எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கம்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஜூலை, 2017

கம்பன் நேற்று-இன்று-நாளை – ஒரு பார்வை.



கம்பன் நேற்று-இன்று-நாளை – ஒரு பார்வை. 

சொல்வேந்தர் சுகி சிவத்தின் நூலைப் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. அண்டைவீட்டுக்காரர் கம்பர் நூல்களைக் கொடுத்தால் படிக்கக் கசக்கிறதா என்ன. எனது அண்டைவீட்டுக்காரர் திரு கம்பனடிசூடி அவர்கள். அவர்கள் தந்த நூலில் அவ்வப்போது கம்பரசம் மாந்தி மகிழ்வதுண்டு.

இந்நூல் தலைப்பே வித்யாசமாக இருந்ததால் இன்று படித்தேன். அமரர் ஏவிஎம் . அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு. சென்னைக் கம்பன் விழாவில் வெளியிடப்பட்டது. 

திங்கள், 20 மார்ச், 2017

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - ஒரு பார்வை.

ராமனுக்கு நிகராகவும் ஒரு துளி அதிகமாகவும் கம்பனே மாந்தி மயங்கிப் புகழும் ஒரு பாத்திரமும் கம்பராமாயணத்தில் உண்டென்றால் அது இராவணன்தான்.  அ. ச. ஞான சம்பந்தனாரின் இராவணனின் மாட்சியும் வீழ்ச்சியும் படித்தேன். சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மாட்சி பற்றிக் கூறும்போது இலங்கையின் மாட்சி பற்றியும் , அவன் செய்த பாவம் அல்லவாம் , “குலஞ்செய்த பாவத்தாலே கொடும்பழி தேடிக்கொண்டான் “என்றும்  “இந்திரப் பெரும்பதம் இழந்தான் “, “இடிக்குநர் இல்லான் “, ”நாளை வா எனப்பட்டான் “ எனவும் வருந்துவது, ”வெலற்கு அரியான்” எனக் கம்பன் பெருமிதம் கொள்வது கூறப்பட்டுள்ளது. அதே போல் தீமை வரும் விதம் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் எல்லாம் சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டிருக்கும் இந்நூல் ஒரு பொக்கிஷம்.