இன்று போய்:-
**********************
நீ நேரில் வந்து
போரிடும்போதெல்லாம்
உன் சரிபாதி வலிமையை
அபகரித்துக் கொள்கிறேன்.
ஹீனமான குரலுடன் நீ
மறைமுகத் தாக்குதல்
தொடுக்கிறாய்.
உனக்கானது
அபகரிக்கப்பட்டதென்றும்
அது ஒரு போதும் இனி
உன்னுடையதாக
ஆகாதென்றும் உணர்கிறாய்
திரும்பி வராத ஒரு அன்புக்காக
உன் போர் நெறிமுறைகள்
தாறுமாறாகின்றன்.
உன்னையே தாக்கிக் கொள்ளுமளவு.
உத்தராயணம் வரை
அம்பில் கிடக்கிறது
அரைகுறையாய் நம் அன்பு.
தாக்குதல்களை நிறுத்தி நீ
பின்வாங்கி வேறொரு இடம்
செல்லத் தலைப்படுகிறாய்
இணையும் எதிரியும் இல்லா
தனிமையில் தோல்வியுற்றுத்
திரும்புகிறேன்
என் அகலாத ஆணவத்தோடு..
டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 ஜூன் இரண்டாம் வார உயிரோசையில் வெளிவந்தது.

**********************
நீ நேரில் வந்து
போரிடும்போதெல்லாம்
உன் சரிபாதி வலிமையை
அபகரித்துக் கொள்கிறேன்.
ஹீனமான குரலுடன் நீ
மறைமுகத் தாக்குதல்
தொடுக்கிறாய்.
உனக்கானது
அபகரிக்கப்பட்டதென்றும்
அது ஒரு போதும் இனி
உன்னுடையதாக
ஆகாதென்றும் உணர்கிறாய்
திரும்பி வராத ஒரு அன்புக்காக
உன் போர் நெறிமுறைகள்
தாறுமாறாகின்றன்.
உன்னையே தாக்கிக் கொள்ளுமளவு.
உத்தராயணம் வரை
அம்பில் கிடக்கிறது
அரைகுறையாய் நம் அன்பு.
தாக்குதல்களை நிறுத்தி நீ
பின்வாங்கி வேறொரு இடம்
செல்லத் தலைப்படுகிறாய்
இணையும் எதிரியும் இல்லா
தனிமையில் தோல்வியுற்றுத்
திரும்புகிறேன்
என் அகலாத ஆணவத்தோடு..
டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 ஜூன் இரண்டாம் வார உயிரோசையில் வெளிவந்தது.

7 கருத்துகள்:
வழக்கம் போல் அருமை.
ம்ம்ம் ....
நல்ல வரிகள்
அருமையான கவிதை கவிக்குயிலே
அகலாத ஆணவத்தோடு..
இன்று போய் நாளையும் தொடரும் போர் !
சூப்பர் கவிதை!
அன்பு...
கவிதை பிடிச்சிருக்கு
நன்றி ஆசியா
நன்றி செய்தாலி
நன்றி ராஜி
நன்றி ஆர் ஆர் ஆர்
நன்றி மனசாட்சி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக