எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 21 ஜனவரி, 2012

பதின்பருவப் பிள்ளைகளின் அம்மா II

பதின்பருவப் பிள்ளைகளின் அம்மா:-
*****************************************

வளரும் பிள்ளைகளின்
அம்மாவாய் இருப்பது
அற்புதம்தான்..
கொஞ்சம் கொஞ்சல்
கொஞ்சம் பொய்
கொஞ்சம் உரைத்தல்
கொஞ்சம் மறைத்தல்
எல்லாம் உணர்ந்தும்
மௌனமாய் இருக்கக்
கற்க வேண்டும்.

கைபேசியோ
கணணியோ
கவனிக்கப்படவேண்டும்
எல்லைமீிறா வகையில்.
படபடவென்று
சண்டையிடும்போதும்
தூக்கி எறிந்து பேசும்போதும்
உணரவேண்டும்..
பேசுவது அவர்களல்ல..
துடித்தோடும் ரத்தம்.

மனம்கவர் நட்போ
அதனோடான உராய்வோ
வரைந்து வைக்கும்
மந்தகாச ஓவியமோ
கரிக்கிறுக்கல்களோ
கண்டும் காணாமல்
கடக்க வேண்டும்.
கேள்விகளற்று..
பிள்ளைகள் புலிகளாய்
சீறப்போகும் சூத்திரம் உணர்ந்து.

இராத்தூக்கம் மறந்து
போர்வைக்குள் மறைந்து
கூடா நட்போடு
கதைக்கும் மகளோ
டிஸ்கோதேயில் தொலைந்து
பீருக்குள் கரைந்து
கூகை ஒலிக்கும் நேரம்
வரும் மகனோ பார்த்து
அதிராமல் இருக்க
பழக வேண்டும்.

ஒரு நட்பு தொலைத்து
மறு நட்பில் உயி்ர்த்து
உனக்கென்ன தெரியுமென
கேட்கும் பிள்ளைகளிடம்
கடித்துக் குதறவோ
சுயகௌரவம் காட்டவோ
விடுதலைப்பத்திரம் நீட்டவோ
தூக்கிப் போட்டுப்
போகவோ முடியாது
திருமண பந்தம் போல.

உள் வைத்து உணவூட்டியது
போல் எளிதில்லை
வெளியில் உணர்வூட்டுவது.
இதுவும் கடப்போமென
எளிதாய் நகர்ந்தால்
அனுபவம் அவர்க்குச்
செமிக்கச் சொல்லும்
வயிற்றில் சுமந்தவள்
மேலேற்றும் கவலையோடு
மனதிலும் சுமக்கிறாளென..


.

8 கருத்துகள்:

  1. அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. பதின்ம பிள்ளைகளின் அம்மாவாக இருப்பது கடினம் தான். ஆனாலும் மகிழ்ச்சி தான்.

    பதிலளிநீக்கு
  3. //தூக்கி எறிந்து பேசும்போதும்
    உணரவேண்டும்..
    பேசுவது அவர்களல்ல..
    துடித்தோடும் ரத்தம்//

    ம்... அம்மாவாக நானும் இந்த நிலைக்கு இப்போதுதான் வர ஆரம்பித்திருக்கிறேன்..

    (மீள் பதிவா இது? சமீபத்தில்தான் வாசித்த ஞாபகம்..)

    பதிலளிநீக்கு
  4. //தூக்கி எறிந்து பேசும்போதும்
    உணரவேண்டும்..
    பேசுவது அவர்களல்ல..
    துடித்தோடும் ரத்தம்//

    Nan Oru thagappanaga en magalidam
    idhai unargiran.

    Best wishes.
    Karunakaran

    பதிலளிநீக்கு
  5. நன்றி ரத்னவேல் சார்

    நன்றி ரமேஷ்

    நன்றி ஹுசைனம்மா

    நன்றி கருணாகரன்.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  7. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    பதிலளிநீக்கு
  8. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...