எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 நவம்பர், 2019

சிலம்பை உடைத்து நீதி கேட்ட கண்ணகி. தினமலர் சிறுவர்மலர் - 40.

சிலம்பை உடைத்து நீதி கேட்ட கண்ணகி
பெண்கள் சாத்வீகமானவர்கள். அதிலும் கண்ணகி என்ற பெண் மிகவும் சாதுவானவள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். நீதி தவறிய பாண்டிய மன்னனின் மேல் கோபம் கொண்டு சிலம்பை உடைத்தது மட்டுமல்ல அவள் சாபமிட்டதும் மதுரை மாநகரமே தீப்பற்றி எரிந்தது. அத்தகைய சக்தி வாய்ந்த கண்ணகி பற்றியும் அவளுக்குப் பாண்டிய மன்னன் இழைத்த அநீதி பற்றியும் அறிந்து கொள்ளுவோம் வாருங்கள் குழந்தைகளே.
காவிரிப் பூம்பட்டினத்தில் இரு பெரும் வணிகர்கள் வசித்து வந்தார்கள். அவர்களுள் மாசாத்துவான் என்ற வணிகனுக்குக் கோவலன் என்ற மகனும், மாநாயகன் என்ற வணிகனுக்குக் கண்ணகி என்ற மகளும் இருந்தார்கள். இருவருக்கும் அவர்கள் பெற்றோர் திருமணம் செய்துவைத்தார்கள். இருவரும் இனிதே இல்லறம் நடத்தி வந்தனர்.
ஒருமுறை சோழன் அவையில் மாதவி என்ற நடனமங்கை அற்புதமாக நடனமாடினாள். தலைக்கோல் அரிவை என்று பட்டம்பெற்று நாளொன்றுக்கு ஆயிரத்தெட்டுக்கழஞ்சுப் பொன் பெறும் சிறப்புப் பெற்றவள். கோவலன் அவள்பால் கவரப்பட்டுக் கண்ணகியை மறந்து மாதவியுடன் இல்லறம் நடத்தலானான். அவர்கட்கு மணிமேகலை என்ற புனிதமகள் பிறந்தாள்.

வெள்ளி, 15 நவம்பர், 2019

வாசிப்பை வளர்க்கும் ஷாப்பிங் மால்கள் - இன்ஃபர்மேஷன் லைப்ரரி.

ஜெர்மனியிலும் சரி, யூரோப் முழுவதும் சரி. ரயில் நிலையங்களில் ப்ரஸ் & புக்ஸ் என்னும் புத்தகக் கடைகளும், ரெவே, கொடி, அல்டி, லிடில், ரியல், நெட்டோ, போகோ போன்ற ஷாப்பிங் மால்களிலும் பயணப் பாதையில் மோட்டல்களிலுமே  புத்தகக் கடைகளைப் பார்க்கலாம். பாதிக்குப் பாதி ஆஃபரிலும் கூட புத்தகங்கள் கிடைக்கின்றன ! முக்காலே மூணு சதம் அந்தந்த தேசத்தின் மொழிகளில்தான் கிடைக்கின்றன. ஆங்கிலப் புத்தகங்கள் ரொம்பக் கம்மி. ( ஆங்கிலம் மாதிரியே இருக்கும். ஆனால் அது ஜெர்மன், ஃப்ரெஞ்ச், இத்தாலி :) . கட்டுரைகள், த்ரில்லர்கள், ரொமாண்டிக் நாவல்களோடு இங்கே சமையல் புத்தகங்களும் , குழந்தைகளுக்கான நூல்களும் கூட கொட்டிக் கிடக்கின்றன.

ரயிலில் நின்று கொண்டோ உட்காந்து கொண்டோ வாசிப்பவர்களை இந்நாடுகளில் அதிகமும் பார்க்கலாம். இவர்கள் என்னைக் கவர்ந்ததால் அங்கே எடுத்த புத்தகசாலைப் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறேன். வாசிப்பவர்களை எடுக்க என் கூட வரும் என் மகன் தடா போட்டுவிடுவார்.

இவை அனைத்தும் ஸ்விஸ், இத்தாலி, வெனிஸ், ரோம், போன்ற நகரங்களைக் கடந்து செல்லும்போது இருக்கும் மோட்டல்களில் எடுத்தவை.


இது டிட்லிஸ்ஸிலிருந்து வெனிஸ் செல்லும் வழியில் எடுத்தது.

50 முதல் 70 சதம் வரை ஆஃபர் ! ஆண்ட்ரியா கேமில்லரி  கலெக்‌ஷன்ஸ் அதிகம்.

வியாழன், 14 நவம்பர், 2019

கணக்கில் பிசகாத விசாரசருமர். தினமலர் சிறுவர்மலர் - 39.

கணக்கில் பிசகாத விசாரசருமர்.
இருவர் அல்லது மூவர் கொண்ட ஒரு குடும்பத்தின் கணக்கு வழக்கை நிர்வகிக்கவே சிரமமாய் இருக்கிறது. யாரும் வரவு செலவைக் கணக்கெழுதி வைப்பதில்லை. ஆனால் ஆலயத்தின் அதுவும் ஈரேழு பதினான்கு லோகத்தையும் படைத்துக் காக்கும் சிவபெருமானின் ஆலயத்தின் வரவு செலவுக் கணக்குகளையும், சிவனுக்கு அளிக்கப்படும் உணவு, உடை ஆகியற்றையும் பல்லாயிரம் ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார் ஒருவர். நித்யதியானத்தில் இருந்தாலும் அவரின் கணக்கு பிசகாது. அவர் யார், அவருக்கு சிவாலயத்தின் கணக்கை நிர்வகிக்கும் வேலை எப்படிக் கிடைத்தது என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சோழநாட்டின் மணியாற்றின் கரையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நீரில் துளைந்தும் நிலத்தில் குதித்தும் மர விழுதுகளில் ஊஞ்சலாடியும் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.  அவர்களில் ஒரு ஞானக் குழந்தையும் இருந்தது. சேய்ஞலூர் என்ற ஊரில் வாழ்ந்த எச்சதத்தன், பவித்திரை ஆகிய தம்பதிகளின் மகன்தான் அவன். விசார சருமன் என்ற பெயர் கொண்ட அச்சிறுவனுக்கு அப்போது ஏழு வயது.
குழந்தைகள் விளையாடும் இடத்தில் சில இடையர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது அவை இடையர்கள் ஓட்டிச் செல்லும் தடத்தை விட்டுப் பெயர்ந்து போய்க் கொண்டிருந்தன. அவற்றை அவர்கள் ஒன்றாக நடக்கும்படி விரட்டி மரக்கொம்பால் அடித்தனர். வாயில்லா ஜீவன்களான அவற்றின் துன்பம் கண்டு துடித்த விசாரசருமர் தானே அப்பசுக்களை மேய்ப்பதாகவும் அவற்றை அடிக்க வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டார். இடையர்களும் ஒப்புக் கொண்டனர்.

புதன், 13 நவம்பர், 2019

கனவுதாசன் என்றொரு கவி ஆளுமை

கனவுதாசன் என்றொரு கவி ஆளுமை



கனவுதாசனின் நினைவு முற்றமெங்கும் கவிதைப்பூக்கள். அவை போதவிழ்ந்து நறுமணம் பரப்பும்போது முகிழ்க்கும் தேனில் உமர்கய்யாம் கவிதைகள் போல் நம்மையும் போதைக்குள்ளாக்குகின்றன, சில தெளியவும் வைக்கின்றன. ஆகாசவீதியில் சூரியனைப் பந்தாடுவதும் புதை சேறைச் சுனைநீராக்குவதும் இவருக்கே சாத்தியம்.
இவரின் கவிதைகள் ஹைக்கூ, க்ளரிஹ்யூ வகையிலும் பூத்துள்ளன. முருகன், மானகிரி, காரைக்குடி, கம்பன் கழகம், கண்ணதாசன், சென்னை, பாரதி , இளங்குடி மேடைக்காளி, கொல்லங்காளி , பிள்ளையார், இளங்கோவடிகள், சுந்தரர் பரவை நாச்சியார் , பட்டுக்கோட்டையார் , கொப்புடையம்மன், தளக்காவூர் அதளநாயகி, கருப்பர் , வர்ஷா கல்யாணி , பாலமுரளி கிருஷ்ணா, முத்துக்குமார், மனோரமா, நா. காமராசன், கவிக்கோ, ஆண்டாள், ஸ்ரீதேவி, பாலகுமாரன் என்று தொடர்ந்து பூக்கின்றன இவரது கவிதைகள்.

தினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 4.

தினமலர் சிறுவர் மலரில் இதுவரை 50 வாசகர் கடிதங்கள் வரை இதிகாச புராணக்கதைகளைப் பாராட்டி வெளியாகி உள்ளன. படித்ததோடு நின்றுவிடாமல் சிரத்தை எடுத்து அதைப் பாராட்டிக் கடிதம் எழுதித் தெரிவித்த வாசகர்களின் அன்புக்கு நன்றி.


புராணக் கதைகளைப் பாராட்டிய திருவையாறு வாசகர் திரு. கா. தரணிவேலன் அவர்களுக்கு நன்றி.
Related Posts Plugin for WordPress, Blogger...