கோவையில் சில வருடங்களுக்கு முன் நாங்கள் இருந்த தெருவில் கடைசியில் இருந்த வீட்டில் இரு பெண்கள் இருந்தார்கள். இருவருமே கல்லூரியில் பயில்பவர்கள். ஒரு நவராத்திரி சமயம் சகோதரிகளில் மூத்தவர் எங்கள் தெருவின் முக்கில் கால் தடுக்கி விழுந்துவிட்டதாக என் மாமியார் சொன்னார்கள்.
அந்தப் பெண் மிகவும் மெலிவாக இருப்பார். என்ன காரணம் என்று தெரியவில்லை. அதே போல் சில நாட்களில் அவரின் சகோதரியும் கல்லூரிக்கு நடந்து செல்லும்போது கீழே விழுந்துவிட்டார். போலியோவுக்கு சின்னப் பிள்ளையில் மருந்து கொடுக்காவிட்டால் அது இப்படி பெரிய பிள்ளையானதும் கூட பாதிக்கும் என்று பேசிக் கொண்டார்கள் மக்கள்.