வெள்ளி, 30 ஏப்ரல், 2010
புதன், 28 ஏப்ரல், 2010
நான் நிலவு
துரத்தத் துரத்தத்
தொலையாமல் ..
தொடர்ந்துகொண்டே
வெட்கம்...
யாமமா...?
இன்னொரு ஜென்மமா..?
பிறக்க வைத்தாய்..
என்னைப் புதிதாய்...
தளிரா..?
வெல்வெட்டா.?
உணரக் கிடைக்கவில்லை..
என் உதடுகள்...
காவல்காரனே
கொள்ளைக்காரனாய்..,
வேரோடு இழுக்கிறாய் ..
விளைந்து கொண்டே இருக்கிறேன்..
மறை நிறை நிலவாய்.....
கூடைப் பந்தெறிந்து
பழகுபவனாய்..
முத்தத்தை முத்தத்தால்
கொய்துகொண்டே இருந்தாய்
தொடர்ந்து...
முகத்திலும் கன்னத்திலும்
காதுகளிலும் நிரம்பிக் கிடக்கிறது..
சத்தமில்லாத சத்தம்..
நீ உழுது சென்ற முத்தம்...
அடைகளில் தீராத தேனாய்.,
தேய்த்தும் தேயாத நிலவாய்..

தொலையாமல் ..
தொடர்ந்துகொண்டே
வெட்கம்...
யாமமா...?
இன்னொரு ஜென்மமா..?
பிறக்க வைத்தாய்..
என்னைப் புதிதாய்...
தளிரா..?
வெல்வெட்டா.?
உணரக் கிடைக்கவில்லை..
என் உதடுகள்...
காவல்காரனே
கொள்ளைக்காரனாய்..,
வேரோடு இழுக்கிறாய் ..
விளைந்து கொண்டே இருக்கிறேன்..
மறை நிறை நிலவாய்.....
கூடைப் பந்தெறிந்து
பழகுபவனாய்..
முத்தத்தை முத்தத்தால்
கொய்துகொண்டே இருந்தாய்
தொடர்ந்து...
முகத்திலும் கன்னத்திலும்
காதுகளிலும் நிரம்பிக் கிடக்கிறது..
சத்தமில்லாத சத்தம்..
நீ உழுது சென்ற முத்தம்...
அடைகளில் தீராத தேனாய்.,
தேய்த்தும் தேயாத நிலவாய்..

செவ்வாய், 27 ஏப்ரல், 2010
யாளியும் ட்ராகனும்
பார்த்தால்தானா.....
நினைத்தால் கூட
கோணங்கியாய் மாறி
ஒரு தீம்தரிகிட...
அல்லது ததிங்கிணத்தோம்...
சாம்பற் பூத்த யாளி
கோயில் இருட்டு மூலையில்..,
செந்தீயுமிழும் ட்ராகன்
வளைவு நெளிவுகளுடன்...
கண்ணாடியெனக் கல்லெறிய
நீராய் விழுங்கியது...
அதிர்ர்ர்ர்ர்ர்வுகள் அலையலையாய்..
குளமா., வாய்க்காலா., கிணறா.,
ஆறா., ஏரியா., கடலா...
அடங்காத எல்லைப் போராட்டம்...
நீரடைத்த மேகங்களில்
புஷ்பகவிமானம்.....
கந்தர்வனும் யட்சியும்
மின்னலும் இடியுமாய் விளையாடி..
கொடியாய் சரமாய்
பூமியில் செலுத்த...
பச்சைமண் சூல்கொள்ள
பதுமைகளாய் யாளியும் ட்ராகனும்

நினைத்தால் கூட
கோணங்கியாய் மாறி
ஒரு தீம்தரிகிட...
அல்லது ததிங்கிணத்தோம்...
சாம்பற் பூத்த யாளி
கோயில் இருட்டு மூலையில்..,
செந்தீயுமிழும் ட்ராகன்
வளைவு நெளிவுகளுடன்...
கண்ணாடியெனக் கல்லெறிய
நீராய் விழுங்கியது...
அதிர்ர்ர்ர்ர்ர்வுகள் அலையலையாய்..
குளமா., வாய்க்காலா., கிணறா.,
ஆறா., ஏரியா., கடலா...
அடங்காத எல்லைப் போராட்டம்...
நீரடைத்த மேகங்களில்
புஷ்பகவிமானம்.....
கந்தர்வனும் யட்சியும்
மின்னலும் இடியுமாய் விளையாடி..
கொடியாய் சரமாய்
பூமியில் செலுத்த...
பச்சைமண் சூல்கொள்ள
பதுமைகளாய் யாளியும் ட்ராகனும்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010
நமக்கு மட்டுமேயான அம்மா
கருவறைக்குள் இருந்து
வெளிவந்தோம்
முந்தானையால்
போர்த்தப்பட்டு......
தாயோ சகோதரியோ
மனைவியோ தோழியோ
அது ஆறுதலாய்...
கர்ப்பக்கிரகம் சுமந்த
தெய்வம் நம் அம்மா
அவளுக்குத் தாய்மை
மட்டுமே அணிவித்துப்
பார்க்கும் நாம்...
தன் முந்தானையால்
நம்மை ஏந்தி
முகம் துடைத்து
கண்ணீரையும்...
சாப்பிட்ட கைகளைத்
துடைத்துக்கொள்கிறோம்
சில சமயம் அவள் நம்
மூக்கையும் துடைக்கிறாள்
நம் காயங்களுக்குக் கட்டாகவும்...
அவள் வெட்கத்தாலும்
காதலாலும் தன்
முந்தானையில் முகம் மறைத்து
காமத்தில் முறுக்கியும்
இருக்கக் கூடும்...
வேலைக்குச் சென்று
அலுத்தும் களைத்தும்
வியர்வையை ஒற்றி
வருத்தத்தில்
சிலசமயம் கண்ணீரையும்...
அது நமக்கு மட்டுமேயான
உரிமைப்பொருளாய்
ஊக்கில் அடுக்கிடப்பட்ட
அவள் முந்தானையை
புடவை கிழியும்வரை
இழுத்து ஒளிந்து கொண்டும்
அணைத்துக் கொண்டும்
எதிர்பார்க்கிறோம்...
நமக்கு மட்டுமேயான அம்மாவாய்!
இந்தக் கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தது
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem120410.asp

வெளிவந்தோம்
முந்தானையால்
போர்த்தப்பட்டு......
தாயோ சகோதரியோ
மனைவியோ தோழியோ
அது ஆறுதலாய்...
கர்ப்பக்கிரகம் சுமந்த
தெய்வம் நம் அம்மா
அவளுக்குத் தாய்மை
மட்டுமே அணிவித்துப்
பார்க்கும் நாம்...
தன் முந்தானையால்
நம்மை ஏந்தி
முகம் துடைத்து
கண்ணீரையும்...
சாப்பிட்ட கைகளைத்
துடைத்துக்கொள்கிறோம்
சில சமயம் அவள் நம்
மூக்கையும் துடைக்கிறாள்
நம் காயங்களுக்குக் கட்டாகவும்...
அவள் வெட்கத்தாலும்
காதலாலும் தன்
முந்தானையில் முகம் மறைத்து
காமத்தில் முறுக்கியும்
இருக்கக் கூடும்...
வேலைக்குச் சென்று
அலுத்தும் களைத்தும்
வியர்வையை ஒற்றி
வருத்தத்தில்
சிலசமயம் கண்ணீரையும்...
அது நமக்கு மட்டுமேயான
உரிமைப்பொருளாய்
ஊக்கில் அடுக்கிடப்பட்ட
அவள் முந்தானையை
புடவை கிழியும்வரை
இழுத்து ஒளிந்து கொண்டும்
அணைத்துக் கொண்டும்
எதிர்பார்க்கிறோம்...
நமக்கு மட்டுமேயான அம்மாவாய்!
இந்தக் கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தது
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem120410.asp

லேபிள்கள்:
அம்மா,
இளமை விகடன்,
கவிதை
திங்கள், 12 ஏப்ரல், 2010
க்ரீடங்களும் கடையேழு வள்ளல்களும்




அய்யாவுக்கென்றும்.,அம்மாவுக்கென்றும்.....மட்டுமல்ல.,
அக்காவுக்கென்றும் ..................
சிம்மாசனமும் க்ரீடங்களும்
நன்றி :- மேனகா சத்யா., சுஸ்ரி., திவ்யாஹரி.
செங்கோலும் .,ராஜ்யமும் .,
பூங்கொத்தும் .,பூமாலைகளும்.,
வெற்றிக் கோப்பைகளும் .,
நியாயச் சுத்தியலும் ஈந்த
அன்பு நெஞ்சங்களுக்கு .,
அவார்டுகளை அள்ளி வழங்கிய
கடையேழு வள்ளல்களுக்கு நன்றி...!!
மகளாய்ப் பல வருடம்....
மனைவியாயும் தாயாயும் பல வருடம்...
சகோதரியாய்ச் சில மாதங்கள்தான்...
கனத்துக் கிடக்கிறது இதயம்...
உங்கள் அன்பைச் சுமந்து சுமந்து....
உங்கள் அன்பைச் சுமந்து சுமந்து....
வலைத்தளத்தின் தம்பி தங்கைகள்
வாழ்க வளமுடன்...!!!
வாழ்க நலமுடன்...!!!
நன்றி :- மேனகா சத்யா., சுஸ்ரி., திவ்யாஹரி.
சை.கொ.ப.,அக்பர் ., சசிகுமார் ஸாதிகா...!!!
டிஸ்கி:- இந்த அன்பை என் முதல் சகோதரன்.,
விஜய்.,ஸ்டார்ஜன் ஈறான தம்பிகளுக்கும்.,
மேனகா முதலான தங்கைகளுக்கும்.நண்பர்
களுக்கும்., தோழிகளுக்கும்.,வாசகர்களுக்கும்
வெள்ளி, 9 ஏப்ரல், 2010
ட்ராகுலாவும் வாம்பயரும்
சிம்பன்ஸியாகவோ
சாத்தானாகவோ இருப்பது
உன் விருப்பம் ...
என்னை ஏன் பிறாண்டுகிறாய்..?
நானும் உன் போல்தான் ....!
இருந்தாலும்...???
நீ யாருடன் பேசுகிறாய் என
நான் கண்காணிப்பதில்லை...
நான் எதுபற்றி பேசினாலும்
கவலையுறுவதாய் பசப்புகிறாய்..
நான் கொதிக்காமல் கொதிக்க.,
புகையாமல் புகைய.,
வேகாமல் வேக.,
நீ உன் புறணியோடும்.,
புன்னகையோடும்.,
பாசாங்கோடும்.....
உன் புறக்கணிப்பும்
புறக் கணிப்பும்.,
என் கணிப்பில் திலகம் நீ...
அக்கறையா..? உனக்கா..?
இக்கரைக்கு அக்கரை...?
கறையிலாமல் இருக்கா..?
உன் புன்னகை உறிஞ்சிக்குடிக்கும்
வாம்பயர் நான்...
என் காயம் சுவைக்கும்
ட்ராகுலா நீ....
தூர் வார வேண்டும்...
தூர்ந்து போகுமுன்னே.,
நமக்கிடையே எல்லாமும்.............

சாத்தானாகவோ இருப்பது
உன் விருப்பம் ...
என்னை ஏன் பிறாண்டுகிறாய்..?
நானும் உன் போல்தான் ....!
இருந்தாலும்...???
நீ யாருடன் பேசுகிறாய் என
நான் கண்காணிப்பதில்லை...
நான் எதுபற்றி பேசினாலும்
கவலையுறுவதாய் பசப்புகிறாய்..
நான் கொதிக்காமல் கொதிக்க.,
புகையாமல் புகைய.,
வேகாமல் வேக.,
நீ உன் புறணியோடும்.,
புன்னகையோடும்.,
பாசாங்கோடும்.....
உன் புறக்கணிப்பும்
புறக் கணிப்பும்.,
என் கணிப்பில் திலகம் நீ...
அக்கறையா..? உனக்கா..?
இக்கரைக்கு அக்கரை...?
கறையிலாமல் இருக்கா..?
உன் புன்னகை உறிஞ்சிக்குடிக்கும்
வாம்பயர் நான்...
என் காயம் சுவைக்கும்
ட்ராகுலா நீ....
தூர் வார வேண்டும்...
தூர்ந்து போகுமுன்னே.,
நமக்கிடையே எல்லாமும்.............

லேபிள்கள்:
கவிதை
புதன், 7 ஏப்ரல், 2010
வலியில் இன்பம்
மழை விட்டும் தூவானம்
மரம் வெட்டிய பின் இலைத்துளி....
வெட்டுப்பட்ட தண்டில் கண்ணீர்ச்
சொட்டுக்களாய் சிதறிய இலைகள்
தண்டு துடிதுடித்துப் பதுக்கி வைத்திருக்கிறது
உயிரை... மீண்டும் துளிர்க்க...
நீ ஓடவும் உன்னை ஓடிப் பிடிக்கவுமாய்
ஓய்ந்து விட்டன கால்கள்...
வேரோடு வெட்டி எறிந்துவிடு...
அமிலம் ஊற்றிவிடு ...அப்போதாவது
அழியட்டும் நான் என்ற ஒன்று...

மரம் வெட்டிய பின் இலைத்துளி....
வெட்டுப்பட்ட தண்டில் கண்ணீர்ச்
சொட்டுக்களாய் சிதறிய இலைகள்
தண்டு துடிதுடித்துப் பதுக்கி வைத்திருக்கிறது
உயிரை... மீண்டும் துளிர்க்க...
நீ ஓடவும் உன்னை ஓடிப் பிடிக்கவுமாய்
ஓய்ந்து விட்டன கால்கள்...
வேரோடு வெட்டி எறிந்துவிடு...
அமிலம் ஊற்றிவிடு ...அப்போதாவது
அழியட்டும் நான் என்ற ஒன்று...

லேபிள்கள்:
கவிதை
செவ்வாய், 6 ஏப்ரல், 2010
பச்சை வண்ண புடவைக்காரி
பழைய பேருந்துகள்
சுற்றிச் செல்லும்
தடம் அற்ற சாலையில்....
வாதுமை மரத்தின் கொட்டைகள்
அங்கங்கே சிதறிக் கிடக்க....
ஒரு பச்சை வண்ணப் புடவையில்
அவள் வந்தாள்...
அழகென்று சொல்ல முடியாது..
பெயரும்., விழியும்.,
சிரிப்பும் பழகுவதும் அழகு..
அறிந்திருந்தேன் அவளை முன்பே.,
உருவம் அறியாமல் உருவாய்...
என் மனச் சித்திரம் போல்
இருந்தாள் பிசகாமல்., எளிமையாய்..
குழப்பமில்லாமல் ., சிக்கலில்லாமல்.,..
எப்போதும் அறிந்தவர் போல்
பேசிக் கொண்டிருந்தோம்...
அவள் விழிகளில் இருந்தும் .,
புன்னகையில் இருந்தும்
என்மேல் மழைத்துளி
சிதறிக்கொண்டே இருந்தது..
வெப்பமும் புழுக்கமும்
புழுதியும் விடைபெற
எப்போது குளிர்ந்தேன் என்பது
தெரியாமல் குளிர்ந்து கிடந்தேன்...
சாலையோரக் கல் போல்..
விடை பெற்றுச் செல்லும் போது
பட்டும் படாமல் கை பற்றி
அழுத்திச் சென்றாள்...
கைகளில் ஈரமாய் ஒட்டிக் கொண்டே
கிடந்தது அவள் அன்பு ...

சுற்றிச் செல்லும்
தடம் அற்ற சாலையில்....
வாதுமை மரத்தின் கொட்டைகள்
அங்கங்கே சிதறிக் கிடக்க....
ஒரு பச்சை வண்ணப் புடவையில்
அவள் வந்தாள்...
அழகென்று சொல்ல முடியாது..
பெயரும்., விழியும்.,
சிரிப்பும் பழகுவதும் அழகு..
அறிந்திருந்தேன் அவளை முன்பே.,
உருவம் அறியாமல் உருவாய்...
என் மனச் சித்திரம் போல்
இருந்தாள் பிசகாமல்., எளிமையாய்..
குழப்பமில்லாமல் ., சிக்கலில்லாமல்.,..
எப்போதும் அறிந்தவர் போல்
பேசிக் கொண்டிருந்தோம்...
அவள் விழிகளில் இருந்தும் .,
புன்னகையில் இருந்தும்
என்மேல் மழைத்துளி
சிதறிக்கொண்டே இருந்தது..
வெப்பமும் புழுக்கமும்
புழுதியும் விடைபெற
எப்போது குளிர்ந்தேன் என்பது
தெரியாமல் குளிர்ந்து கிடந்தேன்...
சாலையோரக் கல் போல்..
விடை பெற்றுச் செல்லும் போது
பட்டும் படாமல் கை பற்றி
அழுத்திச் சென்றாள்...
கைகளில் ஈரமாய் ஒட்டிக் கொண்டே
கிடந்தது அவள் அன்பு ...

திங்கள், 5 ஏப்ரல், 2010
கைவசம்
உன் கைப்பிடித்து வர
கையில் இருந்தவற்றைக்
கழட்டி வைத்தேன்...
உன் கை நெகிழ
கழற்றிய ஒவ்வொன்றாய்
கை வசமாக ..
கைக் கவசமாக...
திரும்பக் கைப்பிடிக்குள்
கையடக்க நினைக்கிறாய்...
கை வசமானது
கை விட்டுப் போகாமல்
கை வசமாக..
உன் கை வசமாவது
கை மட்டும்தானா இல்லை
என் மனசும் இருக்கிறதா அதில்...?
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem020410.asp
டிஸ்கி 1 :- இந்த இடுகை யூத்ஃபுல் விகடனில் ஏப்ரல்
இரண்டாம் தேதி வந்து இருக்கு..
டிஸ்கி 2:- கவிக்கோவின் இடுகை அடுத்து வரும்
மக்களே...

கையில் இருந்தவற்றைக்
கழட்டி வைத்தேன்...
உன் கை நெகிழ
கழற்றிய ஒவ்வொன்றாய்
கை வசமாக ..
கைக் கவசமாக...
திரும்பக் கைப்பிடிக்குள்
கையடக்க நினைக்கிறாய்...
கை வசமானது
கை விட்டுப் போகாமல்
கை வசமாக..
உன் கை வசமாவது
கை மட்டும்தானா இல்லை
என் மனசும் இருக்கிறதா அதில்...?
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem020410.asp
டிஸ்கி 1 :- இந்த இடுகை யூத்ஃபுல் விகடனில் ஏப்ரல்
இரண்டாம் தேதி வந்து இருக்கு..
டிஸ்கி 2:- கவிக்கோவின் இடுகை அடுத்து வரும்
மக்களே...

லேபிள்கள்:
இளமை விகடன்,
கணவன்,
கவிதை,
மனைவி
சனி, 3 ஏப்ரல், 2010
வருடம் முழுதும் வசந்தம்
வீடெங்கும் வாசனைப் பூந்தொட்டிகள்..
வண்ண வண்ண ரோஜாக்கள் ..
நீயே நிலவு என்பதால்
கொஞ்சம் நட்சத்திரங்களும்
பதிப்பேன் உன்னைச் சுற்றி...
இனிப்பான பேச்சுக்களும்
இன்பமான நினைவுகளும்
ருசிக்கத் தருவேன்..
சபரி ராமனுக்கு ஈந்தது போல்..
மனதையும் பொதித்துக் கைகளுக்குள்..
காற்றுள் புகுந்து சங்கீதமாய்
உன் காதுகளில் ஒலிப்பேன்....
கடலுள் புகுந்து அலையாகி
உன் பாதம் தழுவுவேன்...
நீ நடக்கும் மணலாகவும்.,
நிலமாகவும் .,புல்லாகவும்.,
உன் உயிராகவும் .,
நாடியாகவும்., துடிப்பாகவும்.,
உன் சொல்லும் .,
செயலும்., பேச்சாகவும்.,
உன் ஆன்மா
தழுவும் மூச்சாகவும்.,
முழுமையான சரணாகதி...
அன்பின் பொம்மை நீ.,
அபிராமியின் தாடகம் நீ..,
வெண்புறாவின் மென்மை நீ.,
விடியலின் வெளிச்சம் நீ.,
வளர்தலும் தேய்தலும் உனக்கில்லை.,
என்றுமே பூர்ண சந்திரன்.,
வசந்தம் தோய்ந்த வசந்தம் நீ..!!
வாழ்க நீ நூறாண்டு...!!!
டிஸ்கி..1...:- கவிக்கோவின் இடுகை திங்கள் வரும்.
டிஸ்கி..2..:- மக்களே விடுமுறை.. உங்க இடுகைகளை
எல்லாம் திங்கள் படித்து பின்னூட்டமிடுகிறேன்..
நேரமின்மை...மன்னிக்க,,!!

வண்ண வண்ண ரோஜாக்கள் ..
நீயே நிலவு என்பதால்
கொஞ்சம் நட்சத்திரங்களும்
பதிப்பேன் உன்னைச் சுற்றி...
இனிப்பான பேச்சுக்களும்
இன்பமான நினைவுகளும்
ருசிக்கத் தருவேன்..
சபரி ராமனுக்கு ஈந்தது போல்..
மனதையும் பொதித்துக் கைகளுக்குள்..
காற்றுள் புகுந்து சங்கீதமாய்
உன் காதுகளில் ஒலிப்பேன்....
கடலுள் புகுந்து அலையாகி
உன் பாதம் தழுவுவேன்...
நீ நடக்கும் மணலாகவும்.,
நிலமாகவும் .,புல்லாகவும்.,
உன் உயிராகவும் .,
நாடியாகவும்., துடிப்பாகவும்.,
உன் சொல்லும் .,
செயலும்., பேச்சாகவும்.,
உன் ஆன்மா
தழுவும் மூச்சாகவும்.,
முழுமையான சரணாகதி...
அன்பின் பொம்மை நீ.,
அபிராமியின் தாடகம் நீ..,
வெண்புறாவின் மென்மை நீ.,
விடியலின் வெளிச்சம் நீ.,
வளர்தலும் தேய்தலும் உனக்கில்லை.,
என்றுமே பூர்ண சந்திரன்.,
வசந்தம் தோய்ந்த வசந்தம் நீ..!!
வாழ்க நீ நூறாண்டு...!!!
டிஸ்கி..1...:- கவிக்கோவின் இடுகை திங்கள் வரும்.
டிஸ்கி..2..:- மக்களே விடுமுறை.. உங்க இடுகைகளை
எல்லாம் திங்கள் படித்து பின்னூட்டமிடுகிறேன்..
நேரமின்மை...மன்னிக்க,,!!

வெள்ளி, 2 ஏப்ரல், 2010
கம்பன் விழாவில் படத்திறப்பும் புத்தக வெளியீடும் ..பரிசுகளும்
படத்திறப்பு:-
அமரர் திரு ஜி.கே. சுந்தரத்தின் படத்தை புதுச்சேரிக் கம்பன் கழகத்தலைவர் திரு ந. கோவிந்தசாமி திறந்து வைத்தார் ..கம்பன் திருநாளுக்காகவும் கம்பனடிப்பொடிக்காகவும் தமது 93 ஆம் வயதிலும் உற்சாகம் குன்றாமல் விசிறி மடிப்பு அங்கவஸ்திரமும் சந்தனப்பொட்டும் அணிந்து (எங்கள் ஐயாவை நினைவு படுத்துவது போல ) சந்தோஷமாகப் பேசினார்.. பேச்சின் இடையே அண்ணாவின் ‘”தீ பரவட்டும்” என்ற வாசகத்தையும் பாரதிதாசனின் ‘”கம்ப ராமாயணத்தைக் கொளுத்த வேண்டும்” என்ற வாசகத்தையும் நினைவு கூர்ந்தார். இவர் கலந்து கொண்டு அனைவரின் பேச்சையும் ரசித்துக்கேட்டதே மிகச் சிறப்பு...
புத்தக வெளீயீடு:-
கம்பனில் நான்மறை மற்றும் திரு சேதுபதி எழுதிய வரலாறு நடந்த வழியில்:- திரு பழ. பழனியப்பன் நிறுவி உள்ள மீனாக்ஷி பழனியப்பா அறக்கட்டளை ஆய்வுச்சொற்பொழிவு...”கம்பனில் நான்மறை ”.. இது பற்றி சைவ சித்தாந்தச் செம்மணி .. .. கம்பனில் “கல்லாத கடலும் வேதப் பொருளும்“ சாஸ்த்திரம் உரை எழுதிய முதல்வர் திரு. பழ. முத்தப்பன் பேசினார்..
வரலாறு நடந்த வழியில் திரு சேதுபதி
அவர்களால் எழுதப் பெற்றது ..அதில் ஒக்கூர் பக்கத்தில் உள்ள ஊர்க்கோயில்கள் சிதைவுற்றுக் கிடக்கும் வரலாறு..ஒரு ஆவணப்படம் போல் பதிவு செய்து உள்ளது .. வெட்டுவான் கோயில் பற்றியும் .
டாக்டர் சேதுபதி பற்றி தினமணி ஆசிரியரும் .திரு பழனியப்பனும் நெகிழ்ந்தார்கள்..”எங்களோடு வளர்ந்த இளவல் சேதுபதி”(தினமணியில் இவர் பல கட்டுரைகளை எழுதி உள்ளார்).என திரு வைத்யநாதனும்.இது நாட்டரசன் கோட்டை கம்பன் கோயிலைப் பற்றியும் கூறுகிறது என திரு பழனியப்பனும் புகழ்ந்தார்கள்.. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதை அங்கே கண்டேன்.. இந்தப்
புத்தகத்தை திரு அய்க்கண் வெளியிட்டார்கள். “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” என்ற பாடலையும் குறிப்பிட்டார்கள் ..
திரு முத்தப்பன் தனதுரையில் ”வேதம் தனி மனிதரால் சொல்லப்படவில்லை மனிதர்களால் அல்ல... அது இறைவனால் சொல்லப்பட்டது”. என்றார்..மேலும் வேதத்தின் சொல் போல் ராமனின் அம்பறாத்தூணியில் அம்பு எடுக்க எடுக்க குறையாமல் வந்தன என்றும் “வேதத்தை ஓதுவித்தான் வசிஷ்டன் ..வேதத்தின் பரம் பொருளான இறைவனுக்கே உபநயனம் செய்துவித்தான் என்றும் ராவணன் வேதம் படித்தவன் என்று சீதையைச்சுற்றி இருக்கக் கூடிய அரக்கிகள் சொல்கிறார்கள் “ஐயன் வேதம் ஆயிரம் அறிவான் அறிவாளன்” என்று வேதம் படித்த ராமனுக்கு இணையாக வேதம் அறிந்த ராவணன் இணையாகச் சொல்லப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்
இதிலிருந்து போட்டி போடவும் ஒரு தகுதி ., சரிசமமான அறிவு .,இணைத்திறமை வேண்டும் என்பது புலனாகிறது..
மு. மு. இஸ்மாயில் சொல்வதாக,” இரண்யனுடைய சரித்திரம் வேதத்தின் பெருமைக்காகச் சொல்லப்பட்டது ..பிரகலாதன் ..இறைபக்தனாக இருந்ததால் வேதம் படிக்க வேண்டியதில்லை என்ற வேதத்தின் சிறப்பு பற்றிக் கூறுகிறார்.. இரண்யனுக்கு நான்மறைச் சிறப்பைச் சொல்ல.. வேதம் என்பது இன்றியமையாதது அது இறை பக்தனாக இருக்கும் பட்சத்தில் தானே அனைத்தும் அடைந்து விடுகிறது “ என்று கூறியதாக பகிர்ந்தார்..
அடுத்து கம்பனில் நான்மறையை மதுரைக் கம்பன் கழக துணைத்தலைவர்... வேதத்தின் வசுதாரா திரு சங்கர சீதாராமன் வெளியிட திரு ஏ. ஆர். ராமசாமி பெற்றுக் கொண்டார்கள்.
திரு சங்கர சீதாராமன் தனதுரையில் மேலைச் சிவபுரியின் செந்தமிழ்க்கல்லூரி முதல்வர் பழ முத்தப்பன் பற்றி புகழ்ந்துரைத்தார்கள். உச்சிமேல் புலவர் நச்சினார்க்கினியர் என்று கூறினார்
புத்தகம் பற்றிக் கூறும் போது ,”மாத்ரு தேவோ பவ என்று ராமன் தாயரை நினைந்து நைந்தான்..பித்ரு தேவோபவ என்று தந்தையை நினைந்தான்.. ஆச்சார்ய தேவோ பவ என்று வசிஷ்டரை நினைந்து வணங்கினான்.. அதிதி தேவோ பவ என்பதற்கு குகன் சபரி ஆகியோரை படைத்தான் கம்பன் என்றார்.. சீதையை வேதத்தின் மறுவடிவு ..வேதமாதா என்றும் தசரதனின் நான்கு குழந்தைகளும் நான்கு வேதம் போல வளர்ந்தார்கள் என்றும் கம்பனே வேதம் அதில் யஜுர் வேதம் வருகிறது சாமவேதத்தின் சங்கீத பாட்டு உள்ளது என்றும் கூறினார் முடிவில் கம்ப காவியமே வேதம் என முடித்தார்..
பள்ளத்தூர் திரு பழ பழனியப்பன் எழுதிய கம்ப ராமாயண உரை- யுத்த காண்டம் (4தொகுதிகள் ) இதை புதுச்சேரி கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு வி.பி. சிவக்கொழுந்து வெளியிட ராசபாளையம் திரு முத்துகிருஷ்ண ராஜா பெற்றுக் கொண்டார்கள்..பாங்க் ஆஃப் பரோடாவில் பணி புரிந்தவர் பழனியப்பன்.. வைஷ்ணவி கோயிலில் அமர்ந்து எல்லா ஏடும் உரையும் வைத்துக்கொண்டு (அ. சொ. பெ. கருத்துரையுடன் முதல் மூன்று வந்து விட்டது).. யுத்த காண்டம் உரை எழுதி உள்ளார்...
புதுச்சேரியின் சடையப்ப வள்ளல் திரு சிவக்கொழுந்து எனக் கூறலாம் என கம்பனடி சூடி குறிப்பிட்டார்.. உணவு விடுதி நடத்தும் இவர் (க்ரீன் பார்க்) மாசி மகமன்று யார் சென்றாலும் உணவிடுவார் என்றார்..மாலை நேரத்தில் படிக்கிறவர்களுக்கும் உணவு அளித்து விடுதி நடத்துகிறார் என்றார்.
திரு சிவக்கொழுந்து தனதுரையில் திரு இராம. வீரப்பனின் அணிந்துரை பற்றிக் குறிப்பிட்டார் “பூவோடு சேர்ந்த்த நாறும் மணப்பது போல” தானும் என கூறினார்.. கம்பனைத்தொட்ட அனைவரும் புகழின் உச்சிக்கே போய் இருக்கிறார்கள்.. அதுவே தன்னை அடையாளம் காட்டியுள்ளது எனவும் எனவே அடுத்த பிறப்பிருந்தாலும் கம்பன் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்..
பரிசுகள்:-போட்டிகளில் பரிசு பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணாக்கியருக்கு மர்ரே ராஜம் பரிசு., அ. சொ. அ. மீ னாட்சி ஆச்சி பரிசு., சா. நா. நாராயணன் அறக்கட்டளைப் பரிசு., அமெரிக்க உடையப்பா பரிசு மற்றும் ந. சுப்பு ரெட்டியார் பரிசு வழங்கப்பட்டது..அடுத்த வருடத்தில் இருந்து விஸ்வாஸ் அறக்கட்டளை சார்பில் கம்பனில் இசைப் பாடல் போட்டியும் நடத்தி பரிசு வழங்கப்படும் என திரு சங்கர சீதாராமன் அறிவித்தார்..
டிஸ்கிஅ;-பரிசு பெற்ற குழந்தைகளோடு குழந்தைகளாக சந்தோஷத்துடன் நானும் சில புத்தகங்களையும் என் மாமியார் சில சிடிக்களையும் வாங்கிக் கொண்டு வந்தோம்..
அடுத்த இடுகையில் கவிக்கோவின் அருமையான பேச்சைப் பகிர்வேன்..

அமரர் திரு ஜி.கே. சுந்தரத்தின் படத்தை புதுச்சேரிக் கம்பன் கழகத்தலைவர் திரு ந. கோவிந்தசாமி திறந்து வைத்தார் ..கம்பன் திருநாளுக்காகவும் கம்பனடிப்பொடிக்காகவும் தமது 93 ஆம் வயதிலும் உற்சாகம் குன்றாமல் விசிறி மடிப்பு அங்கவஸ்திரமும் சந்தனப்பொட்டும் அணிந்து (எங்கள் ஐயாவை நினைவு படுத்துவது போல ) சந்தோஷமாகப் பேசினார்.. பேச்சின் இடையே அண்ணாவின் ‘”தீ பரவட்டும்” என்ற வாசகத்தையும் பாரதிதாசனின் ‘”கம்ப ராமாயணத்தைக் கொளுத்த வேண்டும்” என்ற வாசகத்தையும் நினைவு கூர்ந்தார். இவர் கலந்து கொண்டு அனைவரின் பேச்சையும் ரசித்துக்கேட்டதே மிகச் சிறப்பு...
புத்தக வெளீயீடு:-
கம்பனில் நான்மறை மற்றும் திரு சேதுபதி எழுதிய வரலாறு நடந்த வழியில்:- திரு பழ. பழனியப்பன் நிறுவி உள்ள மீனாக்ஷி பழனியப்பா அறக்கட்டளை ஆய்வுச்சொற்பொழிவு...”கம்பனில் நான்மறை ”.. இது பற்றி சைவ சித்தாந்தச் செம்மணி .. .. கம்பனில் “கல்லாத கடலும் வேதப் பொருளும்“ சாஸ்த்திரம் உரை எழுதிய முதல்வர் திரு. பழ. முத்தப்பன் பேசினார்..
வரலாறு நடந்த வழியில் திரு சேதுபதி
அவர்களால் எழுதப் பெற்றது ..அதில் ஒக்கூர் பக்கத்தில் உள்ள ஊர்க்கோயில்கள் சிதைவுற்றுக் கிடக்கும் வரலாறு..ஒரு ஆவணப்படம் போல் பதிவு செய்து உள்ளது .. வெட்டுவான் கோயில் பற்றியும் .
டாக்டர் சேதுபதி பற்றி தினமணி ஆசிரியரும் .திரு பழனியப்பனும் நெகிழ்ந்தார்கள்..”எங்களோடு வளர்ந்த இளவல் சேதுபதி”(தினமணியில் இவர் பல கட்டுரைகளை எழுதி உள்ளார்).என திரு வைத்யநாதனும்.இது நாட்டரசன் கோட்டை கம்பன் கோயிலைப் பற்றியும் கூறுகிறது என திரு பழனியப்பனும் புகழ்ந்தார்கள்.. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதை அங்கே கண்டேன்.. இந்தப்
புத்தகத்தை திரு அய்க்கண் வெளியிட்டார்கள். “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” என்ற பாடலையும் குறிப்பிட்டார்கள் ..
திரு முத்தப்பன் தனதுரையில் ”வேதம் தனி மனிதரால் சொல்லப்படவில்லை மனிதர்களால் அல்ல... அது இறைவனால் சொல்லப்பட்டது”. என்றார்..மேலும் வேதத்தின் சொல் போல் ராமனின் அம்பறாத்தூணியில் அம்பு எடுக்க எடுக்க குறையாமல் வந்தன என்றும் “வேதத்தை ஓதுவித்தான் வசிஷ்டன் ..வேதத்தின் பரம் பொருளான இறைவனுக்கே உபநயனம் செய்துவித்தான் என்றும் ராவணன் வேதம் படித்தவன் என்று சீதையைச்சுற்றி இருக்கக் கூடிய அரக்கிகள் சொல்கிறார்கள் “ஐயன் வேதம் ஆயிரம் அறிவான் அறிவாளன்” என்று வேதம் படித்த ராமனுக்கு இணையாக வேதம் அறிந்த ராவணன் இணையாகச் சொல்லப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்
இதிலிருந்து போட்டி போடவும் ஒரு தகுதி ., சரிசமமான அறிவு .,இணைத்திறமை வேண்டும் என்பது புலனாகிறது..
மு. மு. இஸ்மாயில் சொல்வதாக,” இரண்யனுடைய சரித்திரம் வேதத்தின் பெருமைக்காகச் சொல்லப்பட்டது ..பிரகலாதன் ..இறைபக்தனாக இருந்ததால் வேதம் படிக்க வேண்டியதில்லை என்ற வேதத்தின் சிறப்பு பற்றிக் கூறுகிறார்.. இரண்யனுக்கு நான்மறைச் சிறப்பைச் சொல்ல.. வேதம் என்பது இன்றியமையாதது அது இறை பக்தனாக இருக்கும் பட்சத்தில் தானே அனைத்தும் அடைந்து விடுகிறது “ என்று கூறியதாக பகிர்ந்தார்..
அடுத்து கம்பனில் நான்மறையை மதுரைக் கம்பன் கழக துணைத்தலைவர்... வேதத்தின் வசுதாரா திரு சங்கர சீதாராமன் வெளியிட திரு ஏ. ஆர். ராமசாமி பெற்றுக் கொண்டார்கள்.
திரு சங்கர சீதாராமன் தனதுரையில் மேலைச் சிவபுரியின் செந்தமிழ்க்கல்லூரி முதல்வர் பழ முத்தப்பன் பற்றி புகழ்ந்துரைத்தார்கள். உச்சிமேல் புலவர் நச்சினார்க்கினியர் என்று கூறினார்
புத்தகம் பற்றிக் கூறும் போது ,”மாத்ரு தேவோ பவ என்று ராமன் தாயரை நினைந்து நைந்தான்..பித்ரு தேவோபவ என்று தந்தையை நினைந்தான்.. ஆச்சார்ய தேவோ பவ என்று வசிஷ்டரை நினைந்து வணங்கினான்.. அதிதி தேவோ பவ என்பதற்கு குகன் சபரி ஆகியோரை படைத்தான் கம்பன் என்றார்.. சீதையை வேதத்தின் மறுவடிவு ..வேதமாதா என்றும் தசரதனின் நான்கு குழந்தைகளும் நான்கு வேதம் போல வளர்ந்தார்கள் என்றும் கம்பனே வேதம் அதில் யஜுர் வேதம் வருகிறது சாமவேதத்தின் சங்கீத பாட்டு உள்ளது என்றும் கூறினார் முடிவில் கம்ப காவியமே வேதம் என முடித்தார்..
பள்ளத்தூர் திரு பழ பழனியப்பன் எழுதிய கம்ப ராமாயண உரை- யுத்த காண்டம் (4தொகுதிகள் ) இதை புதுச்சேரி கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு வி.பி. சிவக்கொழுந்து வெளியிட ராசபாளையம் திரு முத்துகிருஷ்ண ராஜா பெற்றுக் கொண்டார்கள்..பாங்க் ஆஃப் பரோடாவில் பணி புரிந்தவர் பழனியப்பன்.. வைஷ்ணவி கோயிலில் அமர்ந்து எல்லா ஏடும் உரையும் வைத்துக்கொண்டு (அ. சொ. பெ. கருத்துரையுடன் முதல் மூன்று வந்து விட்டது).. யுத்த காண்டம் உரை எழுதி உள்ளார்...
புதுச்சேரியின் சடையப்ப வள்ளல் திரு சிவக்கொழுந்து எனக் கூறலாம் என கம்பனடி சூடி குறிப்பிட்டார்.. உணவு விடுதி நடத்தும் இவர் (க்ரீன் பார்க்) மாசி மகமன்று யார் சென்றாலும் உணவிடுவார் என்றார்..மாலை நேரத்தில் படிக்கிறவர்களுக்கும் உணவு அளித்து விடுதி நடத்துகிறார் என்றார்.
திரு சிவக்கொழுந்து தனதுரையில் திரு இராம. வீரப்பனின் அணிந்துரை பற்றிக் குறிப்பிட்டார் “பூவோடு சேர்ந்த்த நாறும் மணப்பது போல” தானும் என கூறினார்.. கம்பனைத்தொட்ட அனைவரும் புகழின் உச்சிக்கே போய் இருக்கிறார்கள்.. அதுவே தன்னை அடையாளம் காட்டியுள்ளது எனவும் எனவே அடுத்த பிறப்பிருந்தாலும் கம்பன் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்..
பரிசுகள்:-போட்டிகளில் பரிசு பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணாக்கியருக்கு மர்ரே ராஜம் பரிசு., அ. சொ. அ. மீ னாட்சி ஆச்சி பரிசு., சா. நா. நாராயணன் அறக்கட்டளைப் பரிசு., அமெரிக்க உடையப்பா பரிசு மற்றும் ந. சுப்பு ரெட்டியார் பரிசு வழங்கப்பட்டது..அடுத்த வருடத்தில் இருந்து விஸ்வாஸ் அறக்கட்டளை சார்பில் கம்பனில் இசைப் பாடல் போட்டியும் நடத்தி பரிசு வழங்கப்படும் என திரு சங்கர சீதாராமன் அறிவித்தார்..
டிஸ்கிஅ;-பரிசு பெற்ற குழந்தைகளோடு குழந்தைகளாக சந்தோஷத்துடன் நானும் சில புத்தகங்களையும் என் மாமியார் சில சிடிக்களையும் வாங்கிக் கொண்டு வந்தோம்..
அடுத்த இடுகையில் கவிக்கோவின் அருமையான பேச்சைப் பகிர்வேன்..

லேபிள்கள்:
கட்டுரை,
கம்பன்விழா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
