எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 20 ஜூலை, 2015

செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

செட்டி நாட்டுத் திருமணங்களில் பெண்ணுக்கு குறைந்தது 4 அலமாரிகளாவது வைப்பார்கள். தேக்கு மர அலமாரி, கண்ணாடி அலமாரி ( இதுவும் தேக்குதான் ). காட்ரெஜ் பீரோ, அடுப்படி வலை பீரோ என்று.

106. கருங்காலி மரத்தில் மரப்பெட்டகங்களும் செய்து கொடுப்பார்கள். அவற்றில் சாமான்களை வைப்பார்கள்.

107. திருமண காலங்களில் மாப்பிள்ளை பெண்ணுக்குக் கவரி வீசுவதுபோல இந்த விசிறியால் விசிறுவார்கள். பிரம்பு  விசிறியில் கைப்பிடி அழகாக சுற்றப்பட்டு முழுவதும் ஸாட்டின் துணியினால் வெட்டி ஒட்டித் தைக்கப்பட்டு ஜால்ரா மடிப்பு அமைக்கப்பட்டு எம்ப்ராடரி லேஸால் அழகுபடுத்தப்பட்ட கண்கவர் விசிறி இது :)

இது கொஞ்சம் சிம்பிள் பேட்டர்ன். கைபிடித்து விசிற அழகான இடைவெளியும் அதன் மேல் இதழ் போன்ற அமைப்பில் துணித்தையலும் மிக அழகு இல்லயா :)

காதல் காதல் காதல்.



காதல் காதல் காதல்.

நாட்காட்டியில் இருக்கும் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விசேஷ நாளாக அறிவித்து அதை வணிகமயமாக்கும் முயற்சியில் மேற்குலகம் ஈடுபட்டிருக்கிறது. தந்தையர் தினம், அன்னையர் தினம், காதலர்தினம் என்று. அந்த வணிகத்தில் அதிகம் கொள்முதல் ஆவது காதலர் தினத்தில்தான். உலகெங்கும் மில்லியன் கணக்கில் புறாக்கள், சிறகுள்ள தேவதைகள் கொண்ட காதலர்தின வாழ்த்து அட்டைகளும், சிவப்பு இதயங்களும் ( சாக்லேட்டுகள் ) சிவப்பு ரோஜாக்களும் , பரிமாறிக்கொள்ளப்படுவது அன்றுதான். அதை ஒட்டி ஒரு வாரம் விழாக்கோலம்.

ரோமப்பேரரசில் வீரர்களுக்கு திருமணமாகிவிட்டால் போரில் நன்கு யுத்தம் செய்யமாட்டார்கள் என்று திருமணத் தடையும் காதல் தடையும் ஏற்படுத்தப்பட்டிருந்ததாம். வேலண்டைன் என்ற பாதிரியார் அவர்களுள் காதலித்த வீரருக்கு ரகசியத் திருமணம் செய்து வைத்த காரணத்தால் மரண தண்டனை பெறுகிறார். பண்டைய ரோமில் கொண்டாடப்பட்ட லூபர்கேலியா என்ற திருவிழாவின் வீரியத்தைத் தடை செய்யவே புனித வேலண்டைன் நாள் என்று அறிவிக்கப்பட்டுக் காதலர் தினம் கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.

வியாழன், 16 ஜூலை, 2015

காரைக்குடி புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

காரைக்குடியில் சென்ற ஒரு மாதமாக சேத்தியா தோப்பு  அபிநயா புத்தக நிலையத்தார் ஆரியபவன் அருகில் உள்ள ராமநவமி திருமண மண்டபத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறார்கள். அங்கே எனது நூல்களும் இடம் பெற்றுள்ளன.ஓரளவு விற்பனையும் ஆகி உள்ளன.

குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 10. சொப்புச் சாமானும் நுங்கு வண்டியும்.


45. இனிஷியல் கேம் :-

ஒரு பேப்பரில் அடுத்தடுத்து டப்பா போடும் விளையாட்டு -- மேலே கீழே கோடுபோட்டு டப்பாவா ஃபில் பண்ணி ஒவ்வொரு டப்பாவிலும் முடிவுக்கோடு போட்டவங்க இன்ஷியல் எழுதிக்கலாம்

இது இருவர் விளையாடும் விளையாட்டு. ஒரு ப்ளயின் பேப்பரில் ஒரு கோடு போட்டு ஆரம்பிக்க வேண்டும். அடுத்தவர் அதன் மேல் அல்லது கீழ் அல்லது சைட் கோடு போடலாம். அடுத்து முதலாமவர் மூன்றாவது கோடு போட நான்காவதாக ஒரு கோடு போட்டு டப்பா போல முடிக்க வேண்டும். இது அடுத்தவர் போட்டு விடாமல் நாமே போடவேண்டிய ஒரு புத்திசாலித்தனமான விளையாட்டு. அதிகம் யார் இன்ஷியல் இருக்கிறதோ அவரே ஜெயித்தவர். இதை 3 வயதுக் குழந்தையுடனும் விளையாடலாம்

46. அம்மா குத்து அப்பா குத்து.  

ஏழெட்டு மாதக் குழந்தையிலிருந்து இந்த விளையாட்டை விளையாடலாம்.இரு கைகளையும் நாம்விரித்துப் பிடித்துக் கொண்டு அதன் நடுவில் 

புதன், 15 ஜூலை, 2015

செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும்.

97.அரிசி அளக்கும் படிதான் இது. இதில் க்ரோஷா நூலைக் கொண்டு பின்னல் வேலைப்பாடு செய்திருக்கிறார்கள். அதன் பின் விளிம்பிலும் கீழேயும் கலர் தகடுகளால் பட்டி அடித்திருக்கிறார்கள். திருமணச் சீரில் வைப்பதற்காக இந்த அலங்காரம். :)
98. இது ஒரு சின்ன பாட்டில். இதில் பாசி வேலைப்பாடு செய்திருக்கிறார்கள்.அதுக்குள்ளே வேறு கலர் பாசிகளையும் கோர்த்து டிசைன் செய்திருக்கிறார்கள். !
Related Posts Plugin for WordPress, Blogger...