நீராதாரங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டினோம். நீரை விலைக்கு வாங்குகிறோம். கேனிலிருந்து குடிக்கும் ஒவ்வொரு டம்ளர் தண்ணீரும் அடுத்தவருக்குச் சொந்தமானதைத் திருடுகிறோமோ என்ற கழிவிரக்கத்தை உண்டாக்குகிறது.
வெள்ளமாய் மழை பெய்தும் தகுந்த சேமிப்பின்றி வரண்டு கிடக்கிறது நீராதாரங்கள். நீரின்றி விவசாயம் பொய்க்க வாங்கிய கடன் எல்லாம் சாவியானது.