எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
GOKULAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
GOKULAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 பிப்ரவரி, 2018

வீரபாண்டிய கட்டபொம்மன்.

வீரபாண்டிய கட்டபொம்மன்.


வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் ஜனவரி 3.


பாஞ்சாலங்குறிச்சி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது விடுதலைப் போரும் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரும்தான். 1760இல் இருந்து 1799 வரை - 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் கப்பம் கட்ட மறுத்து அந்நியருக்குத் தலைவணங்காத வீரத்தால் நம் மனங்களில் முத்திரை பதித்துச் சென்றவர் அவர். 1857இல் சிப்பாய்க்கலகம் ஏற்படுவதற்கு ஆறு தசாப்தங்களுக்கு முன்னே ஆங்கில அரசை எதிர்த்த பாளையக்காரர்களுள் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். 

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2018 ஜனவரி கோகுலம் இதழில் வெளியானது. 

வெள்ளி, 20 அக்டோபர், 2017

வீரமங்கை ராணி வேலுநாச்சியார்.

வீரமங்கை ராணி வேலுநாச்சியார்.

இந்தியாவின் ”ஜோன் ஆஃப் ஆர்க்” என்று சரித்திர ஆய்வாளர் வேங்கடத்தால் புகழப்பட்டவர், தனது ஐம்பதாவது வயதில் வாளேந்திப் போராடி சிவகங்கைச் சீமையை மீட்டு அரசோச்சியவர் வீரமங்கை ராணி வேலுநாச்சியார்.  



டிஸ்கி:- முகம்மது யூசுப்கான் கட்டுரையைப் பாராட்டிய திசையன்விளை ஆர். ஜி. காயத்ரிக்கு நன்றி. 

திங்கள், 6 மார்ச், 2017

வீரம் மிக்க ராணி அப்பக்காதேவி சௌதா. கோகுலம்


ராணி அப்பக்காதேவி சௌதா:-

பதினாறாம் நூற்றாண்டிலேயே போர்த்துகிசியர்களின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டவர், கர்நாடகாவின் உல்லால் ராஜ்ஜியத்தின் சௌதா குடும்பத்தைச் சேர்ந்த வீரதீரமிக்க ராணி அப்பக்காதேவி சௌதா






ிஸ்கி :- விடைவந்தர்குக்கானாசர் கித்ுக்கு நன்றி. 


செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

வீராங்கனை கிட்டூர் ராணி சென்னம்மா. :- கோகுலம்

வீராங்கனை கிட்டூர் ராணி சென்னம்மா. :-

நமது நாடு சென்ற நூற்றாண்டுகளில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அப்போது சுதந்திரம் வேண்டி சாமான்யர்களும் புரட்சியாளர்களும் போராடியது போல சாம்ராஜ்யம் ஆண்டவர்களும் அந்நியரின் ஆக்கிரமிப்புக்கு அடிபணியாமல் போராடினர்.  அவர்களுள் சிலரின் வீர சரித்திரத்தைக் காண்போம்.




டிஸ்கி:- கோகுலத்தில் சென்ற ஓராண்டாக குழந்தைகளுக்கேற்ற சத்துணவு வெளியானது. அதற்கு சில வாசகர்கள் கடிதங்களும் பாராட்டி வந்தன. அத்திப்பழ அல்வாவை பாராட்டிய வேம்பார் பொ. ஜெனிட்டா அவர்களுக்கு நன்றி !. வாய்ப்புக்கு நன்றி கோகுலம். ! 


சனி, 21 ஜனவரி, 2017

கோகுலத்தில் புதிய தொடர் - விடுதலை வீரர்கள்.

கோகுலத்தில் வரும் ஃபிப்ரவரியில் இருந்து ஓராண்டுக்கு ”விடுதலை வீரர்கள்” என்ற தொடர் வெளியாகிறது.

கடந்த ஓராண்டாக ”சிறார்க்கேற்ற சத்துணவு ” என்ற தலைப்பில் பன்னிரெண்டு சத்துணவுக் குறிப்புகள் இடம் பெற்றன.


வியாழன், 8 செப்டம்பர், 2016

கல்கி பவளவிழாக் கொண்டாட்டங்கள்- சில படங்கள்.

கல்கி பவளவிழாக் கொண்டாட்டங்கள் சில படங்கள்.ஆகஸ்ட் 6 ஆம் தேதிக் கொண்டாட்டத்தின் போது காமராஜர் அரங்கில் எடுத்தது.

சுதாசேஷய்யன் அவர்கள் பேசியபோது எடுத்தது. 

கோகுலம் சார்பாக நடத்தபட்ட நிகழ்ச்சிகள் உணவுக்குப் பின் மாலைதான் தொடங்கின. எனவே முன்னே சென்று அமர்ந்து புகைப்படம் எடுத்தோம்.
குழந்தைகள் நடனம், குறும்படம் என்று சிறப்பாக இருந்தது நிகழ்வு.
ஃபோல்க் டான்ஸ்,

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ். கோகுலம். GOKULAM KIDS RECIPES.

ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ்:-
.



ிஸ்கி:- இந்தெசிபி 2016 ஆகஸ்ட் மோகுலத்ில் வெளியானு. இில் சேம்பு வை ரெசிபியைப் பாராட்டியஆர் கே ஹிாஜா & ஆர்.ஜி. காயத்ரி , ிையன்விளஆகியோருக்கு மம் நிறந்தன்றி. ! 

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

பரவசத்தில் ஆழ்த்திய பவளவிழாக் கொண்டாட்டங்கள் - கல்கி பவளவிழா மலரில்.

பரவசத்தில் ஆழ்த்திய பவளவிழாக் கொண்டாட்டங்கள் - கல்கி பிழா மில்.


75 ஆண்டுகள்;,  முக்கால் நூற்றாண்டு..!! வெற்றிகரமாகப் பத்ரிக்கைப் பணியில் கோலோச்சி வரும் கல்கி குழுமப் பத்ரிகைகள், வேரூன்றிப் பாய்ந்திருக்கும் தமிழ் விருட்சத்தின் அற்புதக் கிளைகள். கல்கி குழும ஊழியர்களின் குழந்தைகளிடமும் தமிழ் விதையைத் தூவவும், ஆலம் விழுதாய்த் தமிழை ஊன்றவும்  பவளவிழா ஆண்டு நிறைவை ஒட்டி கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்காக ஜூன் 11 ஆம் தேதியன்று பாரம்பரியப் பெருமை மிக்க கல்கி வளாகத்தில் தமிழ் செழிக்கப் பல்வேறு போட்டிகளும் குதூகலமாய் நடைபெற்றன.

வாழ்வியல் நெறிகள் பொதிந்த திருக்குறள் ஒப்புவிக்கும்  போட்டிகள் முதலிலும் அதன் பின்  வார்த்தை விளையாட்டு என்ற நிகழ்ச்சியும், பாடல்  போட்டியும் நடந்தது. மினிஷா நாயர் தொகுத்து வழங்க மலேஷியா சங்கர் மாஜிக் ஷோவும் மிமிக்ரியும் நடத்தி அனைவரையும் குழந்தைகளாக்கினார்.

கல்விக்கூடங்களே திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத போது கோகுலம் பத்ரிக்கை முக்கியத்துவம் அளித்து குழந்தைகள் திருக்குறளை அறிந்து கொள்ளவும் அதன்நெறிகளைப் பின்பற்றவும் வழிகோலியது மிகவும் பாராட்டத்தக்கது. அம்முன்னேடுப்பில் முதன்மையாக இருக்கும் கல்கி குழுமத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் பெருமைக்குரியவர்களே

திங்கள், 20 ஜூன், 2016

கல்கியும் நானும் & FIVE - D - THEORY. யும்

சொல்லப் போனால்  இந்தத் தலைப்பு கல்கி குழும இதழ்களும் நானும் என்றிருந்திருக்க வேண்டும். கல்கி அவர்களின் நூல்களைப் படித்த அபிமானத்தினால் கல்கியும் நானும் எனத் தலைப்பிட்டுக் கொண்டுள்ளேன்.பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும், தியாக பூமியும் அலைஓசையும் என்னை மயக்கியதுமல்லாமல் கி ராஜேந்திரன் அவர்களின் ரவி குலதிலகனும் என்னைக் கவர்ந்திருக்கிறார்.

///சரித்திரப் புதினங்களில் சாண்டில்யன் ராஜா என்றால் கோவி மந்திரி எனலாம். ஆனால் சக்கரவர்த்தி என்றால் அது கல்கிதான்.. அல்லியும் ஆம்பலும் கொட்டிக்கிடக்கும் வாவிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வலிமையான மாமல்லரும்.. நளினமான சிவகாமியும்தான் நினைவில் மலருவார்கள்..அவரின் இளவல் கல்கி கி. ராஜேந்திரன் (இவரை தளபதி எனலாம்) எழுதிய சரித்திரப் புதினம் ரவிகுல திலகன்..சிங்கக் குட்டியல்லவா பதினாறு அடி பாயாவிட்டாலும்..சிங்கம் பாய்ந்த தூரத்தைத் தொட முயன்றிருக்கிறது..///


கல்கி பவள விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோகுலத்தின் சார்பாக கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் சக வலைப்பதிவர் மாயவரத்தான் அவர்களும் நானும் ஜூன் மாதம் 11 ஆம் தேதி நடுவராக அழைக்கப்பட்டிருந்தோம்.

அந்நிகழ்வில் திருக்குறள் போட்டி, ஒரு நிமிடம் உரையாடல், பாட்டுப் போட்டி, மாஜிக் ஷோ, மிமிக்ரி ஆகியன இடம்பெற்றிருந்தன. முடிவில் மாயவரத்தான் அவர்களும் நானும் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டோம்.

மாயவரத்தான் அவர்களும் குழந்தைகளுக்குத் தேவையான கருத்துக்களைச் சிறப்பாகக் கூறி அமர்ந்தார். அடுத்து நான் அழைக்கப்பட்டேன். அங்கே பகிர்ந்த கருத்துக்களையும் கூற விட்டுப் போன சிலவற்றையும் இங்கே பதிவு செய்கிறேன். {{அன்று எனது திருமண நாள், எனது ஐந்தாவது புத்தகமான சிவப்புப் பட்டுக் கயிறைப் புத்தகத் திருவிழாவில் வெளியிடும் நாள், மேலும் கோகுலம் சார்பாக நடுவராகக் கலந்து கொள்ளும் நாள் என முப்பெரும் விழாவாக அது எங்களை ( எனது கணவரையும் ) மகிழ்வித்தது.  - கல்கியில் எனது முதல் கவிதை வெளிவந்தது - கிராமத் திருவிழா என்ற  கவிதை மாணவர் பக்கத்தில் வெளியானது . அதற்குக் கொடுக்கப்பட்ட - பி. எஸ். மணி என்ற எடிட்டர் கையெழுத்திட்ட காசோலையையும் -  15 வாசகர் கடிதங்களையும் ( வாசகர் கடிதங்கள் பாகம் - 1, வாசகர் கடிதங்கள் பாகம் -2  ) என் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளேன். பெருமிதமாக உணர்கிறேன். அதன் பின் கல்கியின் கவிதை கஃபேயில்  சென்ற வருடங்களில் நான்கு கவிதைகளும் வெளியாகி உள்ளன.   - இரவு, மெழுகின் முணுமுணுப்புமீன்கள், கோதுதல்  }}

பாரம்பரியப் பெருமை மிக்க கல்கி நிறுவனத்தின் இந்த பவளவிழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சி. சின்னப் பிள்ளையில் இருந்து வாசித்து மகிழ்ந்த கல்கி, கோகுலம் , மங்கையர் மலர் ஆகிய பத்ரிக்கை அலுவலகத்தில் நின்று பேச முடியும் அதன் சிறப்பு விருந்தினராக வரமுடியும் என்பதே பெருங்கனவாகத் தோன்றுகிறது. அதை சாத்தியப்படுத்தி மாபெரும் பெருமையை வழங்கிய  கோகுலத்தின் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

ஞாயிறு, 19 ஜூன், 2016

வாளை விழுங்கிய மலேஷியா சங்கர்.

ஆப்ரா கா டாப்ரா. என்றதும் நமக்கு தொப்பியும் முயல்குட்டியும் , புறாக்களும் பல்வண்ணப் பறவைகளும் வளையங்களும் ரிப்பன்களும் விதம்விதமான பூக்களும்,கூடவே ஒரு மாஜிக் நிபுணரும் ஞாபகத்துக்கு வருவாங்க.

மலேஷியாவைச் சேர்ந்த சங்கர் கல்கி குழுமப் பவளவிழாவின் ஒரு பகுதியாக கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்குக் கோகுலத்தின் சார்பில் நிகழ்த்தப்பட்ட போட்டிகளின் முடிவில் மாஜிக் ஷோ நடத்தி மகிழ வைத்தார்.

ஒரு பெண்குழந்தையை அழைத்து டிஷ்யூ பேப்பரை வாயில் வைத்து எடுக்கச் சொன்னார். குழந்தையின் வாயில் இருந்து பிட்டு பிட்டாக வர
சங்கர் அதை கயிறு போல் இழுத்து ஆச்சர்யப்படுத்தினார்.
அடுத்து ஒரு பையனிடம்  சல்மான் கான் பனியன் போட்ட புகைப்படம் காண்பித்து  அடுத்துப் போடாமல் இருந்த புகைப்படம் காண்பித்து அதிலிருந்து  அதே அளவு பனியனை வெளியே எடுத்து  மேஜிக் செய்தார்.
Related Posts Plugin for WordPress, Blogger...