எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பீஷ்மர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பீஷ்மர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 டிசம்பர், 2022

பீஷ்மர் பிறந்த கதை

பீஷ்மர் பிறந்த கதை


மகாபாரதத்தில் புரூ வம்சத்தில் மூத்த புதல்வனாய்ப் பிறந்து தன் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை இளவரசர்கள் வரை வளர்த்தெடுத்த பீஷ்மர் பிறந்த கதை மட்டுமல்ல. அவர் பிழைத்து வாழ்ந்த கதையும் வித்யாசமானது. அது என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள் குழந்தைகளே.

மன்னன் பிரதிபனுக்கு இரு மகன்கள். மூத்தவன் தேவபிக்கு உடற்குறை இருந்ததால் அவனுக்கு இளையவனான சந்தனு முடிசூட்டப்பட்டான். அவனுக்கு முடி சூட்டியதும் மன்னன் பிரதிபன் துறவறம் மேற்கொண்டு காட்டிற்குச் சென்றார். அங்கே ஒரு முறை தன் தந்தையைக் காணச் சென்ற சந்தனு கங்கையை எதிர்பாராத விதமாகச் சந்தித்தார்.

பார்த்ததுமே அவள் ரூபசௌந்தர்யத்தில் மயங்கித் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். ஆனால் கங்கையோ ஒரு நிபந்தனை விதித்தாள். திருமணத்துக்குப் பின் நான் என்ன செய்தாலும் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கவோ தடுக்கவோ கூடாது. இந்த நிபந்தனையை மீறினால் உங்களை விட்டுப் பிரிந்து போய் விடுவேன்” என எச்சரித்தாள்.

திங்கள், 21 ஜனவரி, 2019

சூதால் வென்ற துஷ்டச் சகுனி. :- தினமலர் , சிறுவர்மலர் - 1.

சூதால் வென்ற துஷ்டச் சகுனி. :-
த்தினாபுரம் அரண்மனை. ‘தாயம்.. தாயம்.’. என்று சொல்லி நெற்றியில் தட்டிக்கொண்டு தாயக்கட்டைகளை உருட்டிப் போடுகிறான் ஒருவன். அவன் சொன்னபடியே தாயம் விழ. கௌரவர்கள் குதூகலிக்கிறார்கள். பாண்டவர்களோடு பீஷ்மர் விதுரர் துரோணர் கிருபர் ஆகியோரும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். குள்ளநரிப்புன்னகையோடு இவர்கள் நடுவில் அமர்ந்து தாயம் உருட்டும் அவன் தான் சகுனி. சூதால் அவன் செய்த வினை கொஞ்சமா நஞ்சமா. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்ப்போம் குழந்தைகளே.
திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி காந்தார நாட்டில் பிறந்தவள். தந்தை சுவலன். அவளுக்கு நூறு சகோதரர்கள். அவர்களின் ஒருவன் சகுனி. திருதராஷ்டிரனுக்கு மணம் முடிக்கு முன்பு காந்தார தேசத்தில் அவளுக்கு திருமணதோஷம் இருந்ததால் ஒரு ஆட்டுக்கு மணம் செய்து தோஷம் கழித்தார்கள். இது பீஷ்மருக்குத் தெரியவர அவர் கோபமாக காந்தாரியின் தந்தை சுவலனையும் அவரது பிள்ளைகள்  நூறுபேரையும் சிறையில் அடைக்கிறார்.
போதிய உணவு இல்லாமல் அனைவரும் சிறையில் வாடுகிறார்கள்.  தங்களுக்குக் கொடுக்கப்படும் உணவை அவர்கள் சகுனிக்குக் கொடுத்துத் தாங்கள் மரிக்கிறார்கள். சகுனியின் தந்தை சுவலன் சாகும் தருவாயில் சகுனியின் கணுக்காலை அடித்துஉடைத்துத் ” நம் வம்சத்தைச் சிறையில் சாகடித்த குருவம்சத்தைப் பழிவாங்கவேண்டும்” என்று கோபமாய்ச் சொல்கிறார்.

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

வாக்கைக் காத்த கங்காதத்தன். தினமலர் சிறுவர்மலர் - 13.


வாக்கைக் காத்த கங்காதத்தன்.

சூரியன் வடக்கு நோக்கி நகர்கிறது. குருக்ஷேத்திரப் போர் பூமி. ரத்தமும் சதையும் நாலாபக்கம் நிண வாசமுமாக இருக்கிறது. எட்டாம் நாள் போர் அது. அங்கே அம்புகளையே படுக்கையாகக் கொண்டு ஒருவர் வீழ்ந்து கிடக்கிறார். என்னது அம்புப் படுக்கையா ஆம் அம்புப் படுக்கையேதான். அவ்வளவு மனோ வலிமை வாய்ந்தவர் யார்.?

விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் துதித்தபடி வானோக்கி இருக்கிறது அந்த தேஜசான முகம். யார் முகம் அது ? நெருங்கிப் போய்ப் பார்ப்போமா. அஹா இது கங்கையின் புதல்வன் தேவவிரனின் முகம் அல்லவா. தந்தைக்காக திருமணம் மறுத்து பிரம்மச்சர்ய விரதம் பூண்ட பீஷ்ம பிதாமகர் அல்லவா அங்கே வீழ்ந்து கிடக்கிறார்.

கௌரவப் படையின் சேனாபதியான அவர் மட்டுமா வீழ்ந்து கிடக்கிறார் .  அநியாயத்தின் பக்கம் நின்றதால் அங்கே சத்தியமும் வாக்கு தத்தமும் அல்லவா வீழ்ந்து கிடக்கிறது. அவரை வீழ்த்தியது எது ?

அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் அஸ்தினாபுரம் அரண்மனைக்குப் போவோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...