு.

    படம் பாத்துடனும்.//

    படம் பாத்துடனும்... சரி... யாரு காசுலன்னு சொல்லு... வர சனி ஞாயிறு எனக்கு உடம்பு சரியில்லை மாம்ஸ்.

    பதிலளிநீக்கு
  18. //படம் பாத்துடனும்... சரி... யாரு காசுலன்னு சொல்லு... வர சனி ஞாயிறு எனக்கு உடம்பு சரியில்லை மாம்ஸ்//

    இதைத்தானே இத்தனை நாளா எதிர்ப்பாத்திட்டிருந்தேன். இன்னைக்காவது நான் மட்டும் போய் சந்தோசமா படம் பாத்துட்டு வாரேன்.


    இப்ப என் காசுல டிக்கெட் எடுத்துக்கறேன். உங்களைப் பாக்கும் போது வசூல் பண்ணிக்கறேன்.

    பதிலளிநீக்கு
  19. தேனம்மை மேடம்...

    இந்த படத்தையே இவ்ளோ புகழ்ந்திருக்கீங்கன்னா, படம் இன்னும் நல்லா இருந்திருந்தா எவ்ளோ புகழ்ந்து இருப்பீங்கன்னு நினைச்சு மலைச்சு போனேன்...

    படம் நல்லா இல்லேன்னு சொல்லல.. ஆனா, நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன்...

    இது தான் நேரம்... அவரோட வசனம் இப்போ அவரோட படத்துக்கே ரொம்ப பொருந்தி வருது...

    பதிலளிநீக்கு
  20. நல்ல விமர்சனம்..

    பார்க்க என் விமர்சனம்:

    http://alonealike.blogspot.com/2010/12/good-to-see.html

    பதிலளிநீக்கு
  21. நன்றி கலாநேசன்., மாணவன்., பிரபாகரன்., கோபி., வெற்றி., குமார்., கோபால்., அருணாசலம்., சௌந்தர்., விஜய்., ஆசியா., ரெஜி., சரவணன்., சசி., அக்பர்., பெயரில்லா., ( ஏன் இந்தக் காட்டம்..யார் நீங்கள் ? என்ன தவறாக எழுதி விட்டேன் நீங்க இப்படி வருத்தப் படும் அளவு..??) கருணாகரசு., கோபி., மனக்குதிரை.,ஜிஜி

    பதிலளிநீக்கு
  22. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...