நீர் தேங்கிக் கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்.,,,
கையில் அள்ளிப்
பருகத்தான் வேண்டாம்...
அட கால் நனைத்தாலாவது
கலக்கிச்சென்றாலென்ன...?
விவசாயம் காணாமல்..
மாட்டின் கூர்வாய் அறியாமல்..
மரங்கள் துப்பிய
எச்சில் இலைகளுடன்...
என்றோ கிளைக்குளமொன்றில்
மலர்ந்த அல்லியும்
ஆம்பலும் நினைத்து..
ஆகாயத்தாமரை மலர்த்தி...
வறியவனின் வயிறு
போல் தீவுகள் விழுந்து..
சப்பாதிக்கள்ளியும்
பனைமரமும் கிளைத்து..
சாலையோரத் தார்த்தூசி தின்று...
வண்டிக்காரன் கொட்டிய
பழக்கழிவு போர்த்தி...
மாதமொருமுறை
பொதிக்கழுதையும்
வண்ணானும்
வெள்ளாவியும் பார்த்து...
தினம்தினம் அஸ்தமனம்
சூர்யோதயம் அனுபவித்து
உலகத்துப் பிறப்பெல்லாம்
ஒரு சேரப் பட்டது போல்
அலமலந்து...
மழை.....
பெருகியது காட்டாறு...
மரமும்செடியும் கொடியும் தழுவி.,
அணைத்து அன்பைப் பெருக்கி.,
கசடையெல்லாம் கடலில் போக்கி.,
மலர்ந்து கிடந்தது வாய்க்கால்..,
பெருவெளியில்...!!!
வாய்க்காலின் மையத்தில்.,,,
கையில் அள்ளிப்
பருகத்தான் வேண்டாம்...
அட கால் நனைத்தாலாவது
கலக்கிச்சென்றாலென்ன...?
விவசாயம் காணாமல்..
மாட்டின் கூர்வாய் அறியாமல்..
மரங்கள் துப்பிய
எச்சில் இலைகளுடன்...
என்றோ கிளைக்குளமொன்றில்
மலர்ந்த அல்லியும்
ஆம்பலும் நினைத்து..
ஆகாயத்தாமரை மலர்த்தி...
வறியவனின் வயிறு
போல் தீவுகள் விழுந்து..
சப்பாதிக்கள்ளியும்
பனைமரமும் கிளைத்து..
சாலையோரத் தார்த்தூசி தின்று...
வண்டிக்காரன் கொட்டிய
பழக்கழிவு போர்த்தி...
மாதமொருமுறை
பொதிக்கழுதையும்
வண்ணானும்
வெள்ளாவியும் பார்த்து...
தினம்தினம் அஸ்தமனம்
சூர்யோதயம் அனுபவித்து
உலகத்துப் பிறப்பெல்லாம்
ஒரு சேரப் பட்டது போல்
அலமலந்து...
மழை.....
பெருகியது காட்டாறு...
மரமும்செடியும் கொடியும் தழுவி.,
அணைத்து அன்பைப் பெருக்கி.,
கசடையெல்லாம் கடலில் போக்கி.,
மலர்ந்து கிடந்தது வாய்க்கால்..,
பெருவெளியில்...!!!