எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

கால வேதாளம்.



7.5.86.

28. *காற்றைக் கீறும்
குருவியின் கீச்சலாய்
காலத்தைக் கீறும்
கடிகாரச் சத்தம்.


*காலத்தின் சாவிற்காய்
மணிக்கொருதரம்
ஓலமிடும் கடிகாரம்.

*கடிகாரம்
முட்கைகளால்
காலத்தை வெளித்தள்ளும்..

*ஆனால்
காலமோ உயிர்த்தெழுந்து
அழைப்பு மணியடித்து
கடிகார வீட்டுக்குள்
கதைசொல்லிக் கேள்விகேட்டு
வேதாளமாய்ப் புகுந்துகொள்ளும்.

*கடிகார விக்ரமாதித்தம்
பதில்சொல்ல ஆரம்பிக்கும்
வேதாளம் துரத்த.



6 கருத்துகள்:

  1. அருமை சகோ! எங்கள் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள் சகோ! வரும் ஆண்டுக்ள் எல்லாம் நீங்கள் வெற்றிகள் பல கண்டிட வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி கல்யாண்

    நன்றி துளசி சகோ & கீத்ஸ் :) உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் சகோஸ் :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...