முதலாம் அத்யாயம், இரண்டாவது ஸ்லோகம்
அதீதி ஏதம் ததா சாஸ்த்ரம்
நர: ஜானாதி
ஸத்தம: l
தர்ம உபதேச விக்யாதம்
கார்ய அகார்ய சுபம் அசுபம் ll
பொருள்:-
அதீதி = அதீதமாக, ஆழமாக
ஏதம் ததா சாஸ்திரம் = இந்த சாஸ்திரத்தைப் பயின்றால்
நர: = நரர்கள்
ஜானாதி ஸத்தம: = சாதாரண மனிதர்கள், வெகுஜனம்
தர்ம உபதேச = தர்ம நியாய உபதேச
விக்யாதம் = விளக்கம் கிடைக்கப் பெறுவான்
கார்ய அகார்ய = உகந்த காரியம்/வேலை, தேவையில்லாத செய்கை/வேலை,
சுபம் அசுபம் = நலம்தரும் விஷயம், தீமை பயக்கும் விஷயம்
விளக்கம்:- சாதாரண மனிதர்கள் கூட ( வெகு ஜனக் கூட்டம்) இந்த
சாஸ்திரத்தை ஆழ்ந்து படித்தால் தர்மம் எது நியாயம் எது, தாம் செய்ய உகந்த காரியம் எது,
செய்யத்தகாத வேலை எது , நலம் பயக்கும் விஷயம் எது, தீமை பயக்கும் விஷயம் எது எனப் பகுத்துணர்வார்கள்.
அவர்களுக்கு இதைப் பயிலும்போது தர்ம நியாய உபதேசம் பற்றிய விளக்கம் கிடைக்கப் பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)