எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 8 ஜூலை, 2010

சாம்பல் நிற விளக்கு

உன்னிலும் என்னிலும்
உறைந்திருந்த சின்னக் குழந்தை
விழித்துக் கொண்டது..
என்னப்பா., என்னம்மாவென்றும்.,
என்னடா ., என்னடியென்றும்.,
இன்னும் போடா., போடியென்றும்..

மஞ்சள் ., பச்சை., ஆரஞ்சு.,
சிவப்பு வெளிச்சமிருக்..
சாம்பலென்றும்.,கறுப்பென்றும் கூட
வெளிச்சம் உண்டு..



வெளிப்படும் கணம்தோறும்.,
மறைவிலும்., அசைந்து.,
ஒளிந்து கிளர்வூட்டவும்..
கிண்டிக் கிளரவும்..
கோபத்திலும் ஒளிர்ந்து
சாம்பலுக்குள் சிவப்புக் கங்கு..

தங்கம் உரைச்சுச் கல்தேய.,
எடைக்கல் சுமந்து தராசும்
ஒருபக்கம் சாய..

வேதாளம் முதுகில்தான்.
விடுகதைகள் முடிவதாயில்லை..
சேறு சிப்பியின் நீரிலும்..
சாம்பல் நிற விளக்கிலும்..

29 கருத்துகள்:

  1. வேதாளம் முதுகில்தான்.
    விடுகதைகள் முடிவதாயில்லை..
    சேறு சிப்பியின் நீரிலும்..
    சாம்பல் நிற விளக்கிலும்..

    அருமை தேனம்மை
    அசத்தலாய் வரிகள்

    பதிலளிநீக்கு
  2. //வேதாளம் முதுகில்தான்.
    விடுகதைகள் முடிவதாயில்லை..
    சேறு சிப்பியின் நீரிலும்..
    சாம்பல் நிற விளக்கிலும்..//


    very Nice

    பதிலளிநீக்கு
  3. பின்றீங்களே!!

    கருப்பின் எச்சமாய்ச் சாம்பல் விளக்கும் ! கவிதை அருமை!

    பதிலளிநீக்கு
  4. மனத்தின் ஆட்ட அசைவுகள்
    வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள்
    ஆழமான அருமையான கவிதை அக்கா.

    பதிலளிநீக்கு
  5. எங்க ஊரு பாரதியின் பாடல் தான் ஞாபகம் வந்தது.

    கேளடா மானிட சாதியில் கீழோர் மேலோர் இல்லை.

    சாம்பல்பல் நிறத்தொரு குட்டி

    பதிலளிநீக்கு
  6. your dictionary contains unknown expressions. Can I borrow it from you, for a while?

    பதிலளிநீக்கு
  7. || மஞ்சள் ., பச்சை., ஆரஞ்சு.,
    சிவப்பு வெளிச்சமிருக்..
    சாம்பலென்றும்.,கறுப்பென்றும் கூட
    வெளிச்சம் உண்டு..||

    ஏனுங்..

    இதென்னுங்...
    இந்த ஜிடாக்ல விசிபிள்/இன்விசிபிள்/பிசி/ ஐடியல்-னு வர்ற கலருங்ளா?

    பதிலளிநீக்கு
  8. //கோபத்திலும் ஒளிர்ந்தது
    சாம்பலுக்குள் சிவப்புக் கங்கு..//

    மிகவும் அருமையான ஹைக்கூ வரிகள். ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. //வெளிப்படும் கணம்தோறும்.,
    மறைவிலும்., அசைந்து.,
    ஒளிந்து கிளர்வூட்டவும்..
    கிண்டிக் கிளரவும்..
    கோபத்திலும் ஒளிர்ந்து
    சாம்பலுக்குள் சிவப்புக் கங்கு..//

    மறையக்கூடியதா என்ன... கவிதை அருமையா இருக்கு தேனம்மை. அழகான வரிகளை தொடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. உன்னிலும் என்னிலும்
    உறைந்திருந்த சின்னக் குழந்தை
    விழித்துக் கொண்டது..
    அருமை.. கவிதையில் புதிய பரிணாமங்களைத் தொடுகிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  11. கவிதை வரிகளில் அழகு சொட்டுது.

    பதிலளிநீக்கு
  12. கவிதை வரிகள் அழகு .. ஆனா எனக்குதான் சரியா புரியலை

    பதிலளிநீக்கு
  13. //கோபத்திலும் ஒளிர்ந்தது
    சாம்பலுக்குள் சிவப்புக் கங்கு..//
    அழகான வரிகள்.

    பதிலளிநீக்கு
  14. //கோபத்திலும் ஒளிர்ந்து
    சாம்பலுக்குள் சிவப்புக் கங்கு..//

    எனக்கும் பிடித்த வரிகள்...ரசனை தேனக்கா...வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  15. வாவ்!

    தேனு மக்கா, கலக்கி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  16. வாழ்க்கை இப்படித்தான்..நல்லாருக்குங்க.

    பதிலளிநீக்கு
  17. புரிய சில மணித்துளிகள் ஆனாலும் கவிதையின் அடர்த்தி மிகவும் அதிகம் தான். எனக்குள் இருக்கும் குழந்தைக்கு இதுவெல்லாம் புரிவதே இல்லை.

    பதிலளிநீக்கு
  18. " தங்கம் உரைச்சுச் கல்தேய.,
    எடைக்கல் சுமந்து தராசும்
    ஒருபக்கம் சாய.."

    அழகோ அழகு.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. நன்றி சக்தி., ஹாசிம்., கவிதை காதலன்., யாதவன்., சுரேகா.,கோபிநாத்., ராம்ஜி.,ஜெயராஜ்., கதிர்., வில்சன்.,
    அமைதிச்சாரல்., ரிஷபன்., குரு., ஸாதிகா.,காவேரி கணேஷ்., பட்டியன்., அம்பிகா.,தங்கமணி., கனி., பாரா.,ஜெய்., கண்ணகி., ராதாகிருஷ்ணன்., முனியப்பன் சார்.,டி வி ஆர் ., வழிப்போக்கன்., அபுல் பசர்.,குமார்., தமிழ்மகன்..(கூடிய சீக்கிரம் எழுதி விடுகிறேன் தமிழ் மகன்)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...