எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

நட்பும் ..துணையும்..

அறிமுகம் ஆனவுடனே
முகம் பார்க்கக் குழைந்து
குரல் கேட்க விழைந்து
விருந்துண்ண அழைத்து
விடியுமட்டும் கதைத்து
முடியுமட்டும் முயன்று
முடிந்தவரை அடைந்து
நீர்த்துப் போகிறது அல்லது
மந்திரிக்க வேண்டிய
விஷக்கடியாகிறது

நூல் நெய்த நட்பு...
****************

முகப்புத்தக நண்பர்கள்
தின அழைப்பில்
கூடிக் களிக்க முடியாமல்
உம்மணாமூஞ்சியாய்...

ஆங்கிலத் திரைப்படமும்.,
அறுசுவை உணவும்.,
ஷாப்பிங் மாலும்.,
குளிர்பதனக் காரும்.,

கேட்ட கேட்காத பொருட்களும்.,
மல்லிகைப்பூ வாசமுமாய்..
உறங்கும் போதுதான் உறைத்தது..

பூங்கொத்தும் புன்சிரிப்புமாய்..
கணவரே நண்பராய்., கைகோர்த்துக்
களிகொண்டு அலைந்தது..
**************************

நினைவுகள் நீந்திக்
கொண்டிருக்கும் மனதில்
வலை கொண்டு ஒவ்வொரு
மீனாய்ப் பிடித்துக்
கவனமாய் வெளியேற்றினேன்..
தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
என்னுள்ளே நீ மட்டும்..
************************

மழை....
என் கைத்தலம் பற்றியது குடை..
பாதுகாப்பாய் என்னைச் சூழ்ந்து..
காற்று பறித்தெறிந்தாலும்..
நெளிந்து வளைந்து
விட்டுக் கொடுத்துப் போராடி
நம்பிய என்னை பத்திரமாய்
இலக்கில் சேர்த்து..

46 கருத்துகள்:

  1. //நினைவுகள் நீந்திக்
    கொண்டிருக்கும் மனதில்
    வலை கொண்டு ஒவ்வொரு
    மீனாய்ப் பிடித்துக்
    கவனமாய் வெளியேற்றினேன்..
    தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
    என்னுள்ளே நீ மட்டும்..//

    ஆஹா...சுகமான வரிகள் தேனக்கா ரசித்தேன்...வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  2. நினைவுகள் நீந்திக்
    கொண்டிருக்கும் மனதில்
    வலை கொண்டு ஒவ்வொரு
    மீனாய்ப் பிடித்துக்
    கவனமாய் வெளியேற்றினேன்..
    தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
    என்னுள்ளே நீ மட்டும்..

    //

    மிகவும் ரசித்த வரிகள் ..

    மற்ற கவிதைகளும் அருமை..

    பதிலளிநீக்கு
  3. எல்லாம் அருமை.

    மழையைக் கைத்தலம் பற்றிய குடை மிகப் பிடித்தது.

    பதிலளிநீக்கு
  4. அருமை, திருமண நாள் தினமா (is today Marriage Day). வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. வரிகள் அருமை.....வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. வரிகள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்............

    பதிலளிநீக்கு
  7. நன்றி கனி.,வெறும் பய., ராமலெக்ஷ்மி., ராம்ஜி ( இல்லை ராம்ஜி :-)) ., பெயரில்லா..

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதைகள், நீங்க வாழ்கையின் சின்ன சின்ன விடயங்களை கூட கவித்துவமாய் பார்த்து வார்த்தைகளை எழுதுவது அழகு.........வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதைகள், நீங்க வாழ்கையின் சின்ன சின்ன விடயங்களை கூட கவித்துவமாய் பார்த்து வார்த்தைகளாய் எழுதுவது அழகு.........வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. //நீர்த்துப் போகிறது அல்லது
    மந்திரிக்க வேண்டிய
    விஷக்கடியாகிறது//

    சில நட்பின் துரோகம்!

    //நினைவுகள் நீந்திக்
    கொண்டிருக்கும் மனதில்
    வலை கொண்டு ஒவ்வொரு
    மீனாய்ப் பிடித்துக்
    கவனமாய் வெளியேற்றினேன்..
    தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
    என்னுள்ளே நீ மட்டும்..//

    அருமை அக்கா!

    பதிலளிநீக்கு
  12. ////நெளிந்து வளைந்து
    விட்டுக் கொடுத்துப் போராடி
    நம்பிய என்னை பத்திரமாய்
    இலக்கில் சேர்த்து..///


    ///மந்திரிக்க வேண்டிய
    விஷக்கடியாகிறது
    நூல் நெய்த நட்பு...///

    இரண்டு நட்புகளையுமே என்ன அழகாய் சொல்கிறீர்கள்.. இலக்கைச்சேர்த்ததாகவும்,, விஷக்கடியாகவும்..

    தங்கள் கவித்துதிற்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  13. ////நெளிந்து வளைந்து
    விட்டுக் கொடுத்துப் போராடி
    நம்பிய என்னை பத்திரமாய்
    இலக்கில் சேர்த்து..///


    ///மந்திரிக்க வேண்டிய
    விஷக்கடியாகிறது
    நூல் நெய்த நட்பு...///

    இரண்டு நட்புகளையுமே என்ன அழகாய் சொல்கிறீர்கள்.. இலக்கைச்சேர்த்ததாகவும்,, விஷக்கடியாகவும்..

    தங்கள் கவித்துதிற்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  14. வெற்றி நூல் கொடுத்தது நட்பு
    கணவர் கொடுத்தது துணை..

    அடுத்து வேண்டா எண்ணங்கள் மீன்..
    வேண்டா நட்பாய்..

    குடை எனக்குத்துணை.. வாழ்க்கைத்துணையாய்..

    பதிலளிநீக்கு
  15. அருமை தேனம்மை ..துணைக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசத்தை மிக அழகாய்ச் சொல்லியுள்ளீர்கள்.. என்னைத் திருத்தியமைக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  16. ஆஹா சூப்பர் கவிதை கொள்ளை கொண்டுவிட்டீர்கள் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  17. அருமை தேனம்மை ..
    புரிதல் வந்துவிட்டால் மந்திரிப்பு தேவை இல்லாமல் போய்விடும்

    பதிலளிநீக்கு
  18. //அறிமுகம் ஆனவுடனே
    முகம் பார்க்கக் குழைந்து
    குரல் கேட்க விழைந்து
    விருந்துண்ண அழைத்து
    விடியுமட்டும் கதைத்து
    முடியுமட்டும் முயன்று
    முடிந்தவரை அடைந்து
    நீர்த்துப் போகிறது அல்லது
    மந்திரிக்க வேண்டிய
    விஷக்கடியாகிறது
    நூல் நெய்த நட்பு...//

    //நினைவுகள் நீந்திக்
    கொண்டிருக்கும் மனதில்
    வலை கொண்டு ஒவ்வொரு
    மீனாய்ப் பிடித்துக்
    கவனமாய் வெளியேற்றினேன்..
    தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
    என்னுள்ளே நீ மட்டும்..// அருமையக்கா, வரிகள் பொருள் செரிந்தவையாக உள்ளது, படிக்க சந்தோஷமாகவும் சிந்திக்கும் படியும் உள்ளது,

    பதிலளிநீக்கு
  19. எப்பவும் போல நல்லா இருக்கு அக்கா வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. //நினைவுகள் நீந்திக்
    கொண்டிருக்கும் மனதில்
    வலை கொண்டு ஒவ்வொரு
    மீனாய்ப் பிடித்துக்
    கவனமாய் வெளியேற்றினேன்..
    தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
    என்னுள்ளே நீ மட்டும்..
    //

    ரொம்ப நல்லாயிருக்குங்க

    இன்றிலிருந்து கவிதாயினி என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்குகிறேன்
    பெற்றுக்கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  21. தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
    என்னுள்ளே நீ மட்டும்..//

    ரசித்த வரி.. சூப்பரா இருக்கு தேனக்கா..

    பதிலளிநீக்கு
  22. //நட்பும் ..துணையும்.. //

    நல்ல கவிதை..

    பதிலளிநீக்கு
  23. //தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
    என்னுள்ளே நீ மட்டும்..//
    மழையு நல்லாயிருக்கு தேனம்மை.

    பதிலளிநீக்கு
  24. பூங்கொத்தும் புன்சிரிப்புமாய்..
    கணவரே நண்பராய்., கைகோர்த்துக்
    களிகொண்டு அலைந்தது..]]

    மிகச்சிறப்பு

    பதிலளிநீக்கு
  25. நீர்த்துப்போதல் அல்லது விஷக்கடி ஆதல்; கணவரே நண்பராய்க் களிகொண்டு அலைந்தது உறைத்தல்; கவனமாய் வெளியேற்றுதல்; பத்திரமாய் இலக்கில் சேர்த்தல்.

    ஒரு குடையால் ஆகக் கூடியது! ஆமால்லே? (பெரும் படையாலும் ஆகாதது என்று காவிய கர்த்தாக்கள் முதுகுக்குப் பின்னால் முனுமுனுக்கிறார்கள்.)

    “நீ கீறியது ஒரு முறை/ நான் கிளறிக் கொண்டது பலமுறை..” என்றொரு கவிஞர் சொன்னதும் நினைவுக்கு வருகிறது.

    // தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
    என்னுள்ளே நீ மட்டும்..//

    இதுவே முக்காலும் சத்தியம்; நம்மைக் கொண்டு செலுத்தும் அக-விசை. இதுவும் இக் கவிதையில் தன் உணர்வுகள் தெளிவாக விளக்கம் பெற்றிருக்கிற தன்மையும் அருமை.

    பதிலளிநீக்கு
  26. நன்றாக இருக்கிறது. 'நூல் நெய்த நட்பு' புதுமை.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரி...! கணவரை நண்பராக நினைப்பவர்கள் எத்தனை பேர்..//கணவரே நண்பராய் களி கொண்டு அலைந்தது //
    //தப்பி ஒழிந்த ஒற்றை மீனாய் என்னுள்ளே நீ மட்டும் //
    அழகான வரிகள்..சகோதரி..வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு
  28. //மழையைக் கைத்தலம் பற்றிய குடை //

    எல்லாமே அருமை தேனக்கா.
    துணையாய் மாறிய நட்பு.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  29. கேட்ட கேட்காத பொருட்களும்.,
    மல்லிகைப்பூ வாசமுமாய்..
    உறங்கும் போதுதான் உறைத்தது..

    பூங்கொத்தும் புன்சிரிப்புமாய்..
    கணவரே நண்பராய்., கைகோர்த்துக்
    களிகொண்டு அலைந்தது..

    அருமை

    பதிலளிநீக்கு
  30. மழை....
    என் கைத்தலம் பற்றியது குடை..
    பாதுகாப்பாய் என்னைச் சூழ்ந்து..
    காற்று பறித்தெறிந்தாலும்..
    நெளிந்து வளைந்து
    விட்டுக் கொடுத்துப் போராடி
    நம்பிய என்னை பத்திரமாய்
    இலக்கில் சேர்த்து.

    ரசித்தேன் மா

    பதிலளிநீக்கு
  31. ஒவ்வொரு வரிகளும் சும்மா சொல்ல கூடாது அருமை.

    பதிலளிநீக்கு
  32. நினைவுகள் நீந்திக்
    கொண்டிருக்கும் மனதில்
    வலை கொண்டு ஒவ்வொரு
    மீனாய்ப் பிடித்துக்
    கவனமாய் வெளியேற்றினேன்..
    தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
    என்னுள்ளே நீ மட்டும்..
    ************************

    பதிலளிநீக்கு
  33. மழை....
    என் கைத்தலம் பற்றியது குடை..
    பாதுகாப்பாய் என்னைச் சூழ்ந்து..
    காற்று பறித்தெறிந்தாலும்..
    நெளிந்து வளைந்து
    விட்டுக் கொடுத்துப் போராடி
    நம்பிய என்னை பத்திரமாய்
    இலக்கில் சேர்த்து...//

    மிக ரசித்தது.... தூள்!

    பதிலளிநீக்கு
  34. படிச்ச பிறகு மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்கு...வரிகள் எல்லாம் சூப்பர்கா ....அதிலும் மந்திரிக்க வேண்டியதும் தப்பிய ஒற்றை மீனும் ....அட ...!

    பதிலளிநீக்கு
  35. எப்பவும் போல நல்லா இருக்கு அக்கா வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  36. துணையே முதல் நட்பு

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  37. //தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
    என்னுள்ளே நீ மட்டும்.//

    ம்...! அழகா இருக்கு அக்கா.

    பதிலளிநீக்கு
  38. வெறும் வார்த்தை ஜாலமாக
    யார் வேண்டுமானாலும்
    கவிதை எழுதலாம்.

    உணர்வுகளைக் கவிதையாக்கும்
    வித்தை
    உங்களுக்கு மட்டும்
    மிக அருமையாக வருகிறது.

    இறையனாரிடம் தருமி கூறியதுபோல
    நீர்.... நீர் கவிதாயினி

    பதிலளிநீக்கு
  39. நன்றி தஞ்சை மைந்தன்., பாலாஜி சரவணன்., வெற்றி., சித்ரா., யாதவன்., பத்மா., பாலா சார்., வேடியப்பன்., சசி., வேலு ., அஹமத்., ஹுசைனம்மா., அம்பிகா., கலாநேசன்., ஜெரி., தமிழுலகம்., ஜமால்., ராஜ சுந்தர் ராஜன்., அப்பாதுரை., பாலு., ஹேமா., குமார்., சக்தி., இளம் தூயவன்., சாந்தி., மதி., கருணாகரசு., கட்டு சேவல்., விஜய்., சத்ரியன்., ஜெயராஜ்.,

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...