தொழில் நுணுக்கத்தோடு
ஓடி ஓடித் திரவியம் தேடி நீ..
புன்னகை தொலைத்த உன் முகத்தில்
எப்போதாவது அத்திப்பூ மலர்ந்து..
உன் வருகைக்காய்க் காத்துப்
பூ பூத்துப் போன பின்
யுகங்களுக்கொரு முறை
வருவாய் அத்தி பூத்ததாய் ..
பூக்களின் நறுமணம் போல்
உனக்கென்றும் ஒரு ப்ரத்யேக வாசனை..
அது உன் இதமான பேச்சாய்
என் மூச்சிலும் இரண்டறக் கலந்து..
நான் நினைக்கும் போதெல்லாம்
என் சுவாசத்தைப் போல் உன்னையும்
என்னுள் நிரப்பிக் கொள்கிறேன்
உன் நறுமணத்தோடு...
நீ வந்து சென்ற பின்னும் உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்..
நினைவடுக்குகளில் சாம்பிராணியும் .,
ஊதுபத்தியும்., குங்கிலியமுமாய்...
மலைக்காடுகளில் ஒரு நதியைப்போல்
ஒளிந்தோடிக் கொண்டிருந்தேன்..
நீர் வீழ்ச்சியின் பின்
ஒரு பாறைச்சுழியாய்
நீ எனக்காய்க் காத்திருந்தாய்...
ஓடிவந்து வீழ்ந்தேன் ..
எழவே முடியவில்லை..
உன்னுள்ளே சுற்றிக்கொண்டு......

ஓடி ஓடித் திரவியம் தேடி நீ..
புன்னகை தொலைத்த உன் முகத்தில்
எப்போதாவது அத்திப்பூ மலர்ந்து..
உன் வருகைக்காய்க் காத்துப்
பூ பூத்துப் போன பின்
யுகங்களுக்கொரு முறை
வருவாய் அத்தி பூத்ததாய் ..
பூக்களின் நறுமணம் போல்
உனக்கென்றும் ஒரு ப்ரத்யேக வாசனை..
அது உன் இதமான பேச்சாய்
என் மூச்சிலும் இரண்டறக் கலந்து..
நான் நினைக்கும் போதெல்லாம்
என் சுவாசத்தைப் போல் உன்னையும்
என்னுள் நிரப்பிக் கொள்கிறேன்
உன் நறுமணத்தோடு...
நீ வந்து சென்ற பின்னும் உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்..
நினைவடுக்குகளில் சாம்பிராணியும் .,
ஊதுபத்தியும்., குங்கிலியமுமாய்...
மலைக்காடுகளில் ஒரு நதியைப்போல்
ஒளிந்தோடிக் கொண்டிருந்தேன்..
நீர் வீழ்ச்சியின் பின்
ஒரு பாறைச்சுழியாய்
நீ எனக்காய்க் காத்திருந்தாய்...
ஓடிவந்து வீழ்ந்தேன் ..
எழவே முடியவில்லை..
உன்னுள்ளே சுற்றிக்கொண்டு......
