வகைப்பழம் வாங்குவார்கள். அண்டா, வாளி, பேஸின்,தூக்குச்சட்டி, தட்டுகள், தாம்பாளங்களில் 9, 11, 16 என்று சீர் தட்டு கொண்டு வருவார்கள். வாழைப்பழம் ரஸ்தாளி அல்லது செவ்வாழையாக இருக்கும். இது 101 அல்லது 51 என்ற கணக்கில் இருக்கும். மஞ்சள் பூசிய தேங்காய் 11, ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், மாதுளை, சாத்துக்குடி ஆகியன 21 இருக்கும். எலுமிச்சை 16 இருக்கும். வெற்றிலை பாக்கு ஒரு தட்டிலும், பூப்பந்து ஒரு தட்டிலும், பேரீச்சம்பழம் ஒரு தட்டிலும், ரொட்டி/வேஃபர்ஸ் ஒரு வாளியிலும் , மிட்டாய் ( சாக்லேட்/ஃபாரின் சாக்லேட் ) ஒரு தூக்குச் சட்டியில் இருக்கும். கல்கண்டு ஒரு தூக்குச் சட்டியில் இருக்கும். இதில் சில முறைகளை அவர்கள் நமக்குத் திருப்பித் தருவார்கள்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சனி, 29 ஜூன், 2019
காரைக்குடிச் சொல்வழக்கு :- வக்கூடும் சத்தகமும்.
வகைப்பழம் வாங்குவார்கள். அண்டா, வாளி, பேஸின்,தூக்குச்சட்டி, தட்டுகள், தாம்பாளங்களில் 9, 11, 16 என்று சீர் தட்டு கொண்டு வருவார்கள். வாழைப்பழம் ரஸ்தாளி அல்லது செவ்வாழையாக இருக்கும். இது 101 அல்லது 51 என்ற கணக்கில் இருக்கும். மஞ்சள் பூசிய தேங்காய் 11, ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், மாதுளை, சாத்துக்குடி ஆகியன 21 இருக்கும். எலுமிச்சை 16 இருக்கும். வெற்றிலை பாக்கு ஒரு தட்டிலும், பூப்பந்து ஒரு தட்டிலும், பேரீச்சம்பழம் ஒரு தட்டிலும், ரொட்டி/வேஃபர்ஸ் ஒரு வாளியிலும் , மிட்டாய் ( சாக்லேட்/ஃபாரின் சாக்லேட் ) ஒரு தூக்குச் சட்டியில் இருக்கும். கல்கண்டு ஒரு தூக்குச் சட்டியில் இருக்கும். இதில் சில முறைகளை அவர்கள் நமக்குத் திருப்பித் தருவார்கள்.
வெள்ளி, 28 ஜூன், 2019
மதுரையில் "மஞ்சளும் குங்குமமும்" வெளியீடு.
பெண்கள் சுய உதவிக் குழுக்களின் தலைவி திருமதி சாந்தி மதுரேசன் அவர்கள் வெளியிட பிரபல வழக்கறிஞர் திருமதி செல்வகோமதி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
இக்கட்டுரைகள் நமது மண்வாசம் இதழில் சென்ற இரு ஆண்டுகளாக வெளிவந்தவை. மரபும் அறிவியலும் என்ற தலைப்பில் எழுதித்தாருங்கள் என நமது மண்வாசம் ஆசிரியர் திரு.ப. திருமலை அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவற்றை எழுதினேன்.
தானம் அறக்கட்டளையின் பட்டறிவு பதிப்பகம் மூலமே இக்கட்டுரைகள் தொகுத்து நூலாக்கம் செய்யப்பட்டது. ஜூன் 10, 2019 திங்களன்று தானம் அறக்கட்டளையின் அலுவலகக் கட்டிடத்தில் கான்ஃபரன்ஸ் ஹாலிலேயே வெளியிட்டு சிறப்பிக்கப்பட்டது. அன்பும் நன்றியும் திரு ப திருமலை சார், தானம் அறக்கட்டளை., & நமது மண்வாசம்.
பத்தாவது நூல் “ மஞ்சளும் குங்குமமும் “
ஆரம்பவிழாவுக்கு வந்திருந்த பெண்மக்கள். சந்தனம் குங்குமம் ரோஜாப்பூவோடு வழக்கம்போல் நமது மண்வாசம் வழங்கும் கிஃப்ட் ஹாம்பர்களோடு விழா மங்கலகரமாக ஆரம்பித்தது. ( ஒவ்வொருவருக்கும் ஜூஸ், தண்ணீர் பாட்டில், விசிறி, நமது மண்வாசம், வெண்ணிற துவாலை, வழங்கப்பட்டிருந்தது சிறப்பு )
வியாழன், 27 ஜூன், 2019
அஸ்வத்தாமன் பெற்ற அஸ்திரங்கள். தினமலர் சிறுவர்மலர் - 20.
செவ்வாய், 25 ஜூன், 2019
கண்டனூர், கானாடுகாத்தான், தெக்கூர் வீடுகள்.
ஞாயிறு, 23 ஜூன், 2019
வாசிப்பை சுவாசிப்போம்.
சனி, 22 ஜூன், 2019
சாட்டர்டே போஸ்ட். மாணவர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் விடியல் ப்ரகாஷ்
அதுவும் அரசுப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகளாகத் தேர்ந்தெடுத்து அங்கே உள்ள மாணாக்கருக்கு நெகிழிப் பையின் தீமை, தண்ணீர்ச் சிக்கனம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, மரக்கன்று நடுதல், சுகாதாரம் ஆகியன பற்றி விடியல் அமைப்பு மூலம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்.
அவரிடம் நம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காகக் கேட்டபோது இதை எழுதித் தந்தார். ( விடியல் சேவையில் நீங்க ஈடுபடக் காரணமாய் இருந்த நிகழ்வு ஏதும் இருந்தா பகிருங்க. இல்ல உங்களைத் தூண்டியது எதுன்னு சொல்லுங்க போதும். புகைப்படங்களே எல்லாம் பேசுது.)
(திருமணம் ஆயிடுச்சா. உங்களுடன் இப்பணியில் ஈடுபடுபவர் யார் உங்களுக்குக் கரம் கொடுக்கும் தோழர்களையும் அறிமுகப்படுத்துங்க முடிஞ்சா இன்றிரவுக்குள்/இன்னும் ஓரிரு மணிகளில் விபரம் மட்டும் அனுப்புங்க. நாளைக்கு சனிக்கிழமை. போஸ்ட் போட்டுடுவேன்.)
அவர் தன்னைப் பற்றியும் விடியல் பற்றியும் கூறியது இது.
எனக்கு திருமணமாகி விட்டது ஒரு பையன் ஒரு பெண் இருவரும் படிக்கிறார்கள் நான் பள்ளியில் படிக்கும் பொழுது போட்டிகள் மற்றும் விளையாட்டு என்பது அரிதான ஒன்று . இதேபோல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் நலன் கருதி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எண்ணத்தில் நாமும் பெரியவனாகி வருமானத்திலிருந்து ஒரு பகுதியாக இந்த குழந்தைகளுக்கு செலவு செய்து வருகிறேன் . இது என்னோட சொந்த பணம் . எனக்கு யாரும் இந்த ஒத்துழைப்பு தருவதில்லை. நானே சுயமாக நின்று இப் பணியை மேற்கொண்டு வருகிறேன் . உங்களை போன்ற நல்ல மனம் படைத்தவர்களிடம் இறைவன் அருளால் என்னை உங்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார் மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
விடியல் ஆரம்பம் கல்வி சேவை அமைப்பு
பணிகள்
1. நாட்டுக்காக உழைத்த தேசிய தலைவர்கள் பலரும் நாட்டுக்காக ரத்தம் சிந்தி பல்வேறு காலங்களில் சிறைச்சாலைகளில் அவர்கள் பட்ட சித்தரவதைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதைப்பற்றி வளரும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அவர்களை பற்றி படிக்க வேண்டும், அதற்காகவே கட்டுரைப் போட்டிகள் பேச்சுப் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் வைத்து அவர்களை ஊக்கப்படுத்துகிறோம்.
வெள்ளி, 21 ஜூன், 2019
வியாழன், 20 ஜூன், 2019
நான்கு நூல்கள் – ஒரு பார்வை.
நான்கு நூல்கள்
1.IN SEARCH OF ANCIENT
WISDOM – IRRIGATION TANKS. BY S.M. RATHNAVEL & DR. P. GOMAHINAYAGAM.
பொதுப்பணித்துறையில் 36 வருடங்கள் சீஃப் என்ஜினியராகப் பணியாற்றிய திரு எஸ். எம் . ரத்னவேலு அவர்களும், அதே துறையில் பொறியாளராகப் பணியாற்றிய டாக்டர் பி கோமதி நாயகம் அவர்களும் இணைந்து எழுதியது இந்நூல்.
அந்தக்காலப் பாசன முறைகள், நீர்த்தேக்கத்தொட்டிகள், அணைகள் அவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், அவை அமைக்கப்பட்ட முறை குறித்தும், மதகுகளின் மூலம் அவை திறக்கப்படுவதும், கால்வாய்கள், வாய்க்கால்கள் மூலம் அவை வயலை வந்தடைவது, ஆதிகாலப் பாசனம், ஆற்றுப் பாசனம், கிணற்றுப்பாசனம், ஏரிப்பாசனம், கண்மாய்ப் பாசனம் குறித்துச் சொல்வதோடு நீர்ப்பிடிப்புப் பகுதிகள் அநேகமாக செமிசர்க்குலர் – அரைவட்ட வடிவிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் தெரிவிக்கிறது இந்த ஆய்வு.
திங்கள், 17 ஜூன், 2019
முக்கனிகளும் முத்தமிழ்ப் பாட்டியும். தினமலர் சிறுவர்மலர் - 19.
வியாழன், 13 ஜூன், 2019
புதன், 12 ஜூன், 2019
செல்லாத பணம் – ஒரு பார்வை.
செல்லாத பணம்
வரதட்சணைக் கொடுமையாலோ
சந்தேகத்தின் அடிப்படையிலோ, தீக்குளித்து இறக்கும் பெண்களைப் பற்றிக்
கேள்விப்பட்டதுண்டு. உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்த இக்கதையைப் படித்ததும்
அவற்றின் தீவிரம் புரிந்தது.
இமையத்தின் மற்ற நூல்களை நான் படித்ததில்லை. சென்ற வருடம் காரைக்குடியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மரப்பாச்சி அரங்கத்தில் இந்நூலை வாங்கி வந்தேன். மிகை கற்பனை, இயற்கை வர்ணனைகள், காதல் ரசங்கள் ஏதுமின்றி யதார்த்தத்தை உள்ளது உள்ளபடி நிகழ்வுகளின் வழியாகவே சொல்லிச் சென்றிருக்கிறது இக்கதை. கதாநாயகி ரேவதி மட்டுமே ஒருமுறை மனதுக்குள் பேசுகிறாள், கனவு காணுகிறாள் அவ்வளவே.
செவ்வாய், 11 ஜூன், 2019
பெடலிங்க் குதிரையும் ஏஜ் ஆஃப் எம்பயர்ஸும்.
2202. பெடலிங் குதிரையில் பெரியம்மா பேரன்
திங்கள், 10 ஜூன், 2019
சனி, 8 ஜூன், 2019
அவள் விகடனில் அசத்தல் அப்பாக்களும் அன்பு மகள்களும். ( அப்பா ரொம்ப ஸ்பெஷல் )
அவள் விகடனின் நிருபர் தினேஷ் இந்தத் தலைப்பில் பேட்டி எடுத்து இருந்தார். அப்பாவைப் பற்றிப் பொதுப்படையாகப் பகிர்ந்திருந்தேன். அதில் நான் கூறியதில் அழகானதை எடுத்துப் போட்டிருக்கிறார். அன்பும் நன்றியும் தினேஷ் & அவள் விகடன். என் கூட இருக்கும் எழுவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். :)
வியாழன், 6 ஜூன், 2019
காதல் பொதுமறை – ஒருபார்வை.
அமீரகத்தில் தமிழ்த்தேர் உலாவரக் காரணமானவர் காவிரிமைந்தன். கவியரசு கண்ணதாசன் பற்றி இரு நூல்கள் வெளியிட்டிருக்கிறார். இவரது நூலான காதல் பொதுமறை காதலர் தினத்தன்று எனது காதல் வனம் நூலோடு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் வெளியிடப்பட்டது.
இவர் எழுதிய நெறிபிறழாக் காதல் கடிதங்களின் /கட்டுரைகள் /கவிதைகளின் தொகுப்பு இந்நூல். காதல் வேதம் என்பதால் பொதுமறை எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்நூலில் 143 கடிதங்கள் / கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதென்ன 143 என்ற கணக்கு . அது I LOVE YOU வின் கணக்காக இருக்கலாம். எல்லாம் ஒரு யூகம்தான் J
புதன், 5 ஜூன், 2019
அழகப்பர் முன்னாள் மாணவர் பூங்கா. ALAGAPPA ALUMNI PARK.
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5. 30 மணிக்கு இப்பூங்காவின் திறப்புவிழா நடைபெற்றுள்ளது.
இது மேலாண்மையியல் வளாகத்தின் எதிர்ப்புறம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டில் கோட்டையூர் ஸ்ரீராம் நகர் செல்லும் பாதையில் ஸ்ரீ ப்ரசன்ன மஹாலின் எதிர்ப்புறம் ரயில்வே ட்ராக்கை ஒட்டி அமைந்துள்ளது.
அப்போதைய துணைவேந்தர் சுப்பையா அவர்கள் தலைமையேற்க பேராசிரியரும் முன்னாள் மாணவருமான ஆதிச்சபிள்ளை அவர்கள் திறந்துவைத்திருக்கிறார்கள்.
காரைக்குடியிலேயே மிகப் பிரம்மாண்டமான பூங்கா. உள்ளே செல்ல எண்ட்ரன்ஸ் டிக்கெட் உண்டு !. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு நடைபாதை பாவப்பட்டுள்ளது. வாருங்கள் பார்ப்போம்.
எல்லாப் பூங்காக்களையும் போல் இங்கேயும் ப்ளேகிரவுண்ட் உள்ளது.
செவ்வாய், 4 ஜூன், 2019
துடுக்குத்தனத்தால் ஒளியை இழந்த சூரியனும் சோமனும். தினமலர் சிறுவர்மலர் - 18.
திங்கள், 3 ஜூன், 2019
காரைக்குடி, கானாடுகாத்தான் வீடுகள்.
சனி, 1 ஜூன், 2019
வெட்டாட்டம் – ஒரு பார்வை.
சுஜாதா, ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார், போன்ற எவர் மாதிரியும் இல்லாத புதுமாதிரிக் கதை சொல்லி ஈர்த்திருக்கிறார் ஷான். ஏகப்பட்ட அரசியல் வில்லங்கப் படங்கள் பார்த்திருப்போம். இது ஹைடெக் இண்டர்நெட் வகை. முதலில் வெட்டாட்டம் படிக்க ஆரம்பித்ததுமே எனக்குத் தோன்றியது இதற்குப் பொருத்தமான ஆள் விக்ரம் அல்லது அரவிந்தசாமி. இந்த வருண் கேரக்டரின் முழு வலுவையும் தாங்கும் சக்தி அவர்கள் இருவருக்கே உள்ளது.
நாவலெங்கும் பல புதுமைகள். அடங்கிப் போகாத சித்ரா, எதிர்க்கேள்வி கேட்கும் சுவாதி, தீர்க்கமுடியாத திறமையான எதிர்க்கட்சிக்காரியான கயல்விழி இவர்களோடு மென்மையான கவுசல்யாவும் நர்மதாவும் தொட்டுக்கொள்ள ஊறுகாயாய் J வாங் நடத்தும் சைபர் கிரைம் உச்சம். எடுத்தவுடனே ஒரு திரைப்படத்தின் லாவகத்துடன் பாயத்தொடங்கிவிடுகிறது நாவல்.


















