எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 18 பிப்ரவரி, 2010

லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் ... ஒரு வாசகியின் பார்வை


வலையுலகில் நன்கு பரிச்சயமான கேபிள் ஷங்கர்
ஜியின் புத்தகம் என்பதால் மிக ஆவலுடன் படிக்கத்
துவங்கினேன். அவருடைய திரைப்பட விமர்சனங்கள்
மிகுந்த தரமுள்ளவையாக இருக்கும்.. சினிமா சம்பந்
தப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுவதலோ என்னவோ
இவரின் முதல் சிறுகதைத்தொகுப்பில் அனைத்துக்
கதைகளும் சிறந்த திரைக்கதையுள்ள குறும்படம்
போலவே இருக்கிறது.. சுகாசினி., பாலு மகேந்திரா
போல இவற்றைத்தொடராகவும் இயக்கலாம் இவர்.
கதைகள் எல்லாம் விறுவிறுப்பாய் இருக்கின்றன.



முத்தம் முதல் கதையை நான் விகடனிலேயே
படித்து இருக்கிறேன்.. மிக நுண்ணிய உணர்வுக
ளுடனான கதை அது.. கொண்டு சென்று முடித்த
விதம் அருமை..


லெமன்ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் இது
வாழ்க்கை வாழ்வதற்கே என்பவர்களுக்கானது.


கல்யாணம் ஒரு உறவுக்கு உடல் மட்டுமல்ல
மனமும் தேவை என்பதான கதை ..


ஆண்டாள் இந்தத்தொகுப்பில் மிக அருமையான
கதை இதுதான்.. பதின்மவயது கதை..


ஒருகாதல் இரண்டு க்ளைமாக்ஸ் நிஜ சினிமா
போல க்ளைமாக்ஸ்..


தரிசனம் என்னை மிக ஆச்சர்யப்பட வைத்த
கதை இதுதான்.. ஏனெனில் இந்தத்தொகுப்பில்
நிஜத்தை பதிவு செய்த கதை இது ..சாமியார்களை
நம்பி லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து
ஆசிரமம் செல்பவர்களை எனக்குத்தெரியும்..


போஸ்டர் இதுவும் எதிர்பாரா க்ளைமாக்ஸ் உள்ள
கதை.. இதை கொண்டு சென்ற விதம் அருமை..


துரை நான் ரமேஷ் சார் மிக இரக்கத்தையும்
சமூகக் கோபத்தையும் தூண்டிய கதை..
கோடம்பாக்கக் கதை..


என்னைப்பிடிக்கலையா இது திருமணமாகி
வரும் செவன்த் இயர் இட்ச் எனப்படும்
ஒரு சலிப்பான .,தவறு செய்யத்தூண்டும்.,
ஒரு மன நிலைக்கான கதை.. எனக்கு இதில்
உடன்பாடில்லை...


காமம்கொல் அடுத்த சாமியார் கதை.. துறவிக
ளெல்லாம் உண்மையில் துறவிகளல்ல..


ராமி சம்பத் துப்பாக்கி சினிமா சார்ந்து யோசிப்
பதாலோ என்னவோ முடிவு சினிமாட்டிக்காக
இருக்கு ..இந்தக்கதையில் ஒரு அவசரம்
இருக்கு., முடிவைப்போல...


மாம்பழவாசனை எல்லாத்தோல்விகளையும்
மீறி வாழ வேண்டும் என்ற எண்ணம் உருவாக்க
வேண்டும் .. காதல் தோல்வியில் தற்கொலை
தேவையில்லாதது.. ஆனால் ஏனோ ஹேமாவும்
அவர் மறைவுக்குப் பின் ஸ்டெல்லா புரூஸும்
இந்தக்கதைக்கு சம்பந்தமில்லாவிட்டலும்
ஞாபகம் வந்தார்கள்..


நண்டு இந்தத் தொகுப்பிலேயே மிகச்சிறந்த
யதார்த்தமான வலி நிறைந்த கதை இதுதான் ..
ஒரு பரிதவிப்பு .,கழிவிரக்கம் கூட உண்டாகி
விட்டது.. உண்மையான ஷங்கர் இந்தக்கதை
யிலும் ஆண்டாள் கதையிலும் தான் மிளிர்கிறார்.

சுஜாதாவின் பாணியில் இருப்பதால் சிலசமயம்
சுஜாதா கதைகளை வாசிக்கிறோமோ என்ற
எண்ணம் ஏற்பட்டாலும் பாலா சார் விமர்சனப்படி
பெண் உடல் சார்ந்த வர்ணனைகள் இல்லாமலே
கூட இந்தக்கதைகள் அருமையாய் இருக்கும்..
சினிமா சார்ந்து யோசிப்பதால் அவை தவிர்க்க
முடியாமல் இருந்தாலும் மிகச்சிறந்த சரளமான
நடையில் அவை வாசகனை திகைக்கச்செய்கின்றன.
இனிப்பில் ஏலக்காய் முந்திரி திராக்ஷை மணக்க
லாம்., கிடக்கலாம் ஆனால் இனிப்பை உண்ண
திகட்டும் அளவு அல்ல..

கேபிள்ஜியின் முதல் தொகுப்பு இது ஆண்வாசகர்கள்
அனைவருக்கும் பிடிக்கும்.. பெண்வாசகியருக்காக
அடுத்த தொகுப்பை எழுதுங்கள் கேபிள் ஜி.. உங்கள்
எழுத்துக்கள் வலிமையாகவும் நீங்கள் கொண்டு
செல்ல நினைக்கும் தளத்துக்கு வாசகனை
எடுத்துச் செல்வதாகவும் இருக்கிறது ..ஒரு சில
தவிர்த்து இந்த புத்தகம் மிக அருமையான
யதார்த்த கால பதிவு ..!!!

58 கருத்துகள்:

  1. இனிப்பில் ஏலக்காய் முந்திரி திராஷை மணக்க
    லாம்., கிடக்கலாம் ஆனால் இனிப்பை உண்ண
    திகட்டும் அளவு அல்ல..

    விமர்சனம் படைப்பாளிக்கு இன்னொரு பரிணாமத்தின் திறவுகோல்.. நல்லா இருக்கு..

    பதிலளிநீக்கு
  2. நல்லாத்தான் விமர்சிக்கிறீங்க...நானும் எழுதுறேன்..

    பதிலளிநீக்கு
  3. பிரபலமானவர் என்பதற்காக எழுதாமல் நேர்மையாக எழுதப்பட்ட விமர்சனம். நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  4. //பிரபலமானவர் என்பதற்காக எழுதாமல் நேர்மையாக எழுதப்பட்ட விமர்சனம். நல்லா இருக்கு

    //

    பலத்த ரிப்பீட்டு :)

    பதிலளிநீக்கு
  5. //என்னைப்பிடிக்கலையா இது திருமணமாகி
    வரும் செவன் த் இயர் இட்ச் எனப்படும்
    ஒரு சலிப்பான .,தவறு செய்யத்தூண்டும்.,
    ஒரு மன நிலைக்கான கதை.. எனக்கு இதில்
    உடன்பாடில்லை...//

    அந்த மனநிலை ஏன் ஏற்படுகிறது என்பதை சொல்ல முயன்ற கதைதான் அது. நிறைய நேரங்களில் இம்மாதிரியான மன நிலை தடுமாற்றத்தில் விழுந்து மேலும் அதள பாதாளத்தில் விழுந்தவர்கள் ஏராளம்.

    மிக அருமையான விமர்சனம். நன்றி..

    பதிலளிநீக்கு
  6. நன்றி ரிஷபன் இன்னொரு பரிணாமத்துக்குள் வந்துட்டேனா

    பதிலளிநீக்கு
  7. நன்றி புலிகேசி உங்க விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  8. நன்றி குமார் நீண்ட நாளக்குப்பின் வந்து இருக்கீங்க வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. நன்றி நாய்க்குட்டி மனசு உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  10. நன்றி அகநாழிகை வாசுதேவன் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  11. நன்றி அப்துல்லா உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  12. நன்றி கேபிள் ஜி உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  13. கேபிள் ஜி அப்படி தடுமறும் நிலை வந்தாலும் தடம் மாறக்கூடது என்பது என் எண்ணம்

    பதிலளிநீக்கு
  14. நன்றி ஜோதி ஜி உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  15. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் ...!!!
    நம்முள் வலிமை பெருகட்டும் ...!!!

    பதிலளிநீக்கு
  16. அருமை தேனம்மை. நல்லாயிருக்கு.

    கேபிளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. நல்ல விமர்சனம் தேனக்கா. ஸ்டெல்லா புரூஸ், ஹேமா பற்றிய உங்கள் ஒப்பீட்டை ரசித்தேன். 'அது ஒரு நிலாக்காலம்' மீண்டும் ஒருமுறை வாசிக்கவேண்டும்போல் இருக்கிறது. நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  18. நீங்கள் தமிழ்மணத்தில் இணையவில்லையா?

    பதிலளிநீக்கு
  19. கேபிள்ஜியின் முதல் தொகுப்பு இது ஆண்வாசகர்கள்
    அனவருக்கும் பிடிக்கும்.. பெண்வாசகியருக்காக
    அடுத்த தொகுப்பை எழுதுங்கள் கேபிள் ஜி.. உங்கள்
    எழுத்துக்கள் வலிமையாகவும் நீங்கள் கொண்டு
    செல்ல நினைக்கும் தளத்துக்கு வாசகனை
    எடுத்துச் செல்வதாகவும் இருக்கிறது ..ஒரு சில
    தவிர்த்து இந்த புத்தகம் மிக அருமையான
    யதார்த்த கால பதிவு ..!!!

    சினிமா விமர்சனம் மாதிரி போகுது. நல்ல விமர்சனம் தோழி..

    பதிலளிநீக்கு
  20. நன்றி அம்பிகா உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  21. நன்றி வண்ணத்துப்பூச்சியாரே உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  22. ஆமாம் சரவணன் ..எனக்கு தலைப்புகள் மறந்து விட்டது ..ஆனால் ஸ்டெல்லா புரூஸின் தீவிர வாசகி நான்.. அவரை இழந்தது துர்பாக்கியமே.. மிக அருமையான எழுத்தாளர் ....

    ஒரு அம்மா தன் மகன் கூடவே இருக்க வேண்டுமென்பதற்காக அவனுக்கு உடல் நலம் சரியில்லாமலே இருக்க வேண்டும் என விரும்புவது.. உறவுக்குழப்பத்தில் சித்தி முறையுடைய பெண்ணின் மேல் ஏற்படும் ஈர்ப்பு.. தாத்தாவிற்காய் பம்பாய்க்கு ஓடிப்போவது.. மேலும் திருவல்லிக்கேணியின் ஒரு குறிப்பிட்ட மெஸ்சில் சாப்பாடு ஜானவாச சாப்பாடு போல இருப்பது பற்றியும் அதில் ஒரு கிழவர் இவருடைய அறையில் தங்க வருவதும் பின் மகன் வீட்டிற்கு திரும்பிச்செல்வதுமான ஒரு கதை ..அவர் சிறுவயதில் ஒரு பெண்ணை விரும்பியது., பின் ஹேமாவுடனான வாழ்க்கை என அவரை நினைத்தால் நிறைய எண்ண அலைகள்.. உறவுச்சிக்கல்களையும் உணர்வுச்சிக்கல்களையும் அவர் போல சொல்ல யாருமில்லை சரவணகுமார்

    பதிலளிநீக்கு
  23. நன்றி திவ்யா ஹரி உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  24. நன்றி மணிகண்டன் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  25. தமிழ் மணத்தில் என் பதிவை இணைத்து உள்ளேன் சரவணகுமார்

    பதிலளிநீக்கு
  26. நன்றி சைவக்கொத்துப்பரோட்டா உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  27. நன்றி மலிக்கா உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  28. அருமையான விமர்சனம் தேனக்கா!!

    பதிலளிநீக்கு
  29. நாங்க எப்ப புத்தகம் வேண்டுற உங்க பதிவ பார்த்துதான் புத்தகம் பற்றி தெரிய வேண்டி இருக்கு

    பதிலளிநீக்கு
  30. ஸ்டெல்லா புரூஸ் கதைகளை நன்கு நினைவு வைத்திருக்கிறீர்கள். திருவல்லிக்கேணி அறையில் தங்கியிருந்த நினைவுகளையும் உடன் தங்கியிருந்த முதியவர் பற்றிய குறிப்புகளையும் 'அறை நண்பர்' எனும் குறுநாவலில் அழகுற எழுதியிருப்பார். திருவல்லிக்கேணி சைடோஜி தெரு சாமா மெஸ் பற்றிய குறிப்புகளும் அதில் இடம்பெற்றிருக்கும்.
    ஸ்டெல்லா புரூஸ் விருதுநகரைச் சேர்ந்தவர். எனக்கு மிக விருப்பமான எழுத்தாளர். அவரைப்பற்றிய விரிவான பதிவு எழுத நினைத்துள்ளேன். இப்போதைக்கு உங்கள் பதிவினால் மனம் முழுவதும் ஸ்டெல்லா புரூஸிடமே இருக்கிறது. நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  31. நன்றி மேனகா உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  32. நன்றி சங்கர் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  33. நன்றி அக்பர் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  34. சீக்கிரம் எழுதுங்க சரவணகுமார் அவருடைய எழுத்துக்களை மறுபடி தரிசிக்க ஆசை..

    சுந்தர ராமசாமி ஜே ஜே சில குறிப்புகளில் சொல்வது போல ஒருவருடைய கனவுகள் அவருடனே மறைந்து போவதில்லை இன்னொரு ஜீவன் அதே கனவுகளை சூலுற்று கருத்தரித்து பிரசவிக்கும்னு

    பதிலளிநீக்கு
  35. //துரை நான் ரமேஷ் சார் மிக இரக்கத்தையும்
    சமூகக் கோபத்தையும் தூண்டிய கதை..
    கோடம்பாக்கக் கதை..//

    நூலின் மிகச்சிறந்த கதை இது. நல்ல விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  36. நன்றி வெங்கடேசன் உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  37. நன்றி நிலா ரசிகன் உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  38. புத்தகம் வாங்கி விரைந்து படித்து..விமர்சனமும் வேகமாய்...நன்றி. புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆவாலைத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  39. தேனம்மை. ஒரு சினிமா விமர்சனம் படித்தது போல் இருந்தது உங்கள் புத்தக விமர்சனம். நல்ல விமர்சனம். (புக்) ஹிட்டு தான். தரமான ரசிகர் விமர்சனம் தரமாகத்தான் இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் போது படிக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  40. சரி அக்கா எழுதுகிறேன். ஒருவரின் கனவுகள் அவருடனே மறைந்துவிடுவதில்லைதான். முக்கியமாக மக்கள் மனங்களில் நிறைந்த எழுத்தாளர்களின் கனவுகள். சுந்தரராமசாமி மிகச் சரியாக சொல்லியிருக்கிறார்

    பதிலளிநீக்கு
  41. விமர்சனம் ஓகே . நீங்க எப்ப எழுதி வெளியிடுவீர்கள் ? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    விஜய்

    பதிலளிநீக்கு
  42. அழகாக, நேர்மையாகப் பார்த்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  43. நன்றி சரவணகுமார் எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  44. நன்றி விஜய் ஒரு இருநூறு இடுகையாவது வரட்டும்

    பதிலளிநீக்கு
  45. நன்றி சுரேகா உங்க முதல் வருகைக்கும் விமர்சனத்துக்கும்

    பதிலளிநீக்கு
  46. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் ..!!
    நம்முள் வலிமை பெருகட்டும்...!!!

    பதிலளிநீக்கு
  47. மிகவும் அருமையாக விமர்சனம் செய்து இருக்கின்றிங்க..வாழ்த்துகள் உங்களுக்கும்....கேபிளுக்கும்...

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...