எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 ஜூலை, 2015

கொடுத்தலும் எடுத்தலும்.





3.4.86.

5. கடன்களைக்
கொடுக்கவேண்டுமென்ற
நிதானத்தில்தானே
இருந்தன
அந்தப் பறவைகள்.
பின்னும் ஏன்
இந்த
இராட்சச வலி..?

இதுவோ
கொடுத்தலும்
எடுத்தலும் வேண்டா
பாழ் உலகம்.

மரங்களுக்குள்ளும்
சில நந்தவனங்கள் பூக்கும்.

என்றோ வரும்
சூரியக் கருக்கலில்
அதுவும் கருகி.. கருகி..

இன்னும்
கொடுத்தலும்
எடுத்தலும் வேண்டும் மனது.
( நிலமோ பாலை )

6 கருத்துகள்:

  1. அருமையாகவும் முடித்துள்ளீர்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. ஆஹா 1986 லேயே .... இப்படியெல்லாம் யோசித்து எழுதியுள்ளீர்கள் !

    அதனால்தான் 30 ஆண்டுகள் கழித்து முடிசூடா ராணியாக
    இப்போது எழுத்துலகில் ஜொலிக்கிறீர்கள் :)

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா! அருமையான வரிகள்! அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் என்று ஆழ்வார் பிரபந்தத்தில் வரும் வரிகள் தான் நினைவுக்கு வந்தது....அதாவது நீங்கள் எழுதிய வருடத்தில் இது வருவது போல....அன்று தொடங்கியது இன்று உலகம் பூராவும் சுற்றுகின்றதே....உங்கள் பெற்றோருக்கு வாழ்த்துகள் இப்படித்தான் வருவீர்கள் என்று உணர்ந்து பெயர் சூட்டியிருப்பார்களோ...

    பதிலளிநீக்கு
  4. நன்றி டிடி சகோ


    நன்றி விஜிகே சார்

    நன்றி துளசி சகோ பிரபந்தத்தில் வரும் வரிகள் அருமை. :)

    நன்றி குமார் சகோ :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...