எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
WORLD BOOK DAY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
WORLD BOOK DAY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 ஏப்ரல், 2017

உலகப் புத்தக நாளுக்காக பள்ளி நூலகத்துக்கு வழங்கிய நூல்கள்.

உலகப் புத்தக நாளில் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியை கோமதி ஜெயம் சிறுவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கினார். விடுமுறையைப் பயன் உள்ளதாகக் கழிக்க அது உதவும் என்று நானும் என் பங்களிப்பாக வீட்டில் இருந்த நான் வலைப்பதிவிலும் நூல் பார்வை எழுதிய நூல்களைத் தொகுத்து அளித்தேன்.

மொத்தம் 27 நூல்கள். தோராயமாக 2000 ரூபாய்க்குள் இருக்கலாம். இவற்றில் சில எனக்கு அனுப்பி வைக்கப்பட்டவை. சில பரிசாகக் கிடைத்தவை. சில நான்/என் குடும்பத்தார் வாங்கியவை.  எனது ஐந்து நூல்களை ஆசிரியை கோமதி ஜெயம் அவர்களுக்கும் , மூன்று நூல்களை மட்டும் தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா அவர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தேன். 

1. துரோணர் கதை
2. பஞ்ச தந்திரக் கதைகள்.
3. தெனாலிராமன் நகைச்சுவைக் கதைகள்.
4. மகுடம் பறித்த மாயாவி
5. ஒரு கிராமத்து மணம்
6. மாணவர்க்கு ஏற்ற நாடகங்கள்.
7. ENGLISH GRAMMAR COMPOSITION & LETTER WRITING.
8. உலகப் பொது அறிவு.
9. SUMIT ESSAY BOOK.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

உலகப் புத்தக நாளில் தினமணிக்கும் தமிழ் ஹிந்துவுக்கும் சிறப்பு நன்றி.

உலகப் புத்தகநாளை ஒட்டி காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் கடந்த வியாழன் அன்று ( 20. 4. 2017 ) குழந்தைகளுக்கு வாழ்வியல் நீதிகளைப் போதிக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. 

கல்வியாண்டின் இறுதி நாளான அன்று ஒரு ஆசிரியையும் பணி ஓய்வில் செல்லவிருந்தார். அந்தப் பரபரப்புக்கிடையிலும் புத்தகம் வழங்கும் பணியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள் தலைமை ஆசிரியர் திரு பீட்டர் ராஜ் அவர்களும், மற்ற ஆசிரியைகள் கோமதி ஜெயம் மற்றும் சித்ரா அவர்களும்.

சிறப்புத் தகவல் என்னன்னா அங்கே படிக்கும் பிள்ளைகள் பேச்சாற்றலில் சிறந்து விளங்க வேண்டும் என்று போடியம் ஒன்று புதிதாய் அழகாய்ச் செய்திருக்கிறார்கள். அதைக் குறிப்பிட்ட தலைமை ஆசிரியர் அடுத்த கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்து மாணவர்கள் அந்த போடியத்தின் முன் நின்று சிறப்பு உரையாற்றும் அளவு தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தன் எதிர்பார்ப்பைத் தெரிவித்தார். இப்படி ஊக்கம் கொடுக்கும் ஆசிரியர்கள் இருக்கும் வரையில் பிள்ளைகளுக்கு என்ன குறை.சிறந்தோங்கி வளர்வார்கள் நிச்சயம்.

கோமதி ஜெயம் தன் வகுப்புப் பிள்ளைகளின் அந்த வருட செயல்பாடுகளைப் பாராட்டி நீதி நெறி அடங்கிய சில சிறுவர் புத்தகங்களை வழங்க என்னை அழைத்திருந்தார். அந்நிகழ்வு முடிந்ததும் கூட மாலையில் கைபேசியில் என்னை அழைத்து ஆறாம் வகுப்பு மாணவர்கள் என்றாலும் என் பேச்சைக் கவனித்து உள்வாங்கித் தன்னிடம் பாராட்டியதாகச் சொன்னார்.

மேலும் நேற்று ( 20. 4. 2017 )  ஒன் இந்தியா வலைப்பக்கத்திலும் இன்று ( 21. 4. 2017 ) தமிழ் இந்து தினசரியிலும், தினமணி செய்திப் பத்திரிக்கையிலும் புத்தகம் வழங்கும் விழா பற்றி வெளிவந்திருக்கும் தகவல்களை அனுப்பினார். 

ஆசிரியை கோமதி ஜெயம் அவர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும், மற்ற ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், தமிழ் இந்துவுக்கும், தினமணிக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகள். நலந்தா ஜம்புலிங்கம் சாருக்கு நன்றிகள்.

புத்தகங்களை வாசியுங்கள் வாழ்வை நேசியுங்கள். :) 

////Thanks to Dinamani for the news update. Thanks to HM Peter Raja sir, Gomathi Jeyam mam & Ramanathan chettiar municipal school teachers for making me a part of World Book Day Celebrations held at their school, yesterday. 😀 spl tx to Nalanthaa jambulingam sir


Related Posts Plugin for WordPress, Blogger...