எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 4 மார்ச், 2017

நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

ஒவ்வொரு விசேஷத்துக்கும் 716* நடுவீட்டுக் கோலம் முக்கியமான ஒண்ணு. பொங்கல், பிள்ளையார் நோம்பு, தீபாவளி, குடி புகுதல், சுவீகாரம், சமைதல் , கல்யாணம் சொல்ல வந்தால் வரவேற்க, திருமணம், தீர்த்தம் குடித்தல், கணபதி ஹோமம், சாந்தி, சதாபிஷேகம்,   கனகாபிஷேகம் என்று இன்ன பிற நல்லதுக்கெல்லாம் கோலம் போடுவது உண்டு.

இளைய தலைமுறைப் பெண்களுக்கு நடுவீட்டுக் கோலமும் 717* பொங்கல் கோலமும் போடுவது பற்றிப் படம் கொடுத்து இடம் ஒதுக்கிப் போடவும் சொல்லிக் கொடுத்தாங்க ஒரு ஈவண்ட்ல. அப்ப எடுத்த சில அழகான புகைப்படங்களைப் பகிர்கிறேன். அவங்க ஆர்வத்தோடயும் அழகாவும் போட்டு பட்டயக் கிளப்பிட்டாங்க. :)

நடுவீட்டுக் கோலம் மாடல் பேப்பர். இதுல 718* நாலு பக்கமும் கூம்பா இருப்பது தேர்க் கோபுரம், 719* நாலு கார்னரிலும் இருப்பது கால், 720* அதன் பக்கம் இருப்பது சங்கு.
வீட்டில் வைக்கப்படும் பொங்கல் பானைகளுக்கு ஏற்ப ( புள்ளிகள் ) அகலவாக்கில் 721* கோபுரங்கள் அதிகப்படும். பொங்கலுக்கான அடுப்புக் கோலத்தை இன்னொரு இடுகையில் பகிர்கிறேன். 722* முறித்தவலை, 723* விளக்கிடுற சட்டி,  ( 724* அடுப்பு, மனை, கலவடை, பொங்கலிடும் இடம், படைக்கும் இடம் , சாமி வீடு , படி ) எல்லாவற்றுக்கும் கோலமிடுவதுண்டு.

சாட்டர்டே போஸ்ட். திருக்குறளும் எதிர்காலச் சந்ததியும் பற்றி பண்ணாகம் திரு. கிருஷ்ணமூர்த்தி.


 மிகச் சிறப்பாக இயங்கிவரும் பண்ணாகம். காம் இணையத்தின் பிரதம ஆசிரியர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஜெர்மனியில் வசித்து வருகிறார்கள். இவர்கள் நமது இலக்கு என்ற பத்ரிக்கையின் முன்னாள் ஆசிரியரும் கூட.  பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் அங்கத்தினரும் கூட. அவர்கள் சில நாட்களுக்குமுன் ஜெர்மனியில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வாசித்தளித்த கட்டுரையை சாட்டர்டே போஸ்டாக வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

///திருக்குறளும் எதிர்காலச்சந்ததியும் - கட்டுரை
பண்ணாகம்.கோம் ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி 2 வாரங்களுக்கு முன் ஜெர்மனி எஸ்ஸன் நகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வாசித்தளித்த கட்டுரையை நமக்காக வழங்கியுள்ளார். அதனை பகிர்ந்து கொள்கிறேன்.
-சுபா-

திருக்குறளும் எதிர்காலச்சந்ததியும்
கிருஷ்ணமூர்த்தி,  பண்ணாகம் இணைய பிரதம ஆசிரியர், ஜெர்மனி
வள்ளுவர் கண்ட திருக்குறள் கடைச்சங்க காலமான கி.மு. 300 க்கும் கி.பி. 250 க்கும் இடைப்பட்ட காலத்தில் மதுரையை நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் என்ற நபர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.  திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும் முடிவில் ஔவையார் துணையோடு மதுரையில்  அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. 

வியாழன், 2 மார்ச், 2017

ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

கொஞ்சம் கணக்குப் பார்க்கலாம் வாங்க. !

ஒவ்வொரு விசேஷத்தின் போதும் நோட்டுப் போட்டு செலவைக் 661*கணக்கெழுதி வைப்பது அந்தக்காலத்து வழக்கம். பைசா சுத்தமாக டாலி ஆகிவிடும். 662.வெண்ணலை என்ற பேச்சே கிடையாது.

பொதுவாகவே செலவுக் கணக்கெழுதி வைப்பதால் வேண்டாததை வாங்கும் பழக்கம் குறைகிறது. அநாவசிய செலவு எது எனத் தெரிந்து விடுகிறது.  வீட்டுச் செலவைக் கூட 663*ஐந்தொகை 664* பேரேடு போட்டு எழுதி வைப்பார்கள் சிலர்.

வருடத்துக்கு 665* உப்பு புளி வாங்குவது முதல் கொண்டு துணி மணி , நகை நட்டு, சொந்த 666.*அனுவல் செலவுகள், அன்றாட செலவுகள், கோயில் செலவுகள், திருப்பணிகள், அன்னதானம் செய்வது, படைப்பு, பூசை, பொங்கல், காவடி, மகேசுவர பூஜை, தானம் கொடுப்பது, கொடுக்கல் வாங்கல், அடுத்தவர் வீட்டு அனுவலில் 667*முறை கொடுத்தது கொண்டது, நோய் நொடிச் செலவு, பிரயாணச் செலவு, மளிகை, சந்தை, கரண்ட், தண்ணீர், பால், வேலைக்காரர் சம்பளம்,அவ்வளவும் 668*புள்ளி விவரத்தோடு நோட்டுப் புத்தகங்களில் குறிக்கப்பட்டிருக்கும்.

முன்பு 669*ஓலைகளில் குறித்து வைப்பார்கள். அது 670*நாற்பது பக்க நோட்டாக மாறி விட்டது. இப்போது மடிக்கணினி. ஆனால் யாரும் அதிகம் புள்ளி விவரத்தோடு எழுதி வைப்பதில்லை.

இடம், வீடு, மனை, வண்டி வாங்கிய/விற்ற விபரங்களும்  தனித்தனி நோட்டுகளில் வரவு செலவுக் கணக்குகளாக எழுதி வைக்கப்பட்டிருக்கும்.! கையிருப்பு, வங்கி இருப்பு, சொத்து விபரம் அனைத்தும் மனப்பாடமாக சொல்லக்கூடிய மனிதர்கள் இப்போது இல்லை. எல்லாம் கணினி மயம். 671*கோயில் இடத்தை லீசுக்கு எடுத்து வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவதுண்டு. அந்த நோட்டுகளும் இதில் இருக்கும்.

சனி, 25 பிப்ரவரி, 2017

சாட்டர்டே போஸ்ட். தென்கிழக்கு ஆசியாவின் முதல் தண்டாயுதபாணி கோயில் பற்றி தெக்கூர் இராமநாதன்.

தெக்கூரைச் சேர்ந்த முகநூல் நண்பர் இராமநாதன் மிகச் சிறப்பான தகவல்களை அவ்வப்போது பகிர்வார். செட்டி நாட்டின் பாரம்பரிய வீடுகள், உணவுகள், பழக்க வழக்கங்கள், திருவிழாக்கள், திருமண நடைமுறைகள், வீட்டு விசேஷங்கள், படைப்புகள், பூசைகள், கோயில் திருப்பணிகள், கண்ணகி, பட்டினத்தார் பற்றிய பல பதிவுகள் மனங்கவர்ந்தவை.

இன்றைய இளைஞர்கள் அரசியல் பொதுநலம் ஆகியவற்றில் சிறப்பாக செயலாற்றுகிறார்கள்.சிலர் இலக்கியம், ஆன்மீகம் ஆகியவற்றிலும் மரபு சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தி ஆவணப்படுத்துகிறார்கள். அவர்களுள் ஒருவர் தெக்கூர் இராமநாதன். அவரது சீரிய பணிகளுக்காக அவரை வாழ்த்துவோம்.

{{ஜோதி இராமநாதன் என்பது அவர் பெயர் ஊடகங்களில் தற்போது இராமு இராமநாதன் என்ற பெயரில் கணக்குகள் வைத்துக்கொண்டு என்  பதிவுகளை பதிவு செய்கிறார்.  சொந்த ஊர் ஆ.தெக்கூர்  (கோவில்  மாத்தூர் மணலூர் )
தற்போது பணி நிமித்தமாக சென்னையில் உள்ளார். பெற்றோர் வடலூரில் உள்ளனர். பள்ளிபடிப்பு நெய்வேலியி புனித சின்னப்பர் பள்ளி மற்றும்
 கடலூர் மஞ்சகுப்பம் புனிதவளனார் பள்ளியில். கல்லூரிப்படிப்பை சென்னை செங்குன்றம் அருகில் உள்ள ஜெயசூர்யா பொறியியல் கல்லுரியில் B.E (ece) 2014கில் முடித்துள்ளார்.  தற்போது சென்னையில் ஒரு தனியார் தொலைத்தொடர்பு துறை நிறுவனத்தில் பொறியாளராக தற்போது பணி செய்கிறார் }}
அவரிடம் நம் சாட்டர்டே போஸ்டுக்காக ஆன்மீகம் சம்பந்தமாக ஏதும் எழுதித்தரும்படிக் கேட்டபோது தென்கிழக்கு ஆசியாவிலேயே முதல் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட தண்டாயுதபாணி கோயில் பற்றி எழுதி அனுப்பி உள்ளார். அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.



தென்கிழக்கு ஆசியாவின் முதல் தண்டாயுதபாணி கோவில் :
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கொண்டுவிற்க சென்ற இடமெங்கும் ஏரகத்து முருகனின் திருக்கை வேலை கொண்டு சென்று நிறுவி வழிபடும் வழக்கம் கொண்டவர்கள். அதுபோல மலேயா மண்ணில் பினாங்கில் கி.பி. 1818ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொழில் துவங்கிய நகரத்தார்கள், பினாங்கு நீர்வீழ்ச்சி அருகில் 1800 வாக்கில் தோட்டத்தொழிலார்களாகவும் கூலிகளாகவும் வெள்ளையர்களால் குடியேற்றப்பட்ட தமிழர்கள் நீர்விழ்ச்சியை ஒட்டிய பகுதியில்  தாமிர வேல் ஒன்றை நிறுவிய வழிபட்டு வந்தனர். அதனை தொழில்துவங்க வந்த நகரத்தார்களும் நீர்விழ்ச்சி பகுதியில் வழிபட்டும் வந்தனர்.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.

1301. அரசன் அன்று கொல்வான். நீதி நின்று கொல்லுதோ.

1302. மத ஒற்றுமை & மன ஒற்றுமை.

1303. மனதை சுழட்டி சுழட்டி அடிக்கும் பாடல். இவங்க நடிக்கிறாங்களா.. உண்மையிலேயே இருக்காங்களான்னு நெனைக்க வைச்ச பாடல். சிம்ரன் என்னோட எவர் ஃபேவரைட்.. பிரஷாந்த் நல்ல டான்சர்.. பட் இதுல உருகி உருகி பாடுறார். ரமேஷ் அரவிந்த நல்ல நடிகர். ஆனா நிறைய படங்கள் சப்போர்டிங்க் ஆர்டிஸ்டாவே செய்திருக்கார்..


”ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான்தான் என்று.. ”

1304. எப்பவும் நமக்கு ஃபேரி டேல்ஸும் நடுவுல கொஞ்சம் கஷ்டமும். ( அழுவாச்சியும் ) ஹாப்பி எண்டிங்கும் பிடிக்கும்தானே.. மில்ஸ் அண்ட் பூன் அண்ட் ரமணி சந்திரன் கதைகள் மாதிரி..

1305. தாங்க்ஸ் தங்க்ஸ் சுபா

//ஃபேஸ்புக்ல குறிப்பிட்டு சொல்லக்கூடிய உறவுகள்ல,ரொம்ப உரிமையோட நான் குறிப்பிடறது தேனக்கா... இவங்க, சமையல்,எழுத்து,டெகரேஷன்,தெளிவா விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது இப்படி எல்லாத்துறைகளில் சிறந்து விளங்கக் கூடியவங்க. அதையும் தாண்டி, எப்போதும் சிரிச்ச முகத்தோட, அன்பா, ஆசையா பேசறது, என்கிட்ட மட்டும் இல்லை,இவங்க எல்லாரோடையும் இப்படித்தான் பழகுவாங்க. இவங்களோட மிகப்பெரிய ப்ளஸ் இது தான்.

அவங்க என்கிட்ட துபாய்ல உள்ள அன்றாட வாழ்க்கையைப் பத்தி, நான் போடுகின்ற கோலத்தைப் பத்தி கேட்டுருந்தாங்க. நான் எனக்குப் பிடித்த துபாய் கோவிலைப் பத்தி தகவல்களைத் தந்தேன். அவங்களுடைய ப்ளாக்ஸ்பாட்ல என்னுடைய தகவல்களைப் பதிவு பண்ணியிருக்காங்க.

தேனக்கா, நன்றின்னு சொன்னா, அது வழக்கமான ஒன்றாகிவிடும். அதனால “ஐ லவ் யூக்கா!!!!! //

-- தாங்க்ஸ் கண்மணி :)