என் புத்தகம் வந்ததும் முதன் முதலில் வந்து வாங்கியவர்கள் நண்பர்கள், தோழிகள் உறவினர்கள். முதன்முதலில் விமர்சனம் எழுதியவர் ரெங்கநாதன். அதன் பின் அன்புத்தோழி விஜி.. இவர்களுடன் தஞ்சைவாசன்.. மூவருக்கும் என் நன்றிகள்.
அங்கீகாரம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செயலுக்கும் தேவையாய் இருக்கிறது. என்னை அங்கீகரித்து நூலுக்கு மதிப்புரை அளித்திருக்கும் மூவருக்கும் நன்றி.. வேறென்ன சொல்ல..
விஜயலெக்ஷ்மி ஜெயவேலு:-
************************************
என் தோழி தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய "சாதனை அரசிகள்" என்ற புத்தகத்தை நேற்று புத்தக கண்காட்சியில் வாங்கி ஒரே மூச்சாக படித்துவிட்டேன்!!!
அப்பப்பா! என்ன ஒரு தடைகளற்ற வாக்கிய அமைப்பு! சொற் பிரவாகம் !!
வாழ்த்துக்கள் தேனு!!! இது உங்களுடைய முதல் படைப்பு என்று நம்பதான் முடியவில்லை!!!
உங்களுக்கு முதலில் இருந்து ஆதரவு தந்த மேடம் கிரிஜா ராகவன்,தாங்களே பேட்டி எடுத்த மேடம் பாத்திமா பாபு,கல்லூரி காலம் தொட்டு உங்கள் திறமை அறிந்த professor சுசீலா முன்னுரை,நட்புரை,வாழ்த்துரை இவற்றில் மிக்க பெருந்தன்மையும்,ஊக்கமும்,உங்கள்பால் அக்கறையும் தென்படுகிறது தேனு!!!
உண்மையில் ஒவொரு தோழியுமே சாதனை அரசிதான்!!!! அவர்கள் சந்தித்த சோதனைகளே சாதனைகளாக மாற்றிய முயற்சி, தன்னம்பிக்கை ஒரு கணம் எல்லோரையும் அசர வைக்கும்.
இவர்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என் தோழியர்கள்!!
ரம்யா தேவி:
நான் வியந்து திகைத்த தோழி இவர்தான்!!!தன்னம்பிக்கையின் உச்சகட்டம்!!! காயத்திரி அக்காவின் நட்பு இவருக்கு பெரும்பலம் !!!ஆசைகளும் இளமை பூரிப்பும் அரும்பு விடும் 13 வயதில் நெருப்பு காயத்தால் ஏற்பட்ட ரணங்களை 42 plastic surgery மூலம் சரி செய்து தன்னம்பிக்கை உருவமாக ஊலா வருகிறார் தன்னால் முடிந்த சேவைகளை விடாமல் செய்து கொண்டு!!!
மோகனா அம்மா:
சோதனைகளே வாழ்க்கையாக பெற்றவர் .பெண்ணாக பிறப்பதற்கு மாதவம் செய்தல் வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டு இவரை பற்றி முக நூல் தோழியருக்கு நான் சொல்லவேண்டியது இல்லை!!!பள்ளி படிப்பு முதல் பிரின்சிபால் பதவி வரை பிறகு தனிப்பட்ட வாழ்கையில் அவர் சந்தித்த சோதனைகள்,சங்கடங்கள், இடர்பாடுகள்,அவமானங்கள் ஏராளம்!!புற்று நோய் தாக்குதல்,தொடர் சிகிச்சை இவற்றில் எல்லாம் மீண்டு புற்று நோய் பற்றி awareness எல்லோரிடமும் ஏற்படுத்தும் அளப்பரிய பணியை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். இது போதாது என்று எதிர்கால சந்ததினருக்கு science research என்று ஊக்குவித்து கண்ணுக்கு தெரியாத புரட்சியை அமைதியாக ஏற்படுத்துகிறார் !!!இவருக்கு ஒரு நாளைக்கு 24 மணிநேரம் பத்தாது அப்படி காலில் சக்கரம் கட்டி பறக்கும் பெண்மணி!!
மணிமேகலை:
iron lady என்றால் அது மணிமேகலை தான்!!! பெண்கள்,ஒடுக்கப்பட்டோர் இவர்களுக்கு ஒரு சிறு பிரச்சினை என்று தெரிந்தால் ஓடோடி வந்து களத்தில் நின்று போராடுபவர்!!!SC / ST போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவர்!!!கணிர் என்று ஒலிக்கும் இவர் குரல் நமக்கு பல மடங்கு உற்சாகம், தன்னம்பிக்கை தரும்!!!
சாருமதி,தமிழரசி :
மத்திய அரசில் அதிகாரிகளாக பணி புரியும் இவர்கள் நாம் கண்ணில் காணும் தெய்வங்கள்!!!ஈ புழுக்கள் இவற்றால் மொய்த்து அனாதையாக கிடக்கும் மன நிலை சரி இல்லாதவர்கள், வயோதிகர்கள், பெண்கள் இவர்களை சக தோழர்களோடு சுத்த படுத்தி மருந்திட்டு உணவிட்டு ,கவுன்செல்லிங் செய்து அவர்கள் உறவினர்கள் அல்லது காப்பகங்கள் சேர்ப்பதும் அவர்களை அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதும் இவர்கள் சிரமேற்கொண்டு செய்கிறார்கள் .WELL WISHERS OF MENTALLY ABNORMAL NATIONALS என்ற அமைப்பு ஒன்றை சட்ட ரீதியாக நிறுவி செவ்வனே செய்து வருகிறார்கள் !!
எங்கோ கண்ணுக்கு தெரியாமல் சோதனைகள் இடையே சாதனைகளை சேவைகளை செய்து கொண்டு இருக்கும் 17 பெண்களை பற்றி சமுகத்துக்கு வெளி கொண்டு வந்த தேனம்மை லக்ஷ்மணன் நீங்களும் சாதனை அரசிதான்!!!தொடரட்டும் உங்கள் எழுத்து பணி!!!
**************************
தஞ்சைவாசன். :-
*********************
மனிதனாய் பிறந்துவிட்ட நமது அனைவர் வாழ்விலும் சோதனை வருவதும், அதனை எதிர்கொள்வதும் பொதுவான ஒன்றுதான்... பெண் என்றால் இன்னும் அதிகமாகவே இருக்கும்... ஆனால்...
வாழ்வில் வந்த சோதனை எல்லாவற்றையும் கடந்து, வென்று சாதனையாக்கி மற்றவர்களுக்கு தானும் ஒரு முன்னோடியாக இருக்கும் இத்தகைய மங்கையர்களை பற்றி படிக்கும் போது மனதுக்குள் கண்டிப்பாக எனக்கே உற்சாகம் பிறக்கும் போது உங்களுக்குள் கண்டிப்பாக வெள்ளமாகவே இருந்திருக்ககூடும்...
அவர்களை பற்றி ஆய்ந்து, ஒரு நூலாக தன்னுடைய முதல் நூலாக எழுதி தானும் ஒரு சாதனை அரசியாக உங்கள் மனதிலும் உலாவரும் உங்கள் இனிய தோழிக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்...
நீங்கள் குறிப்பிட்ட அனைத்து மங்கையர்களுக்கும் மற்றும் எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் என் வாழ்த்துகள்...
*************************************
வி. ரெங்கநாதன்:-
********************
இன்று சாதனை அரசிகள் புத்தகத்தை கண்காட்சியில் வாங்கினேன். அட்டை படம், வடிவம், உள்ளே எழுத்துக்களின் வடிவம், அளவு அருமை.
என்னை மிகவும் கவர்ந்த விஷயம் பிழையின்றி நேர்த்தியான அச்சு படிக்க சுகமாக இருந்தது.
மூன்று புத்தகங்களின் ஆசிரியன் என்ற அனுபவத்திலும், தீவிர வாசிப்பை கைக்கொண்டவன் என்ற அணுகுமுறயிலும் நான் தெரிந்து கொண்டது நேர்த்தியான கட்டமைப்பை கொண்டுவருவது என்பது கடும் முயற்சிக்குப் பின்னேயே நடக்கக் கூடியது.
அந்த வகையில் பிரபல பதிப்பகங்களே வழுக்கி விழுந்து விடுகின்றன.
உங்கள் புத்தகம் நேர்த்தியோடு சமைக்கப்பட்டுள்ளது படிக்க ஊக்கம் அளிக்கிறது.
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

அங்கீகாரம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செயலுக்கும் தேவையாய் இருக்கிறது. என்னை அங்கீகரித்து நூலுக்கு மதிப்புரை அளித்திருக்கும் மூவருக்கும் நன்றி.. வேறென்ன சொல்ல..
விஜயலெக்ஷ்மி ஜெயவேலு:-
************************************
என் தோழி தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய "சாதனை அரசிகள்" என்ற புத்தகத்தை நேற்று புத்தக கண்காட்சியில் வாங்கி ஒரே மூச்சாக படித்துவிட்டேன்!!!
அப்பப்பா! என்ன ஒரு தடைகளற்ற வாக்கிய அமைப்பு! சொற் பிரவாகம் !!
வாழ்த்துக்கள் தேனு!!! இது உங்களுடைய முதல் படைப்பு என்று நம்பதான் முடியவில்லை!!!
உங்களுக்கு முதலில் இருந்து ஆதரவு தந்த மேடம் கிரிஜா ராகவன்,தாங்களே பேட்டி எடுத்த மேடம் பாத்திமா பாபு,கல்லூரி காலம் தொட்டு உங்கள் திறமை அறிந்த professor சுசீலா முன்னுரை,நட்புரை,வாழ்த்துரை இவற்றில் மிக்க பெருந்தன்மையும்,ஊக்கமும்,உங்கள்பால் அக்கறையும் தென்படுகிறது தேனு!!!
உண்மையில் ஒவொரு தோழியுமே சாதனை அரசிதான்!!!! அவர்கள் சந்தித்த சோதனைகளே சாதனைகளாக மாற்றிய முயற்சி, தன்னம்பிக்கை ஒரு கணம் எல்லோரையும் அசர வைக்கும்.
இவர்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என் தோழியர்கள்!!
ரம்யா தேவி:
நான் வியந்து திகைத்த தோழி இவர்தான்!!!தன்னம்பிக்கையின் உச்சகட்டம்!!! காயத்திரி அக்காவின் நட்பு இவருக்கு பெரும்பலம் !!!ஆசைகளும் இளமை பூரிப்பும் அரும்பு விடும் 13 வயதில் நெருப்பு காயத்தால் ஏற்பட்ட ரணங்களை 42 plastic surgery மூலம் சரி செய்து தன்னம்பிக்கை உருவமாக ஊலா வருகிறார் தன்னால் முடிந்த சேவைகளை விடாமல் செய்து கொண்டு!!!
மோகனா அம்மா:
சோதனைகளே வாழ்க்கையாக பெற்றவர் .பெண்ணாக பிறப்பதற்கு மாதவம் செய்தல் வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டு இவரை பற்றி முக நூல் தோழியருக்கு நான் சொல்லவேண்டியது இல்லை!!!பள்ளி படிப்பு முதல் பிரின்சிபால் பதவி வரை பிறகு தனிப்பட்ட வாழ்கையில் அவர் சந்தித்த சோதனைகள்,சங்கடங்கள், இடர்பாடுகள்,அவமானங்கள் ஏராளம்!!புற்று நோய் தாக்குதல்,தொடர் சிகிச்சை இவற்றில் எல்லாம் மீண்டு புற்று நோய் பற்றி awareness எல்லோரிடமும் ஏற்படுத்தும் அளப்பரிய பணியை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். இது போதாது என்று எதிர்கால சந்ததினருக்கு science research என்று ஊக்குவித்து கண்ணுக்கு தெரியாத புரட்சியை அமைதியாக ஏற்படுத்துகிறார் !!!இவருக்கு ஒரு நாளைக்கு 24 மணிநேரம் பத்தாது அப்படி காலில் சக்கரம் கட்டி பறக்கும் பெண்மணி!!
மணிமேகலை:
iron lady என்றால் அது மணிமேகலை தான்!!! பெண்கள்,ஒடுக்கப்பட்டோர் இவர்களுக்கு ஒரு சிறு பிரச்சினை என்று தெரிந்தால் ஓடோடி வந்து களத்தில் நின்று போராடுபவர்!!!SC / ST போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவர்!!!கணிர் என்று ஒலிக்கும் இவர் குரல் நமக்கு பல மடங்கு உற்சாகம், தன்னம்பிக்கை தரும்!!!
சாருமதி,தமிழரசி :
மத்திய அரசில் அதிகாரிகளாக பணி புரியும் இவர்கள் நாம் கண்ணில் காணும் தெய்வங்கள்!!!ஈ புழுக்கள் இவற்றால் மொய்த்து அனாதையாக கிடக்கும் மன நிலை சரி இல்லாதவர்கள், வயோதிகர்கள், பெண்கள் இவர்களை சக தோழர்களோடு சுத்த படுத்தி மருந்திட்டு உணவிட்டு ,கவுன்செல்லிங் செய்து அவர்கள் உறவினர்கள் அல்லது காப்பகங்கள் சேர்ப்பதும் அவர்களை அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதும் இவர்கள் சிரமேற்கொண்டு செய்கிறார்கள் .WELL WISHERS OF MENTALLY ABNORMAL NATIONALS என்ற அமைப்பு ஒன்றை சட்ட ரீதியாக நிறுவி செவ்வனே செய்து வருகிறார்கள் !!
எங்கோ கண்ணுக்கு தெரியாமல் சோதனைகள் இடையே சாதனைகளை சேவைகளை செய்து கொண்டு இருக்கும் 17 பெண்களை பற்றி சமுகத்துக்கு வெளி கொண்டு வந்த தேனம்மை லக்ஷ்மணன் நீங்களும் சாதனை அரசிதான்!!!தொடரட்டும் உங்கள் எழுத்து பணி!!!
**************************
தஞ்சைவாசன். :-
*********************
மனிதனாய் பிறந்துவிட்ட நமது அனைவர் வாழ்விலும் சோதனை வருவதும், அதனை எதிர்கொள்வதும் பொதுவான ஒன்றுதான்... பெண் என்றால் இன்னும் அதிகமாகவே இருக்கும்... ஆனால்...
வாழ்வில் வந்த சோதனை எல்லாவற்றையும் கடந்து, வென்று சாதனையாக்கி மற்றவர்களுக்கு தானும் ஒரு முன்னோடியாக இருக்கும் இத்தகைய மங்கையர்களை பற்றி படிக்கும் போது மனதுக்குள் கண்டிப்பாக எனக்கே உற்சாகம் பிறக்கும் போது உங்களுக்குள் கண்டிப்பாக வெள்ளமாகவே இருந்திருக்ககூடும்...
அவர்களை பற்றி ஆய்ந்து, ஒரு நூலாக தன்னுடைய முதல் நூலாக எழுதி தானும் ஒரு சாதனை அரசியாக உங்கள் மனதிலும் உலாவரும் உங்கள் இனிய தோழிக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்...
நீங்கள் குறிப்பிட்ட அனைத்து மங்கையர்களுக்கும் மற்றும் எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் என் வாழ்த்துகள்...
*************************************
வி. ரெங்கநாதன்:-
********************
இன்று சாதனை அரசிகள் புத்தகத்தை கண்காட்சியில் வாங்கினேன். அட்டை படம், வடிவம், உள்ளே எழுத்துக்களின் வடிவம், அளவு அருமை.
என்னை மிகவும் கவர்ந்த விஷயம் பிழையின்றி நேர்த்தியான அச்சு படிக்க சுகமாக இருந்தது.
மூன்று புத்தகங்களின் ஆசிரியன் என்ற அனுபவத்திலும், தீவிர வாசிப்பை கைக்கொண்டவன் என்ற அணுகுமுறயிலும் நான் தெரிந்து கொண்டது நேர்த்தியான கட்டமைப்பை கொண்டுவருவது என்பது கடும் முயற்சிக்குப் பின்னேயே நடக்கக் கூடியது.
அந்த வகையில் பிரபல பதிப்பகங்களே வழுக்கி விழுந்து விடுகின்றன.
உங்கள் புத்தகம் நேர்த்தியோடு சமைக்கப்பட்டுள்ளது படிக்க ஊக்கம் அளிக்கிறது.
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)